ஷீரடி பயணம்

ஹைதராபாத்தில் இருந்து நண்பர்கள் திரு , கதிர், இளங்கோ, தமிழ்செல்வன் நான்கு நண்பர்கள் 13.02.2010 அன்று மகாராஷ்ட்ராவில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவில் வருவதாக இருந்தனர்.குஜராதில் இருந்து நான் என் நண்பன் வேல் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.பயணம் கடைசி 5 நாளில் முடிவு செய்யபட்டது.அதற்கு அருகில் இருந்த சனி சிங்கப்பூர் (அதாங்க Bajaj Discover DTSi விளம்பரம் வருமே கதவு இல்லாத இடம்னு -அது எல்லாம் பொய்) கோவிலுக்கும் சென்றோம்.இருவரும் 13 .02 .2010 இரவே திரும்பிவிட முடிவு செய்து இருந்தாலும் நாசிக் அருகே இருந்த ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறியதால் 14 .02 .2010 அன்று அங்கும் சென்று வந்தோம்.









இந்த பயணத்தில் கண்ட மூன்று விஷயங்கள் உங்களுடன் இங்கே:

1 .நாங்கள் ஷீரடி சாய் பாபா கோவிலில் காத்திருந்த நேரம் 9 am to 1pm -4 Hrs
சனி சிங்கப்பூர் கோவிலில் காத்திருந்த நேரம் 4.30pm to 6pm -1.5 Hrs
நாசிக் ஜோதிரலிங்கம் கோவிலில் காத்திருந்த நேரம் 10.30am to 2 pm - 4.5 hrs

எந்த ஒரு கோவிலிலும் சிறப்பு தரிசனம் இல்லை.தமிழகத்தில் சின்ன கோவில்களில் கூட சிறப்பு தரிசனம் உண்டு. அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பன்னாரி அம்மன் கோவிலில் Rs.10/-, Rs.25/-, Rs.50/- Rs.100/- என்று பார்த்த எனக்கு கொஞ்சம் அச்சிர்யமாக இருந்தது.கடவுள் முன்பு எல்லாரும் சமம் என்பது மீண்டும் யாரோ சொன்னது போல ஒரு உனர்வு.

2 .நாங்கள் நாசிக் நகரில் ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவில் முடித்தவுடன் அங்கு உள்ள மற்ற 9 இடங்கள் பார்க்க ஒரு ஆட்டோ எடுத்து கொள்ளுமாறு எங்களது கார் டிரைவர் சொன்னார். நாங்களும் ஒரு ஆட்டோ எடுத்து கொண்டு சென்றோம்.
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கூட இல்லை. 9 கோவில்கள் முடிந்தது என்றான் அந்த ஆட்டோகாரன்
கோதாவரி ஆரம்பிக்கும் இடம் -அது தான் லக்ஷ்மணன் சூற்பனகையின் மூக்கை அறுத்து போட்ட இடமாம்.
ஹிந்தியில் முக்குக்கு நாக் என்று சொல்லுவார்கள் அதனால் தான் நாசிக் என்று அந்த ஊர் அழைக்கபடுகிறதாம்.
அது ஆரம்பிக்கும் இடத்தில உள்ள ஒரு சிவசக்தி சிலை,ஒரு கோதாவரி அம்மன் சிலை ,அதன் ஊற்று மாதிரி வடிவம்,அதன் பின்னால் உள்ள ஒரு சிவன் கோவில் என்று ஐந்து இடங்களை அந்த இடத்திலயே முடித்துவிட்டான்.அதன் பின் அடுத்த வீதியில் , ராமன் சீதையை மறித்து வைத்த குகை (இப்போது அது குகை + வீடு அந்த குகை மேலே வீடுகள் கட்டி மக்கள் குடி இருக்கிறார்கள்),5 ஆலமரம் (அந்த காலத்தில் காட்டில் அடையாளத்திற்காக ராமன் நட்ட 5 செடிகளாம்.இப்போது பெரிய ஆலமரமாய் இருக்கிறது),லக்ஸ்மன் கோவில்,கருங்கலில் கட்ட பட்ட ஒரு கோவில் என்று 9 இடங்களை முடித்து விட்டான்.இதை நான் இங்கு சொல்ல காரணம் ஒரு இடத்தில ஒரு முக்கியமான இடம் தான் இருக்க முடியும் மற்ற இடங்கள் எல்லாம் சுற்றுலா பயணிகளை அடிப்படையாக கொண்டு உருவானதாகும்.ஒரு நாளை முழவதும் கழிப்தற்காக அங்கு உள்ள சின்ன இடங்கள் எல்லாம் சும்மா ஒரு setup அவ்வளவு தான். இது இங்கு எனக்கு நிகழ்ந்த அனுவபம் அல்ல.நான் ஏற்கனவே சென்றுள்ள சோம்நாத் கோவில், கேரளா kumrakom பயணம் எல்லாம் இது போல தான்.நீங்கள் எங்காவது சென்றால் முக்கியமான இடத்தில் முடிந்த அளவு அதிக நேரம் இருக்க முயலுங்கள்.அதன் சுற்றி உள்ள சின்ன இடங்கள் ஒரு ப்ரீ போனஸ் அவ்வளவு தான்.அதை அதிகம் எதிர் பார்த்து ஏமாறதீர்கள்..

3 .நாங்கள் சென்ற சனி சிங்கப்பூர் கோவிலில் ரொம்ப கூட்டம்.நாங்கள நினைத்தோம் அது சனிகிழமை என்பதால் கூட்டம் அதிகம் என்று ஆனால் பின் அங்கே விசாரித்த போது சொன்னார்கள். அது ரொம்ப விசேசமான நாள்.அது போன்ற நாள் வருடத்தில் இரு முறை தான் வரும் என்று & எதிர் பாராமல் 14 .02 .2010 அன்று சென்று வந்த ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவில் இரண்டும் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. சில விஷயங்கள் தானாக நடக்கிறது இல்லை இல்லை அந்த ஆண்டவன் வழி படியே நடக்கிறது.காதல் தினத்தன்று நான் உணர்ந்த விஷயம் கடவுள் என்ற ஒன்று காதல் போல உணர தானே முடியும் உருவம் இல்லை.

1 comment:

Popular Posts