மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள் - 2

தொடர் பதிவு

"பாதையும் பதிவும்: மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்..."


மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான் தவறவிட்ட ரயிலும் அதனை தொடர்ந்து அன்று இரவு ரயில் நிலையத்தில் தங்க நேர்ந்ததும் இயற்கை(மழை)-க்கு எனது கடிகார முட்களை நகர்த்தும் சக்தி இருப்பதை உணர்ந்த நேரம்..





ராஜமுந்த்ரியில் மழையால் கோதாவரி ஆற்றின் வெள்ளம் நான் இருந்த இடத்திருக்கு பக்கம் வந்து விட்டது.எங்கள் மருத்தவமனையில் வேலை பார்க்கும் ஒருவரின் கடை நிலை ஊழியரின் சிறிய வீட்டிற்குள் கால் வாசி தண்ணீர வந்து விட்டது.வெள்ளம் வநத வீட்டை பார்த்த முதல் அனுபவம் அது .




கபிலனின் எப்போதோ ரசித்து படித்த
"ஏற்கனவே கடனில் மூழ்கிய வீடு
இப்போது வெள்ளத்திலும் மூழ்கியது "
என்ற கவிதை அன்று ஞாபகம் வந்தது.
ஆனால் ரசிக்க முடிய வில்லை.



அதன் பின்பு ஒரு நாள் இரவு குஜராத் கோரஜ்-ல் நான் நன்கு கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தேன்.யாரோ சிலர் "டப டப" என கதவை தட்டி கொண்டு இருந்தார்கள்.எதோ ஒரு அசாதரண சத்தமாய் கேட்டது.கதவை திறக்க எழுந்து நான் எனது காலை கீழ் வைத்து போது நீரில் கால் வைப்பது போன்று இருந்தது.ஏதேனும் நீர் குழாயை அடைக்கவில்லை என்று நினைத்த படியே லைட்டை போட்ட போது தான் தெரிந்தது.எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்து தொலைபேசியும் எங்களது காலணிகளும் சில காதிங்களை போல் நீந்த தெரியாமல் மூழ்கி போய் இருந்தன. அந்த Quarters -இல் இருக்கும் ஒவ்வொரு வீடாய் போய் பார்ப்பதிலேயே அன்றைய இரவு முடிந்து போனது. இல்லை விடிந்து போனது.




சிலரது கார் முழுவதும் நீரில் மூழ்கி போய் இருந்தன.அடுத்த நாள் காலை நாங்கள் வேலைக்கு செல்லும் போது எங்கள் மருத்தவமனையின் முன் வாசல் அருகே ஒரு மருத்துவரது கட்டில் முதல் தட்டு முட்டு சாமான் வரை வைக்க பட்டு இருந்தது.அவர் அருகே நின்று கொண்டிருந்தார். விசாரித்த போது சொன்னார்கள் மருத்துவர்களுக்கு என்று River viewing Quraters சிறப்பு வீடு கொடுக்க பட்டதால் முதலில் வெள்ளம் இவருக்கு தான் முதல் மரியாதையை செய்து உள்ளது.
வெள்ளம் எப்போ வடியும் என்று பார்த்து கொண்டிருந்த அந்த மருத்துவர் ஏனோ எனக்கு ராஜமுந்த்ரியில் கோதாவரி ஆற்றின் வெள்ளம் வந்து பாதிக்க பட்ட என் உடன் பணி செய்த கடை நிலை ஊழியர் போலவே தெரிந்தார்.எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை வெள்ளத்தை போலவே !!

நான் இருக்கும் இடத்தின் அருகே சில மாதங்கள் முன்பு வரை பாலைவனத்தை விட மோசமாக இருந்த இடம் எல்லாம் இப்போது விளைந்த வயல் வெளி போல் காட்சி தருகிறது. இது தான் சினிமா படத்தில் வந்த இரு வெவ்வேறு பாடல் வரிகளை நேரடியாய் பார்த்த தருணம் "மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி " மற்றும் "
"ஒரு விதைக்குள்ள அடை பட்ட ஆலமரம் (செடி) கண் விழிக்கும் பொறு மனமே"

சுருக்கமா சொன்ன மனிதன் தரும் ஞானம் மழையும் தந்தது எனக்கு... பல பருவ காலங்கள் மாறி மாறி வந்தாலும் இந்த மழை காலம் மட்டும் சில மறக்க முடியாத ஞாபகங்களை நம்முள் விட்டு சென்று விடுகிறது.

அவ்வளவு தாங்க.. என்னங்க மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கா...
மழை நின்ற பின்னாலும் மழை கிளையில் தூரல் விழும்னு சொலுவாங்க.. அது போல எனது ஞாபக மழை முடிந்து விட்டது..இப்ப உங்களுக்கு ஞாபக தூறல் தொடங்கி இருக்கும்..

சமீபத்தில்..

நண்பர் ஒருவரின் திருமண அழைப்பிதழை ஒரு முறை படித்து ரசித்தேன் பல முறை ரசித்து படித்தேன்..

இப்போது உங்களுடன் ஒரு பகிர்வு..

மிடில் கிளாஸ் மனசு - 1



சிறிய வயதில் இருந்தே பொறுப்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியே நான் வளர்க்க பட்டேன்.நான் ஒரு பெண்,அதுவும் வீட்டிற்கு மூத்தவள், எனது அப்பா வெளி நாட்டில் இருப்பதால் அம்மாவிற்கு உதவியாக நானும் இருக்க வேண்டும் என்று பல காரணம் சொல்ல பட்டு இருந்தது. அப்போது ஒரு போதும் நான் நினைத்தது இல்லை என் அப்பா வேலை செய்யும் வெளி நாட்டு வீதிகளில் நானும் ஒரு நாள் இப்படி நடந்து செல்வேன் என்று...

கால சுழற்சியில் திருமணமும் ஆகி நாங்கள் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்ட போது கூட சிங்கார சென்னை ஒரு நாள் சிங்கப்பூர் ஆகும் என்று எதிர் பார்த்து இருந்தது போதும் சரி .என் மகனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்த போதும் சரி. நான் சிங்கப்பூர் வீதிகளில் ஒரு நாள் இப்படி நடந்து செல்வேன் என்று எதிர் பார்த்தது இல்லை...

நான் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்தவர் வாழ்ந்த நாட்டிற்கு என்னால் இந்த உலகுக்கு வந்தவனால் இந்த உலகுக்கு வர போகும் ஒரு புதிய உறவிற்காக இங்கு வர முடிந்தது.(என்ன புரியலையா..அது என்னன்னா .. என் மருமகள் பிரசவத்துக்கு நான் சிங்கப்பூர் வந்து உள்ளேன் போதுமா..)

இன்று இந்த வீதிகளில் நடக்க நான் மட்டும் தான் காரணம்...நான் பக்கத்தால இருக்க கோவிலுக்கு போய்ட்டு வரேன்...பஸ்சுல போக என் மகன் கார்டு போட்டு கொடுத்து இருக்கான்.நான் வரும் போது அதை வச்சு தான் ரெண்டு பஸ்சு மாறி வந்தேன். ரெண்டாவது பஸ்சு ஏற்ன இடம் ஒரு ஸ்டாப் தள்ளி பக்கத்துல தான் அப்படிங்கறது நால எதுக்கு வீனா செலவுன்னு நான் நடந்து போய்கிட்டு இருக்கேன்...ஆனா இப்ப நடக்கும் போது ரொம்ப தூரம் மாதிரி தெரியுது..கால் கூட கொஞ்சம் வலிக்குது. அட என்னது என்னக்கு இவ்வளவு பக்கமா வந்து காரு நிக்கிது...


நீ எங்கடா இங்க ... (என் மகன் வந்துட்டான்..நாங்க பேசறத ஒட்டு கேட்காதிங்க)

நான் கேட்க வேண்டிய கேள்வி நீ எங்க மா இங்க...

இல்ல ஒரு ஸ்டாப் தான அப்படின்னு நடந்து வரேன்..

அய்யோ அம்மா நீ ஏற வேண்டிய பஸ்ஸ்டாப் கோவில இருந்து ரெண்டாவது சிக்னல் கிட்ட வளைந்து போகணும்..

நீ வளைந்து வந்து இருக்கிறது முதல் சிக்னல்.


(கார் கதவை திறந்த படி) சரி வண்டில ஏறு..நான் உன்னை வீட்ல விட்டுரேன்.

இந்த ரோட்ல இன்னும் கொஞ்சம் தூரம் போய் இருந்தா காடு வந்துரும்.நல்ல வேலை நான் வந்தேன்..இல்லாட்டி..



இந்த ஊருல எல்லா சிக்னலும் ஒரே மாதிரி இருக்கு..கட்டடம் கூட ஒன்னுக்கு ஒன்னு ஒரே மாதிரி இருக்கு..அதான்..ஒன்னும் வெளங்கலை

நான் தான் கார்டு போட்டு குடுத்தேன் இல்ல..ஒழுங்கா பஸ்ல வரலாம் இல்லை.. இந்த காசை வச்சு கோவிலா கட்ட போறோம்..

கோவில் கட்ட முடியாது.. ஆனா என் தங்கச்சிக்கு கோடாரி தைலம் வாங்க உதவும் இல்லையா..

(அம்மாவின் மிடில் கிளாஸ் மனசை நினைத்த படியே மகனும் , மகனை இங்கு சரியாக வர வைத்த கடவுளை நினைத்த படி அவளும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்)

கற்பக விநாயகர் Vs Other Vinyagar 's





வணக்கம்.
எல்லாரும் இன்று எல்லாரும் வெறும் வாயை மெல்லாமல் கொழுக்கட்டை வைத்து மென்று கொண்டு இருப்பீர்கள்.இன்னும் கொஞ்சம் கொறிக்க..

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் மற்ற எல்லா விநாயகரை விட கொஞ்சம் வேறு வேறுபட்டவர்.
அது என்னவென்றால்
1 . இந்த விநாயகருக்கு இரு கைகள் மட்டும் தான் இருக்கும்.மற்ற விநாயகர் போல எந்த ஒரு ஆயுதத்தையோ அல்லது கொழுக்கட்டையோ வைத்து இருக்க மாட்டார்.இந்த விநாயகர் தியான கோலத்தில் இருப்பதாய் நம்ப படுகிறது.(Refer the Images)
2.இந்த விநாயகர் இரு கால்களை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து இருப்பார் .மற்ற விநாயகர் எல்லாம் இவ்வாறு இருக்காது(Refer the Images)
3.இந்த விநாயகரின் தந்தம் இடது பக்கம் உடைந்து இருக்கும்.மற்ற விநாயகருக்கு வலது பக்கம் உடைந்து இருக்கும்.(Refer the Images)
4 இந்த விநாயகரின் துதிக்கை சில விநாயகரை போல் வலப்பக்கம் (வலம்புரி) இருந்தாலும், துதிக்கை நேராக வந்து வளைவது இந்த விநாயகருக்கு மட்டும் தான். (Refer the Images)

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

சுகந்தி டீச்சர்

எல்லாரும் சொல்லுவாங்க..
"நம்ப நாட்டின் எதிர் காலம் இளைஞரின் கையில் என்று.."
அதில் எனக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லை.இது எல்லா தலை முறையிலும் சொல்லப்படும் ஒரு வெற்று கோஷமாக தான் எனக்கு படுகிறது.என்னை பொறுத்த வரை ஒரு ஆசிரியர் தான் ஒருவருடைய எதிர் காலத்தையும் ஓரளவு மாற்ற முடியும் என்று படுகிறது. கொஞ்சம் யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும்.நீங்கள் என்ன படிப்பு படிப்பது என்று ஒரு ஆசிரியரை தான் கேட்டு இருப்பீர்கள்.உங்களுக்கு பிடித்த ஆசிரியர் எடுத்த பாடம் உங்களுக்கு பிடித்து போய் இருக்கும். சிலர் பாடம் எடுக்கும் விதத்திற்காகவே அவர்களை நமக்கு பிடித்து போய் இருக்கும்.சிலரை அதற்காகவே பிடிக்காமலும் போய் இருக்க கூடும்.நமது தமிழகத்தில் பெரும்பாலும் ஆசிரியருக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை இருந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் Vs அரசு பள்ளிகள்ஆசிரியர் ஊதியம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து இந்த ஆசிரியர் துறையில் மட்டும் தான் ஊதிய வேறுபாடு மிக அதிகம். அதற்கான காரணம் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.என்னை கேட்டால் ஆசிரியர் என்றவுடன் கண்ணம்மா டீச்சர் ஞாபகம் வர பல காரணம் உண்டு(அவரை பற்றி பிறகு பார்போம் ) என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற டீச்சர் என்னை மிகவும் பாதிப்படைய செய்து விட்டார்.



அவர் வேறு யாரும் அல்ல.வேதார்ணயம் பள்ளி பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற முற்பட்டு உயிர் இழந்த அந்த பெண் தான். இந்த தியாகத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பட்டு உள்ளது.அவருக்கு நல்லாசிரியர் விருதும் கூட வழங்கி இருக்கலாம்.அவர் 11 குழந்தைகளை காப்பாற்றி உள்ளதாக சொல்ல படுகிறது.அவர் குழந்தைகளை காப்பாற்றும் போது தனது job description படி இதை நான் செய்ய வேண்டுமா என்று யோசித்து இருக்க மாட்டார் என்றே எனக்கு படுகிறது
.எப்படியோ அவர் காப்பாற்றிய குழந்தைகளில் ஒருவராவது அவர் கடைசியாய் சொல்லி கொடுத்த ஆபத்தில் உதவுவது என்பதை அவர்கள் வளர்ந்த பின்னர் உணருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம்மால் செய்ய முடியாதை செய்யும் யாரும் ஹீரோ தான் ...
அப்படி பார்த்தால் இந்த சுகந்தியும் ஒரு ஹீரோ தான்..

பாடம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியர் என்றால் எல்லாரும் எல்லாருக்கும் பாடம் கற்று கொடுத்து கொண்டு இருப்பதால் அனைவருக்கும் "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்."

Popular Posts