Miles to go Before they Sleep..


சமீப காலத்தில் நிகழ்ந்த சில விபத்துகளான கேரளா படகு விபத்து, கோதாவரி படகு விபத்து, வேதாரணியம் பள்ளி வாகன விபத்து , கோபியில் பள்ளி செல்லும் ஆட்டோ விபத்து எல்லா விபத்துகளுக்கும் சொல்லும் ஒரு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றியது.
நானும் இது போன்ற சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை பார்த்த பிறகு இவ்வாறு பயணம் மேற் கொள்ள கூடாது என்று இருந்தேன்.நான் முன்பு வேலை
பார்த்த Goraj என்ற இடம் பரோடாவில் இருந்து 45km தொலைவில் உள்ளது.பஸ் போக்குவரத்து மிக குறைவு.பயணம் பாதை என்பது நீங்கள் யூகிக்க வேண்டுமானால் தமிழ் MA படத்தில் வரும் "பறவையே எங்கு இருக்கிறாய் " யில் வருவது போன்று இருக்கும்.
அங்கு தான் எனது தீர்மானம் முதலில் முடிவு பெற்றதாக நான் நினைத்தேன்.

ஆனால் அது முதல் இல்லை என்று இப்போது கருதுகிறேன்.இது போன்ற விபத்து நடந்த அடுத்த சில நாட்களுக்கு நாளேடுகளில் டிராபிக் போலீஸ் சோதனை,சில பள்ளி வாகன உரிமம் ரத்து,சில ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற செய்தி தொடரும். ஆனால் பாருங்க நம்ம Government பஸ் இருக்கைகள் 55 + 2
என்று எழுதி இருந்தாலும் பெரும்பாலும் 55 X 2 என்று தான் இருக்கும். அங்கு தான் எனது தீர்மானம் முதலில் முடிவு பெற்று உள்ளது.




என்னை பொறுத்த வரையில் மக்கள் தொகை நிறைந்த நம் போன்ற நாடுகளில் இது போன்ற எண்ணிக்கையை கடை பிடிப்பது மிக கடினம். இது போன்ற விபத்துகளை கூட தடுப்பது கடினமே..
ஏன் எனில் பயணங்களை தவிர்க்க இயலாது..
Becaz Everybody Wish..

Miles to go Before they Sleep..But Unfortunately Some times They Sleep before reach their miles..

No comments:

Post a Comment

Popular Posts