நிறவெறி-RACISM



நிறவெறியையை எதிர்த்து தலைவர்
பறக்க விட்டார் சமாதான புறாவை..
வெள்ளை நிற புறாவை மட்டும்
கருப்பு நிற புறாவை ஒதுக்கி விட்டு...




கேரம் விளையாட்டில்
வெள்ளைக்கு இரண்டு மதிப்பு..
செஸ் விளையாட்டில்
வெள்ளைக்கு முதல் வாய்ப்பு..
சமாதான புறா கூட வெள்ளை தான்.
ஆனால் வெள்ளை புடவை அணிந்த
விதவை மட்டும் மதிப்பு அற்று...




பிளாஸ்டிக்கை திட்டாதீர்கள்..
எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாய்
ஒழிக்க முடியாத இரட்டை குவளை முறையை
தனி ஆளாய் ஒழித்தது இந்த பிளாஸ்டிக் டீ கப்பு தான்




எல்லார் காதலியும் rasicsa வாதி தான்
தீண்டாமை கடை பிடிக்க சொல்லுவதால்..

No comments:

Post a Comment

Popular Posts