மரத்தின் கைகள்


சற்று நேரம் முன்பு கீழ் வீட்டு பெண்மணி வந்து கதவை தட்டினார் . நமது வீட்டு அருகில் உள்ள இரு மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றார். மொத்தம் 1600 ஆகும் என்கிறார்கள். இந்த மரத்தின் அருகில் வசிக்கும் நாலு வீடும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். "பண பகிர்வை பிறகு பார்ப்போம் .ஏன் மரத்தை வெட்ட வேண்டும்" என்றேன்.. "நிறைய குரங்குகள் வந்து ஆட்டம் போடுகின்றன" என்றார் "மரத்தின் சில கிளைகளை வெட்டுவதால் குரங்கு வராது என எப்படி கூற முடியும். இப்பொது வெட்டி விட்டால் கோடை காலத்தில் கஷ்டம் ". மரத்தை வெட்ட தேவை இல்லை என்றேன். "இல்லை இன்னும் 15 நாளில் பட்ட திருவிழா வருகிறது.. தனது மகன் விட மர கிளைகள் இடைஞ்சலாக இருக்கும் என்றேன். பட்டம் விடுவதற்காக மரத்தை வேண்டுமா" என்று கேட்டேன். அந்த எதிர் கேள்வியை விரும்பவில்லை. நேரடியாக கடைசி கேள்விக்கு வந்தார்.. "உங்களை தவிர மீதி மூன்று வீடும் வெட்டுவதாய் முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் பணத்தை பகிர்ந்து கொள்வீர்களா இல்லையா" என்றார். ஊருடன் ஒத்து வாழ முடிவு செய்து "பணம் வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு பட்டம் விடுவதற்க்காக மரத்தின் கிளையை வெட்ட தேவை இல்லை என படுகிறது. அப்பறம் உங்கள் இஷ்டம்" என்றேன். "பணம் தருவீரகள் இல்லையா..நன்றி" என்று கூறி சென்றுவிட்டார். "முதலில் மரத்தை அறுப்பார்கள்..பிறகு பறவையின் கழுத்தை அறுப்பார்கள்" என்று நினைத்து கொன்டே இந்த ஆண்டு இவ்வாறு முடிந்து இருக்க தேவை இல்லை என்ற சிந்தனையோடு கதவை சாத்தினேன்.

Popular Posts