காதல் கேட்டேன்


ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தில்
எழுப்பி தூங்கீடீயானு கேட்க மாட்டேன்
அதிகாலை எழுந்து குட் மார்னிங்
SMS அனுப்ப மாட்டேன்
அடுத்த நிமிடம் போன் செய்து SMS
வந்துதாணு பேச மாட்டேன்
அர்த்தமே இல்லமா அடுத்த வார்த்தை
சாப்பிட்டாயானு கேட்க மாட்டேன்
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போனை
பண்ணி "நல்லா இருக்கியானு" விசாரிக்க மாட்டேன்
ஒரே கலர் டிரஸ் போட்டிருக்கோம்
என்று சந்தோஷ பட மாட்டேன்
அவதியும் அவசரமாய் கிளம்பி உன்னை
பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ண வர மாட்டேன்


உன் பிறந்த நாள் பரிசு வித்தியாசமாய்
வாங்க கடை தேடி அலைய மாட்டேன்
சின்ன சின்ன தப்பு செய்ய பொய்யாய்
உன்னிடம் பெர்மிசன் கேட்க மாட்டேன்
செல்லமான பெயர் வைக்க இரவெல்லாம்
ரொம்ப நான் யோசிக்க மாட்டேன்
தலை சீவாமா நீ வந்தா கேசுவல கூட
நீ அழகா இருக்கணு பொய் சொல்ல மாட்டேன்


சும்மா சும்மா நீ கொடுக்கும்
சாக்லேட்டை திங்க மாட்டேன்
நீ தின்ன சாக்லேட் காகிதம்
எல்லாம் எடுத்து சேர்க்க மாட்டேன்
உன் ஊரு பஸ்சை கூட
பாசத்தோட பார்க்க மாட்டேன்
உனக்காக லைப்ரரி போய்
நோட்ஸ் எல்லாம் எடுக்க மாட்டேன்
யார் யாரை வழி அனுப்புவதுன்னு நாலு
மணி நேரம் பஸ் ஸ்டாப்பில் நிற்க மாட்டேன்


கவிதை எழுதி வைரமுத்து ,வாலியை
ஓவர் டேக் செய்ய முயற்சிக்க மாட்டேன்

குட் நைட் SMS -க்கு பதில் குட் நைட் சொல்ல
Hero Honda பைக் எடுத்து உன் வீடு வரை வர மாட்டேன்

மாட்டேன் மாட்டேன் இதுல எதுவும் செய்ய மாட்டேன்
ஆனால் ஒரு காதல் காதல் காதல் கேட்டேன்

1 comment:

  1. காதல் என்பது பாட்டி சுட்ட வட மாரி காகா தூக்கிட்டு போயிடும்
    அனா நட்பு என்பது பாட்டி மாரி போகவே போகாது

    ReplyDelete

Popular Posts