காதல் கணக்கு - 2

எல்லா பக்கத்திலும்
ஒரே மாதிரி அழகாய்
இருக்கும் சம பக்க அழகி நீ

சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம்

எதையாவது பதிவு செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த விட்டாலும் மனதுக்கு பிடித்த குறிப்பாக பாதித்த விசயமாக தேடி கொண்டிருந்தேன்.அப்போது எப்படியோ இந்த சூர்யாவின் அகரம் அடித்தளம் (Agaram Foundation) நினைவுக்கு வர கடந்த பொங்கல் அன்று விஜய் டிவி யில் வெளியான சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம் பகுதியை இணைத்து உள்ளேன்.இது பழைய விஷயம் இருந்தாலும் ஒதுக்கிவிட மனம் இல்லை ஏன் என்றால் நான் ஒன்றும் பரபரப்பு நியூஸ் சேனல் வைத்து இருக்கவில்லை.

இதை எப்போது பார்க்கும் போதும், எனது சில அனுபவங்களை வேறு சிலரின் வார்த்தைகளில் கேட்பது போல் தோன்றும்.முகங்கள் மட்டும் தான் இங்கு மாறுகின்றன.வலிகள் அப்படியே தான் இருக்கின்றன. எனது கல்விக்கு உதவி செய்த சரஸ்வதி டீச்சர்,கண்ணம்மா டீச்சர்,கண்ணபிரான் சார்,போன்றவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

மழையும் மழை சார்ந்த படமும்

(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)

இந்த படங்கள் எனக்குள் நிஜ மழை காலத்தை மட்டும் ஞாபகம் படுத்தவில்லை அதனுடன் சேருந்த உணர்வுகளான பயம்,அமைதி,ஆக்ரோஷம்,குளிர்,போன்ற பல உணர்வுகளை வெளிபடுத்தியது.
உங்களுடன் ஒரு பகிர்வு




(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)

காதல் கணக்கு - 1

 
திசை அற்ற ஸ்கேலாரை  இருந்த நான்
உன் திசை நோக்கும் வெக்டராய் 
மாறிவிட்டேன்...

எல்லார் ரத்தமும் அயோத்தியில் ஓடட்டும் !

(நன்றி: கல்கி இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

எல்லார் ரத்தமும் அயோத்தியில் ஓடட்டும் ! 


நான் அயோத்திக்கு பத்திரிகையாளர் மாநாட்டுக்காக 27 வருடங்களுக்கு முன்னர் சென்றேன். அயோத்தி-ஃபைசாபாத் இரட்டை நகரம். ஃபைசாபாத் ரயில் நிலையத்தில் இறங்கியதுமே காவி, தாடி, சடை இருந்த நிறைய பண்டாரங்கள் சூழ்ந்துகொண்டார்கள். ( தமிழில் பண்டாரம். ஹிந்தியின் பண்டா. அதாவது பூசாரி ) ராமர் பிறந்த இடத்தைக் காட்டுவதாகச் சொல்லி கையைப் பிடித்து இழுத்து வற்புறுத்தினார்கள். நண்பர்கள் சிலர் அவர்களுடன் ராமர் பிறந்த இடத்தைக் காணச் சென்றார்கள்.
ஒவ்வொரு பண்டாரமும் தனித்தனியே காட்டியது வெவ்வேறு இடம். நம் ஊர் நடைபாதை கோவில் சைசில் இருக்கும் குட்டிக் கோவிலைக் காட்டி இதுதான் ராமர் பிறந்த இடம் என்று ஒவ்வொரு பண்டாரமும் சத்தியம் செய்து தட்சிணையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு பண்டாரம் கூட நண்பர்களை, பாபர் மசூதி இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. இதுதான் 1983ல் அயோத்தி நிலைமை. அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் எம்.பி. தொகுதியில் 80கள் வரை தொடர்ந்து ஜெயித்தவர்கள் காங்கிரசார், கம்யூனிஸ்ட்கள்.
கடவுளான ராமர் மனிதராகப் பிறந்து வாழ்ந்தது புராணங்களின்படி சுமார் எட்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு. ஆனால் அயோத்தியில் மனிதர்கள் குடியேறியே 2800 வருடங்கள்தான் ஆகின்றன. எனவே ராமர் பிறந்த இடம் இந்த அயோத்தி என்பதும், இந்த அயோத்தியில் இந்த இடத்தில்தான் என்பதும் நிரூபிக்கக் கூடிய விஷயங்களே அல்ல. முழுக்க முழுக்க நம்பிக்கை மட்டுமே சார்ந்தவை. இதைப் பற்றி எந்த நீதிபதியும் தீர்மானமாகத் தீர்ப்பு வழங்கவே முடியாது. வழங்கினாலும், அது அவர் நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டதென்றுதான் பார்க்கவேண்டும். சட்ட சாட்சியங்களுக்கு அது அப்பாற்பட்டது.
எந்தத் தொழிலில் இருப்பவர்களும் அவரரவர் நம்பிக்கைகளுடன்தான் இருக்கிறார்கள். அதில் சிலர், ஓய்வு பெற்றபிறகு ஏதேனும் ஓர் அமைப்பில் சேர்கிறார்கள். அது அவ்ர்களின் நம்பிக்கைகளின் தொடர்ச்சி. யாருக்கும் திடீரென்று 60 வது வயதில் ஒரு கொள்கைப்பிடிப்பு வந்துவிடுவதில்லை. சுமார் 25,30 வயதிலிருந்தே உருவான ஈர்ப்பு அடுத்த சில வருடங்களில் வலுவடைந்து விடுகிறது. பின்னர் சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப சிலர் நேரடி அரசியலில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரான நய்யார்தான் அயோத்தி பிரச்சினை சுதந்திர இந்தியாவில் 1949 டிசம்பரில்முற்றி வெடிக்க உதவியவர்.
அது சுதந்திரம் பெற்றபோது செய்த பிரிவினையால் உருவான ஹிந்து முஸ்லிம் கலவரங்களால் பேரிழப்புகள் ஏற்பட்ட நேரம். காந்தி ஒரு ஹிந்துமத வெறியனால் கொல்லப்பட்டு 23 மாதங்கள்தான் ஆகியிருந்தன. நேருவின் அரசு வட இந்தியாவில் தொடர்ந்து மத மோதல்கள் நிகழாமல் தடுக்கப் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருந்த நேரம்.
டிசம்பர் 23ந்தேதி மாலைத் தொழுகை முடிந்தபிறகு, நள்ளிரவு பாபர் மசூதிக்கு ஒரு கும்பல் வந்து அதன் திண்ணையில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை வைத்துவிட்டுச் சென்றது. அங்கிருந்த 12 போலீசார் அதைத் தடுக்கவில்லை. இதை மத்திய அரசுக்குத் தெரிவித்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ( கலெக்டர்) கே.கே.நய்யார், மசூதியை இழுத்துப் பூட்டி இனி அங்கே தொழுகை நடக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் அத்து மீறி வைக்கப்பட்ட சிலைகளை எடுக்கவில்லை. இது பற்றிக் கவலைப்பட்ட பிரதமர் நேரு, மாநில முதல்வர் ஜி.பி.பந்த்திடமும் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலிடமும் தன் கவலைகளைத் தெரிவித்தார்.
அப்போது நய்யார் உடனடியாக சிலைகளை அகற்றிவிட்டு அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் அது நய்யார் விரும்பிய வரலாறல்ல. பதவியை ராஜினாமா செய்துவிட்டு நய்யார் ஜனசங்கம் கட்சியில் சேர்ந்து அதன் எம்.பி.வேட்பாளராகி ஜெயித்தார். ஜனசங்கம் போலவே ஆர்.எஸ்.எஸ்சின் ஆசி பெற்ற இன்னொரு அமைப்பான விஸ்வ ஹிந்து பரீஷத்தின் பிரமுகரான பி.பி.சிங்கால் , அயோத்தி இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காவல் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றதும் ப்.ஜே.பி. ராஜய சபை எம்.பி ஆனார். இவர் சகோதரர் அசோக் சிங்கால்தான் விஸ்வ ஹிந்து பரீஷத்தின் தலைவர்.
பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம்,1940களிலிருந்து ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் சுமார் 40 வருட காலம் வெளியில் தெரியாமல் மௌனமாக இயங்கி வந்திருக்கிறது. ஆட்சி அதிகார மீடியா அமைப்புகளில் ஊடுருவியிருக்கும் அனுதாபிகளின் உதவியுடன், ஒவ்வொரு அடியாக இது எடுத்து வந்திருக்கிறது. உ.பி.மாநில ஆட்சியை பாரதிய ஜனதா பிடித்தபின்னர், பகிரங்கமாகச் செயல்பட்டு அத்வானி தலைமையில் கல்யாண்சிங், நரசிம்மராவ் உதவியுடன் மசூதியை இடித்து சிலைகளை தாங்கள் விரும்பிய இடத்திலேயே வைத்துவிட்டனர். இனி கோவில் கட்டுவதுதான் அவர்களைப் பொறுத்த மட்டில் பாக்கி இருக்கும் விஷயம்.
அதற்கு முழு நிலமும் தேவை. இப்போது அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு, மூன்றில் இரு பங்கு நிலத்தை ராமர் கோவில் ஆதரவு அமைப்புகளுக்கு சட்டப்படி அளிக்கிறது. இனி வரும் மாதங்களில் ஆர்.எஸ்.எஸ் செய்யப்போகும் பிரசாரம் என்னவாக இருக்கும் என்று எளிதாக யூகிக்கலாம். 1. நீதிமன்றமே அந்த இடம் ராமர் பிறந்த இடம்தான் என்று சொல்லிவிட்டது. 2. அங்கே இருந்த பிரும்மாண்டமான ராமர் கோவிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றம் சொலிவிட்டது. 3. எனவே மறுபடியும் பிரும்மாண்டமான ராமர் கோவிலைக் கட்ட வசதியாக தங்களுக்கு தரப்பட்ட மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து கொடுத்து, மத நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும். இதுதான் நடக்கத் தொடங்கியுள்ள, வலுவடையப்போகிற பிரசாரம்.
மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று மூன்று நீதிபதிகளில் ஒருவரான தர்மவீர் சர்மா அடித்துச் சொல்லியிருக்கிறார். மீதி இரு நீதிபதிகளும் அது ஒரு நம்பிக்கை என்று சொல்லியிருக்கிறார்கள். நீதிபதி சர்மாவோ, தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ‘ராமராகப். பிறந்தவர் ஒரு கடவுள். தெய்வாம்சம் என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது. எந்த இடத்திலும் யாரும் அதற்கு வடிவம் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது வடிவம் கொடுக்காமலே கூட வழிபட்டுக் கொள்ளலாம்’ என்று ஒரு குழப்பமான வாக்கியத்தை சொல்லிவிட்டு, மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று சொல்லிவிடுகிறார்.
இதன்படி கருணாநிதி நகரில் அய்யப்பன் கோவில் வாசலில் ஒரு வருடமாக நாற்சந்ந்தி நடைபாதையை ஆக்ரமித்து உண்டியல் சகிதம் உருவாகி வரும் கோவிலை, தப்பித்தவறி நாளைக்கு மாநகராட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இடித்தால், ஆக்ரமித்தவர் அலகாபாத் தீர்ப்பை மேற்கோள் காட்டி எங்கும் இருக்கும் தெய்வாம்சத்தைத் தான் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் நிறுவி வழிபடலாம் என்று சட்டப்படி வாதாடி, வெற்றி கூடப் பெறமுடியும்.
அனுமன் பக்தராஅன நீதிபதி சர்மா,. திருமணமாகாதவர். தன் உணவை தானே சமைத்து சாப்பிடும் ஆசாரமான பழக்கம் உடையவர். தன் நம்பிக்கைகளுக்கேற்ப அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றுதான் பார்க்க முடியும். நிலத்தை மூவருக்கும் பிரித்துத் தருவதையே அவர் ஆதரிக்கவில்லை. இன்னொரு நீதிபதி அகர்வால், முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கேனும் தரவேண்டும் என்கிறார். இன்னொரு நீதிபதியான உல்லா கான், இஸ்லாமியர். ஹிந்து நம்பிக்கைப் பிரச்சினைகளுக்குள்ளேயே தான் போக விரும்பவில்லை , இதை ஒரு சிவில் சூட்டாக மட்டுமே கருதுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தீர்ப்பில் இதர இஸ்லாமியர்களுக்கு ஒரு நீண்ட வேண்டுகோளை, முகமது நபிகள் வாழ்க்கையிலிருந்து மேற்கோளுடன் வைக்கிறார். வழக்கில் இருக்கும் பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாத பகுதி இது.
பாபர் ஹிந்துக் கோவிலை இடித்தார் என்பதற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை மட்டுமே நீதிபதி சர்மா ஆதாரம் காட்டுகிறார். பி.ஜே.பி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அளித்த அந்த அறிக்கையின் பல ஓட்டைகளை அப்போதே இதர தொல்லியல் அறிஞர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஹிந்துக்கள் மனம் புண்படும்; எனவே நீ மாட்டுக் கறி சாப்பிடவேண்டாம் என்று மகன் ஹுமாயுனுக்கு உயிலில் எழுதிய பாபர், ஹிந்துக் கோயிலை இடித்திருப்பாரா என்பதே கேள்விக்குரியதுதான். இடித்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சில விதி விலக்குகளைத் தவிர, ஒவ்வொரு மன்னனும் தன் நம்பிக்கைக்கேற்ப ஒரு மதத்தை ஆதரித்து இன்னொரு மதத்தினரை துன்புறுத்தினான் என்பதுதான் நம் முழு மன்னராட்சி வரலாறு.
கோவிலை இடித்து மசூதி கட்டுவது இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதால், கட்டப்பட்டது மசூதியே அல்ல என்று ஒரு விசித்திரமான வாதத்தையும் நீதிபதி சர்மா சொல்லுகிறார். இன்னொருத்தர் வழிபாட்டு இடத்தை இடிப்பது இஸ்லாமிய நெறிகளுக்கு மட்டும்தான் முரணானதா? ஹிந்து, கிறித்துவ, பௌத்த மதங்களெல்லாம் அதை ஆதரிக்கிறதா? ஏனென்றால் இப்போது மறுபடியும் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு, வழிபாடு நடந்து வந்த மசூதிதானே இடிக்கப்பட்டிருக்கிறது ? இது ஹிந்து மத கோட்பாட்டின்படி சரி என்று நீதிபதி சொல்வதாகப் பொருள் கொள்ளமுடியுமா? எந்த மத நெறிப்படியும் இன்னொரு மத வழிபாட்டிடத்தை இடித்தோ சிதைத்தோ தங்கள் வழிபாட்டிடத்தை கட்டக் கூடாது என்றால், இந்தியாவில் எத்தனை கோவில்கள், மசூதிகள், தேவலாயங்கள் மிஞ்சும் ?
பூரி ஜகந்நாதர் ஆலயமே பௌத்த விஹாரத்தை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று சுவாமி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். பூரியில் மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆலயங்கள் பலவும் முன்னர் பௌத்த விஹாரங்களாக இருந்தவைதான் என்பதற்கு தெளிவான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. சிருங்கேரியில் ஆதி சங்கரர் மடம் கட்டிய இடம் புத்த விஹாரத்தை இடித்துத்தான். ராஜராஜ சோழன் இலங்கையில் சிங்களர்களை வென்றதும், அங்கிருந்த புத்த விஹாரங்களை இடித்து, சைவக் கோயில்களாக மாற்றினான் என்பதும் சரித்திரம்தான். இனி பௌத்தர்கள் இயக்கம் நடத்தி இவற்றையெல்லாம் இடித்து மறுபடி பௌத்த விஹாரங்களாக ஆக்கவேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனால், சர்மாவின் முன்மாதிரித் தீர்ப்பின்படி இடிக்க ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.
இது ஒரு சிவில் வழக்கு. இந்த நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று மூன்று பேர் கோருகிறார்கள். யாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பு தரவேண்டும். இதை விட்டு விட்டு தேவையற்ற விஷயங்களுக்குள் எல்லாம் தலையை நுழைத்து, குழப்பத்தையும் தொடர்ந்து இன்னும் 50 வருடங்களுக்கு மோதலையும் உருவாக்கக்கூடிய ஆபத்தான தீர்ப்பே அலகாபாத் தீர்ப்பு.
நான் நீதிபதியாக இருந்தால், இந்த நிலம் எந்த தனியாருக்கும் தனி அமைப்புக்கும் சொந்தமானதில்லை என்பதுதான், என் தீர்ப்பாக இருக்கும். வெவ்வேறு ஆட்சிக் காலத்தில் அந்தந்த ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப வழங்கப்பட்டவற்றை, ஜனநாயக ஆட்சி பொருட்படுத்த வேண்டியதே இல்லை. மொத்த நிலமும் இன்றைய குடியரசுக்குரியது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது இந்திய அரசின் பொறுப்பு என்று தீர்ப்பளிப்பேன்.
அரசுக்கு ஆலோசனையும் சொல்லுவேன். எல்லா இந்தியர்களுக்கும் மொழி, சாதி, மதம், இனம் கடந்து பயன்படக்கூடிய பொது மருத்துவமனையை அங்கே கட்டுங்கள். எல்லார் ரத்தமும் அங்கே ஓடட்டும் — இன்னொருவருக்குப் பயனுள்ள விதத்தில், ரத்த தானமாக. அல்லது ( எனக்கு அணு குண்டில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிரச்சினைக்கு தீர்வாக), அங்கே பொக்ரான் – 3 அணுவெடிப்பு சோதனையை நடத்துங்கள். எந்த தேசபக்தரும் ஆட்சேபிக்கவே மாட்டார்கள். சோதனைக்குப் பின் ஒரு பயலும் அந்த நிலத்தின் பக்கமே போகமாட்டான். கடவுளை விட கதிர்வீச்சுக்குத்தான் அதிகம் பயப்படுவார்கள் !

(நன்றி: கல்கி இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

நான் ஒரு முட்டாளுங்க...

.
(Photo Courtesy:Mr.Muthulingam,Hyderabad)

 சுய முன்னேற்றம் குறித்த  புத்தகம் படிப்பதை நானும் அவவ்போது செய்து வருகிறேன்.அதை படிக்கும் போது எதோ நாளை முதல் இதன் படி நடந்தால் வெற்றி நமதே என்பது போல் தெரியும்.ஆனால் அது படித்த பிறகு தான் மிக்க பெரிய குழப்பமே ஆரம்பம் ஆகும் எனக்கு..

சில புத்தகம்  "ஒரு விஷயத்தை பற்றி தெரியாம அந்த விசயத்தில் இறங்க கூடாது" என்பது போல்  அறிவுரைகள் சொல்லும்.இறுதியில் ஆழம் தெரியாம  காலை விட கூடாது என்பது போல் அதன் கருத்து இருக்கும். ஓகே என்று ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் பற்றி அறிய முற்பட்டால் அதில் உள்ள ரிஸ்க் பற்றி தெரிந்து வேண்டாம் என்று முடிவு செய்வேன்.அப்போது அடுத்த ஒரு தலைப்பில் சொல்லப்பட்ட " லைப்-ல ரிஸ்க் எடுக்காட்டி ஜெயிக்க  முடியாது என்று இருந்தது  ஞாபகம் வரும்.இப்ப மறுபடியும் குழப்பம் ஸ்டார்ட் ஆகிவிடும் ..இதுல எது சரின்னு என்று மண்டய பிச்சுக்க வேண்டி இருக்கும்.
சரி இது பற்றி நம்ப நண்பர்களிடம் அல்லது பெரியவர்களிடம் முழு கதையை சொல்லி அறிவுரை கேட்டா  அவங்க Take Calculative Risk அப்படின்னு ஒரு புது வார்த்தையை சொல்லி இன்னும் குழப்பிடுவாங்க.
Calculative risk எப்படி எடுக்கனும்? ? நான் எடுக்கற Calculative risk சரியானு எப்படி தெரியும்? போன்ற கேள்விக்கு பதில் தெரியாம நான் முழிச்சுகிட்டு இருப்பேன்..
அப்பறமா ஒருத்தன் "  நீ ஜெய்சிட்டா அது சரியான Calculative risk.இல்லாட்டி அது தப்பான Calculative risk " அப்படின்னு பொசுக்குனு சொல்லிப்புட்டான்  பாவி பய புள்ள..

இது தெரியாம மதில் மேல் பூனை மாதிரி இருந்த  நான் ஒரு முட்டாளுங்க ...

நன்றி பலமுறை சொன்னேன் படிப்பவர் முன்பே...

இது கொஞ்சம் சுய தம்பட்டம் நிறைய நன்றிகள். 

2009 நவம்பர் 10 ,மாலை மணி ஒரு 5 .40 இருக்கும்.அலுவலகத்தில் இருந்து  வீட்டுக்கு செல்ல தயார் ஆகி கொண்டு இருந்தேன்.சரி ஒரு முறை இணையத்தை கொஞ்சம் மேய்வோம் என்று என் நண்பனின் மடிக்கணியை எடுத்து அமர்ந்தேன்.எந்த மின்அஞ்சலும் வரவில்லை.சரி நான் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ஒரு பிரச்சனையான Bulk Orkut Scraps பற்றி search  செய்ய தொடங்கினேன். கிடைத்த பதில் எதுவும் சரியாக தோன்ற வில்லை.ஒருமுறை எனது சீனியர் ஒருவர் சாட்டிங் போது சொன்ன " உங்கள் வகுப்பு தோழர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு blogspot ஆரம்பிகலாம்" என்ற வாசகம் நினைவு வர உடனே  ஒரு டெஸ்ட் ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து வழக்கம் போல் அழகுக்ரிஷ் என டைப் செய்து விட்டேன். அப்போது மணி 6 .30 இருக்கும்.என் உடன் இருந்த பாலாஜி இடம் என்ன பெயர்  வைக்கலாம் என்று கேட்டேன்.நான் எனது டைரியில் முதல் பக்கத்தில் எழுதி உள்ள My foot prints ... சாயலில் வேண்டும் யோசித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பாதையும் பதிவும் என மனதில் தோன்ற அது பாலாஜிக்கும் பிடித்து போக பெயர் சூட்டு விழாவும் முடிந்தது.அன்று காலை எனக்கு தோன்றிய வாழ்த்தா! வழக்கமா? கவிதையை பதிந்து விட்டேன். அந்த கவிதையை  முதலில்  அமைந்து கூட எதேட்சையான ஒரு நிகழ்வு.அப்பறம் எனது ஜூனியர் தினேஷ் ஷங்கர்கு போன் போட்டு கொஞ்சம் ப்ளாக் பற்றி  சீனையும் போட்டு விட்டேன்.இதற்கு முன்னால் நான் ஒரு ப்ளாக்கை கூட படித்து இல்லை.அதுவும் நல்லது தான் ஒரு வேலை முன்பே படித்து இருந்தால் ஆரம்பிக்காமல்  கூட இருந்து இருப்பேன்.எல்லாம் எதேட்சையாக  ஒரு  மணி நேரத்தில் முடிந்து விட்டது.இத போய் இப்ப என்னத்துக்கு நீ சொல்லற என்று கேட்பது எனக்கு புரிகிறது. இன்று  2010 நவம்பர் 11.நேற்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. உங்களில் சிலரை போலவே " Even I don't believe numbers,I believe in time & people "

கடந்த ஒரு ஆண்டில்  பாதையும் பதிவும் ப்ளாக்-ன் பாதையைதை பதிய ஒரு விருப்பம்.இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருந்தாலும் ஒரு சின்ன இளையப்பாறல..கூடவே வருபவர்களுக்கு நிறைய நன்றிகள் சொல்ல தான் இந்த பதிவு.

நான் ஆரமித்த போது என் உடன் இருந்தது அப்பறம் பல பதிவுகளுக்கு பிழை  திருத்தம் செய்த  பாலாஜி,எனது முதல் கவிதைக்கு  முதல் பின்னூட்டம்   இட்டது  மட்டும் அல்லது  பலருக்கு இந்த ப்ளாக் -ஐ   அறிமுக படுத்தி வரும்  தினேஷ் ,சில  பதிவுகளை தட்டச்சு செய்ய உதவிய பத்மநாபன்,எதை பற்றி எல்லாம் எழுதலாம் என்று எனக்கு ஆலோசனை கூறும் பிரசன்னா, வேல் ,முத்துலிங்கம் ,சதீஷ்,அறிவு ,அதியமான்,எதை எழுதினாலும் போன் செய்து வாழ்த்தும் அமீர் ,வெங்கடேஷ்,சிலம்பரசன், ராஜேஷ் அப்பறம்  blog எப்படி எல்லாம் இருக்கலாம் என்றும் சொல்லி வரும் M .செந்தில் மற்றும் G .செந்தில்.கவிதை அதிகமாக எழுதுங்கள் என்று சொன்ன குமார் ,கவிதை அதிகமாக ரசிக்கும் கலை ,V.R .செந்தில் , இவர்கள்  எல்லாம்  நண்பர்கள் மற்றும் ஜூனியர்கள்.இவர்கள் என் மீது அன்பு பாராட்டுவதில் மிக பெரிய வியப்பு இல்லை.
ஆனால் ப்ளாக் என்ற வார்த்தையை எனக்கு முதலில் சொன்னத்து மட்டும் இல்லாமல் தொடர்ந்து படித்து தன் கருத்தை பகிர்ந்து வரும் சீனிச்சாமி சார்,சுரேஷ் சார் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்டு படித்து வரும் தேவன் சார் அவர்களின் அன்பில் தான் நான் இன்னும் கொஞ்சம் செருக்கோடு நடக்கிறேன்.
அது மட்டும் இல்லாமல்  அல்லாமல் ஊக்க படுத்தும் உள்ளங்களில்  இணைந்து உள்ள அண்டோ  ,ஷியாமா ,சிவா, பாலா,செல்வா, ரகு ஸ்ரீராம் ஜகதீஷ்,கோதண்டராமன் ,வசந்தன் ,ஈஸ்வர் என பட்டியல் நீளுவது கொஞ்சம் நெகிழ்ச்சியாய் இருக்கிறது. அமைதியாய் படித்து வரும் ரகு,ராகவ் மற்றும் எனது உறவினர் சிவா ,அண்ணன் ராமு ,வைரம் மற்றும் பலர்  என்னை பாராட்டி  மகிழ்கிறார்கள்.

வேல்முருகன் இதற்காக செய்த உதவி மடிகணினி  கொடுத்ததில்  தொடங்கி, சாப்ட்வேர் சப்போர்ட்,terror திங்கிங், நான் சொல்லும் கவிதையை சகித்து கொள்வது என பட்டியல் மிக நீளமானது.

இதற்காக என் மீது சிலர்  கல் எறியவும் செய்தீர்கள்.அவர்களுக்கு  எல்லாம் ஒரு அன்பு கட்டளை நான்  காய்த்த  மரம் அல்ல வளரும் செடி தான்.





 உங்கள் அனனவருக்கும் நன்றி..
பாதையும் பதிவும் தந்த புதிய நண்பர்கள் அமீரும் & முத்துலிங்கமும்..  

நீங்கள் பாராட்டாத போது நான்
செல்லரித்து  விடவில்லை -ஆனால்
பாராட்டிய  போது நிறைய 
புல்லரித்து போனேன் என்பது நிஜம்..
இதையும் கடந்து  போக தயார் ஆகிறேன்.
Miles to go before I sleep ...

--
With hope & Smile
C.Krishnappan

என்று தனியும் இந்த ஆங்கில மோகம்..

சமீபத்தில் பார்த்தவுடன் பாதித்தது...












இந்த பள்ளியிலும் தான் பேசாத இங்கிலிஷை தன் பிள்ளையாவது பேச வேண்டும் என்று ஆசை பட்டு சேர்க்கும் சில பெற்றோர் இருக்க தான் செய்வார்கள்..
SCHOOL VAN--->SHCOOL VAN

கருத்து கணிப்பு - 5

மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள் - 2

தொடர் பதிவு

"பாதையும் பதிவும்: மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்..."


மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான் தவறவிட்ட ரயிலும் அதனை தொடர்ந்து அன்று இரவு ரயில் நிலையத்தில் தங்க நேர்ந்ததும் இயற்கை(மழை)-க்கு எனது கடிகார முட்களை நகர்த்தும் சக்தி இருப்பதை உணர்ந்த நேரம்..





ராஜமுந்த்ரியில் மழையால் கோதாவரி ஆற்றின் வெள்ளம் நான் இருந்த இடத்திருக்கு பக்கம் வந்து விட்டது.எங்கள் மருத்தவமனையில் வேலை பார்க்கும் ஒருவரின் கடை நிலை ஊழியரின் சிறிய வீட்டிற்குள் கால் வாசி தண்ணீர வந்து விட்டது.வெள்ளம் வநத வீட்டை பார்த்த முதல் அனுபவம் அது .




கபிலனின் எப்போதோ ரசித்து படித்த
"ஏற்கனவே கடனில் மூழ்கிய வீடு
இப்போது வெள்ளத்திலும் மூழ்கியது "
என்ற கவிதை அன்று ஞாபகம் வந்தது.
ஆனால் ரசிக்க முடிய வில்லை.



அதன் பின்பு ஒரு நாள் இரவு குஜராத் கோரஜ்-ல் நான் நன்கு கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தேன்.யாரோ சிலர் "டப டப" என கதவை தட்டி கொண்டு இருந்தார்கள்.எதோ ஒரு அசாதரண சத்தமாய் கேட்டது.கதவை திறக்க எழுந்து நான் எனது காலை கீழ் வைத்து போது நீரில் கால் வைப்பது போன்று இருந்தது.ஏதேனும் நீர் குழாயை அடைக்கவில்லை என்று நினைத்த படியே லைட்டை போட்ட போது தான் தெரிந்தது.எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்து தொலைபேசியும் எங்களது காலணிகளும் சில காதிங்களை போல் நீந்த தெரியாமல் மூழ்கி போய் இருந்தன. அந்த Quarters -இல் இருக்கும் ஒவ்வொரு வீடாய் போய் பார்ப்பதிலேயே அன்றைய இரவு முடிந்து போனது. இல்லை விடிந்து போனது.




சிலரது கார் முழுவதும் நீரில் மூழ்கி போய் இருந்தன.அடுத்த நாள் காலை நாங்கள் வேலைக்கு செல்லும் போது எங்கள் மருத்தவமனையின் முன் வாசல் அருகே ஒரு மருத்துவரது கட்டில் முதல் தட்டு முட்டு சாமான் வரை வைக்க பட்டு இருந்தது.அவர் அருகே நின்று கொண்டிருந்தார். விசாரித்த போது சொன்னார்கள் மருத்துவர்களுக்கு என்று River viewing Quraters சிறப்பு வீடு கொடுக்க பட்டதால் முதலில் வெள்ளம் இவருக்கு தான் முதல் மரியாதையை செய்து உள்ளது.
வெள்ளம் எப்போ வடியும் என்று பார்த்து கொண்டிருந்த அந்த மருத்துவர் ஏனோ எனக்கு ராஜமுந்த்ரியில் கோதாவரி ஆற்றின் வெள்ளம் வந்து பாதிக்க பட்ட என் உடன் பணி செய்த கடை நிலை ஊழியர் போலவே தெரிந்தார்.எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை வெள்ளத்தை போலவே !!

நான் இருக்கும் இடத்தின் அருகே சில மாதங்கள் முன்பு வரை பாலைவனத்தை விட மோசமாக இருந்த இடம் எல்லாம் இப்போது விளைந்த வயல் வெளி போல் காட்சி தருகிறது. இது தான் சினிமா படத்தில் வந்த இரு வெவ்வேறு பாடல் வரிகளை நேரடியாய் பார்த்த தருணம் "மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி " மற்றும் "
"ஒரு விதைக்குள்ள அடை பட்ட ஆலமரம் (செடி) கண் விழிக்கும் பொறு மனமே"

சுருக்கமா சொன்ன மனிதன் தரும் ஞானம் மழையும் தந்தது எனக்கு... பல பருவ காலங்கள் மாறி மாறி வந்தாலும் இந்த மழை காலம் மட்டும் சில மறக்க முடியாத ஞாபகங்களை நம்முள் விட்டு சென்று விடுகிறது.

அவ்வளவு தாங்க.. என்னங்க மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கா...
மழை நின்ற பின்னாலும் மழை கிளையில் தூரல் விழும்னு சொலுவாங்க.. அது போல எனது ஞாபக மழை முடிந்து விட்டது..இப்ப உங்களுக்கு ஞாபக தூறல் தொடங்கி இருக்கும்..

சமீபத்தில்..

நண்பர் ஒருவரின் திருமண அழைப்பிதழை ஒரு முறை படித்து ரசித்தேன் பல முறை ரசித்து படித்தேன்..

இப்போது உங்களுடன் ஒரு பகிர்வு..

மிடில் கிளாஸ் மனசு - 1



சிறிய வயதில் இருந்தே பொறுப்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியே நான் வளர்க்க பட்டேன்.நான் ஒரு பெண்,அதுவும் வீட்டிற்கு மூத்தவள், எனது அப்பா வெளி நாட்டில் இருப்பதால் அம்மாவிற்கு உதவியாக நானும் இருக்க வேண்டும் என்று பல காரணம் சொல்ல பட்டு இருந்தது. அப்போது ஒரு போதும் நான் நினைத்தது இல்லை என் அப்பா வேலை செய்யும் வெளி நாட்டு வீதிகளில் நானும் ஒரு நாள் இப்படி நடந்து செல்வேன் என்று...

கால சுழற்சியில் திருமணமும் ஆகி நாங்கள் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்ட போது கூட சிங்கார சென்னை ஒரு நாள் சிங்கப்பூர் ஆகும் என்று எதிர் பார்த்து இருந்தது போதும் சரி .என் மகனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்த போதும் சரி. நான் சிங்கப்பூர் வீதிகளில் ஒரு நாள் இப்படி நடந்து செல்வேன் என்று எதிர் பார்த்தது இல்லை...

நான் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்தவர் வாழ்ந்த நாட்டிற்கு என்னால் இந்த உலகுக்கு வந்தவனால் இந்த உலகுக்கு வர போகும் ஒரு புதிய உறவிற்காக இங்கு வர முடிந்தது.(என்ன புரியலையா..அது என்னன்னா .. என் மருமகள் பிரசவத்துக்கு நான் சிங்கப்பூர் வந்து உள்ளேன் போதுமா..)

இன்று இந்த வீதிகளில் நடக்க நான் மட்டும் தான் காரணம்...நான் பக்கத்தால இருக்க கோவிலுக்கு போய்ட்டு வரேன்...பஸ்சுல போக என் மகன் கார்டு போட்டு கொடுத்து இருக்கான்.நான் வரும் போது அதை வச்சு தான் ரெண்டு பஸ்சு மாறி வந்தேன். ரெண்டாவது பஸ்சு ஏற்ன இடம் ஒரு ஸ்டாப் தள்ளி பக்கத்துல தான் அப்படிங்கறது நால எதுக்கு வீனா செலவுன்னு நான் நடந்து போய்கிட்டு இருக்கேன்...ஆனா இப்ப நடக்கும் போது ரொம்ப தூரம் மாதிரி தெரியுது..கால் கூட கொஞ்சம் வலிக்குது. அட என்னது என்னக்கு இவ்வளவு பக்கமா வந்து காரு நிக்கிது...


நீ எங்கடா இங்க ... (என் மகன் வந்துட்டான்..நாங்க பேசறத ஒட்டு கேட்காதிங்க)

நான் கேட்க வேண்டிய கேள்வி நீ எங்க மா இங்க...

இல்ல ஒரு ஸ்டாப் தான அப்படின்னு நடந்து வரேன்..

அய்யோ அம்மா நீ ஏற வேண்டிய பஸ்ஸ்டாப் கோவில இருந்து ரெண்டாவது சிக்னல் கிட்ட வளைந்து போகணும்..

நீ வளைந்து வந்து இருக்கிறது முதல் சிக்னல்.


(கார் கதவை திறந்த படி) சரி வண்டில ஏறு..நான் உன்னை வீட்ல விட்டுரேன்.

இந்த ரோட்ல இன்னும் கொஞ்சம் தூரம் போய் இருந்தா காடு வந்துரும்.நல்ல வேலை நான் வந்தேன்..இல்லாட்டி..



இந்த ஊருல எல்லா சிக்னலும் ஒரே மாதிரி இருக்கு..கட்டடம் கூட ஒன்னுக்கு ஒன்னு ஒரே மாதிரி இருக்கு..அதான்..ஒன்னும் வெளங்கலை

நான் தான் கார்டு போட்டு குடுத்தேன் இல்ல..ஒழுங்கா பஸ்ல வரலாம் இல்லை.. இந்த காசை வச்சு கோவிலா கட்ட போறோம்..

கோவில் கட்ட முடியாது.. ஆனா என் தங்கச்சிக்கு கோடாரி தைலம் வாங்க உதவும் இல்லையா..

(அம்மாவின் மிடில் கிளாஸ் மனசை நினைத்த படியே மகனும் , மகனை இங்கு சரியாக வர வைத்த கடவுளை நினைத்த படி அவளும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்)

கற்பக விநாயகர் Vs Other Vinyagar 's





வணக்கம்.
எல்லாரும் இன்று எல்லாரும் வெறும் வாயை மெல்லாமல் கொழுக்கட்டை வைத்து மென்று கொண்டு இருப்பீர்கள்.இன்னும் கொஞ்சம் கொறிக்க..

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் மற்ற எல்லா விநாயகரை விட கொஞ்சம் வேறு வேறுபட்டவர்.
அது என்னவென்றால்
1 . இந்த விநாயகருக்கு இரு கைகள் மட்டும் தான் இருக்கும்.மற்ற விநாயகர் போல எந்த ஒரு ஆயுதத்தையோ அல்லது கொழுக்கட்டையோ வைத்து இருக்க மாட்டார்.இந்த விநாயகர் தியான கோலத்தில் இருப்பதாய் நம்ப படுகிறது.(Refer the Images)
2.இந்த விநாயகர் இரு கால்களை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து இருப்பார் .மற்ற விநாயகர் எல்லாம் இவ்வாறு இருக்காது(Refer the Images)
3.இந்த விநாயகரின் தந்தம் இடது பக்கம் உடைந்து இருக்கும்.மற்ற விநாயகருக்கு வலது பக்கம் உடைந்து இருக்கும்.(Refer the Images)
4 இந்த விநாயகரின் துதிக்கை சில விநாயகரை போல் வலப்பக்கம் (வலம்புரி) இருந்தாலும், துதிக்கை நேராக வந்து வளைவது இந்த விநாயகருக்கு மட்டும் தான். (Refer the Images)

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

சுகந்தி டீச்சர்

எல்லாரும் சொல்லுவாங்க..
"நம்ப நாட்டின் எதிர் காலம் இளைஞரின் கையில் என்று.."
அதில் எனக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லை.இது எல்லா தலை முறையிலும் சொல்லப்படும் ஒரு வெற்று கோஷமாக தான் எனக்கு படுகிறது.என்னை பொறுத்த வரை ஒரு ஆசிரியர் தான் ஒருவருடைய எதிர் காலத்தையும் ஓரளவு மாற்ற முடியும் என்று படுகிறது. கொஞ்சம் யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும்.நீங்கள் என்ன படிப்பு படிப்பது என்று ஒரு ஆசிரியரை தான் கேட்டு இருப்பீர்கள்.உங்களுக்கு பிடித்த ஆசிரியர் எடுத்த பாடம் உங்களுக்கு பிடித்து போய் இருக்கும். சிலர் பாடம் எடுக்கும் விதத்திற்காகவே அவர்களை நமக்கு பிடித்து போய் இருக்கும்.சிலரை அதற்காகவே பிடிக்காமலும் போய் இருக்க கூடும்.நமது தமிழகத்தில் பெரும்பாலும் ஆசிரியருக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை இருந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் Vs அரசு பள்ளிகள்ஆசிரியர் ஊதியம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து இந்த ஆசிரியர் துறையில் மட்டும் தான் ஊதிய வேறுபாடு மிக அதிகம். அதற்கான காரணம் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.என்னை கேட்டால் ஆசிரியர் என்றவுடன் கண்ணம்மா டீச்சர் ஞாபகம் வர பல காரணம் உண்டு(அவரை பற்றி பிறகு பார்போம் ) என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற டீச்சர் என்னை மிகவும் பாதிப்படைய செய்து விட்டார்.



அவர் வேறு யாரும் அல்ல.வேதார்ணயம் பள்ளி பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற முற்பட்டு உயிர் இழந்த அந்த பெண் தான். இந்த தியாகத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பட்டு உள்ளது.அவருக்கு நல்லாசிரியர் விருதும் கூட வழங்கி இருக்கலாம்.அவர் 11 குழந்தைகளை காப்பாற்றி உள்ளதாக சொல்ல படுகிறது.அவர் குழந்தைகளை காப்பாற்றும் போது தனது job description படி இதை நான் செய்ய வேண்டுமா என்று யோசித்து இருக்க மாட்டார் என்றே எனக்கு படுகிறது
.எப்படியோ அவர் காப்பாற்றிய குழந்தைகளில் ஒருவராவது அவர் கடைசியாய் சொல்லி கொடுத்த ஆபத்தில் உதவுவது என்பதை அவர்கள் வளர்ந்த பின்னர் உணருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம்மால் செய்ய முடியாதை செய்யும் யாரும் ஹீரோ தான் ...
அப்படி பார்த்தால் இந்த சுகந்தியும் ஒரு ஹீரோ தான்..

பாடம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியர் என்றால் எல்லாரும் எல்லாருக்கும் பாடம் கற்று கொடுத்து கொண்டு இருப்பதால் அனைவருக்கும் "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்."

Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part II



தொடர் பதிவு பாதையும் பதிவும்: Medical Physicist மருத்தவ இயற்பியலார் - Introduction


கேன்சர் (புற்று நோய்) சிகிச்சையில் ஒரு வகை கதிரியக்க சிகிச்சை முறை.அதாவது இங்கிலீஷ் -ல் சொன்னா Radiation Therapy . நாங்கள வேலை செய்யும் துறையை Department of Radiation Oncology என்று இங்கிலிஷில் சொல்லுவார்கள். இதில் டாக்டர் ,மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட்(நாங்க தானுங்க), டேக்னலாஜீஸ்ட் என்ற மூன்று முக்கியமானவர்கள் இருப்பார்கள்.


இதில் மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட் என்கிற நாங்கள் இரண்டு முக்கிய பணிகளை செய்வோம்.


1 . சிகிச்சைகான திட்ட பணி தயாரித்தல் (Treatement Planning )
2 . சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் (Quality Assurance )


வளர்ந்த நாடுகளில் சிகிச்சைகான திட்ட பணி தயாரித்தல் வேலையை மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட் என்பவரும் சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் வேலையை Dosimetrist என்பவரும் செய்வார்கள்.அது எதுக்கு நமக்கு..நாம நம்ம கதைக்கு வருவோம்..




முதலில் நாம்ப "சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் (Quality Assurance )"வேலையை பற்றி பார்போம்.கேன்சர் (புற்று நோய்) கதிரியக்க சிகிச்சை முறையில் பயன்படும் இயந்திரத்தை வாங்கும் போது எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா என்று பார்க்கணும். அது மட்டும் இல்லாமல் சீரான அல்லது பரிந்துரைக்க பட்ட இடைவெளியில் தொடர்ந்து அந்த இயந்தரம் ஒழுங்கா வேலை செய்யுதா என்று பார்க்க வேண்டும். இயந்தரதின் செயல்பாடு வரையரக்க பட்ட படி இல்லை என்றால் அதை சரி செய்ய பொறியாளரை நாங்கள் அழைப்போம் (கவனிக்க: நாங்கள் பொறியாளர் அல்ல... கதிரியக்க சிகிச்சை முறையில் பயன்படும் இயந்திரத்தை சரி செய்வது எங்கள் வேலை அல்ல...)

எப்படின்னு கேட்டிங்கனா நம்ப டிவி வாங்கும் போது கலர்,brightness ,contrast ,mute ,எத்தனை channel அப்படீன்னு செக் பண்ணி பாக்கறோம் இல்ல அது மாதிரி இதுவும்..அப்பறம் கொஞ்சம் நாள் கழித்து சவுண்ட் சரியாய் கேடகலேன்னா நாம்ப டிவி மெக்கானிக்கை கூப்டற மாதிரி தான்..

நீங்க கேக்கறது புரியுது..ப்ரிச்சனை வந்தா கூப்டலாம்..ஏன் இடையில் சும்மா சும்மா செக் பண்ணி பார்க்கணும் என்று ..


அதாவது நம்ப டிவி ஆடியோ output 500Watts என்று வச்சுகோங்க. நம்ப யாரும் அது 500Watts இருக்கானு செக் பண்ண மாட்டோம்..அப்படியே அது கொஞ்சம் கூட குறைத்து இருந்தாலும் அது ஒரு பிரச்சனை இல்ல.. முதலில் ஆடியோ output 500Watts இருந்து பிறவு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தாலும் நம்ப volume பட்டனை அதிகமாக்கி வர வர காது சரியாவே கேட்க மாட்டேங்குக்துன்னு சொல்லிட்டு ஆடியோ output 0watts ஆகும் வரை வெயிட் பண்ணுவோம். இது நடந்தாலும் அது ஒரு மிக ப்ரிச்சனை அல்ல ..ஆனால் இந்த கதிரியக்க இயந்தரம் தவறு செய்தால் ஒரு நோயாளிக்கு செல்லும் சிகிச்சை தவறு ஆகிவிடும் வாய்ப்பு உள்ளத்தால் இயந்தரம் தொடர்ந்து சோதணைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம்..

நாங்கள் இரண்டு வருடம் படித்ததை இரு பதிவுகளில் பதிந்து விட முடியாது என்பதால்...

மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்...




மேக மூட்டமாய் இருப்பதால் வீட்டுக்கு செல்லும் போது மழை வந்து விட கூடாது என்ற எண்ணத்துடனும் வீடு வந்தவுடன் மழையை எதிர் பார்த்து மழை வந்தால் ரசிக்கும் சராசரி மனிதன் நான்.எனக்கு மழை மீது பெரிய ஆர்வம் இல்லை என்ற போதும் மழைக்கும் எனக்குமான தொடர்பு பல ஆச்சரியத்தையும் அதன் குறித்த பதில்களையும் யோசிக்க வைத்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே பெய்து கொன்டிருக்கும் மழையை ரசித்த படியே மழைக்கும் எனக்குமான உறவை மனம் லேசாய் அசை போட்டது. எனக்குள் பெய்த ஞாபக மழையில் உங்களுக்கு சில சாரல்கள்...



எனது சின்ன வயதில் மிக பெரிய லட்சியம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால் மழை முடிந்து போகிற இடத்தை (நிலபரப்பு) பார்த்து விடுவது .இதற்கான வாய்ப்பு பயணத்தில் மழை வரும் போது மட்டும் தான் கிடைக்கும்.ரயில் பயணம் என்றாலும் சரி அது என் அம்மாவுடன் நான் சென்ற 407 வேன் என்றாலும் சரி மழையின் ஈரம் சாலையில் முடியும் இடத்தை பார்த்து விட முயற்சித்தும் எனது தூக்கம் அல்லது கூட வரும் என் அம்மாவுடனான பேச்சு இந்த இலட்சியத்தை அடைய விடாமல் தடுத்துவிடும்.சற்று நேரத்தில் ஈர நிலத்தில் இருந்து சாதாரண நிலம் வந்து விடும் போது இன்றும் தோத்து விடோம் என்ற உணர்வு ஒட்டி கொள்ளும். அது மட்டும் அல்லாது மழை வரும் இடத்தை நாம் கடந்து விட்டோமா அல்லாது மழை வருவதின் செறிவு குறைந்து மழை இங்கு பெய்ய வில்லையா என்ற கேள்வி தொத்தி கொள்ளும்.

இப்போது போலவே நான் சின்ன பையன் இருந்த போதும் மழை வரும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள்.பெரும்பாலும் இந்த மழை காலையில் வராது. அப்படியே வந்தாலும் பள்ளி செல்லும் நேரத்துக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி நின்று விடும்.(இப்ப கூட அப்படி தான் ) சாயங்காலம் தான் அதிகமாக வரும் அதனால் கடைசி இரண்டு பிரிவுகள் (peroids) மட்டும் குறைத்து அனுப்பி விடுவார்கள்.மழை காரணமாக மைதானம் ஈரமாய் இருப்பதால் நம்மை விளையாடவும் அனுமதிக்க மாட்டார்கள்.வீட்டில் இருந்த படி விளையாட முடிந்த விளையாட்டு காகித கப்பல் விடுவது தான்.

என் அம்மா திடீர் என்று மழை வரும் ஒரு நாளில் செய்து குடுத்த வாழைக்காய் பஜ்ஜியின் சுவை அதன் பின் பலமுறை நான் செய்ய சொல்லி கேட்ட போது கிடைக்கவே இல்லை. அது தான் நான் எதிர்பாராமல் கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சயை அறிந்த ஒரு சமயம்.


என் ஆயாவுடன் எங்கள் சொந்த ஊரில் இருக்கும் போது மழை வரும் போது ஓட்டில் இருந்து வடியும் நீரை பிடித்து வைக்க தோணி என்ற ஒன்று இருக்கும்.அதன் கீழ் வாளி(bucket ) வைத்து நீரை சேமித்து வைப்பது அவரது வழக்கம். நான் என் ஆயாவும் அதை பார்த்து கொண்டே இருப்போம். அது நிறைந்தவுடன் அடுத்த வாளி,என்று தொடர்ந்து எடுத்து எல்லா பாத்திரத்தை நிறைத்து விடுவது வழக்கம்.அந்த நீரை துணி தொவைக்க பயன் படுத்துவார். மழை நீரில் துணி துவைத்தால் அழுக்கு நல்லா போகும் என்று அவர் சொல்லுவார்.அன்று என் ஆயா சொல்லாமல் சொல்லி கொடுக்க நினைத்தது மழை நீர் சேமிப்பாய் கூட இருக்கலாம்.


புத்தகம் நனைந்து விடாமல்
அதை சட்டைக்குள் நுழைத்து
நடந்த பள்ளி கூட நாட்கள்...

நான் நனைந்து விடாமல் புத்தத்தை
என் தலையில் ஏற்றி இருந்த கல்லூரி நாட்கள்...

வளர வளர எனது எண்ணங்கள் மாறும் விதத்தையும் உணர்ந்த மற்ற ஒரு மழை நாள் அது.


ஞாபக சாரல் தொடரும் ..

சத்தம் போட்டு சொல்லாதே - 10

நடந்தது என்ன...நிஜம் ..


தினமும் இரவு ஒளி பரப்பாகும் ஜீ டிவியில் வரும் நம்பினால் நம்புகள் ,சன் டிவியில் வரும் நிஜம்,விஜய் டிவியில் வரும் நடந்தது என்ன போன்ற நிகழ்சிகளில் எல்லாம் பெரும்பாலும் ஹிந்து மத சடங்குகளையும் அதன் சார்ந்த மூட நம்பிகைகளையும் குறித்து அதிகமாக பேச படுகிறது. கிருஷ்துவ மதத்திலும் முஸ்லிம் மதத்திலும் இருக்கும் நம்பிக்கைகள் குறித்து இதுவரை பேசியதாய் எனக்கு தெரியவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமத்தில் சொன்னது தான் நினைவு வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


""வேறு எந்த மதத்தின் மீது யாரும் கை வைத்து விமர்சனம் செய்து விட முடியாது இந்து மதத்தை செய்ய முடியும் அப்படி செய்த பின்னாடியும் கூட இந்து மதம் நிலைத்து நிற்கிறது என்றால் விமர்சனங்களையும் கடந்து அதன் நியாயம் பரவி இருக்கிறது என்பது பொருள்"

சத்தம் போட்டு சொல்லாதே - 9


குமுதம் இதழிலில் வெளி வந்து கொண்டிருந்த ஞாநியின் ஓ பக்கங்கள் இனி மேல் வெளி வராது என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது.அவரின் சில கருத்துக்களை நீக்க சொல்லி குமுதம் கேட்டதாகவும் அவர் மறுத்து விட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவரின் கருத்தை அவரது வலை பக்கத்தில் படித்து விட முடியும் என்றாலும் எனக்கு தோன்றும் கேள்விகள்
1 . இந்தியா டுடே புத்தகத்திற்காக நித்யானந்தா பற்றி அவர் எழுதியதில் இருந்து சிலவற்றை இந்தியா டுடே நீக்கி விட்டு வெளிட்டது என்று கூறி இருந்தாலும் அதில் தன் கருத்தை நீக்கி வெளியட அனுமதிதித்து விட்டு இப்போது மட்டும் கருத்தை நீக்கி வெளியட மறுத்து வெளியேறுவது எதனால் ?
2 . குமுதம் ,விகடன் போன்ற முக்கிய பத்திரிக்கைகள் கூட இப்போது பயப்படுவதால் நமது முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை அவரது வாரிசுகளுக்கு இருக்காதோ என்று அச்சம் கலந்த ஐயம் ஏற்படுகிறது.

ஓ பக்கம் தூரம் ஆனது..இதுவும் கடந்து போகும் என்று நம்புவோமாக!!!

Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part I


சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது
அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று...
அந்த உரையாடல் கீழே இதோ

நான்:மெடிக்கல் ப்ய்சிசிஸ்ட்

என் உறவினர்:அப்படினா என்ன வேலை..கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுபா..

நான்:(ஆரமிபிச்சுடாங்காய ஆரமிபிச்சுடாங்க என்று நினைத்த படியே)கான்சர் நோயாளிகளுக்கு radiation -ல் எப்படி ட்ரீட் பண்றதுன்னு நாங்க பிளான் பண்ணுவோம்.

என் உறவினர்: ஒன்னும் வெளங்கலையே...என்னமோ பெரிய படிப்பு பெரிய வேலைன்னு சொன்னங்க..ஆனா நீ என்னடானா என்ன படிச்சேன் கூட சொல்ல தெரியாம தடுமாற..இந்த காலத்து பசங்களுக்கு எதையும் பட்டுனு சொல்ல தெரியல..

நான்: அதாவது கான்சர் வந்தா radiation இல்ல!! இல்ல!!(அவருக்கு புரிய வேண்டும் என்று) கரண்ட்டு குடுப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா..அதுல...

என் உறவினர்: (என்னை இடை மறித்து) ஆமா ஆமா நம் முத்துசாமிக்கு கூட முப்பது நாள் போய் கரண்ட்டு வச்சாங்க..அந்த கரண்ட்டு வைக்கிற வேலைன்னு சொல்லு.

நான்: இல்லைங்க அவங்க எங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் Technologist. நாங்க அவங்களுக்கு எவ்ளவு நேரம் radiation இல்ல இல்ல கரண்ட்டு,அப்பறம் அந்த கரண்டை எப்படி குடுக்கணும்னு சொல்லுவோம்.
என் உறவினர்: அப்பா நீ டாக்டரா..


நான்:(இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைத்து படி) இல்லைங்க டாக்டர் எங்களுக்கு கரண்டை எங்க எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுவாங்க..நாங்க கரண்டை எப்படி எவ்வளவு நேரம் கொடுக்கணும்னு டாக்டர்-க்கு அச்சிஸ்ட்(assist) பன்னுவோம்.

என் உறவினர்: அட டாக்டர்க்கு அச்சிஸ்ட்டன்ட் அப்படினா கம்பவுண்டர்னு சொல்லு..

நான்: இல்லைங்க நாங்களும் டாக்டர் மாதிரி தான் ஆனால் டாக்டர்க்கு கொஞ்சம் கீழ்.. புரிஞ்சதுங்களா...

என் உறவினர்: லைட்டா புரிஞ்சது...முழுசா புரியல..

நான்:அப்பாட லைட்டாவது புரிஞ்சதே..

என் உறவினர்:நீ மினி டாக்டர் வேலை பாக்கிற...கரெக்டா ..

நான்: கரெக்ட்டு தான் ஆனா...

என் உறவினர்: என்ன ஆனானு இழுக்ற..எதாவது தப்புனா சொல்லுபா

நான்:(மறுபடியும் முதல் இருந்தா என்று பயந்து) இல்லங்க கரெக்ட் தான்..ரொம்ப கரெக்ட் என்றேன்.

பின் குறிப்பு: மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிச்ச நாங்க ஒரு உண்மை சொல்லி ஆகணும்...
நாங்க மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிக்க பட்ட கஷ்டத்தை விட என்ன படிச்சோம்னு மத்தவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க ரொம்ப கஷ்ட படுறோம்.


இருந்தாலும் தொடர் பதிவின் மூலமாக Medical Physicist என்னவென்று சொல்லியே தீருவேன்.அதுக்கு அப்பறம் யாராவது நீ என்ன படிச்சு இருக்காய் என்று கேட்டால் கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் பதில் சொல்லுவேன்

நண்பர்கள் தினமாம்

சரி வாங்க கொஞ்சம் நட்பை பத்தி கொஞ்சம் பேசுவோம்
Scene 1
நட்பு னா என்னனு தெரிஞ்சுக்க நமக்கு தெரிந்த தமிழ் சினிமா என்ன சொல்லுதுன்னு பார்த்தா
நட்புகாக உயிரை குடுப்பது,காதல் தூது போவது , எப்ப கேட்டாலும் கணக்கு பார்க்காம காசு செலவு செய்வது,
நண்பன் சாகும் போது தானும் சாவது , நண்பனுக்காக பழியை ஏற்று கொள்வது
நம்ப தமிழ் கலாச்சார கதைகள் என்ன சொல்லுதுன்னு பார்த்தா நண்பன் செய்வது தப்பு என்று தெரிந்தும் அவனுக்காக போராடுவது ,ஆயுள் வளர்க்கும் ஏதேனும் பொருள் கிடைத்தால் தான் சாப்பிடாமல் தான் நண்பனுக்கு தருவது
மானத்தை காக்கும் கை மாதிரி இருக்கணும் என்றும் சொல்லுது..நானும் +2 படிக்கும் போது நட்பை பத்தி ஒரு கவிதை எழுதினேன்
அது என்னன்னா உடலும் உயிரும் போல, நிழலும் நிஜமும் போல,பூவும் மனமும் போல, நகமும் சதையும் போல என்பதற்கும் அதிகமானது என்பது போல தொடரும்.
Action cut camera move to flash back
Scene 2

நட்பு
உடலின் உயிர் அல்ல - இறப்பில் உடலை விட்டு பிரிய
நிஜத்தின் நிழல் அல்ல -இருட்டில் நிழலை விட்டு பிரிய
பூவும் மனமும் அல்ல - வாடிய பின் பூவை விட்டு பிரிய
சதையும் நகம் அல்ல -வளர்ந்ததும் சதை விட்டு பிரிய
உயிரின் உறைவிடம் எது என உரைத்திட இயலும் ?
அன்னையின் அன்பை எதை கொண்டு அளந்திட இயலும்
உணர்ந்திட மட்டுமே நட்பு.. உணர்ந்திட மட்டுமே நட்பு..

என்று எழுதி இருந்தேன்
அதன் பின்னால் நட்பு என்ற இடத்தில் நாட்டு பற்று என்று போட்டு வேறு ஒரு இடத்தில் இந்த கவிதையை use செய்து விட்டேன்
Action Cut Back to Scene 1
இப்ப நான் எழுதியதை மட்டும் இல்லை மேல் உள்ள பல விசயங்களை படித்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் இருக்கிறது.
இப்போது நட்பு குறித்த வரைமுறைகள் மாறி இருப்பதாய் தான் எனக்கு தோன்றுகிறது.
பல தூரங்களுக்கு அப்பால் பல பணிகளுக்கு இடையில் R u there என்ற சாட்டிங் மெசேஜ்-இலும் சிறப்பாய் வருகிற SMS அல்லது scrap மெசேஜ்-லும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வருகிற டைம் பாஸ் போன்களிலும் ஆர்குட் & facebook பக்கங்களில் கமெண்ட் செய்து கலாய்பதிலும் தான் இப்போ நட்பு வேகமாய் பயணித்து கொண்டு இருப்பதாய் எனக்கு படுகிறது
முகம் பார்த்து பழகாமல் நெஞ்சத்தால் பார்ப்பது(முக நக நட்பது,அக நக நட்பது ) என்று திருவளுவர் இதை தான் கூறி இருப்பர் என்று நினைகிறேன்.

எனது பழைய கவிதையில் சில கருத்து மாற்றங்கள் இருந்தாலும்

உணர்ந்திட மட்டுமே நட்பு.. உணர்ந்திட மட்டுமே நட்பு.. என்பதில் மாற்றம் இல்லை



அனனவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

இயல்பு

பலமுறை 100 மார்க் போட்ட
கணக்கு வாத்தியாரை விட
ஒரு முறை கூட 100 போடாத
தமிழ் அய்யாவை பிடித்து
விடுவது இயல்பு.



இறுக்க உடை அணிந்த பெண்ணை
குறைந்தது இன்னும் ஒரு
முறையேனும் பார்த்து விடுவது
ஆணின் இயல்பு.


சம்பளம் எவ்வளவு என கேட்கையில்
கேட்வபரை பொறுத்து கொஞ்சம்
கூட்டியோ குறைத்தோ
சொல்வது இயல்பு.



அங்கு செல்வதற்கு அரை மணி
நேரம் ஆகும் என அறிந்தும்
தொலைபேசியில் பத்து நிமிஷத்தில்
அங்கு இருப்பேன் என சொல்லவது இயல்பு

உள்ளது உள்ளபடி - 5

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


எனது உடைகளை இஸ்திரி செய்யும் பெட்டி இடுபவர் ஒரு தமிழர் பெயர் ராஜு ( கோயம்புத்தூர் நகரில் இருந்து வந்து இங்கே தொழில் செய்கிறார் ), வீட்டிற்கு வந்து துணிகளை எடுத்து போவார் ,ஒரு சட்டை இஸ்திரி செய்வதற்கு Rs 5 , கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் எனக்கு இஸ்திரி செய்ய தெரியாது ( சோம்பேறிக்கு கிடைத்தது எல்லாம் சாக்கு ) மேலும் அவருடைய தொழில் சுத்தம் ( மடிப்பு துல்லியம் ) , ஒரே ஒரு பிரச்சனை தலைவர் அப்போ அப்போ ஊருக்கு ஓடிடுவார் வர பத்து பதினைந்து நாட்களாகும் , இந்த முறை 20 நாட்களாகியும் அவரை காணவில்லை , தேய்த்து வைத்த துணிகளை எல்லாம் உபயோகித்து விட்ட நிலையில் நானே இஸ்திரி செய்ய தொடங்கினேன் , இரண்டு தினங்கள் செய்திருபேன் ரூபாய் 5 மகத்துவம் புரிந்தது , போதுமடா இந்த பொழப்பு என்று ராஜுவின் வீடு எங்கு உள்ளது என்று தேட தொடங்கினேன் அன்று பார்த்து ஆலப்புழா மாவட்டம் முழுவதும் ஏதோ ஒரு சொதப்பல் காரணத்திற்காக பந்த் ( மலையாளத்தில் ஹர்த்தால் ) . கேரளாவை பொறுத்தவரை பந்த் என்றால் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம் ( யாருடைய பந்த் ஆகா இருக்கட்டுமே ஆளும் கட்சி , எதிர்க்கட்சி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி, லேபர் யூனியன் , வணிகர்கள் சங்கம் , பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் என்று வரிசை நீண்டு கொண்டே போகும்) , எல்லாரும் கடையை அடைத்து கொண்டு வீட்டில் ஜாலியாக இருப்பார்கள் கடைகள் மட்டும் அல்ல பேருந்து , ஆட்டோ , பள்ளி , கல்லுரி , என்று ஒட்டு மொத்த இயல்பு வாழ்கையும் பாதிக்கப்படும், மூடாத கடைகள் இரண்டு உண்டு 1. மெடிக்கல் ஸ்டோர் , 2. கள்ளு கடை ( தெருவுக்கு ஒரு கள்ளு கடை உண்டு ). சரி என்று எனது பைக்கை எடுத்து கொண்டு ராஜுவின் வீடு கண்டு பிடிக்க கிளம்பினேன் , ஒரு தெரு முனையில் விசாரித்த போது அங்கே ஒரு கொடி கம்பத்தின் கீழே அமர்ந்து இருண்ட ஒருவர் தனக்கு தெரியும் என்றும் ஆனால் இன்று பந்த் அதனால் அவர் எனக்கு உதவ முடியாது என்று கடமை உணர்ச்சி பொங்க கூறினார் ( வயது 35 இருக்கும்,முகத்தில் நாலு நாள் தாடியும் பசி களையும் தெரிந்தது ) அவருடைய அருகில் அமர்ந்து இருந்தவர் சட்டென்று எழுந்து என்னிடம் வந்து மெதுவாக அவனுக்கு கள்ளு வாங்கி தாரேன்னு சொல்லு கூட்டிட்டு போய் காட்டுவான் என்றார்


வேறு தெரிந்தவர்கள் அந்த ஏரியாவில் யாரும் இல்லாத காரணத்தினாலும் கடுப்பின் உச்சத்தின் நான் இருந்ததினாலும் சரியென்று ஒத்து கொண்டு அவரை அழைத்தேன் வந்தவர் பைக்கில் ஏறும் முன் சில நிபந்தனைகள் விதித்தார் 1. இதே இடத்தில கொண்டு வந்து விட வேண்டும் 2.13 no கள்ளு கடையில் தான் கள்ளு வாங்கி தர வேண்டும் 3. ராஜு வீட்டில் இல்லை என்றால் அதற்கு அவர் பொறுப்பு அல்ல , எல்லாம் என் நேரம் என்று எண்ணி கொண்டு சரியென்று சம்மதித்தேன். போகும் வழியெல்லாம் என்னை பற்றி விசாரித்து கொண்டு வந்தார் ( கேரளாவில் ஒரு பழக்கம் உண்டு நண்பர்களுக்கு இடையே நல்ல வேலையில் உள்ளவர் நல்ல வேலை இல்லாதவருக்கு அவர் கேட்கும் போதெலாம் குடிக்க வாங்கி கொடுக்க வேண்டும் ) எதற்கு வம்பு என்று என்னை பற்றி முழு விபரம் எதுவும் கூறாமல் மழுப்பி கொண்டே வந்தேன் பல left , right களுக்கு பின் ஒரு வீட்டின் முன் நிறுத்த சொன்னார் வீட்டை கண்டால் கோடீஸ்வரன் வீட்டு போல் இருந்தது பினால் அமர்ந்து இருதவர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே சென்றார் ஒரு பத்து நிமிடம் கழிந்து அவரும் ராஜுவும் ஒருமித்து வந்தனர் இந்த வீட்டிலா அவர் வசிக்கிறார் ? என்று வினவிய பொழுது இல்லை என்றும் இந்த வீட்டின் பின் புறத்தில் ஒரு ஒட்டு வீடு உள்ளதாகவும் அதில் தன் குடும்பத்தோடு வசிப்பதாகவும் கூறினார் , அவரிடம் எனது அவல நிலயை விளக்கி கூறி விட்டு தயவு செய்து என்றே வந்து துணிகளை எடுத்து போகுமாறு கூறினேன் அவர் தலை அசைத்து விட்டு பைக்கில் என் கூட வந்தவரை காட்டி கண்ணால் ஏதோ சைகை செய்தார் எனக்கு ஒன்றும் புரிய வில்லை சரி வந்த வேலை முடிந்ததென்று பைக்கில் ஏறினேன்

கூட வந்தவர் என் முன் வந்து நிற்க பேசியபடி கள்ளு குடிக்க எவ்வளவு என்று கேட்ட படி எனது பர்சை எடுத்தேன் உடனே அவர் முகம் மாறியது தனக்கு காசு வேண்டாம் என்றும் கள்ளு தான் வேணும் என்றும் கூறினார் சரியென்று அவரை பைக்கில் ஏற்றி கொண்டு அவர் கூறிய கள்ளு கடையை நோக்கி விரைந்தேன் கடை தென்னங் கூரை இட்டு சுமார் இருபது பேர் அமர்ந்து சாப்பிட கூடிய ஒரு ஹோடேளை போல் இருந்தது ஒரு முனையில் கல்லா பெட்டியும் மறு முனையில் டிவி பெட்டியும் , சுவரில் மகாத்மா காந்தியின் படம் சத்தியமவே ஜெயதே என்ற சொற்றொடருடன் இருந்தது கூட வந்தவர் நேரே உள்ளே சென்று இரண்டு டம்ளர் கள்ளும் ஒரு தட்டில் ஒரு டபுள் ஆம்லெட்டும் வாங்கி கொண்டு வந்தார் அவர் முகத்தில் இருந்த பூரிப்பை காண வேண்டுமே ! நான் கொடிப்பதிலை என்பதை கூறியவுடன் வேகமாக சென்று ஒரு லெமன் சர்பத் வாங்கி வந்தார் ( கம்பெனி வேணுமாம் ) பாத்து நிமிடத்தில் கொண்டு வந்த இரண்டு டம்ளரையும் காலி செய்து விட்டு என்னை அழைத்து கொண்டு கல்லா அருகே வந்தார் என்னிடம் இருந்து ஒரு பத்து ரூபாய் வாங்கி கொண்டு அவர் பாக்கெட்டில் இருந்து 25 ரூபாய் எடுத்து கொடுத்தார் ( நான் வாங்கி கொடுக்க வேண்டிய கள்ளு ரூபாய் பத்து அவர் வாங்கி குடித்த கள்ளு ரூபாய் பத்து ஆம்லெட் ரூபாய் பத்து அவர் எனக்கு வாங்கி கொடுத்த லெமன் சர்பத் ரூபாய் ஐந்து மொத்தம் ரூபாய் 35 ) அவர் கண்ணில் போதை இல்லை வாய் குழற வில்லை நடையில் தள்ளாட்டம் இல்லை பேசியபடி என்னை கொண்டு அந்த கொடி மரத்தின் அடியில் விடு என்று கூறினார் அது வரை அவரை பற்றி ஒன்றும் விசாரிக்காத நான் அவரை பற்றி மெதுவாக பேச்சு எடுத்தேன் அவர் துபையில் முடி வெட்டும் சலூன் வைத்திருந்ததாகவும் இரண்டு வருடங்களாக இங்கு ஒரு சலூனில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் ஏன் திரும்பி வந்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது வேண்டிய அளவு சம்பாதித்து விட்டு இங்கே வந்து சுமார் 4 லட்சத்தில் ஒரு வீடு கட்டியதாகவும் மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறினார் மேலும் என்ன தான் காசு துபையில் கிடைத்தாலும் நானே ராஜா நானே மந்திரி என்ற வாழ்கை இங்கு மட்டுமே கிடைக்கும் அதனால் தான் திரும்பி வந்து விட்டதாக கூறினார்

இந்த கால மனிதர்களுக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு சுதந்திரமும் தன்மானமும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்ந்து கொண்டேன்

இன்னும் சொல்லுவேனா ???
காலம் முடிவு செய்யும்.

முரண் - 2



படிக்க போறேன் என்று சொல்லி தான்
வந்தேன் மொட்டை மாடிக்கு
அடித்த காற்றும் அருகே இருந்த ஆறும்
இதமாய் இருந்தது மனசுக்கு

ஓடும் ஆறை விட ஆற்றுபடுகை அதிகம்
மாலை நேரம் ஆகிவிட்டதால்
ஆங்காங்கே ஆற்றுபடுகை
ஆற்று படுக்கையாக மாறுவதை கண்டேன்.

ஒரு இளைஞன் தனது கையில் எதையோ
வைத்து தேய்த்து கொண்டிருந்தான்.
விளையட வந்த இரு சிறுவர்கள் பெய்த சிறுநீரால்
ஓடும் ஒரு நதி ஆனது திரிவேணி சங்கமமாய்!

சில லாரிகள் மணல் திருட்டு பாவத்தை
சுமக்க முடியாமல் சுமந்து வெளியேறின

படிக்காமல் என்னடா பராக்கு பார்க்கிற என்று
படி படி (பட பட )என பொடனியில் அடித்து
சொன்னது காய போட்டு இருந்த
அப்பாவின் முழு கை சட்டை.

உரக்க படிக்க ஆரமித்தேன்
"ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..

சில்லறை பசங்க

நான் ஊரு சென்று இருந்த போது நடந்த ஒரு சம்பவம்.
நான் என் அம்மா மற்றும் என் நண்பர் மூவரும் கோவையில் ஒரு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம்.அது ஒரு மிதவை பேருந்து.(அதாங்க காசு மட்டும் அதிகமாக வாங்குவாங்க இல்ல அந்த வண்டி தான்).எங்கள் முன்பு இருந்தவர்கள் எல்லாம் சரியாக பத்து பத்து ரூபாயை நீட்டினார்கள்.நடத்துனரும் எல்லாரிடமும் இருந்தும் பத்து ரூபாயை வாங்கி போட்டு கொண்டு ஒரு பயண சீட்டை கிழித்து கொடுத்த படியே எங்கள் அருகில் வந்தார்.சராசரி வண்டியில் நாங்கள் போக வேண்டிய இடத்திருக்கு ஒரு மூன்று ரூபாய் இருக்கும்.அந்த மிதவை பேருந்தில் எவ்வளவு காசு என்பது தெரியாததால் என் நண்பர் இரண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.அந்த நடத்துனரும் வழக்கம் போல் இரண்டு பத்து ரூபாய் நோட்டை வாங்கி போட்டு கொண்டு மூன்று பயண சீட்டை கிழித்து கொடுத்தார்.நாங்கள் பார்த்த பொழுது தான் தெரிந்தது.ஒரு பயண சீட்டின் விலை ஒன்பது ரூபாய் என்று. நாங்கள் கொடுக்க வேண்டியது 27 ரூபாய் கொடுத்ததோ 20 ரூபாய் என்று உடனே நாங்களும் அந்த நடத்துனரை அழைத்து மீண்டும் ஒரு பத்து ரூபாயை கொடுத்தோம்.அவரும் அதை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவருக்கு மீதி மூன்று ரூபாய் குடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாய் தெரியவே இல்லை.எனக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது.உடனே நானும் மீதி தாருங்கள் என்று கேட்டு விட்டேன்.அவரும் என் அருகே வந்து ஒரு இரண்டு ரூபாயை குடுத்து விட்டு வேகமாக நகர்ந்தார்.நாங்கள் நினைத்து இருந்தால் அந்த 10 ரூபாயை கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.நாங்கள் நேர்மையாக இருந்தும் அவர் சில்லறையை முழுமையாக கொடுக்க மறுப்பது எனது கோபத்தை அதிக படுத்தியது.நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பு என் அம்மாவிடம் உள்ள பர்சில் இருந்து சில்லறைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து அந்த நடத்துனரிடம் சண்டை போட தயார் ஆகி கொண்டிருந்தேன்.என் அம்மாவிற்கு இது தெரிந்து விட்டது பிறகு என் அம்மாவும் என் நண்பனும் கோவில் செல்லும் போது சண்டை போடாதே மனசு நிம்மதியாய் இருக்காது என்றனர்.நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட்டது.மனசு நிம்மதியாய் இருக்கட்டும்(அவர்கள் மனசு) என்று நான் சண்டை போடாமல் இறங்கி விட்டேன்.பஸ்ஸை விட்டு இறங்கியதும் வெயில் பட்டு என் உடலும் கொஞ்சம் சூடானது.


சில்லறைக்காக சில்லறை தனமாய் சி(ல்)ல(றை) பசங்களோட சண்டை போட மனம் இல்லாததால் அதன் பிறகு தமிழகத்தில் சென்ற பஸ் பயணத்தில் எல்லாம் நான் கொஞ்சம் சில்லறையை சுமந்த படி திரிந்தேன்.உங்களில் சிலருக்கு சண்டை போட்ட நான் கூட ஒரு சில்லறை பையன் போல் தெரியலாம். அது உங்கள் தவறு இல்லை.கண்டிப்பான முறையில் என் தவறும் இல்லை...

(அப்பாட எப்படியோ பதிவின் மூலம் கோபத்தை கொஞ்சம் வெளி படுத்தியாச்சு..)
(குறிப்பு:புகை படத்தில் இருக்கும் நடத்துனர் இணையத்தில் எடுத்தது.இவருக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பதம் இல்லை )

மெய் பொருள் காண்பது அறிவு


படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங்கு இருக்குகாங்க என்று பார்க்க தான் நாம பல பேரு உலக வரைபடத்தை பயன்படுத்தறோம்.



உலக வரைபடத்தில் கிரீன்லாந்து மற்றும் ஆப்ரிக்கா ரெண்டையும் பார்த்திங்கனா கிரீன்லாந்து என்னவோ ஆப்ரிக்காவை விட கொஞ்சம் தான் சிறிசு என்று தோணும் ஆனால் அது உண்மை இல்லை.ஆப்ரிக்காவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =30,221,532 km2 கிரீன்லாந்துவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =2,166,086 km2 அதாவது ஆப்ரிக்கா க்ரீன்லந்தை விட 14 மடங்கு பெரியது.



பிறகு என் உலக வரைபடம் அப்படி உள்ளது என்றால் கூம்பு(Cone), கோளம்(Sphere) போன்றவற்றை தட்டையாக மாற்றி வரையும் முறையை பொறுத்து இதன் அளவுகள் மாறுபடும்.கோணத்தை நிலையாக கொண்டு வரைந்தால் நாம் பிரிக்கும் மைய இடத்தில் இருந்து நகர நகர உருவம் மாறும்.(The distortion of the size will be in the increasing pattern if you move away from the centre.) இந்த முறைக்கு பெயர் Mercator projection. Mercator projection உள்ள இந்த குறைபாடு எல்லாரும் அறிந்தது.இதனால் Mercator projection- ன் குறைபாடை Greenland problem என்றும் கூறுவார்கள்.தொலைவை விட கோணத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் கடல் வழி பயணத்துக்கு இந்த Mercator projection மிகுந்த பயனுள்ளது.

இதை தான் வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று கூறி உள்ளார்.

தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும் - எதிரொலி


எனது சமீபத்திய பதிவுக்கு என் நண்பன் குமார் அனுப்பிய ஒரு எதிரொலி மின்னஞ்சலை
நண்பர்களின் படைப்புகளில் பதிவு செய்கிறேன்.

I read your recent articles about Semmozhi Conference!
It reflects all Tamizh peoples who really worry about "Tamizh Language".
I also have some issues on that song.
Here with I have give the link for that song if you don't have.
"http://www.youtube.com/watch?v=U87jbmVx3GA"
Please carefully see the song each seconds.
After around 4 min 07 sec a girl writing Tamizh letter's on the wall.
she turned to see her father.
The FATHER CALLED HIS DAUGHTER BY THE WORD "COME"!!!!!!
Even she wrote "Amma, Appa and Thenmozhi" on the wall.
Where gone "TAMIZH"?
It shows Gowtham menan & Co. doesn't show any interest on Tamizh!
Isn't it?
As usual commercial play a major role than Tamizh!

If you have time write an article on this issues in your blog! If possible.


Take care
Truly
P.Kumar

தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும்


செம்மொழி மாநாட்டு மைய நோக்கு பாடலையையும் அது படமாக பட்ட விதத்தையும் தொலை காட்சியில் பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்குது..
இயக்கம் கவுதம் மேனன் எடுத்தது என்பது பார்த்தவுடன் தெரிந்தது.
அந்த பாடலில் திரையில் அ ,ம,ஊ,ஈ,இ,ன,ண,ஒ,கு,வ,ஏ,ஆ,மு,ச,ற,ர,ஞ,ல,ய பல எழுத்துகள் வரும்..ஆனால் அதில் தமிழின் சிறப்பு என்று சொல்லகூடிய ழகரம் " ழ " இல்லை.என்ன செய்யறது கவுதம் மேனனுக்கு தெரிந்த தமிழ் அவ்வளவுதான். பாரதி ராஜா ,பாலு மகேந்திரா போன்றோரை எடுக்க சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு படுகிறது.இசை ஞானியும் SP.பாலசுப்ரமணியமும் இல்லாதது ஒரு குறையாக படுகிறது.இசை ஞாநியை இசை அமைக்க சொல்லி இருக்கலாம். ரஹ்மானும் ஒரு பாடகராக இருந்து இருக்கலாம்.இசைஞானியும் ஜூன் 2 தனது பிறந்த நாள் அன்னதான விழாவில் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று தனது வருத்தத்தை மெதுவாய் சொல்லி இருக்கிறார்.என்ன செய்ய.. கடந்த தமிழ் மாநாட்டில் "கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலியும்" என்ற நாட்டமை பாடல் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்து போனதால் இசை அமைப்பாளர் சிற்பி மாநாட்டு இசையை நிகழ்த்தினார்.
சரி விடுங்க..கலைஞர் உடன் பணியாற்றி உள்ளேன் என்று A.R. ரகுமான் மற்றும் கவுதம் மேனன் பெருமை படுவதற்கும் குறிப்பாக கவுதம் மேனன் என்னை வைத்து படமும் A.R. ரகுமான் என்ன பாடலுக்கு இசையும் அமைத்து உள்ளார் என்று கலைஞர் பெருமை பட உதவும். ஆனால் ஒரு விஷயம் கலைஞரின் பாடல் மிக அருமை.அதுவும் தொடக்க வரிகள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்


கலைஞர் சார்,
What a Man ...உங்களுக்கு இன்னும் வயசு ஆகவில்லை...

நெஞ்சத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்...

நட்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் எல்லார் மனதிலும் சில முகங்கள் தோன்றி மறையும்.
நட்புக்கு இலக்கணமாய் அதியமான் அவ்வை நட்பு,கிருஷ்ணர் குசேலர் நட்பு என்று சில பழங்கதைகளும் நமக்கு சொல்லபடிருக்கு.பழங்கதைகளை திருப்பி சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பலை..என் கதைய சொல்லறேன் கேளுங்க..(யாரு பா அது அதுக்கு பழங்கதையே பரவா இல்லைங்கறது).
என் கூட வேலை பார்த்த எல்லாரையும்,என் கூட படிச்ச எல்லாரையும் நண்பன் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.Colleague,Classmate அப்படினு இது வரை பிரித்து கூப்பிட்ட தில்லை.நண்பன் என்ற அடைமொழியோடு பல பேரு கூட நட்பில்லாமல் இருக்கேன்.சில பேரு கிட்ட மட்டும் தான் நட்பு கொண்ட நண்பனாய் இருந்து இருக்கேன்.இருந்தாலும் பாருங்க அவங்க கிட்ட கூட இந்த மாதிரி சில சம்பங்கள் நடந்து இருக்கு.
என் டீம்ல விளையாடும் என் நண்பன் அவுட் ஆகும் போது ஒரு சந்தோசம் அடுத்து நான் பேட்டிங் பண்ண போறேன்னு.
என் உடனே எப்பவும் படித்த இன்னொரு நண்பன் பரிட்சைல அஞ்சு மார்க்கு அதிகம் வாங்குன போது ஒரு பொறாமை.


நாங்க ரெண்டு பேரும் சைட் அடிச்ச பொண்ணு அவன் கிட்ட மட்டும் வந்து பேசும் போது ஒரு வயிற்று எரிச்சல்
அப்பறம் ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு விசயங்களை மறைத்து வைக்க முற்படுவது
அப்படீன்னு பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

நான் கூட இவங்க கிட்டவும் நட்பு இல்லையோனு தான் முதலில் நினைத்தேன்.பிறகு தான் எனக்கு புரிந்தது இது எல்லாம் எப்படினா..பேருந்தில் நமக்கு புடிச்ச சன்னல் ஓர இருக்கையை மழை காலத்தில் ஒதுக்கிற மாதிரி தான்.அதுக்கு நாமும் காரணமில்லை அந்த இருக்கையும் காரணமில்லை.. எப்படி இருந்தாலும் சன்னல் ஓர இருக்கையை மீதான ஒரு ஆசை நமக்கு குறைய போவது இல்லை.அது போல தான் நட்பு கூட...

என்றும் நட்புடன்
கிருஷ்ணப்பன்

குஜராத் 4 நாட் அவுட் - 2

குஜராத் 4 நாட் அவுட்-இல் முதலில் யாரை பற்றி,எதை பற்றி எழுதலாம் என்று எண்ணி கொண்டிருந்த பொழுது எனக்கு சட் என்று ஞாபகம் வந்தது இவர்கள் தான்.இந்த பதிவு ஒரு நன்றி உணர்வுடன் பதிய படுவது என்பதால் கொஞ்சம் போர் அடித்தால் பொறுத்து அருள்க

ஒருவர் நான் முன்பு வேலை இருந்த Goraj-il என் வீட்டில் வேலை செய்த வேலைக்கார அம்மா பார்வதிபென் மோஷி(மோஷி அப்படினா ஹிந்தியில் வயதான அம்மாவை குறிப்பது).



அவர் எங்கள் வீட்டில் சர்வ வேலைகளையும் செய்வார்.நாங்கள் இரவு (கவனிக்க) தான் செல்வோம்.சமைப்போம்.சாப்ட்டு படுத்ருவோம்.காலை கிளம்பி வேலைக்கு சென்று விடுவோம்.அவ்வளவு தான் .நாங்க சமையல் செய்த அறையை பார்த்தா எங்களுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.ஆனால் மீண்டும் இரவு வந்தால் வீட்டில் எல்லாம் சுத்தமா இருக்கும்.அது மட்டும் இல்லை.எங்கள் எல்லார் மீதும் அவர் வச்சு இருந்த பாசம் பற்றி வார்த்தையால சொல்ல இயலாது.எங்களுக்கு முன்பு இருந்த எங்கள் சீனியர் ஒருவர் கூட தான் ராஜினாமா செய்து போகும் போது இந்த மோஷியை தன் குடும்பத்தோடு வந்துவிடுமாறு கேட்டு உள்ளார்.மோஷி தான் மகனை விட்டு வர முடியாது என்று மறுத்து விட்டாராம்.ஒரு முறை எங்கள் நிர்வாகம் அவரை வேறு ஒரு Quarters-க்கு மாற்றி விட்டனர்.பின்பு நாங்கள் அனைவரும் அவரே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு போராடி (ஒரு கீழ் சாதி காரர் ஒருவருகாக நீங்கள் ஏன் பரிந்து வர்றீங்க என்று கேட்ட நிர்வாகத்தை மீறி) திரும்ப பெற்றோம்.ஒரு முறை என் நண்பனின் அம்மா வந்திருந்தார்கள்.அவர்கள் இருந்தது ஒரு மாதம் தான் என்றாலும் திரும்பி போன போது மோஷி அழுதுவிட்டார்.



அதனால் நாங்கள் அங்கிருந்து ராஜினாமா செய்தவதை கடைசில் தான் அவருக்கு சொல்வது என்று இருந்தோம்.ஆனால் அவர் அதை முன்பே கண்டு பிடித்து அழ தொடங்கி வீட்டார் . இறுதியாய் என் நண்பன் அவரை பற்றி சொன்ன இரு வாசகம் இதோ,எனது ஜீன்ஸ் இப்ப தான் நான் வாங்கும் போது இருந்த கலர்ல இருக்கு எங்க அம்மா கூட கை வலிக்குதுன்னு கொஞ்சம் நல்லா துவைக்க மடாங்கனு.அவன் சொன்ன மற்றொன்று,ஒரு முறை யாரோ உனக்கு எப்படி மனைவி வேண்டும் என்று கேட்டதுக்கு இந்த மோஷி மாதிரி மனசும்,வேலையும் செய்ற பொண்ணா வேணும் என்றான்.அந்த மோஷியை சமிபத்தில் பார்த்தேன் .

அவர் கண்கள் கொஞ்சம் ஒளி இழந்து இருக்கிறது.நிறைய உழைத்து உழைத்து கலைத்தது உடம்பில் தெரிந்தது.இருந்தாலும் இன்னும் உழைத்து கொன்ன்டிருகிறார்.(நம்ப முதல்வர் மாதிரி குடும்பதுக்க்காக)


அதே போலவே நான் ராஜ்கோட் சென்ற போது என் நண்பன் கோதண்டராமன் வீட்டு வேலை கார அம்மா(பெயர் தெரியாது)என் நண்பனிடம் சொன்னார் நீங்கள் துவைக்க போடும் துணி மிக குறைவாக உள்ளது.அதனால் நீங்கள் குடுப்பதில் இருந்து மாதம் 50 ரூபாயை குறைத்து கொள்ளுங்கள் என்றார்.நான் பார்த்து சம்பளம் குறைக்க சொல்லி கேட்ட முதல் வேலையாள் இவராய் தான் இருப்பார்.

அது போலவே இப்போ எங்கள் மருத்துவமனையில் உள்ள ஹேமலதாபெண் என்ற பணி பெண் எங்கள் தேவையை அறிந்து தேநீர் குவளைகளை தந்து கொண்டே இருக்கிறார்.

இந்த குஜராத் மாநிலம் தேச பிதாவுக்கு பெயர் பெற்றது என்றாலும் நிறைய கஸ்தூரி பாய் போன்ற தேச மாதா-களாலும் நிறைந்து உள்ளது.(எவரையும் வாஞ்சையோடு கவனித்து கொள்ளும் எவரும் மாதா தானே).

நம்பை சுற்றி சில மாதாக்கள் எப்பவும் இருக்க கூடும்.நான் இப்பொது எல்லாம் அவர்களை கவனித்து அவருக்கு குறைந்த பட்சம் அவவ்போது ஒரு நன்றியை மட்டுமாவது சொல்லி வருகிறேன்.

Popular Posts