பெண்களுக்கு இட ஒதுக்கீடு


பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்று 41 % பேரும் தேவை இல்லை என்று 59 % பேரும் கருத்து கூறி உள்ளீர்கள்.


(குறிப்பு : நமது பதிவகத்தை பார்பவர்கள்(கருத்து சொன்னவர்கள்) 95 % ஆண்கள் தான்).

தவிப்பு


(நன்றி : நண்பர் தினேஷ் எழுதியது)

நெரிசல் இல்லாத பேருந்து
ஜன்னல் ஓர இருக்கை
மாலை நேர தென்றல்
முன் இருக்கையில்
அழகான இளம் பெண்
இத்தனை இருந்தும் - இதயம்
ரசிக்கவில்லை எதையும்
நடத்துனரிடம் சில்லறை பாக்கி...


(நன்றி: நண்பர் தினேஷ் எழுதியது)

உள்ளது உள்ளபடி -3

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


12-May 2009
இடம் : ராமநாதபுரம்


மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை பேருந்தில் நான் உறங்கி போனதால் அப்பிரயாணத்தில் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் ஒன்றும் இல்லை வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவின் கையால் சுடு சோறு தக்காளி ரசம் அப்பளம் என்று ஒரு பிடி பிடித்தேன்( எத்தனை உயர் வகை உணவகங்களில் உணவு அருந்தினாலும் வீட்டு உணவுக்கு நிகர் ஏதும் இல்லை ), பயண களைப்பில் ஒரு உறக்கம் போட்டு எழுந்தேன்,என்னுடைய சித்தி சூடாக கொண்டகடலை சுண்டல் செய்து கொண்டு வந்தார்கள்,ஆகா! என்ன ஒரு சுவை,
உடை மாற்றி கொண்டு நான் வளர்ந்த நகரத்தை ஒரு சுற்று காண வேண்டி வீட்டை விடு வெளியே வந்தேன் , பொதுவாக ராமநாதபுரத்தை நடையிலும் மிதிவண்டியிலும் சுற்றி பழக்க பட்டதால் நடராசா டிரான்ச்போர்டை தொடங்கினேன்.

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட அவைகளை சுகமாக அசை போட்டேன் எனது தந்தை என்னை அழைத்து செல்லும் கிருஷ்ண பவன் உணவகம்(opp to G.H) கண்ணில் பட்டது (தற்பொழுது அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பெயர் வேறு )
பதினைந்து வருடங்களுக்கு முன் ஒவ்வொரு சனி கிழமையும் மேட்டினி சோ கண்டு விட்டு தந்தை மற்றும் சகோதரியுடன் இவ்வுணவகத்தில் வெங்காய பஜ்ஜியும் தேங்கா சட்டினியும் அருந்தியது கண் முன் வந்தது.
பழைய நினைவுகளை மென்று கொண்டே அவ்விடத்தை கடந்தேன் வழியில் டீ விற்கும் சுப்புவை கண்டேன் (இவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்பவர் )அதே காக்கி சட்டை , டிரவுசர் அதே சைக்கிள் ஒரே ஒரு மாற்றம் கண்ணாடி கிளாசிற்கு பதிலாக disposable கப் ; ஒரு டீயை வாங்கி கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன்,அவருக்கு ஒரு 45 வயது இருக்கும் சுமார் 28 வருடங்களாக இத்தொழில் செய்கிறார்.

இன்னும் வறுமை கோட்டிலே தான் இருக்கிறார் இரண்டு குழந்தைகள் உள்ளன பள்ளி படிப்பை முடித்திருகிறார்கள் , வீட்டிலே கலர் டீவீயும் தொலை பேசியும் உள்ளது பெரிய சேமிப்பு ஒன்றும் இல்லை இவ்வளவுக்கும் அவர் நல்ல உழைப்பாளி சிக்கனமாக வாழ்பவர் பெரிய கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை ஆனால் சினிமாக்களில் மட்டும் ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் விந்தையை எண்ணி வியந்தேன்.

இன்னும் சொல்லுவேன்

கிருஷ்ணா, தமிழில் டைப் செய்ய கஷ்டமாக இல்லையா??

குழந்தை நடக்கும் பொழுது தவறி விழுந்தால்...
பார்க்க கஷ்டமாக தான் இருக்கும் உங்களுக்கு ...
ஆனால் வலியோடு அது உற்சாகமாய் எழுந்து நடக்கும்...
உங்கள் கை தட்டலுடன்..



குழந்தை தப்பு தப்பாய் பேசுகையில்
நீங்கள் மழலை என்று பொறுத்து
கொள்வதும் ரசிப்பதும் அதன் பேச்சை வலுவாக்கும்...

சத்தம் போட்டு சொல்லாதே -6


தமிழகத்தில் ஒரு புதிய கவலை என்னவென்றால் திருட்டு VCD கிடைப்பது கஷ்டமாகி விட்டது என்று.இந்த ஆயிரத்தில் ஒருவன் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் கொடுத்த புகார் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.கலைஞரின் அடுத்த அடுத்த வாரிசுகள் எல்லாம் படம் எடுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அது அப்படி இருந்தால் ஒரு சட்டம் கடுமையாக பின்பற்ற காரணமாய் இருக்கும் கலைஞரின் அடுத்த அடுத்த வாரிசுகளுக்கு நன்றி நன்றி...

20-20


20-20 போட்டியில் பவுன்டரிகள் தேவை

அணியின் ஓட்டத்திற்காக அல்ல

Cheer (Leaders) girls-in ஆட்டத்திற்காக....

எப்புடி...

சின்ன சின்ன வருத்தங்கள்


கடிகாரத்திலோ கைபேசியிலோ
படும் முதல் கீறல்...

புதிய சட்டையின் காலர் விறைப்பு தன்மை
குறைந்ததை உணரும் நேரம்..

நண்பர் கணினியில் Enter பட்டனை
வேகமாக அழுத்தி தட்டும் நேரம்...

முன்று வினாடி அதிகம் பேசியதருக்கு
ஒரு நிமிட கணக்கில் கட் ஆகும் கைபேசி காசு ...

காதல் என்பது

பாதையும் பதவில் எடுக்கப்படும் கருத்து எடுப்பை சேமித்து வைக்க "கருத்து கணிப்பு" என்று ஒரு புதிய பிரிவு இணைக்கபட்டுள்ளது

விண்ணை தாண்டி வருவாயா - திரைப்படம்

விண்ணை தாண்டி வருவாயா - திரைப்படம்
DIRECTED BY : GOUTHAM MENON.
MUSIC BY : A.R.RAHMAN.
STAR CAST : SIMBHU, TRISHA

Story:


First love will be remains in the heart till the end.For Every girls, Her lover & Her Family are the two eyes.She Can't answer which one is best.It will vary from time to time.




Plus +++++
1.No Over Acting from Anybody Especially Simbu
2.No மசாலா
3.Love, Love & Love only

Miuns---------

1.Repeated Scene from Gowtham's previous films like
a.Song "Hosana" looks like a "Adiyae kollutha" from varnam ayiram,
b.Song "Kadal viluntha" meen looks like "Anal mela panithuli" from Varanam Ayiram
c.one song in bed room like kaka kaka,patchai kili muthucharam and all
d.Cotton saree Heroine kaka kaka,patchai kili muthucharam
e.One thing is not repeated that also went as negative.That is Harris Jeyaraj

2.Most of the places Narrating the story by back ground didn't give feel to the film

3.Repeated Dialogues like
a.எவ்வளவோ பொண்ணு இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை லவ் பண்ணுன
b.எனக்கு 20 உனக்கு 21,எனக்கு 49 உனக்கு 50.எனக்கு 80 உனக்கு 81 like that.

Over all:
His Previous film Varanm ayiram was upper middle class story of
"தவமாய் தவமிருந்து" .In Same Way this VTV is upper middle class story of "அழகி"

இதயத்துள்ள கைவைக்கும் போது என் இதயம் சொன்னது:

1 .Interval வரும் பொழுது விண்ணை தாண்டி வருவாயானு படத்துல கேட்டது எனக்கு interval போய்ட்டு வருவாயானு கேட்டது
2 .படம் முடியும் போது
படத்தின் முதல் டயலாக் ஞாபகம் வந்தது "எவ்வளவோ படம் இருந்தும் நான் ஏன் இந்த படத்துக்கு" வந்தேன்.

தேவதை


நாய்கள் ஜாக்கிரதை என்று போர்டு
எழுத அவள் வீடு வந்தவன்
அவளை பார்த்து அழகு ஜாக்கிரதை
என போர்டு எழுதி சென்று விட்டானாம் ..



Holi தினத்தில் வண்ணம் தீர்ந்ததால்
எவனோ ஒருவன் அவள் கன்னம் தொட்டே
கலர் எடுத்து சென்று விட்டானாம்...

விலை வாசி ஏற்றம்..

கடந்த ஒரு மாதத்தில் பால் 2 ரூபாய் , அரிசி 15 ரூபாய் , சிக்கன் 20 ரூபாய் அதிகமாகி உள்ளது.
விலை வாசி பற்றி சற்று யோசித்த போது எனக்கு பட்ட விஷயங்கள்..
கடந்த இரண்டு வருஷத்தில் சின்ன ஊருகளில் கூட சூப்பர் மார்க்கெட் ஆரமித்து உள்ளார்கள்.
அதுவும் ADITYA BIRLA GROUP,RELIANCE போன்ற பெரிய நிறுவனங்கள்.
மக்கள் தொகை நிறைந்த நம் போன்ற நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் நல்ல வியாபார தன்மை கொண்டது.பேராண்மை படத்தில் சொல்வது போல் M-C-M முறை தான்.இது இன்னும்அதிகமாகும்.



முன்பு மேஸ்திரி வீடு கட்டுவார் இப்போது அது மறைந்து construction கம்பெனிகள் மற்றும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் போல் வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் மாறும்.
இதன் அடுத்த கட்டமாக சில பெரிய கம்பனிகள் விவசாய நிலத்தை வாங்கி விவசாயிகளை வேலைக்கு வைத்து பல உரங்களை போட்டு உற்பத்தி அதிகபடுத்தி விவசாயிகளை மாத சம்பளகாரர்களாக மாற்ற கூடும்.அன்று விவசாயிகளும் 8 மணி நேரம் வேலை + ஓவர் டைம் என்று சம்பளம் வாங்க கூடும். தொழில் போட்டியால் அப்பொழுது வேண்டுமானால் விலை கொஞ்சம் குறையலாம்.அது வரை விலை வாசி ஏறுமுகம் தான்...

ஷீரடி பயணம்

ஹைதராபாத்தில் இருந்து நண்பர்கள் திரு , கதிர், இளங்கோ, தமிழ்செல்வன் நான்கு நண்பர்கள் 13.02.2010 அன்று மகாராஷ்ட்ராவில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவில் வருவதாக இருந்தனர்.குஜராதில் இருந்து நான் என் நண்பன் வேல் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.பயணம் கடைசி 5 நாளில் முடிவு செய்யபட்டது.அதற்கு அருகில் இருந்த சனி சிங்கப்பூர் (அதாங்க Bajaj Discover DTSi விளம்பரம் வருமே கதவு இல்லாத இடம்னு -அது எல்லாம் பொய்) கோவிலுக்கும் சென்றோம்.இருவரும் 13 .02 .2010 இரவே திரும்பிவிட முடிவு செய்து இருந்தாலும் நாசிக் அருகே இருந்த ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறியதால் 14 .02 .2010 அன்று அங்கும் சென்று வந்தோம்.









இந்த பயணத்தில் கண்ட மூன்று விஷயங்கள் உங்களுடன் இங்கே:

1 .நாங்கள் ஷீரடி சாய் பாபா கோவிலில் காத்திருந்த நேரம் 9 am to 1pm -4 Hrs
சனி சிங்கப்பூர் கோவிலில் காத்திருந்த நேரம் 4.30pm to 6pm -1.5 Hrs
நாசிக் ஜோதிரலிங்கம் கோவிலில் காத்திருந்த நேரம் 10.30am to 2 pm - 4.5 hrs

எந்த ஒரு கோவிலிலும் சிறப்பு தரிசனம் இல்லை.தமிழகத்தில் சின்ன கோவில்களில் கூட சிறப்பு தரிசனம் உண்டு. அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பன்னாரி அம்மன் கோவிலில் Rs.10/-, Rs.25/-, Rs.50/- Rs.100/- என்று பார்த்த எனக்கு கொஞ்சம் அச்சிர்யமாக இருந்தது.கடவுள் முன்பு எல்லாரும் சமம் என்பது மீண்டும் யாரோ சொன்னது போல ஒரு உனர்வு.

2 .நாங்கள் நாசிக் நகரில் ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவில் முடித்தவுடன் அங்கு உள்ள மற்ற 9 இடங்கள் பார்க்க ஒரு ஆட்டோ எடுத்து கொள்ளுமாறு எங்களது கார் டிரைவர் சொன்னார். நாங்களும் ஒரு ஆட்டோ எடுத்து கொண்டு சென்றோம்.
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கூட இல்லை. 9 கோவில்கள் முடிந்தது என்றான் அந்த ஆட்டோகாரன்
கோதாவரி ஆரம்பிக்கும் இடம் -அது தான் லக்ஷ்மணன் சூற்பனகையின் மூக்கை அறுத்து போட்ட இடமாம்.
ஹிந்தியில் முக்குக்கு நாக் என்று சொல்லுவார்கள் அதனால் தான் நாசிக் என்று அந்த ஊர் அழைக்கபடுகிறதாம்.
அது ஆரம்பிக்கும் இடத்தில உள்ள ஒரு சிவசக்தி சிலை,ஒரு கோதாவரி அம்மன் சிலை ,அதன் ஊற்று மாதிரி வடிவம்,அதன் பின்னால் உள்ள ஒரு சிவன் கோவில் என்று ஐந்து இடங்களை அந்த இடத்திலயே முடித்துவிட்டான்.அதன் பின் அடுத்த வீதியில் , ராமன் சீதையை மறித்து வைத்த குகை (இப்போது அது குகை + வீடு அந்த குகை மேலே வீடுகள் கட்டி மக்கள் குடி இருக்கிறார்கள்),5 ஆலமரம் (அந்த காலத்தில் காட்டில் அடையாளத்திற்காக ராமன் நட்ட 5 செடிகளாம்.இப்போது பெரிய ஆலமரமாய் இருக்கிறது),லக்ஸ்மன் கோவில்,கருங்கலில் கட்ட பட்ட ஒரு கோவில் என்று 9 இடங்களை முடித்து விட்டான்.இதை நான் இங்கு சொல்ல காரணம் ஒரு இடத்தில ஒரு முக்கியமான இடம் தான் இருக்க முடியும் மற்ற இடங்கள் எல்லாம் சுற்றுலா பயணிகளை அடிப்படையாக கொண்டு உருவானதாகும்.ஒரு நாளை முழவதும் கழிப்தற்காக அங்கு உள்ள சின்ன இடங்கள் எல்லாம் சும்மா ஒரு setup அவ்வளவு தான். இது இங்கு எனக்கு நிகழ்ந்த அனுவபம் அல்ல.நான் ஏற்கனவே சென்றுள்ள சோம்நாத் கோவில், கேரளா kumrakom பயணம் எல்லாம் இது போல தான்.நீங்கள் எங்காவது சென்றால் முக்கியமான இடத்தில் முடிந்த அளவு அதிக நேரம் இருக்க முயலுங்கள்.அதன் சுற்றி உள்ள சின்ன இடங்கள் ஒரு ப்ரீ போனஸ் அவ்வளவு தான்.அதை அதிகம் எதிர் பார்த்து ஏமாறதீர்கள்..

3 .நாங்கள் சென்ற சனி சிங்கப்பூர் கோவிலில் ரொம்ப கூட்டம்.நாங்கள நினைத்தோம் அது சனிகிழமை என்பதால் கூட்டம் அதிகம் என்று ஆனால் பின் அங்கே விசாரித்த போது சொன்னார்கள். அது ரொம்ப விசேசமான நாள்.அது போன்ற நாள் வருடத்தில் இரு முறை தான் வரும் என்று & எதிர் பாராமல் 14 .02 .2010 அன்று சென்று வந்த ஜோதிரலிங்கம் திரும்பகேஷ்வர் கோவில் இரண்டும் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. சில விஷயங்கள் தானாக நடக்கிறது இல்லை இல்லை அந்த ஆண்டவன் வழி படியே நடக்கிறது.காதல் தினத்தன்று நான் உணர்ந்த விஷயம் கடவுள் என்ற ஒன்று காதல் போல உணர தானே முடியும் உருவம் இல்லை.

Popular Posts