தங்கத்தை காதலிக்கும் ஆண்களா இங்கு இல்லை


சமீபத்தில் டிவி -ல் பார்த்த ஒரு நகைக்கடை விளம்பரம், விவேக் நடிப்பது, வீட்டை காலி செய்து கொண்டு நகை வாங்க போவார், காரணம் 4 வீடுகள் முதல் பரிசாம். அது உண்மையா இல்லையா , அது முறையாக கிடைக்குமா? என்பதை விட வீடு வாங்கினால் ஒரு கிராம் தங்கம் என்பது போய், தங்கம் வாங்கினால் வீடு என்று சொல்லும் அளவுக்கு தங்கம் விலை உயர காரணம் " தங்கத்தை காதலிக்கும் பெண்களா இங்கு இல்லை" என்பது போயி பணத்தை முதலீடு செய்ய "தங்கத்தை காதலிக்கும் ஆண்களா இங்கு இல்லை" என்று மாறி உள்ளது தான்.

மார்கழி மாதம் அதிகாலை நேரம்

நான் பார்க்க வந்தது
உன் வாசல் கோலத்தை அல்ல -
உன் கோலத்தை தான்!!



நீ பிடித்து வைப்பதால் சாணம் கூட
சாமி ஆகிவிடுகிறது - ஏனோ என்னை
மட்டும் பிடிக்காமலேயே வைத்திருக்கிறாய்??

தினமும் நான் கோவில் செல்வது
சுண்டலுக்காக என்று ஊரே சொல்லுது
எனக்கு மட்டும் தான் தெரியும்
தென்றல் உனக்காக தான் என்று...

கோயில் வாசலில் ஒற்றை காலில் தவம்
இருக்கிறார்கள் வரம் வேண்டி - நானும்
நிற்கிறேன் உன் வரவை வேண்டி...

வாடை காற்றில் என்னை வாடா விடாமல்
உன் அக்னி பார்வையை கொஞ்சம் வீசிப்போ
நான் குளிர் காய்ந்து கொள்ள...

சத்தம் போட்டு சொல்லாதே -2


நான் எதச்சையாக டிவி பார்த்த போது யோகி படம் பற்றி இயக்குனர் அமீர் ,ஒளிபதிவாளர் ,நடிகை மதுமிதா எல்லாரும் ஒரு காட்சி பற்றி சொன்னார்கள்.
மதுமிதா ஒரு குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் காட்சி.
"மதுமிதா தவிர யாரும் இதில் நடிக்க மாட்டார்கள்" என்றார் அமீர்.
"They explained clearly from the beginning.They explained about how they are going take without Vulgarity.Then I accpected They did exactly the same with only four shots",என்றார் மதுமிதா.
நம் தமிழ் கலாச்சாரம் பாதிக்காத வகை-இல் காட்ட நாங்கள் எடிட்டிங் -கில் ரொம்ப கஷ்டபட்டோம் என்றனர் அமீரும் ஒளிபதிவாளரும்.
எனக்கு ஒன்னு புரியல.ஒரு துப்பட்டாவை போட்டு எடுத்து இருந்தால் இது பெரிய விசயமே இல்லை.
எதோ ஒரு மசாலா அல்லது ஒரு சின்ன கவர்சிக்காக எடுத்தாச்சு.ஆனா விளக்கம் தமிழ் கலாச்சாரத்தை காப்பத்தரோம் என்று.
கேட்கறவன் கேணயனா இருந்தா இவங்க என்னவேனாலும் சொல்லுவாங்க.
கடுப்பதேரங்கா My Lord..

தெலுங்கானா!!! தெலுங்கானா???

அட டே தெலுங்கானா உருவாகி விட்டது என்று ஆச்சிர்யதோடு பார்த்தவர்கள் கூட இப்போது அட டா அது உருவாகுமா என்று கேள்வி குறியோடு இருக்கிறார்கள்.என்னை பொறுத்த வரை அது உறுதி ஆகிவிட்டதாக தான் தெரிகிறது.இப்போதே எல்லா கட்சியும் இரண்டாகி விட்டது.மக்களும் இரண்டாகி விட்டார்கள்.இன்னும் மாநிலம் அதிகார பூர்வமாகா பிரிப்பது மட்டும் தான் பாக்கி.
ஒரு தரப்பு கூடாது என்று கோசம் போட்டாலும் இவர்கள் பாதி பேரு YSR இறந்த பிறகு கூட அமைச்சர் வேண்டாம் என்று கூறியவர்கள் இப்போது அமைச்சர் ஆகி விட்டார்கள். ஒரு விவாகரத்து வழக்கில் கணவன் மனைவி இருவரில் ஒருவர் விருப்பம் இல்லை என்றாலும் பிரிவு என்பது உறுதி.சற்று கால தாமதம் ஆகும் அவ்வளவு தான்.ஒரு தரப்பு வேண்டாம் என்று கூற காரணம் ஒரு நகரம் அது ஹைதராபாத்.இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி.முதல் முறையாக பிரிக்கும் புது மாநிலத்துடன் போகிறது தலை நகர். இது எதிர்க்கும் தரப்பு MLA ,MP -க்கு பெரிய பொருளாதார இழப்பு.
பிரியும் தெலுங்கானா இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி மீது அணை கட்டினால் அது கடலோர ஆந்திரா-வை பெரிதும் பாதிக்கும்.

பிரிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை.
1 .எது புதிய தலைநகர் - Viskapatnam ,Vijayawada ,Tirupathi
Viskapatnam என்றால் அது ஒரு ஓரத்தில் இருப்பதால் மீண்டும் ராயலசிம்மா புறகணிக்க படுகிறோம் என்று பிரிவு கோர வாய்ப்பு உள்ளது.
Tirupathi என்றால் அது ராயலசிம்மா பகுதயில் இருப்பதால் கடலோர ஆந்திரா மீண்டும் ஒரு தலை நகர் இழக்க வேண்டி வருமோ என்று பயந்து அதை ஏற்காது.என்னை பொறுத்தவரை விஜயவாடா என்பது நன்று.அங்கிருந்து நான்கு பெரிய நகரங்களை (Chennai,Viskaptanam,Banglore,Hyderabad) எளிதில் அடைய முடியும்.
2.நதி நீர் பங்கீடு
இந்தியா பாகிஸ்தான் சிந்து நதியை பங்கு போட்டு கொள்கிறோம்.அதில் பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால் எல்லா மாநிலத்தோடும் நதியை பங்கு போட்டு கொள்ளுவதில் பிரச்சனை அதிகமாக உள்ளது என்பது நாம் அறிந்ததே.
என்னை பொறுத்தவரை எவ்வாறு நதி நீர் பங்கீடு,அனை கட்டுவது பற்றி பிரிவுக்கு முன்பே முடிவு செய்ய வேண்டும்.
3 .இன்னும் எத்தனை மாநிலங்கள்?
மாநிலங்கள் பிரிப்பது தொடர்பாக ஒரு உறுதியான சட்ட வரைமுறை தேவை.உண்ணாவிரதம் இருந்தால் மாநிலம் என்றால் 2020 -இல் மாநிலம் இருக்காது .குறுநிலம் தான் இருக்கும்.

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது?
இறைவா
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

விஜயின் பாதை - ஒரு பார்வை

நாளை விஜய்-இன் புது படம் வேட்டைக்காரன் வெளி வருகிறது.இந்த படத்தின் இயக்குனர் பாபு சிவன் மற்றும் புது கதாநாயகி என்பது மட்டுமே மாறுதலாக இருககும் என்று தோன்றுகிறது.இது கூட எனக்கு சற்று ஆறுதலாக தான் தெரிகிறது.ஏன் எனில் அவர் சமீப காலத்தில் நடித்த படங்களான வில்லு, அழகிய தமிழ் மகன், குருவி,ஆதி,சிவகாசி, போக்கிரி, திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் கதாநாயகி மற்றும் இயக்குனர்கள் பற்றி கேள்வி கேட்டால் நம்மில் பல பேர் சற்று குழம்பித்தான் போவோம். ஏன் எனில் நாலு படத்தில் கதாநாயகி திரிஷா இரு படத்தில் அசின் , இரு படத்துக்கு இயக்குனர்கள் பிரபு தேவா, இரு படத்திற்கு தரணி, இரு படத்திற்கு பேரரசு யார் எந்த படம் என்பது நமக்கு குழப்பம் வருவது இயல்பு. அவர் இடையில் நடித்த சற்று மாறுதலான படம் சச்சின் அதுவும் வணிக ரீதியாக பெரிய லாபம் கிட்டாததால் மீண்டும் தனது பழைய பாணிக்கு வந்து விட்டார். மசாலா படங்களை மட்டும் கொடுத்து வெற்றி பெறுவது என்பது மிக கடினமான விஷயமே. பிறகு அது விஜய்க்கு மட்டும் தெரிந்த வித்தையோ?



கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு விஜய் படத்தின் ரிலீஸ்-in போதும் திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ எப்பொழுதும் சில forward message அவர் புது படத்தை தாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.இது எனக்கு சரியாக படவில்லை.பல ஹீரோக்கள் இதை தான் செய்கிறார்கள் பிறகு ஏன் விஜயை மட்டும் தாக்குதல் நடத்துகிறார்கள்.விஜய் தன் உடல் வாகை இன்னும் அப்படியே வைத்து உள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.இந்த message-ai forward செய்யும் பலபேர் இப்போதே "நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட" என்ற படலை முனு முணுக்க தொடங்கி விட்டதால் வேட்டைக்காரன் நல்ல வசூல் வேட்டையில் இறங்குவான் என்பது எனக்கு இப்போதே தெரிகிறது.ஆனால் இத்தனை மசாலாக்கள் விஜய்க்கு எப்படி போர் அடிக்காமல் உள்ளது என எனக்கு புரியவில்லை

Masala- வை நாம் அதிகமாக விரும்புகிறோம் என்பது இயல்பு. அது உணவில் என்றாலும் சரி படத்தில் என்றாலும் சரி. நம்மில் பல பேர் பழைய சோறு சாப்பிட விரும்புவது அதன் உடன் உள்ள ஊறுகாய் அல்லது உரிச்ச வெங்காயத்திர்க்காகதான். நாம் சாப்பாட்டை விட சமோசாவை தான் அதிகமாக விரும்புகிறோம்.அது உடல் நலத்திற்கு கெடுதல் என்றாலும் கூட. இல்லை என்பவர்கள் தங்கள் இடுப்பளவை பாருங்கள் உண்மை புரியும்.

ஆம் விஜய் நம்மை போல் ஒருவன் தான் (Fw: Nammai Pol Oruvan )

விஜய் நீங்க கலக்குங்க சித்தப்பு ...ஆனா ஒன்னு சொல்றேன் கேளுங்கோ விஜய்

வாழ்கை ஒரு வட்டம் Mass (மசாலா) படம் நட்சவன் class (classical ) படம் நடிச்சு தான் ஆகனும்.

அத நாங்க புரிஞ்ச்கிட்டோம் நீங்க சீக்ரமே புரிஞ்சுபீங்கோ..

மீரஜ் & Me




மீரஜ் மகாராஷ்டிரா & கர்நாடகாவின் எல்லை கோடு.
எனது professinoal வாழ்கை-இன் ஆரம்ப கோடு
எனது முதல் வெளி நாட்டு பயணம்
இல்லை இல்லை வெளி ஸ்டேட்டு பயணம்..

மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும்
நிலமும் நிலம் சார்ந்த மருதமும் கலந்த கலவை.
மீரஜ் மூன்று D' க்களுக்கு பிரபலம்
கழுதை எனும் Donkey
தூசு எனும் Dust
மருத்துவர் எனும் Doctor
மூன்றிலும் 33 சதவீதமாய் நான்.

விநாயகரிடம் கொண்ட பக்திக்கு முக்தியாக கிடைத்தது
வேலை சித்தி விநாயக் கணபதி மருத்தவமனையில்
வேலை கிடைக்க எந்த சாமி காரணம் என்றால் சட் என்று
சொல்வேன் குப்புசாமி , சீனிசாமி என்ற இரு ஆசாமிகளை .

விழுங்க முடியாத உணவு, விளங்க முடியாத மொழி
ஆட்டோ காரனிடம் argue செய்ய இயலவில்லை
அழகான பெண்ணிடம் டைம் கேட்க முடியவில்லை
இந்தி எதிர்த்த தலைவர்கள் எல்லாம்
என் நெஞ்சில் எதிரிகளாய் தெரிந்தனர்.

விழுங்க முடியாத உனவின் விளைவு
வித விதமாய் விலை உயர்ந்த உணவு
தேடல் ஆரம்பித்ததும் இங்கே தான்.
சைவத்திற்க்கு அன்னபூர்ணா
அசைவத்திற்க்கு ரஹமதுல்லா

சில வேலை முன்பே செய்திருந்தாலும்
படித்ததற்காக கிடைத்த முதல் வேலை இங்கே தான்
ஆங்கில படமும் ஹிந்தி படமும்
பார்க்க தொடங்கியதும் இங்கே தான்.

மருத்துவ கல்லூரியும் லட்சுமி மார்கெட்டும் ஊருக்கு அழகு
அங்கே இருந்தால் நம் மனதிற்கே அழகு - எல்லா
ஊரிலும் அழகான பெண்களெல்லாம் இருப்பார்கள் ஆனால்
இந்த ஊரில் தான் எல்லா பெண்களும் அழகாக இருப்பார்கள்.
மிரஜ் பெண்கள் அழகு சிலைகள் அவர்கள்
உடைகள் எல்லாம் கண்ணாடி இழைகள் அதை
காண போதாது நம் இரு விழிகள்.அவர்கள்
அவவ்போது எனை தாக்கும் உளிகள்.

சாதிக்கு ஒரு சங்கம் இருந்தாலும்
பெயரில் சாதி இல்லை நம்ம ஊரில்
அதற்கு இங்கு Surname என்று பெயர்

வருடம் வருடம் இந்துகளின் விநாயகர் சதுர்த்தி
பண்டிகையும் முஸ்லிம்களின் உருசு திருவிழாவும்
ஒன்றை ஒன்று முந்தி கொண்டு வர பார்க்கும்.
அதனால் இந்துவும் முஸ்லிமும் லேசாய்
முட்டி கொள்ள வழி பொறக்கும்...

இந்த ஊரு சட்டமன்ற தேர்தல் கூட நம் ஊரு
காலேஜ் தேர்தலிடம் தோற்று போகும்.
சினிமா போஸ்டர் இல்லாத சுவர்களால்
கழுதைகள் எல்லாம் பசியால் காய்ந்து சாகும்...

ஏழு மாத வாழ்கை என்றாலும் ஏழு
ஏழு ஜென்மம் வரை நினைவில் நிற்கும் இந்த
அனுபவம் - முதல் வேலை என்பதால் மட்டும் அல்ல
படித்தவுடன் வேலை கிடைத்தது என்பதால் கூட .

மூட (முடியாத) நம்பிக்கை

உறவினர் வீட்டுக்கு வந்து திரும்ப தயார் ஆனார்கள் சிவா மற்றும் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் அவனது அம்மா.

வாசலை கடந்ததும் ஒரு பூனை குறுக்கே வர மன ஊளைச்சலுக்கு உள்ளான தாய் சிவாவிடம் " வாடா, வீட்டிக்கு போய் தண்ணீ குடித்து விட்டு போலாம்." என்றாள்.

அம்மாவின் பேச்சால் கடுப்பான சிவா அது ஒரு மூட நம்பிக்கை என புரிய வைக்க வாக்கு வாதம் செய்தான்.கடைசி வரை புரியாத அம்மாவை நினைத்து சிரித்த படியே அவ்வாறே செய்து மீண்டும் ஊருக்கு கிளம்பினார்கள்.

அன்று மாலை சிவா தன் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த படி அமர்ந்திருந்த வேலையில் அவனது நண்பன் வந்தான்.
"என்னடா சிவா எப்படி இருக்க ? ஜாப் எல்லாம் எப்படி போவுது ?" என்றான் அவனது நண்பன்.
"fine டா" என்றான் சிவா.
" வா பா எப்படி இருக்க ? ஏன் இப்ப எல்லாம் இங்க வர்ரதே இல்ல ?" என்ற படியே வந்தாள் சிவாவின் தாய்.
"இல்ல ஆன்டி ,கொஞ்சம் பிஸி அதான்... என இழுத்த படியே,
சிவா, What about match da ? ". என்றான் அவனது நண்பன்.
"Touch wood India is playing fine upto now , sachin is 97" என்றான்.

அவன் சொன்னதை மீண்டும் ஒரு முறை சொல்லி பார்த்தாள் சிவாவின் தாய்.
"Touch wood India is playing fine upto now , sachin is 97" என்றான்.
காலையில் தன்னிடம் மூட நம்பிக்கை பற்றி வாக்கு வாதம் செய்த தன் மகன் தானே ஒரு (மூட) நம்பிக்கையை தனக்கே தெரியாமல் நாகரிக தோனியோடு "Tocuh wood " என கூறியதை நினைத்தும் வார்த்தைகள் தான் இங்கு மாறுகிறது நம் நம்பிக்கைகள் அல்ல என நினைத்து கொண்டும் மனதுக்குள் சிரித்த படியே அவனிடம் வாக்கு வாதம் ஏதும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

சத்தம் போட்டு சொல்லாதே - 1


தமிழகத்தில் இந்த டிசம்பர் மாதத்தில் இன்னும் ஒரு திருவிழா.இடை தேர்தல் திருவிழா..
இதுவரை நடந்த இடை தேர்தல்களில் ஆளும் கட்சி தான் அதிகமாக வெற்றி பெற்று உள்ளது என்பது புள்ளியல் தரும் செய்தி. தேர்தல் என்றால் பல கூத்துகள் நடக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசம் மட்டும் அல்ல, சுவராசியமும் கூட.

திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாக்ருஷ்ணன் எப்படியும் தன் ப(X )த்தாலும் கட்சி
ப(X )த்தாலும் வென்று விடுவார் என்றாலும் சுவராசியமும் என்னவென்றால் அனிதா ராதாக்ருஷ்ணன் அதிமுக-வில் இருந்து விலகி MLA பதவியை ராஜினமா செய்ததால் இந்த இடை தேர்தல் நடக்கிறது. MLA வாக இருந்த ஒருவரே மீண்டும் அதே தொகுதியில் MLA வாக இந்த தேர்தல் நடக்கிறது அதுவும் நம் வரி பணத்தில்.

என்ன கொடுமை சார் என்கிறிர்களா ?

அட அரசியல இதலாம் சகஜம் அப்பா! இல்ல இல்ல சாதாரணமப்பா!!

------------------------
பின் குறிப்பு : (X) என்ற இடத்தில வரும் எழுத்து options are below
(a) ல (b) ண (c) ன

பெண் Vs Physics



முன் குறிப்பு:
தொலைக்காட்சி முழுவதும் ரியாலிட்டி ஷோ-வில் பெண்களின் கெமிஸ்ட்ரியை பார்த்துக்கொண்டு இருக்க நான் பெண்களிடம் physics -ஐ பார்க்க முறபட்டத்தின் விளைவு இதோ
------------------------------------------
நியுட்டனின் புவி ஈர்ப்பு விசையை
கொக்கி போட்டு இழுக்கும் விழி ஈர்ப்பு விசையால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

கலிலியோ-வின் அலைவு நேரத்தை
பிண்ணிய கூந்தலின் இட வல அசைவுகளால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

ஐன்ஸ்டீன்-ன் அணுக்கொள்கையை
வெடித்து சிதறும் மனக்கொள்கையால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...



ஆர்க்கிமிடிஸ் கோட்ப்பாட்டை
ஆண்களால் வெளியேற்றப்பட்ட அழுகையும்
பெண்களால் வெளியேற்றப்பட்ட சிரிப்பும் சமம் என்பதால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்....

நான் அறிஞன் அல்ல அறிஞன் ஆக்கப்பட்டவன் !?
நான் கவிஞனும் அல்ல கவிஞன் ஆக்கப்பட்டவன் !?

படித்ததும் பாதித்ததும் 2

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 சேவை இருக்கிறது. இதர ஆம்புலன்ஸ் சேவைகளிலிருந்து இது வேறுபட்டது. காரணம், மருத்துவமனை வரை செல்லும் முன்பாகவே முதல் உதவி கொடுத்துவிடும் வசதியும் இதில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால் உயிர் அபாயம் உள்ள நிலையில் மட்டுமே உதவ 108 உள்ளது. இதர நெருக்கடிகளுக்கு பயன்படாது.


இந்த வாரம் என் தோழி ஒருவர் சேத்துப்பட்டு ரயிலடியிலிருந்து தொலைபேசினார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன் மலத்தின் மீதே புரண்டபடி கிடக்கும் நிலையில் இருப்பதாகச் சொன்னார். 108ஐ தொடர்பு கொள்ளச் சொன்னேன். அப்போதுதான் அவர்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு வருவதில்லை என்பது தெரிந்தது.

அடுத்து என் தோழி பேன்யன் தொண்டு நிறுவனத்துக்கு தொலைபேசினார். பேன்யன் தெருவில் இருக்கும் அநாதையான மன நலம் குன்றியவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு. அதை நடத்துபவர்கள் மீடியாவில் பல முறை புகழப்பட்டு பல்வேறு விருதுகள் பெற்றிருக்கக்கூடியவர்கள்.

என் தோழிக்கு போனில் கிடைத்த பதில் இது: இப்போதெல்லாம் நாங்கள் புதிதாக யாரையும் எடுத்துக் கொள்வதில்லை.

சரி. வேறு ஏதாவது அமைப்புக்கு உங்களால் தகவல் சொல்ல முடியுமா?

அதெல்லாம் எங்களால் முடியாது. நீங்களே போலீசுக்குப் போய் சொல்லுங்கள்.

இப்போது என்ன செய்வது ?சேத்துப்பட்டு ரயிலடியில் ஒரு பிணம் கிடப்பதாகச் சொன்னால்தான் போலீஸ் வரும். அல்லது ஒருவர் குடித்துவிட்டு ரகளை செய்வதாகச் சொன்னால் வரும். அல்லது அங்கே குண்டு வைத்திருப்பதாகச் சொன்னால் வரும். இதுதான் நம் சமூக நிலை.

என் தோழி தினசரி தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்பாதையில் பயணம் செய்கிறார். ஏன் சேத்துப்பட்டு ரயிலடியில் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக, மன நலம் குன்றியவர்கள் காணப்படுகிறார்கள் என்று அவருக்கு புதிராக இருக்கிறது. அதுவும் நகர முடியாத நிலையில் இருப்பவர்கள், சுயபிரக்ஞயற்றவர்கள் எல்லாம் எப்படி சரியாக சேத்துப்பட்டு ரயிலடியைக் கண்டுபிடித்து வந்து சேருகிறார்கள் என்பது பெரும் புதிர். தங்களால் வைத்துப் பராமரிக்க முடியாதவர்களை, சமாளிக்க முடியாதவர்களை யாரேனும் இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டுப்போய் விடுகிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

படித்ததும் பாதித்ததும் 1

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)
மும்பையில் சென்ற வருடம் நவம்பரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த புல்லட் தடுப்புக் கவசம் அவரைக் காப்பாற்றவில்லை.

அவரைக் கொன்ற எட்டு புல்லட்டுகளில் மூன்று வலது நெஞ்சில் கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தவை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியிருக்கிறது. கர்காரே அணிந்திருந்த கவசம் 2004ல் மும்பை காவல் துறையால் வாங்கப்பட்ட கவசங்களில் ஒன்று.

அப்போது அந்தக் கவசங்களில் சிலவற்றை சோதித்துப்பார்க்க கோரேகானில் இருக்கும் காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சிக் களத்துக்கு அனுப்பினார்கள். சோதனையில் குண்டுகள் கவசத்தை துளைத்துவிட்டன. உடனே இது பற்றி புகார் எழுப்பப்பட்டது.

மொத்த கவசங்களையும் சப்ளை செய்யும்போது தரம் மேம்படுத்தப்படும் என்று (வியாபாரிகளால்) சொல்லப்பட்டிருப்பதால், ஆர்டரை ரத்து செய்ய வேண்டாம் என்று கோப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தரம் ‘மேம்படுத்தி’ சப்ளை செய்த கவசத்தில் ஒன்றைத்தான் கர்காரே அணிந்து கொண்டு போய் செத்தார்.

கர்காரே சாகும்போது அணிந்திருந்த கவசத்தை சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மனைவி கவிதா முன்வைத்தார். அரசிடமிருந்து பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கவிதா , அந்தக் கவசம் எங்கே என்று கேட்டு மனு செய்தார்.

இப்போது அரசு பதில் சொல்லியிருக்கிறது. கவசம் மிஸ்ஸிங்காம்.

ஏன் மிஸ்ஸிங் ? யோசியுங்கள். கவசம் கிடைத்து சோதித்தால், தரக் குறைவானது என்று தெரிந்தால், அப்போது கவசம் வாங்க அனுமதித்த தலைகளுக்கு ஆபத்து. கவசத்துக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்கிய விவரங்கள் வெளிவந்துவிடும்.

நம் சமூகத்தை மிகப் பெருமளவில் ஒவ்வொரு துறையிலும் சீரழித்துக் கொண்டிருப்பது லஞ்சம் ஊழல்தான். அது நோயல்ல; நோயின் அறிகுறிதான் என்று சொல்வதை என்னால் துளியும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. லஞ்சம் நம் தேசத்தை அழித்துக் கொண்டிருக்கும் புற்று நோய்.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

கடன்


காதல் சந்திக்காதவர்களை கூட
சத்தியமாய் இந்த கடன் சந்தித்திருக்கும்-கடன்
வாங்கியவர் விதத்திலோ அல்லது
கொடுத்தவர் விதத்திலோ

படிக்கும் போது பக்கத்துக்கு பையனிடம்
வாங்கிய பென்சிலில் தொடங்கி
துளைத்து விட்ட பஸ் பாஸ்ற்க்காக
வாங்கிய கைமாத்தில் தொடர்ந்து
இன்னும் எல்லாரிடத்திலும்
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பயணம்.

படிப்ப்பிற்க்காகவும் பாசத்திற்க்காகவும்
வாங்கிய அவசியக்கடன்
பௌசிர்க்காகவும் ரௌசிர்க்க்காகவும்
வாங்கிய அனாவசியக்கடன் என
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பல ரூபங்கள்.

கந்து வட்டி , மீட்டர் வட்டி எல்லாம்
கடனின்அழையா விருந்தாளி-அது
காவு எடுத்துள்ளது பலரின் தாலி.

நாடு போட்ட குட்டிகளை விட வட்டி
போட்ட குட்டிகளின் வளர்ச்சி அதிகம் -அன்று
எல்லா வட்டிகளையும் ஒழித்து விட்டு
கடன் அட்டையை வளர்க்கிறது நாடு - இன்று

வாங்கும் வரை ரொம்ப ரொம்ப கஷ்டம் வாங்கிய
பின் திருப்பி கொடுப்பது அவரவர் இஷ்டம் -அன்று
வாங்கும் வரை முகவர் வருவான் உன் வீடு
வாங்கிய பின் உன் பாடு திண்டாடு - இன்று

கடனுக்காக எதுவும் கேட்காமல் புரியாமல் காட்டிய இடத்தில
கண்ணை மூடி கைநாட்டு வைப்பான் படிக்காதவன் -அன்று
முகவர் இட்ட தப்பு குறியீட்டு இடத்தில எதுவும்
படிக்காமல் சரியாக கையெழுத்து இடுகிறான் மெத்த படித்தவனும்-இன்று

பல நேரங்களில் பலர் கடனை திருப்பி கொடுப்பதே
அடுத்த முறை கடன் வாங்க வேண்டும் என்பதற்க்காகத்தான்.

வாங்கியவன் மறைந்தாலும்
கொடுத்தவன் மறைந்தாலும்
கடன் மட்டும் மார்க்கண்டேயனாய்
தன்னை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது...
அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டும் இருக்கிறது ...

வழிபாடும் வெளிப்பாடும்

வெள்ளி கிழமை மாலை நேரம்
அகம் மகிழ ஆண்டவனை காண சென்றேன்.
செல்லும் வழி யாவும் செல்-இல் பேசிய படியே பாதி
புது படத்தை விமர்சித்த படியே மீதி
-----------------------------------
கோவிலை அடைந்ததும் வாசலில்

என்னை காப்பாற்றுவார் என் கடவுள் என்பதில்
எள் அளவும் ஐயமில்லை ஆனால் என் செருப்பை
------------------------------------
தெய்வ தரிசனம்

அவ்வளவு நேரம் கண்விழித்து இருந்தவன்
தீபாராதனை-இல் கண்ணை மூடிகொண்டேன் சரி தானோ

தீபத்தட்டு வருகை-இல் கடவுளை விட காசு எவ்வளவு
போடுவது என்றே எண்ணம் செல்கிறது ஏனோ
---------------------------------------------
நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு பெரும்பகுதி
சுற்றுகள் எத்தனை என கணக்கு வைப்பதிலேயே
முடித்து விட்டேன்
--------------------------------------------
கொடிமரம் அருகே

ஆடையில் படும் அழுக்கை எண்ணி சாஷ்டாங்க
நமஸ்காரம் அதை அஷ்டாங்கமாக மாற்றி விட்டேன்.
---------------------------------------------
வாசலில்

பிச்சை பெறாதவன் திட்டி விட கூடாது என்றும்
செருப்பு இருக்க வேண்டும் என்றும் கடவுளை
வேண்டிய படியே கடக்கிறேன்
சற்று வேக வேகமாய் நடக்கிறேன்...

முரண் - 1


ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால் சாவு
பிறகு ஏன் அஹிம்சை எடுத்த காந்தி-க்கும்
--------------------------------------

பெரியாரும் கிளி ஜோசியம் பார்ப்பார்
கிளி-இன் சில நிமிட சுதந்திரதிற்காக
-------------------------------------

காசு இருந்தும் கையேந்திகள்

காசு இருந்தும் கையேந்தி உணவு
பைவ் ஸ்டார் ஓட்டலில் buffet

வாழ்த்தா! வழக்கமா?

தினம் தினம் காலை வணக்கம்(குட் மார்னிங் )
வைத்தாலும் சரி வாங்கினாலும் சரி
வாழ்த்தாக தெரியவில்லை அது
வழக்கமாகவே தெரிகிறது
வாழ்த்தா! வழக்கமா?

Popular Posts