கொஞ்சம் வாழ்த்து கொஞ்சம் நிஜம்


எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அவர் மாநகராட்சி பள்ளி மாணவி என்ற தகவல் மகிழ்ச்சியை கொஞ்சம் அதிகரிக்கிறது.
இந்த 10th மற்றும் 12th தேர்வில் மாநில அளவில் முதல் சில இடங்களை பெறுவர்கள் ஒரு 10 அல்லது 15 ஆண்டு கழித்து எப்படி உள்ளார்கள் என்று பர்ர்க்க கொஞ்சம் ஆர்வமாய் இருக்கிறேன்.ஏன் எனில் நன்றாக படித்த பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்வில் சுழற்றி அடிக்க பட்டத்தை நான் பார்த்து இருக்கிறேன்.ஏன் இந்த அங்காடி தெரு படத்தில் கூட வருமே 1100 மார்க் வாங்கியவன் ஜவுளி கடையில் வேலை பார்ப்பது போல்.அது கதை அல்ல நிஜம்...

சத்தம் போட்டு சொல்லாதே - 8


மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியாக எடுக்க வேண்டுமா எடுக்க கூடாதா என்று முடிவு செய்ய பிரணாப் தலைமையில் ஒரு குழு அமைக்க பட்டு உள்ளது .ஜெயராம் ரமேஷ் அடுத்தவர் துறையில் தலையிட கூடாது என்று சமீபத்தில் சொன்ன பிரதமர் இபொழுது சிதம்பரம் துறை பற்றி பிரணாப் முடிவு எடுப்பார் என்கிறார்.நல்ல வேடிக்கை இல்ல ...
சிதம்பரம் சாதி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாலும் பிரணாப் வசம் இது ஒப்படைக்க பட்டதாலும் இந்த முறை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எனக்கு தோன்றுகிறது.

GLOBAL WARM(N)ING - 2

இந்த வருடம் அகமதாபாத் வெட்பம் பற்றிய ஒரு சிறிய செய்தியும் ஒரு சிரிப்பு ரீமிக்ஸ் பாடலும் உங்களுக்காக


செய்தி:(நன்றி: Times of India for News)

Ahmedabad: Tuesday brought some relief to people across the state with the mercury settling at a maximum of 45 degrees Celsius in Idar, Ahmedabad and Vadodara. It, however, saw an eight year old record being broken as Ahmedabad completed a ‘consistently hot’ week in which the maximum temperature continued to be as high as 45 degrees Celsius or above.

Kamaljit Ray, director of India Meteorological Department (IMD), Gujarat, said, “This the longest duration of mercury touching 45 degrees Celsius and above in Ahmedabad and continuing heat wave conditions. This phenomena last happened in the city in 2002.”
Whole state has been reeling under excessive heat wave conditions for one week, Ray said, adding, “This started on May 19 and have persisted since then. There has been little or no drop in the temperature which in Ahmedabad has remained above four degrees Celsius.”

Four more die of heat at AMC-run hospitals on Tuesday, taking the heat death toll in city to 38. Deputy health officer Bhavin Solanki said, “On Tuesday, 66 patients were admitted to AMC hospitals.”
சிரிப்பு ரீமிக்ஸ் பாடல்:(நன்றி:Pasanka film Song)
ஒரு வெட்பம் வருதே வருதே
பெரு அச்சம் தருதே தருதே
உடல் எங்கும் அனல் பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் எனதா
புது துன்பம் தீ மூட்டுதே - வீடு
போக சொல்லி கால்கள் தள்ள
AC யில் இருக்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடரிந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் ரணமே

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
வெயில் என்னை துண்டாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் எனதா
புது துன்பம் தீ மூட்டுதே - நான்
கேட்டு வாங்கி கொண்ட இன்பம் இன்று
எனை கூறு போட்டு கொள்ளும் துன்பம்
பர பர பர எனவே துடி துடி துடி மனமே
வர வர கரை தாண்டிடுமே...

புலம்பல் - 1

(நன்றி:நண்பர் சிலம்பரசன் எழுதியது-thesimbu@gmail.com
குறிப்பு: அவர் கேடடு கொண்டதால் பெயர் தமிழ் தாசன் என்று போடப்ப
ட்டு உள்ளது)


பார் அதிர பாக்களை பாடியதால் அவன் பாரதி - நானோ
BAR அதிர பீர் குடித்து போலம்புவதால் நான் அவனில் பாதி

அரிசியின் மேலே அவன் அவன் பெயரை ஆண்டவன் எழுதிவைப்பான் அதை அடுத்தவன் யாரும் தின்பதர்கில்லை அவன் அவனே தின்று தீர்ப்பான் என்பது கண்ணதாசன் மொழி இங்கோ கடவுள் சப்பாத்தி ரொட்டியின் மேலே என்பெயரை எழுதி விட்டான்

பிகரு இல்லார் எல்லாம் தமக்குரியர் பிகருடையார் உயிரும்
உரியர் பிகருக்கு - திருட்டுகுறள்

தனி ஒரு மனிதனுக்கு பிகர் இல்லை எனில்
இந்த ஜகத்தை அழித்திடுவோம்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பார் வள்ளலார்
வாடிய பிகரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பவர் ஜொள்ளலார்

புலம்பல் தொடரும்

இப்படிக்கு
அன்புடன் தமிழ் தாசன் என்று போடவும்

சத்தம் போட்டு சொல்லாதே-7


கடந்த சில வாரமாக ஜீ தமிழ் டிவியில் ஞாயிறு அன்று சென்னை மேயர் மா.சுப்ரமண்யம் கலந்து கொண்டு சென்னையின் பிரச்சனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கும் நிகழ்ச்சி ஒரு நல்ல முயற்சி.தமிழகத்தில் இதை பார்ப்பது மகிழ்ச்சி. இதை அனுமதித்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

அன்பு தாய்மார்களே,

அன்பு தாய்மார்களே,

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தை வழக்கம் போல் அபாகஸ், கம்ப்யூட்டர் , பாட்டு,ஸ்விமிங், செஸ் என்று ரொம்ப பிஸியாக இருக்கும். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.இல்ல இல்ல நீங்க நினைக்கிற மாதிரி, உங்கள் குழந்தைகளை இந்த மாதிரி கிளாஸ்-கு அனுப்பாதிங்கனு சொல்லமாட்டேன்.ஏன்னா உங்கள் குழந்தை எவளவு stress தாங்குவாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும். நம்ப விஷயத்துக்கு வருவோம் ..
என்ன விசயமுனா.. தப்பா நினச்சுகாதிங்க.. அப்படியே உங்கள் குழந்தைகளை தமிழ் கிளாஸ்-கும் அனுப்பி வைங்க..
இப்ப நிறைய குழந்தைகள் எனக்கு வராத சப்ஜெக்ட் கணக்குனு சொல்லறதில..தமிழ்னு தான் சொல்றாங்க.இப்பவே நிறைய பேர் (இளைஞர்கள்) எனக்கு தமிழ் எழுத வராதுனு சொல்ல ஆரம்பித்து விட்டனர்.



கிராமத்து மக்கள் ஆங்கிலம் படிக்க ஆசை படுவது போல நகர குழந்தைகளை தமிழ் படிக்கும் ஆசையை உண்டு பண்ணுங்க.எங்க தமிழ்-க்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு.. அது எப்படி முடியும்னு யோசிக்காதிங்க.
தினசரி தாட்களை கொஞ்சம் படிக்க சொல்லலாம்.
அதுல இருக்கறது தமிழான்னு நீங்க கேக்குறது எனக்கு தெரியுது.
இல்லாட்டி இப்படி கூட பண்ணலாம். ஒரு சின்ன அனுபவம் உங்களுக்காக..



எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.என் சின்ன வயதில் எல்லா விடுமுறை நாட்களிலும் (சனி +ஞாயிறு உட்பட ) எங்கள் மாமா எங்களை க ,ங,ச ஞ.....என்ற வரிசையிலும் க,கா,கி,கீ...என்ற வரிசையிலும் எழுத சொல்ல்வார்கள். அதன் பிறகு 25 வார்த்தைகள் டிக்டேஷ்சண் வைப்பார். அதில் 18 -க்கு மேல் வாங்கினால் அன்று விளையாட போகலாம்.இல்லாவிடில் மீண்டும் ஒரு டிக்டேஷ்சண் தொடரும்.அதிலும் 18 -க்கு குறைவு என்றால் அடுத்த ஒரு முறை க ,ங,ச ஞ.....என்ற வரிசையிலும் க,கா,கி,கீ...என்ற வரிசையிலும் எழுதி விட்டு நாங்கள் விளையாட செல்லலாம்.இதே முறை தான் எங்கள் எல்லா உறவினர் வீட்டிலும்.இதை பின்பற்றிய எல்லாருடைய தமிழோடு கையெழுத்தும் நன்றாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. இதயே பின்பற்றுங்கனு சொல்லல..இதுவும் ஒரு வழி அவ்வளவுதான்.

தமிழை ஒரு பொழுது போக்கு கல்வியா படிக்க சொல்லுங்க.. நான் சொல்லறது ரொம்ப சிம்பிள்..அதாவது வருஷம் புல்லா படிக்க வேணாம்... சம்மர்ல மட்டுமாவது...

குஜராத் 4 நாட் அவுட்

மே 1
என்றவுடன் நினைவுக்கு வருவது உழைப்பாளர் தினம்.
அது மட்டும் அல்ல . 1960,மே 1 -இல் குஜராத் மகாராஷ்டிரா என இரண்டாக பிரிந்தது. இது நடந்தது 50 வருடம் ஆகி விட்டது. அதனால் குஜாரத்தில் "குஜராத் 50" என்று இந்த ஆண்டு கொண்டாடினர். சரி நம்ப கதைக்கு வருவோம்.

நான் குஜராத் வேலைக்கு வந்ததும் இந்த நாளில் (மே 1 ) தான். நான் இங்கு வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குஜராத்தி பேச தெரியாது.(யாருடா அது ஹிந்தி மட்டும் பேச தெரியுமானு கேக்கறது..என்னோட மனசாட்சி தான பொழச்சு போ).இந்த படத்தை பார்த்த ஏதோ என் 5 வது ஆண்டு தொடக்கத்தை சொல்லற மாதிரி இருக்கு இல்ல..

ரொம்ப நல்ல ஊருங்க.. நல்ல மக்கள்..வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு மாதிரி தான் இந்த குஜராத் கூட.காந்தி பிறந்த மண்ணு , அவர் படித்த ஸ்கூல் , மது விலக்கு, IIM ahmedabad ,சோமநாத் கோவில், கிருஷ்ணர் கால் பதித்த தவ்ரக்ஹா, சுரத் சேலை & வைரம் , குஜராத் NRI ,குஜராத் மக்கள் மனசு,அவர்களின் ஷேர் மார்க்கெட் investments , அடுத்த ஸ்டேட் மக்களை ட்ரீட் பண்ணு விதம்
இப்படி எவ்வளவோ விஷயம் குஜராத் பத்தி எழுதனும்னு தோணுது
ஆனா நெறய டைப் பண்ண பண்ண கை வலிக்குது
எனக்கு வர இந்த கை வலி தானா ஆறிடும்.
ஆனா அத படித்து உங்களக்கு வரப்போற வலியை நினைக்கும்
போது டைப் பண்ண வர கை தானா நின்னுடுது.

அதானல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களுக்காக
குஜராத் 4 நாட் அவுட் தொடரும்

விமானம் TAKE OFF

நடுத்தர வர்க்க மனிதாகளின் கனவுகளில் முக்கியமாக ஒன்றாக விமான பயணம் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. உலகமயமாதலும் தனியார்மயமாதலும் இந்த கனவை "வான் (வழி பயணம்) கூட கை தோடு தூரம் தான்" என மாற்றி உள்ளது.
நான் பிறந்தது & "என் ஊரு மதுரை பக்கம்" என்றாலும் வளர்ந்தது எல்லாம் அனைத்து கோபியில் தான்.கோபியில் புகை வண்டியை பார்பதற்கே நான் பேருந்தில் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் அதுவும் விமானம் பார்க்க வேண்டும் என்றால் பல மணி நேரம் புகை வண்டியில் பயணிக்க வேண்டும் என்ற சூழ்நிலை.என் சிறு வயதில் சென்னையில் என் உறவினர் விட்டில் இருக்கையில் விமானங்கள் பறக்கும் போது மொட்ட மாடிக்கு ஓடி போயி "டா டா" காட்டும் வண்டு பைனாக தான் நானும் இருந்தேன்.

விமானத்தில் பயணம் சென்று வருகிறேன் என்று "டா டா" காட்டியது முதன் முதலில் செப்டம்பர் 2007 -இல் தான்.நான் பரோடாவில் இருந்தாலும் நிதி நிலையை கருத்தில் கொண்டு மும்பை வரை புகைவண்டியிலும் அப்பறம் மும்பை டூ சென்னை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் செல்ல ஆயுத்தமானேன்.முதல் முறை செல்ல போறேன் என்பதால் விமான நிலையத்தின் நடை முறைகளை என் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.என் நண்பர்களும் என்னை அவ்வளவு தயார் செய்தனர்.காலை ஆறு மணிக்கே விமான நிலையம் அடைந்து விட்டேன்.எல்லா நடைமுறைகளையும் ஏற்கனவே கேட்டு இருந்தாலும் அது எதையும் நான் பின்பற்ற வில்லை. அங்கு சற்று முற்றும் பார்த்து எனக்கு முன் இருந்தவர்களை அப்படியே காப்பி அடித்தேன்.போர்டிங் பாஸ் வாங்கும் இடத்தில அந்த ஆண் உங்களுக்கு எந்த இருக்கை வேணும் என்று கேட்க "அட எதாவது கொடுப்பா" என்று சொல்லி போர்டிங் பாஸ் வாங்கி செக்குரிட்டி செக் எல்லாம் முடிக்க மணி 6 .45 ஆகி விட்டது .விமானம் 9 மணிக்கு தான்.எல்லாரையும் போலவே அங்கு வைத்து இருந்த ஒரு தினசரி நாளிதழையும் நானும் எடுத்து கொண்டேன்.எனக்கு முதல் பயணம் என்று யாரும் அறிந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.நேரம் செல்ல செல்ல பசி எடுக்க தொடங்கியது.பசி அதிகமாக இருக்கவே ஒரு காபி + ஒரு பப்ஸ் சாப்பிட முடிவெடுத்து அந்த கடையில் காபி முதலில் வாங்கி எவ்வளவு என்று கேட்காமல் 100 ரூபாயை எடுத்து நீட்ட அவன் 50 ரூபாயை திருப்பி தந்து THANK YOU என்று சொன்னவுடனே ஏதோ பசி அடங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டதால் பப்ஸ் -கு பாய் சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன்.விமானத்தில் ஏற அழைத்ததும் நான் சென்று ஏறியவுடன் தான் தெரிந்து எனக்கு சன்னல் ஓர இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று.முதலில் தண்ணீர் பாட்டில் குடுத்தார்கள்.நான் வாங்கவே இல்லை.காசு கேட்பார்களோ என்ற பயம் தான். விமானம் பறக்க தயார் ஆனது. அங்கு இருந்த பணி பெண்கள் பயணத்தின் போது தெரிந்து கொள்ள வேண்டிய சமிக்கைகளை செய்து காட்ட ஆரம்பித்தனர். எனக்கு எதோ எல்லாம் ஏற்கனவே தெரிந்து போல் (எனக்கு முதல் பயணம் என்று யாரும் அறிந்து விட கூடாது என்பதால் ) கவனமில்லாமல் கவனிப்பது போல் மிக கவனமாக கவனித்தேன்.

விமானம் பறக்க தொடங்கியதும் பெரிய சந்தோசமும் அதே அளவு ஒரு பயமும் தொற்றி கொண்டது.இருந்தாலும் சுனா பானவா maintain செய்தேன்.விமானம் take off ஆகிறது...
அடுத்த பதிவில் விமானம் landing ஆகும்...

Popular Posts