தங்கத்தை காதலிக்கும் ஆண்களா இங்கு இல்லை


சமீபத்தில் டிவி -ல் பார்த்த ஒரு நகைக்கடை விளம்பரம், விவேக் நடிப்பது, வீட்டை காலி செய்து கொண்டு நகை வாங்க போவார், காரணம் 4 வீடுகள் முதல் பரிசாம். அது உண்மையா இல்லையா , அது முறையாக கிடைக்குமா? என்பதை விட வீடு வாங்கினால் ஒரு கிராம் தங்கம் என்பது போய், தங்கம் வாங்கினால் வீடு என்று சொல்லும் அளவுக்கு தங்கம் விலை உயர காரணம் " தங்கத்தை காதலிக்கும் பெண்களா இங்கு இல்லை" என்பது போயி பணத்தை முதலீடு செய்ய "தங்கத்தை காதலிக்கும் ஆண்களா இங்கு இல்லை" என்று மாறி உள்ளது தான்.

மார்கழி மாதம் அதிகாலை நேரம்

நான் பார்க்க வந்தது
உன் வாசல் கோலத்தை அல்ல -
உன் கோலத்தை தான்!!



நீ பிடித்து வைப்பதால் சாணம் கூட
சாமி ஆகிவிடுகிறது - ஏனோ என்னை
மட்டும் பிடிக்காமலேயே வைத்திருக்கிறாய்??

தினமும் நான் கோவில் செல்வது
சுண்டலுக்காக என்று ஊரே சொல்லுது
எனக்கு மட்டும் தான் தெரியும்
தென்றல் உனக்காக தான் என்று...

கோயில் வாசலில் ஒற்றை காலில் தவம்
இருக்கிறார்கள் வரம் வேண்டி - நானும்
நிற்கிறேன் உன் வரவை வேண்டி...

வாடை காற்றில் என்னை வாடா விடாமல்
உன் அக்னி பார்வையை கொஞ்சம் வீசிப்போ
நான் குளிர் காய்ந்து கொள்ள...

சத்தம் போட்டு சொல்லாதே -2


நான் எதச்சையாக டிவி பார்த்த போது யோகி படம் பற்றி இயக்குனர் அமீர் ,ஒளிபதிவாளர் ,நடிகை மதுமிதா எல்லாரும் ஒரு காட்சி பற்றி சொன்னார்கள்.
மதுமிதா ஒரு குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் காட்சி.
"மதுமிதா தவிர யாரும் இதில் நடிக்க மாட்டார்கள்" என்றார் அமீர்.
"They explained clearly from the beginning.They explained about how they are going take without Vulgarity.Then I accpected They did exactly the same with only four shots",என்றார் மதுமிதா.
நம் தமிழ் கலாச்சாரம் பாதிக்காத வகை-இல் காட்ட நாங்கள் எடிட்டிங் -கில் ரொம்ப கஷ்டபட்டோம் என்றனர் அமீரும் ஒளிபதிவாளரும்.
எனக்கு ஒன்னு புரியல.ஒரு துப்பட்டாவை போட்டு எடுத்து இருந்தால் இது பெரிய விசயமே இல்லை.
எதோ ஒரு மசாலா அல்லது ஒரு சின்ன கவர்சிக்காக எடுத்தாச்சு.ஆனா விளக்கம் தமிழ் கலாச்சாரத்தை காப்பத்தரோம் என்று.
கேட்கறவன் கேணயனா இருந்தா இவங்க என்னவேனாலும் சொல்லுவாங்க.
கடுப்பதேரங்கா My Lord..

தெலுங்கானா!!! தெலுங்கானா???

அட டே தெலுங்கானா உருவாகி விட்டது என்று ஆச்சிர்யதோடு பார்த்தவர்கள் கூட இப்போது அட டா அது உருவாகுமா என்று கேள்வி குறியோடு இருக்கிறார்கள்.என்னை பொறுத்த வரை அது உறுதி ஆகிவிட்டதாக தான் தெரிகிறது.இப்போதே எல்லா கட்சியும் இரண்டாகி விட்டது.மக்களும் இரண்டாகி விட்டார்கள்.இன்னும் மாநிலம் அதிகார பூர்வமாகா பிரிப்பது மட்டும் தான் பாக்கி.
ஒரு தரப்பு கூடாது என்று கோசம் போட்டாலும் இவர்கள் பாதி பேரு YSR இறந்த பிறகு கூட அமைச்சர் வேண்டாம் என்று கூறியவர்கள் இப்போது அமைச்சர் ஆகி விட்டார்கள். ஒரு விவாகரத்து வழக்கில் கணவன் மனைவி இருவரில் ஒருவர் விருப்பம் இல்லை என்றாலும் பிரிவு என்பது உறுதி.சற்று கால தாமதம் ஆகும் அவ்வளவு தான்.ஒரு தரப்பு வேண்டாம் என்று கூற காரணம் ஒரு நகரம் அது ஹைதராபாத்.இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி.முதல் முறையாக பிரிக்கும் புது மாநிலத்துடன் போகிறது தலை நகர். இது எதிர்க்கும் தரப்பு MLA ,MP -க்கு பெரிய பொருளாதார இழப்பு.
பிரியும் தெலுங்கானா இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி மீது அணை கட்டினால் அது கடலோர ஆந்திரா-வை பெரிதும் பாதிக்கும்.

பிரிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை.
1 .எது புதிய தலைநகர் - Viskapatnam ,Vijayawada ,Tirupathi
Viskapatnam என்றால் அது ஒரு ஓரத்தில் இருப்பதால் மீண்டும் ராயலசிம்மா புறகணிக்க படுகிறோம் என்று பிரிவு கோர வாய்ப்பு உள்ளது.
Tirupathi என்றால் அது ராயலசிம்மா பகுதயில் இருப்பதால் கடலோர ஆந்திரா மீண்டும் ஒரு தலை நகர் இழக்க வேண்டி வருமோ என்று பயந்து அதை ஏற்காது.என்னை பொறுத்தவரை விஜயவாடா என்பது நன்று.அங்கிருந்து நான்கு பெரிய நகரங்களை (Chennai,Viskaptanam,Banglore,Hyderabad) எளிதில் அடைய முடியும்.
2.நதி நீர் பங்கீடு
இந்தியா பாகிஸ்தான் சிந்து நதியை பங்கு போட்டு கொள்கிறோம்.அதில் பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால் எல்லா மாநிலத்தோடும் நதியை பங்கு போட்டு கொள்ளுவதில் பிரச்சனை அதிகமாக உள்ளது என்பது நாம் அறிந்ததே.
என்னை பொறுத்தவரை எவ்வாறு நதி நீர் பங்கீடு,அனை கட்டுவது பற்றி பிரிவுக்கு முன்பே முடிவு செய்ய வேண்டும்.
3 .இன்னும் எத்தனை மாநிலங்கள்?
மாநிலங்கள் பிரிப்பது தொடர்பாக ஒரு உறுதியான சட்ட வரைமுறை தேவை.உண்ணாவிரதம் இருந்தால் மாநிலம் என்றால் 2020 -இல் மாநிலம் இருக்காது .குறுநிலம் தான் இருக்கும்.

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது?
இறைவா
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

விஜயின் பாதை - ஒரு பார்வை

நாளை விஜய்-இன் புது படம் வேட்டைக்காரன் வெளி வருகிறது.இந்த படத்தின் இயக்குனர் பாபு சிவன் மற்றும் புது கதாநாயகி என்பது மட்டுமே மாறுதலாக இருககும் என்று தோன்றுகிறது.இது கூட எனக்கு சற்று ஆறுதலாக தான் தெரிகிறது.ஏன் எனில் அவர் சமீப காலத்தில் நடித்த படங்களான வில்லு, அழகிய தமிழ் மகன், குருவி,ஆதி,சிவகாசி, போக்கிரி, திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் கதாநாயகி மற்றும் இயக்குனர்கள் பற்றி கேள்வி கேட்டால் நம்மில் பல பேர் சற்று குழம்பித்தான் போவோம். ஏன் எனில் நாலு படத்தில் கதாநாயகி திரிஷா இரு படத்தில் அசின் , இரு படத்துக்கு இயக்குனர்கள் பிரபு தேவா, இரு படத்திற்கு தரணி, இரு படத்திற்கு பேரரசு யார் எந்த படம் என்பது நமக்கு குழப்பம் வருவது இயல்பு. அவர் இடையில் நடித்த சற்று மாறுதலான படம் சச்சின் அதுவும் வணிக ரீதியாக பெரிய லாபம் கிட்டாததால் மீண்டும் தனது பழைய பாணிக்கு வந்து விட்டார். மசாலா படங்களை மட்டும் கொடுத்து வெற்றி பெறுவது என்பது மிக கடினமான விஷயமே. பிறகு அது விஜய்க்கு மட்டும் தெரிந்த வித்தையோ?



கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு விஜய் படத்தின் ரிலீஸ்-in போதும் திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ எப்பொழுதும் சில forward message அவர் புது படத்தை தாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.இது எனக்கு சரியாக படவில்லை.பல ஹீரோக்கள் இதை தான் செய்கிறார்கள் பிறகு ஏன் விஜயை மட்டும் தாக்குதல் நடத்துகிறார்கள்.விஜய் தன் உடல் வாகை இன்னும் அப்படியே வைத்து உள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.இந்த message-ai forward செய்யும் பலபேர் இப்போதே "நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட" என்ற படலை முனு முணுக்க தொடங்கி விட்டதால் வேட்டைக்காரன் நல்ல வசூல் வேட்டையில் இறங்குவான் என்பது எனக்கு இப்போதே தெரிகிறது.ஆனால் இத்தனை மசாலாக்கள் விஜய்க்கு எப்படி போர் அடிக்காமல் உள்ளது என எனக்கு புரியவில்லை

Masala- வை நாம் அதிகமாக விரும்புகிறோம் என்பது இயல்பு. அது உணவில் என்றாலும் சரி படத்தில் என்றாலும் சரி. நம்மில் பல பேர் பழைய சோறு சாப்பிட விரும்புவது அதன் உடன் உள்ள ஊறுகாய் அல்லது உரிச்ச வெங்காயத்திர்க்காகதான். நாம் சாப்பாட்டை விட சமோசாவை தான் அதிகமாக விரும்புகிறோம்.அது உடல் நலத்திற்கு கெடுதல் என்றாலும் கூட. இல்லை என்பவர்கள் தங்கள் இடுப்பளவை பாருங்கள் உண்மை புரியும்.

ஆம் விஜய் நம்மை போல் ஒருவன் தான் (Fw: Nammai Pol Oruvan )

விஜய் நீங்க கலக்குங்க சித்தப்பு ...ஆனா ஒன்னு சொல்றேன் கேளுங்கோ விஜய்

வாழ்கை ஒரு வட்டம் Mass (மசாலா) படம் நட்சவன் class (classical ) படம் நடிச்சு தான் ஆகனும்.

அத நாங்க புரிஞ்ச்கிட்டோம் நீங்க சீக்ரமே புரிஞ்சுபீங்கோ..

மீரஜ் & Me




மீரஜ் மகாராஷ்டிரா & கர்நாடகாவின் எல்லை கோடு.
எனது professinoal வாழ்கை-இன் ஆரம்ப கோடு
எனது முதல் வெளி நாட்டு பயணம்
இல்லை இல்லை வெளி ஸ்டேட்டு பயணம்..

மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும்
நிலமும் நிலம் சார்ந்த மருதமும் கலந்த கலவை.
மீரஜ் மூன்று D' க்களுக்கு பிரபலம்
கழுதை எனும் Donkey
தூசு எனும் Dust
மருத்துவர் எனும் Doctor
மூன்றிலும் 33 சதவீதமாய் நான்.

விநாயகரிடம் கொண்ட பக்திக்கு முக்தியாக கிடைத்தது
வேலை சித்தி விநாயக் கணபதி மருத்தவமனையில்
வேலை கிடைக்க எந்த சாமி காரணம் என்றால் சட் என்று
சொல்வேன் குப்புசாமி , சீனிசாமி என்ற இரு ஆசாமிகளை .

விழுங்க முடியாத உணவு, விளங்க முடியாத மொழி
ஆட்டோ காரனிடம் argue செய்ய இயலவில்லை
அழகான பெண்ணிடம் டைம் கேட்க முடியவில்லை
இந்தி எதிர்த்த தலைவர்கள் எல்லாம்
என் நெஞ்சில் எதிரிகளாய் தெரிந்தனர்.

விழுங்க முடியாத உனவின் விளைவு
வித விதமாய் விலை உயர்ந்த உணவு
தேடல் ஆரம்பித்ததும் இங்கே தான்.
சைவத்திற்க்கு அன்னபூர்ணா
அசைவத்திற்க்கு ரஹமதுல்லா

சில வேலை முன்பே செய்திருந்தாலும்
படித்ததற்காக கிடைத்த முதல் வேலை இங்கே தான்
ஆங்கில படமும் ஹிந்தி படமும்
பார்க்க தொடங்கியதும் இங்கே தான்.

மருத்துவ கல்லூரியும் லட்சுமி மார்கெட்டும் ஊருக்கு அழகு
அங்கே இருந்தால் நம் மனதிற்கே அழகு - எல்லா
ஊரிலும் அழகான பெண்களெல்லாம் இருப்பார்கள் ஆனால்
இந்த ஊரில் தான் எல்லா பெண்களும் அழகாக இருப்பார்கள்.
மிரஜ் பெண்கள் அழகு சிலைகள் அவர்கள்
உடைகள் எல்லாம் கண்ணாடி இழைகள் அதை
காண போதாது நம் இரு விழிகள்.அவர்கள்
அவவ்போது எனை தாக்கும் உளிகள்.

சாதிக்கு ஒரு சங்கம் இருந்தாலும்
பெயரில் சாதி இல்லை நம்ம ஊரில்
அதற்கு இங்கு Surname என்று பெயர்

வருடம் வருடம் இந்துகளின் விநாயகர் சதுர்த்தி
பண்டிகையும் முஸ்லிம்களின் உருசு திருவிழாவும்
ஒன்றை ஒன்று முந்தி கொண்டு வர பார்க்கும்.
அதனால் இந்துவும் முஸ்லிமும் லேசாய்
முட்டி கொள்ள வழி பொறக்கும்...

இந்த ஊரு சட்டமன்ற தேர்தல் கூட நம் ஊரு
காலேஜ் தேர்தலிடம் தோற்று போகும்.
சினிமா போஸ்டர் இல்லாத சுவர்களால்
கழுதைகள் எல்லாம் பசியால் காய்ந்து சாகும்...

ஏழு மாத வாழ்கை என்றாலும் ஏழு
ஏழு ஜென்மம் வரை நினைவில் நிற்கும் இந்த
அனுபவம் - முதல் வேலை என்பதால் மட்டும் அல்ல
படித்தவுடன் வேலை கிடைத்தது என்பதால் கூட .

மூட (முடியாத) நம்பிக்கை

உறவினர் வீட்டுக்கு வந்து திரும்ப தயார் ஆனார்கள் சிவா மற்றும் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் அவனது அம்மா.

வாசலை கடந்ததும் ஒரு பூனை குறுக்கே வர மன ஊளைச்சலுக்கு உள்ளான தாய் சிவாவிடம் " வாடா, வீட்டிக்கு போய் தண்ணீ குடித்து விட்டு போலாம்." என்றாள்.

அம்மாவின் பேச்சால் கடுப்பான சிவா அது ஒரு மூட நம்பிக்கை என புரிய வைக்க வாக்கு வாதம் செய்தான்.கடைசி வரை புரியாத அம்மாவை நினைத்து சிரித்த படியே அவ்வாறே செய்து மீண்டும் ஊருக்கு கிளம்பினார்கள்.

அன்று மாலை சிவா தன் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த படி அமர்ந்திருந்த வேலையில் அவனது நண்பன் வந்தான்.
"என்னடா சிவா எப்படி இருக்க ? ஜாப் எல்லாம் எப்படி போவுது ?" என்றான் அவனது நண்பன்.
"fine டா" என்றான் சிவா.
" வா பா எப்படி இருக்க ? ஏன் இப்ப எல்லாம் இங்க வர்ரதே இல்ல ?" என்ற படியே வந்தாள் சிவாவின் தாய்.
"இல்ல ஆன்டி ,கொஞ்சம் பிஸி அதான்... என இழுத்த படியே,
சிவா, What about match da ? ". என்றான் அவனது நண்பன்.
"Touch wood India is playing fine upto now , sachin is 97" என்றான்.

அவன் சொன்னதை மீண்டும் ஒரு முறை சொல்லி பார்த்தாள் சிவாவின் தாய்.
"Touch wood India is playing fine upto now , sachin is 97" என்றான்.
காலையில் தன்னிடம் மூட நம்பிக்கை பற்றி வாக்கு வாதம் செய்த தன் மகன் தானே ஒரு (மூட) நம்பிக்கையை தனக்கே தெரியாமல் நாகரிக தோனியோடு "Tocuh wood " என கூறியதை நினைத்தும் வார்த்தைகள் தான் இங்கு மாறுகிறது நம் நம்பிக்கைகள் அல்ல என நினைத்து கொண்டும் மனதுக்குள் சிரித்த படியே அவனிடம் வாக்கு வாதம் ஏதும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

சத்தம் போட்டு சொல்லாதே - 1


தமிழகத்தில் இந்த டிசம்பர் மாதத்தில் இன்னும் ஒரு திருவிழா.இடை தேர்தல் திருவிழா..
இதுவரை நடந்த இடை தேர்தல்களில் ஆளும் கட்சி தான் அதிகமாக வெற்றி பெற்று உள்ளது என்பது புள்ளியல் தரும் செய்தி. தேர்தல் என்றால் பல கூத்துகள் நடக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசம் மட்டும் அல்ல, சுவராசியமும் கூட.

திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாக்ருஷ்ணன் எப்படியும் தன் ப(X )த்தாலும் கட்சி
ப(X )த்தாலும் வென்று விடுவார் என்றாலும் சுவராசியமும் என்னவென்றால் அனிதா ராதாக்ருஷ்ணன் அதிமுக-வில் இருந்து விலகி MLA பதவியை ராஜினமா செய்ததால் இந்த இடை தேர்தல் நடக்கிறது. MLA வாக இருந்த ஒருவரே மீண்டும் அதே தொகுதியில் MLA வாக இந்த தேர்தல் நடக்கிறது அதுவும் நம் வரி பணத்தில்.

என்ன கொடுமை சார் என்கிறிர்களா ?

அட அரசியல இதலாம் சகஜம் அப்பா! இல்ல இல்ல சாதாரணமப்பா!!

------------------------
பின் குறிப்பு : (X) என்ற இடத்தில வரும் எழுத்து options are below
(a) ல (b) ண (c) ன

பெண் Vs Physics



முன் குறிப்பு:
தொலைக்காட்சி முழுவதும் ரியாலிட்டி ஷோ-வில் பெண்களின் கெமிஸ்ட்ரியை பார்த்துக்கொண்டு இருக்க நான் பெண்களிடம் physics -ஐ பார்க்க முறபட்டத்தின் விளைவு இதோ
------------------------------------------
நியுட்டனின் புவி ஈர்ப்பு விசையை
கொக்கி போட்டு இழுக்கும் விழி ஈர்ப்பு விசையால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

கலிலியோ-வின் அலைவு நேரத்தை
பிண்ணிய கூந்தலின் இட வல அசைவுகளால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

ஐன்ஸ்டீன்-ன் அணுக்கொள்கையை
வெடித்து சிதறும் மனக்கொள்கையால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...



ஆர்க்கிமிடிஸ் கோட்ப்பாட்டை
ஆண்களால் வெளியேற்றப்பட்ட அழுகையும்
பெண்களால் வெளியேற்றப்பட்ட சிரிப்பும் சமம் என்பதால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்....

நான் அறிஞன் அல்ல அறிஞன் ஆக்கப்பட்டவன் !?
நான் கவிஞனும் அல்ல கவிஞன் ஆக்கப்பட்டவன் !?

Popular Posts