தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும் - எதிரொலி


எனது சமீபத்திய பதிவுக்கு என் நண்பன் குமார் அனுப்பிய ஒரு எதிரொலி மின்னஞ்சலை
நண்பர்களின் படைப்புகளில் பதிவு செய்கிறேன்.

I read your recent articles about Semmozhi Conference!
It reflects all Tamizh peoples who really worry about "Tamizh Language".
I also have some issues on that song.
Here with I have give the link for that song if you don't have.
"http://www.youtube.com/watch?v=U87jbmVx3GA"
Please carefully see the song each seconds.
After around 4 min 07 sec a girl writing Tamizh letter's on the wall.
she turned to see her father.
The FATHER CALLED HIS DAUGHTER BY THE WORD "COME"!!!!!!
Even she wrote "Amma, Appa and Thenmozhi" on the wall.
Where gone "TAMIZH"?
It shows Gowtham menan & Co. doesn't show any interest on Tamizh!
Isn't it?
As usual commercial play a major role than Tamizh!

If you have time write an article on this issues in your blog! If possible.


Take care
Truly
P.Kumar

தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும்


செம்மொழி மாநாட்டு மைய நோக்கு பாடலையையும் அது படமாக பட்ட விதத்தையும் தொலை காட்சியில் பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்குது..
இயக்கம் கவுதம் மேனன் எடுத்தது என்பது பார்த்தவுடன் தெரிந்தது.
அந்த பாடலில் திரையில் அ ,ம,ஊ,ஈ,இ,ன,ண,ஒ,கு,வ,ஏ,ஆ,மு,ச,ற,ர,ஞ,ல,ய பல எழுத்துகள் வரும்..ஆனால் அதில் தமிழின் சிறப்பு என்று சொல்லகூடிய ழகரம் " ழ " இல்லை.என்ன செய்யறது கவுதம் மேனனுக்கு தெரிந்த தமிழ் அவ்வளவுதான். பாரதி ராஜா ,பாலு மகேந்திரா போன்றோரை எடுக்க சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு படுகிறது.இசை ஞானியும் SP.பாலசுப்ரமணியமும் இல்லாதது ஒரு குறையாக படுகிறது.இசை ஞாநியை இசை அமைக்க சொல்லி இருக்கலாம். ரஹ்மானும் ஒரு பாடகராக இருந்து இருக்கலாம்.இசைஞானியும் ஜூன் 2 தனது பிறந்த நாள் அன்னதான விழாவில் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று தனது வருத்தத்தை மெதுவாய் சொல்லி இருக்கிறார்.என்ன செய்ய.. கடந்த தமிழ் மாநாட்டில் "கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலியும்" என்ற நாட்டமை பாடல் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்து போனதால் இசை அமைப்பாளர் சிற்பி மாநாட்டு இசையை நிகழ்த்தினார்.
சரி விடுங்க..கலைஞர் உடன் பணியாற்றி உள்ளேன் என்று A.R. ரகுமான் மற்றும் கவுதம் மேனன் பெருமை படுவதற்கும் குறிப்பாக கவுதம் மேனன் என்னை வைத்து படமும் A.R. ரகுமான் என்ன பாடலுக்கு இசையும் அமைத்து உள்ளார் என்று கலைஞர் பெருமை பட உதவும். ஆனால் ஒரு விஷயம் கலைஞரின் பாடல் மிக அருமை.அதுவும் தொடக்க வரிகள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்


கலைஞர் சார்,
What a Man ...உங்களுக்கு இன்னும் வயசு ஆகவில்லை...

நெஞ்சத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்...

நட்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் எல்லார் மனதிலும் சில முகங்கள் தோன்றி மறையும்.
நட்புக்கு இலக்கணமாய் அதியமான் அவ்வை நட்பு,கிருஷ்ணர் குசேலர் நட்பு என்று சில பழங்கதைகளும் நமக்கு சொல்லபடிருக்கு.பழங்கதைகளை திருப்பி சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பலை..என் கதைய சொல்லறேன் கேளுங்க..(யாரு பா அது அதுக்கு பழங்கதையே பரவா இல்லைங்கறது).
என் கூட வேலை பார்த்த எல்லாரையும்,என் கூட படிச்ச எல்லாரையும் நண்பன் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.Colleague,Classmate அப்படினு இது வரை பிரித்து கூப்பிட்ட தில்லை.நண்பன் என்ற அடைமொழியோடு பல பேரு கூட நட்பில்லாமல் இருக்கேன்.சில பேரு கிட்ட மட்டும் தான் நட்பு கொண்ட நண்பனாய் இருந்து இருக்கேன்.இருந்தாலும் பாருங்க அவங்க கிட்ட கூட இந்த மாதிரி சில சம்பங்கள் நடந்து இருக்கு.
என் டீம்ல விளையாடும் என் நண்பன் அவுட் ஆகும் போது ஒரு சந்தோசம் அடுத்து நான் பேட்டிங் பண்ண போறேன்னு.
என் உடனே எப்பவும் படித்த இன்னொரு நண்பன் பரிட்சைல அஞ்சு மார்க்கு அதிகம் வாங்குன போது ஒரு பொறாமை.


நாங்க ரெண்டு பேரும் சைட் அடிச்ச பொண்ணு அவன் கிட்ட மட்டும் வந்து பேசும் போது ஒரு வயிற்று எரிச்சல்
அப்பறம் ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு விசயங்களை மறைத்து வைக்க முற்படுவது
அப்படீன்னு பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

நான் கூட இவங்க கிட்டவும் நட்பு இல்லையோனு தான் முதலில் நினைத்தேன்.பிறகு தான் எனக்கு புரிந்தது இது எல்லாம் எப்படினா..பேருந்தில் நமக்கு புடிச்ச சன்னல் ஓர இருக்கையை மழை காலத்தில் ஒதுக்கிற மாதிரி தான்.அதுக்கு நாமும் காரணமில்லை அந்த இருக்கையும் காரணமில்லை.. எப்படி இருந்தாலும் சன்னல் ஓர இருக்கையை மீதான ஒரு ஆசை நமக்கு குறைய போவது இல்லை.அது போல தான் நட்பு கூட...

என்றும் நட்புடன்
கிருஷ்ணப்பன்

குஜராத் 4 நாட் அவுட் - 2

குஜராத் 4 நாட் அவுட்-இல் முதலில் யாரை பற்றி,எதை பற்றி எழுதலாம் என்று எண்ணி கொண்டிருந்த பொழுது எனக்கு சட் என்று ஞாபகம் வந்தது இவர்கள் தான்.இந்த பதிவு ஒரு நன்றி உணர்வுடன் பதிய படுவது என்பதால் கொஞ்சம் போர் அடித்தால் பொறுத்து அருள்க

ஒருவர் நான் முன்பு வேலை இருந்த Goraj-il என் வீட்டில் வேலை செய்த வேலைக்கார அம்மா பார்வதிபென் மோஷி(மோஷி அப்படினா ஹிந்தியில் வயதான அம்மாவை குறிப்பது).



அவர் எங்கள் வீட்டில் சர்வ வேலைகளையும் செய்வார்.நாங்கள் இரவு (கவனிக்க) தான் செல்வோம்.சமைப்போம்.சாப்ட்டு படுத்ருவோம்.காலை கிளம்பி வேலைக்கு சென்று விடுவோம்.அவ்வளவு தான் .நாங்க சமையல் செய்த அறையை பார்த்தா எங்களுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.ஆனால் மீண்டும் இரவு வந்தால் வீட்டில் எல்லாம் சுத்தமா இருக்கும்.அது மட்டும் இல்லை.எங்கள் எல்லார் மீதும் அவர் வச்சு இருந்த பாசம் பற்றி வார்த்தையால சொல்ல இயலாது.எங்களுக்கு முன்பு இருந்த எங்கள் சீனியர் ஒருவர் கூட தான் ராஜினாமா செய்து போகும் போது இந்த மோஷியை தன் குடும்பத்தோடு வந்துவிடுமாறு கேட்டு உள்ளார்.மோஷி தான் மகனை விட்டு வர முடியாது என்று மறுத்து விட்டாராம்.ஒரு முறை எங்கள் நிர்வாகம் அவரை வேறு ஒரு Quarters-க்கு மாற்றி விட்டனர்.பின்பு நாங்கள் அனைவரும் அவரே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு போராடி (ஒரு கீழ் சாதி காரர் ஒருவருகாக நீங்கள் ஏன் பரிந்து வர்றீங்க என்று கேட்ட நிர்வாகத்தை மீறி) திரும்ப பெற்றோம்.ஒரு முறை என் நண்பனின் அம்மா வந்திருந்தார்கள்.அவர்கள் இருந்தது ஒரு மாதம் தான் என்றாலும் திரும்பி போன போது மோஷி அழுதுவிட்டார்.



அதனால் நாங்கள் அங்கிருந்து ராஜினாமா செய்தவதை கடைசில் தான் அவருக்கு சொல்வது என்று இருந்தோம்.ஆனால் அவர் அதை முன்பே கண்டு பிடித்து அழ தொடங்கி வீட்டார் . இறுதியாய் என் நண்பன் அவரை பற்றி சொன்ன இரு வாசகம் இதோ,எனது ஜீன்ஸ் இப்ப தான் நான் வாங்கும் போது இருந்த கலர்ல இருக்கு எங்க அம்மா கூட கை வலிக்குதுன்னு கொஞ்சம் நல்லா துவைக்க மடாங்கனு.அவன் சொன்ன மற்றொன்று,ஒரு முறை யாரோ உனக்கு எப்படி மனைவி வேண்டும் என்று கேட்டதுக்கு இந்த மோஷி மாதிரி மனசும்,வேலையும் செய்ற பொண்ணா வேணும் என்றான்.அந்த மோஷியை சமிபத்தில் பார்த்தேன் .

அவர் கண்கள் கொஞ்சம் ஒளி இழந்து இருக்கிறது.நிறைய உழைத்து உழைத்து கலைத்தது உடம்பில் தெரிந்தது.இருந்தாலும் இன்னும் உழைத்து கொன்ன்டிருகிறார்.(நம்ப முதல்வர் மாதிரி குடும்பதுக்க்காக)


அதே போலவே நான் ராஜ்கோட் சென்ற போது என் நண்பன் கோதண்டராமன் வீட்டு வேலை கார அம்மா(பெயர் தெரியாது)என் நண்பனிடம் சொன்னார் நீங்கள் துவைக்க போடும் துணி மிக குறைவாக உள்ளது.அதனால் நீங்கள் குடுப்பதில் இருந்து மாதம் 50 ரூபாயை குறைத்து கொள்ளுங்கள் என்றார்.நான் பார்த்து சம்பளம் குறைக்க சொல்லி கேட்ட முதல் வேலையாள் இவராய் தான் இருப்பார்.

அது போலவே இப்போ எங்கள் மருத்துவமனையில் உள்ள ஹேமலதாபெண் என்ற பணி பெண் எங்கள் தேவையை அறிந்து தேநீர் குவளைகளை தந்து கொண்டே இருக்கிறார்.

இந்த குஜராத் மாநிலம் தேச பிதாவுக்கு பெயர் பெற்றது என்றாலும் நிறைய கஸ்தூரி பாய் போன்ற தேச மாதா-களாலும் நிறைந்து உள்ளது.(எவரையும் வாஞ்சையோடு கவனித்து கொள்ளும் எவரும் மாதா தானே).

நம்பை சுற்றி சில மாதாக்கள் எப்பவும் இருக்க கூடும்.நான் இப்பொது எல்லாம் அவர்களை கவனித்து அவருக்கு குறைந்த பட்சம் அவவ்போது ஒரு நன்றியை மட்டுமாவது சொல்லி வருகிறேன்.

பாட்டி வடை சுட்ட கதை


நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதை,ரொம்ப தேய்ந்த ஒரு கதையும் கதை கூட.
பாட்டி வடை சுட்ட கதை.இந்த கதையில் இறுதியில் நரி காக்கையை ஏமாற்றி வடையை பறித்து விடுவது போல அமையும்.
நீங்கள் என்றாவது யோசித்து உண்டா நரி ஏன் இந்த கதையில் என்று?.ஒரு நாய் , பூனை என்று வைத்து கூட கதை புனைய பட்டிருக்கலாம்.நரியை ஏமாற்றும் விலங்கு என்று காட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விக்கான பதில் பின் வரும் கேள்வியில் தான் உள்ளது.நீங்கள் சர்கஸில் எங்காவது நரியை பார்த்தது உண்டா?.பாம்பு கீறி சண்டை போல் எங்காவது நரியை வைத்து வித்தை காட்டுவதை பார்த்து உண்டா? பார்த்து இருக்க வாயப்பு இல்லை.காரணம் நரியை நீங்கள் அவளவு சீக்கரம் ஏமாற்றி பழக்க படுத்த முடியாது. சிங்கம் , புலி , யானை, பாம்பு போன்ற பெரிய விலங்குகளை கூட கொஞ்சம் சீக்கரம் பழக்க படுத்த முடியும். தன்னால் ஏமாற்ற முடியாத நரியை ஏமாற்றும் விலங்காக நாம்(மனிதன்) சித்தரித்து விட்டோம்.இதன் அடுத்த கட்டமாய் நாம் சொல்லவதை கேட்காதவனையும் அவன் நரி மாதிரி என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம்.நாம கலக்கரோம் இல்ல

இதற்கு மனிதனோட அகராதியில் பல பெயர் இருக்கு.அது என்னன்னா Sixth Sense , தந்திரம் , Diplomacy, Politics and etc.

கருத்து கணிப்பு - 4

Popular Posts