இயல்பு

பலமுறை 100 மார்க் போட்ட
கணக்கு வாத்தியாரை விட
ஒரு முறை கூட 100 போடாத
தமிழ் அய்யாவை பிடித்து
விடுவது இயல்பு.



இறுக்க உடை அணிந்த பெண்ணை
குறைந்தது இன்னும் ஒரு
முறையேனும் பார்த்து விடுவது
ஆணின் இயல்பு.


சம்பளம் எவ்வளவு என கேட்கையில்
கேட்வபரை பொறுத்து கொஞ்சம்
கூட்டியோ குறைத்தோ
சொல்வது இயல்பு.



அங்கு செல்வதற்கு அரை மணி
நேரம் ஆகும் என அறிந்தும்
தொலைபேசியில் பத்து நிமிஷத்தில்
அங்கு இருப்பேன் என சொல்லவது இயல்பு

உள்ளது உள்ளபடி - 5

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


எனது உடைகளை இஸ்திரி செய்யும் பெட்டி இடுபவர் ஒரு தமிழர் பெயர் ராஜு ( கோயம்புத்தூர் நகரில் இருந்து வந்து இங்கே தொழில் செய்கிறார் ), வீட்டிற்கு வந்து துணிகளை எடுத்து போவார் ,ஒரு சட்டை இஸ்திரி செய்வதற்கு Rs 5 , கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் எனக்கு இஸ்திரி செய்ய தெரியாது ( சோம்பேறிக்கு கிடைத்தது எல்லாம் சாக்கு ) மேலும் அவருடைய தொழில் சுத்தம் ( மடிப்பு துல்லியம் ) , ஒரே ஒரு பிரச்சனை தலைவர் அப்போ அப்போ ஊருக்கு ஓடிடுவார் வர பத்து பதினைந்து நாட்களாகும் , இந்த முறை 20 நாட்களாகியும் அவரை காணவில்லை , தேய்த்து வைத்த துணிகளை எல்லாம் உபயோகித்து விட்ட நிலையில் நானே இஸ்திரி செய்ய தொடங்கினேன் , இரண்டு தினங்கள் செய்திருபேன் ரூபாய் 5 மகத்துவம் புரிந்தது , போதுமடா இந்த பொழப்பு என்று ராஜுவின் வீடு எங்கு உள்ளது என்று தேட தொடங்கினேன் அன்று பார்த்து ஆலப்புழா மாவட்டம் முழுவதும் ஏதோ ஒரு சொதப்பல் காரணத்திற்காக பந்த் ( மலையாளத்தில் ஹர்த்தால் ) . கேரளாவை பொறுத்தவரை பந்த் என்றால் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம் ( யாருடைய பந்த் ஆகா இருக்கட்டுமே ஆளும் கட்சி , எதிர்க்கட்சி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி, லேபர் யூனியன் , வணிகர்கள் சங்கம் , பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் என்று வரிசை நீண்டு கொண்டே போகும்) , எல்லாரும் கடையை அடைத்து கொண்டு வீட்டில் ஜாலியாக இருப்பார்கள் கடைகள் மட்டும் அல்ல பேருந்து , ஆட்டோ , பள்ளி , கல்லுரி , என்று ஒட்டு மொத்த இயல்பு வாழ்கையும் பாதிக்கப்படும், மூடாத கடைகள் இரண்டு உண்டு 1. மெடிக்கல் ஸ்டோர் , 2. கள்ளு கடை ( தெருவுக்கு ஒரு கள்ளு கடை உண்டு ). சரி என்று எனது பைக்கை எடுத்து கொண்டு ராஜுவின் வீடு கண்டு பிடிக்க கிளம்பினேன் , ஒரு தெரு முனையில் விசாரித்த போது அங்கே ஒரு கொடி கம்பத்தின் கீழே அமர்ந்து இருண்ட ஒருவர் தனக்கு தெரியும் என்றும் ஆனால் இன்று பந்த் அதனால் அவர் எனக்கு உதவ முடியாது என்று கடமை உணர்ச்சி பொங்க கூறினார் ( வயது 35 இருக்கும்,முகத்தில் நாலு நாள் தாடியும் பசி களையும் தெரிந்தது ) அவருடைய அருகில் அமர்ந்து இருந்தவர் சட்டென்று எழுந்து என்னிடம் வந்து மெதுவாக அவனுக்கு கள்ளு வாங்கி தாரேன்னு சொல்லு கூட்டிட்டு போய் காட்டுவான் என்றார்


வேறு தெரிந்தவர்கள் அந்த ஏரியாவில் யாரும் இல்லாத காரணத்தினாலும் கடுப்பின் உச்சத்தின் நான் இருந்ததினாலும் சரியென்று ஒத்து கொண்டு அவரை அழைத்தேன் வந்தவர் பைக்கில் ஏறும் முன் சில நிபந்தனைகள் விதித்தார் 1. இதே இடத்தில கொண்டு வந்து விட வேண்டும் 2.13 no கள்ளு கடையில் தான் கள்ளு வாங்கி தர வேண்டும் 3. ராஜு வீட்டில் இல்லை என்றால் அதற்கு அவர் பொறுப்பு அல்ல , எல்லாம் என் நேரம் என்று எண்ணி கொண்டு சரியென்று சம்மதித்தேன். போகும் வழியெல்லாம் என்னை பற்றி விசாரித்து கொண்டு வந்தார் ( கேரளாவில் ஒரு பழக்கம் உண்டு நண்பர்களுக்கு இடையே நல்ல வேலையில் உள்ளவர் நல்ல வேலை இல்லாதவருக்கு அவர் கேட்கும் போதெலாம் குடிக்க வாங்கி கொடுக்க வேண்டும் ) எதற்கு வம்பு என்று என்னை பற்றி முழு விபரம் எதுவும் கூறாமல் மழுப்பி கொண்டே வந்தேன் பல left , right களுக்கு பின் ஒரு வீட்டின் முன் நிறுத்த சொன்னார் வீட்டை கண்டால் கோடீஸ்வரன் வீட்டு போல் இருந்தது பினால் அமர்ந்து இருதவர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே சென்றார் ஒரு பத்து நிமிடம் கழிந்து அவரும் ராஜுவும் ஒருமித்து வந்தனர் இந்த வீட்டிலா அவர் வசிக்கிறார் ? என்று வினவிய பொழுது இல்லை என்றும் இந்த வீட்டின் பின் புறத்தில் ஒரு ஒட்டு வீடு உள்ளதாகவும் அதில் தன் குடும்பத்தோடு வசிப்பதாகவும் கூறினார் , அவரிடம் எனது அவல நிலயை விளக்கி கூறி விட்டு தயவு செய்து என்றே வந்து துணிகளை எடுத்து போகுமாறு கூறினேன் அவர் தலை அசைத்து விட்டு பைக்கில் என் கூட வந்தவரை காட்டி கண்ணால் ஏதோ சைகை செய்தார் எனக்கு ஒன்றும் புரிய வில்லை சரி வந்த வேலை முடிந்ததென்று பைக்கில் ஏறினேன்

கூட வந்தவர் என் முன் வந்து நிற்க பேசியபடி கள்ளு குடிக்க எவ்வளவு என்று கேட்ட படி எனது பர்சை எடுத்தேன் உடனே அவர் முகம் மாறியது தனக்கு காசு வேண்டாம் என்றும் கள்ளு தான் வேணும் என்றும் கூறினார் சரியென்று அவரை பைக்கில் ஏற்றி கொண்டு அவர் கூறிய கள்ளு கடையை நோக்கி விரைந்தேன் கடை தென்னங் கூரை இட்டு சுமார் இருபது பேர் அமர்ந்து சாப்பிட கூடிய ஒரு ஹோடேளை போல் இருந்தது ஒரு முனையில் கல்லா பெட்டியும் மறு முனையில் டிவி பெட்டியும் , சுவரில் மகாத்மா காந்தியின் படம் சத்தியமவே ஜெயதே என்ற சொற்றொடருடன் இருந்தது கூட வந்தவர் நேரே உள்ளே சென்று இரண்டு டம்ளர் கள்ளும் ஒரு தட்டில் ஒரு டபுள் ஆம்லெட்டும் வாங்கி கொண்டு வந்தார் அவர் முகத்தில் இருந்த பூரிப்பை காண வேண்டுமே ! நான் கொடிப்பதிலை என்பதை கூறியவுடன் வேகமாக சென்று ஒரு லெமன் சர்பத் வாங்கி வந்தார் ( கம்பெனி வேணுமாம் ) பாத்து நிமிடத்தில் கொண்டு வந்த இரண்டு டம்ளரையும் காலி செய்து விட்டு என்னை அழைத்து கொண்டு கல்லா அருகே வந்தார் என்னிடம் இருந்து ஒரு பத்து ரூபாய் வாங்கி கொண்டு அவர் பாக்கெட்டில் இருந்து 25 ரூபாய் எடுத்து கொடுத்தார் ( நான் வாங்கி கொடுக்க வேண்டிய கள்ளு ரூபாய் பத்து அவர் வாங்கி குடித்த கள்ளு ரூபாய் பத்து ஆம்லெட் ரூபாய் பத்து அவர் எனக்கு வாங்கி கொடுத்த லெமன் சர்பத் ரூபாய் ஐந்து மொத்தம் ரூபாய் 35 ) அவர் கண்ணில் போதை இல்லை வாய் குழற வில்லை நடையில் தள்ளாட்டம் இல்லை பேசியபடி என்னை கொண்டு அந்த கொடி மரத்தின் அடியில் விடு என்று கூறினார் அது வரை அவரை பற்றி ஒன்றும் விசாரிக்காத நான் அவரை பற்றி மெதுவாக பேச்சு எடுத்தேன் அவர் துபையில் முடி வெட்டும் சலூன் வைத்திருந்ததாகவும் இரண்டு வருடங்களாக இங்கு ஒரு சலூனில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் ஏன் திரும்பி வந்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது வேண்டிய அளவு சம்பாதித்து விட்டு இங்கே வந்து சுமார் 4 லட்சத்தில் ஒரு வீடு கட்டியதாகவும் மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறினார் மேலும் என்ன தான் காசு துபையில் கிடைத்தாலும் நானே ராஜா நானே மந்திரி என்ற வாழ்கை இங்கு மட்டுமே கிடைக்கும் அதனால் தான் திரும்பி வந்து விட்டதாக கூறினார்

இந்த கால மனிதர்களுக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு சுதந்திரமும் தன்மானமும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்ந்து கொண்டேன்

இன்னும் சொல்லுவேனா ???
காலம் முடிவு செய்யும்.

முரண் - 2



படிக்க போறேன் என்று சொல்லி தான்
வந்தேன் மொட்டை மாடிக்கு
அடித்த காற்றும் அருகே இருந்த ஆறும்
இதமாய் இருந்தது மனசுக்கு

ஓடும் ஆறை விட ஆற்றுபடுகை அதிகம்
மாலை நேரம் ஆகிவிட்டதால்
ஆங்காங்கே ஆற்றுபடுகை
ஆற்று படுக்கையாக மாறுவதை கண்டேன்.

ஒரு இளைஞன் தனது கையில் எதையோ
வைத்து தேய்த்து கொண்டிருந்தான்.
விளையட வந்த இரு சிறுவர்கள் பெய்த சிறுநீரால்
ஓடும் ஒரு நதி ஆனது திரிவேணி சங்கமமாய்!

சில லாரிகள் மணல் திருட்டு பாவத்தை
சுமக்க முடியாமல் சுமந்து வெளியேறின

படிக்காமல் என்னடா பராக்கு பார்க்கிற என்று
படி படி (பட பட )என பொடனியில் அடித்து
சொன்னது காய போட்டு இருந்த
அப்பாவின் முழு கை சட்டை.

உரக்க படிக்க ஆரமித்தேன்
"ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..

சில்லறை பசங்க

நான் ஊரு சென்று இருந்த போது நடந்த ஒரு சம்பவம்.
நான் என் அம்மா மற்றும் என் நண்பர் மூவரும் கோவையில் ஒரு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம்.அது ஒரு மிதவை பேருந்து.(அதாங்க காசு மட்டும் அதிகமாக வாங்குவாங்க இல்ல அந்த வண்டி தான்).எங்கள் முன்பு இருந்தவர்கள் எல்லாம் சரியாக பத்து பத்து ரூபாயை நீட்டினார்கள்.நடத்துனரும் எல்லாரிடமும் இருந்தும் பத்து ரூபாயை வாங்கி போட்டு கொண்டு ஒரு பயண சீட்டை கிழித்து கொடுத்த படியே எங்கள் அருகில் வந்தார்.சராசரி வண்டியில் நாங்கள் போக வேண்டிய இடத்திருக்கு ஒரு மூன்று ரூபாய் இருக்கும்.அந்த மிதவை பேருந்தில் எவ்வளவு காசு என்பது தெரியாததால் என் நண்பர் இரண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.அந்த நடத்துனரும் வழக்கம் போல் இரண்டு பத்து ரூபாய் நோட்டை வாங்கி போட்டு கொண்டு மூன்று பயண சீட்டை கிழித்து கொடுத்தார்.நாங்கள் பார்த்த பொழுது தான் தெரிந்தது.ஒரு பயண சீட்டின் விலை ஒன்பது ரூபாய் என்று. நாங்கள் கொடுக்க வேண்டியது 27 ரூபாய் கொடுத்ததோ 20 ரூபாய் என்று உடனே நாங்களும் அந்த நடத்துனரை அழைத்து மீண்டும் ஒரு பத்து ரூபாயை கொடுத்தோம்.அவரும் அதை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவருக்கு மீதி மூன்று ரூபாய் குடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாய் தெரியவே இல்லை.எனக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது.உடனே நானும் மீதி தாருங்கள் என்று கேட்டு விட்டேன்.அவரும் என் அருகே வந்து ஒரு இரண்டு ரூபாயை குடுத்து விட்டு வேகமாக நகர்ந்தார்.நாங்கள் நினைத்து இருந்தால் அந்த 10 ரூபாயை கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.நாங்கள் நேர்மையாக இருந்தும் அவர் சில்லறையை முழுமையாக கொடுக்க மறுப்பது எனது கோபத்தை அதிக படுத்தியது.நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பு என் அம்மாவிடம் உள்ள பர்சில் இருந்து சில்லறைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து அந்த நடத்துனரிடம் சண்டை போட தயார் ஆகி கொண்டிருந்தேன்.என் அம்மாவிற்கு இது தெரிந்து விட்டது பிறகு என் அம்மாவும் என் நண்பனும் கோவில் செல்லும் போது சண்டை போடாதே மனசு நிம்மதியாய் இருக்காது என்றனர்.நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட்டது.மனசு நிம்மதியாய் இருக்கட்டும்(அவர்கள் மனசு) என்று நான் சண்டை போடாமல் இறங்கி விட்டேன்.பஸ்ஸை விட்டு இறங்கியதும் வெயில் பட்டு என் உடலும் கொஞ்சம் சூடானது.


சில்லறைக்காக சில்லறை தனமாய் சி(ல்)ல(றை) பசங்களோட சண்டை போட மனம் இல்லாததால் அதன் பிறகு தமிழகத்தில் சென்ற பஸ் பயணத்தில் எல்லாம் நான் கொஞ்சம் சில்லறையை சுமந்த படி திரிந்தேன்.உங்களில் சிலருக்கு சண்டை போட்ட நான் கூட ஒரு சில்லறை பையன் போல் தெரியலாம். அது உங்கள் தவறு இல்லை.கண்டிப்பான முறையில் என் தவறும் இல்லை...

(அப்பாட எப்படியோ பதிவின் மூலம் கோபத்தை கொஞ்சம் வெளி படுத்தியாச்சு..)
(குறிப்பு:புகை படத்தில் இருக்கும் நடத்துனர் இணையத்தில் எடுத்தது.இவருக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பதம் இல்லை )

மெய் பொருள் காண்பது அறிவு


படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங்கு இருக்குகாங்க என்று பார்க்க தான் நாம பல பேரு உலக வரைபடத்தை பயன்படுத்தறோம்.



உலக வரைபடத்தில் கிரீன்லாந்து மற்றும் ஆப்ரிக்கா ரெண்டையும் பார்த்திங்கனா கிரீன்லாந்து என்னவோ ஆப்ரிக்காவை விட கொஞ்சம் தான் சிறிசு என்று தோணும் ஆனால் அது உண்மை இல்லை.ஆப்ரிக்காவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =30,221,532 km2 கிரீன்லாந்துவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =2,166,086 km2 அதாவது ஆப்ரிக்கா க்ரீன்லந்தை விட 14 மடங்கு பெரியது.



பிறகு என் உலக வரைபடம் அப்படி உள்ளது என்றால் கூம்பு(Cone), கோளம்(Sphere) போன்றவற்றை தட்டையாக மாற்றி வரையும் முறையை பொறுத்து இதன் அளவுகள் மாறுபடும்.கோணத்தை நிலையாக கொண்டு வரைந்தால் நாம் பிரிக்கும் மைய இடத்தில் இருந்து நகர நகர உருவம் மாறும்.(The distortion of the size will be in the increasing pattern if you move away from the centre.) இந்த முறைக்கு பெயர் Mercator projection. Mercator projection உள்ள இந்த குறைபாடு எல்லாரும் அறிந்தது.இதனால் Mercator projection- ன் குறைபாடை Greenland problem என்றும் கூறுவார்கள்.தொலைவை விட கோணத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் கடல் வழி பயணத்துக்கு இந்த Mercator projection மிகுந்த பயனுள்ளது.

இதை தான் வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று கூறி உள்ளார்.

Popular Posts