காசு யாத்திரை


காசி யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உணவை..
காசு யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உறவை - எங்களை போல்..

யாம் அறிந்த டிவி தொகுப்பாளர்களிலே



எப்போதும் தமிழர்கள் தமிழை ஒழுங்காக பேசுவதில்லை, ஆங்கிலம் கலந்து அதிகமாக பேசுகிறார்கள்,தமிழில் பேசுவதை இழிவாக கருதுகிறார்கள்  என்ற  குற்றசாட்டு வரும் போது எல்லாம் முதலில் உருட்டப்படும்  தலை டிவி தொகுப்பாளர்கள்.
டிவி தொகுப்பாளர்கள் என்றவுடன் இந்த மியூசிக் சேனலில் விளம்பரத்துக்கும் பாட்டுக்கும் இடையில் வரும் யுவன் யவதி  மனதில் தோன்றிவிடுவார்கள்.இவர்களை திட்ட தோன்றும் நமக்கு நல்ல தமிழ் உச்செரிப்புடன் பேசும் சிலரை பாராட்ட தோன்றுவது இல்லை.இவர்களுக்கு இடையில் அவ்வபோது சில நல்ல தமிழ் உச்செரிப்புடன் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.அப்படி எனக்கு  பிடித்த,என்னை கவர்ந்த சிலரை பற்றி உங்களுடன் சின்ன பகிர்வு..

முதலில் சன் டிவியில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி ஆனந்த கீதன். இவர் சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியின்  தொகுப்பாளர்.இவர் கொஞ்சம் ரபி பெர்னார்ட் சாயலில் இருப்பார்.இவர் கொஞ்சும் தமிழில் பேசுவது மிக கவர்ச்சியாய்   இருக்கும்.ஆண்டுகள் பல கடந்து விட்ட போதும் இவரது தமிழும் முகமும்  நினைவில் இருந்தாலும் இவரது புகை படம் கிடைக்கவில்லை.

அடுத்து லலிதாவின் பாட்டுக்கு பாட்டு B.H ஹப்துல் ஹமீது.

இவர் இலங்கை வானொலியில் பணி புரிந்து ஏற்கனவே புகழ் பெற்று இருந்தாலும் எனக்கு அறிமுகம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் தான்.இவர் நிகழ்ச்சியில் பாட வருவபரின் முகவரியை கூறும் போது "இலக்கம் 14 இன் கீழ் 2 (14/2)" என்று  கூறுவதை பல முறை வியந்து ரசித்து உள்ளேன்.நிகழ்ச்சியின் இடையில் "மணி ஒலித்தது 'க' குறில் என்றாலும் நீங்கள் பாட வேண்டிய எழுத்து 'க' குறில் அல்ல 'கா' நெடில்" என்ற வாசகத்திற்கு நான் கொஞ்சம்(நிறைய) அடிமை.இவர்  குரலில் உள்ள வசீகரம் இன்றும் ஆச்சிரியம் அளிக்கிறது.


அடுத்ததாக நேருக்கு நேர் (நேர்முகம் )- ரபி பெர்னார்ட்


முதலில் சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியின் நேர்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரான ரபி பெர்னார்ட். சில வருடங்களுக்கு முன்பு நேருக்கு நேர் இவர் பேட்டி என்றாலே சரியான சூடு பறக்கும்.
ஆனால் இவர் மிக பொறுமையாக கேள்விகளை கேட்பார். அதுவும் இவரது "இப்போது பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிற செய்திகளை பார்த்தோமேயானால்" என கூறுவது மிக அழகாக இருக்கும். இவரது தமிழ் உச்செரிப்பு மிக அருமையாய் இருக்கும்.

அடுத்ததாக நேருக்கு நேர் வீர பாண்டியன்.



சன் டிவியில் இருந்து ரபி பெர்னார்ட் சென்றதும் இவர் இந்த நிகழ்ச்சியை  தொடர்ந்தார். இவர் ஒரு கேள்வி கேட்கும் போது மிக இலகுவாக சொல்வார்."இது செவி வழி செய்திதான் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை" என்று. இவர் எனக்கு கற்று தந்த புதிய சொற்றொடர் "செவி வழி செய்தி".


அடுத்ததாக நீயா நானா - கோபிநாத்



இவர் முதலில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் தொடங்கி பின் நீயா நானா மூலம் பிரபலம் ஆனவர்.இவர் பேசும் போது அந்த வார்த்தையில் உணர்வோடு பேசவது போல் இருக்கும்.அந்த கால் மாத்திரை ,அரை மாத்திரை அளவோடு பேசுவார் என்று தோன்றுகிறது. இவர் சொல்லும் "மனசு வலிக்கலையா" என்பது நிஜமாய் கொஞ்சம் வலிப்பது போல் தோன்றும்.இவர் சொல்லி கொடுத்த புதிய வார்த்தை "மெனகெடல்" .

இதை எழுதிய பிறகு நானே எனக்கு கேட்டுகொண்ட  கேள்வி.
"இந்த மெனகெடல் தேவை தானா "

Popular Posts