அவஸ்த்தையில் ஒரு கடிதம்


மதிப்பிற்குரிய மன்மோகன் ஐயா,

உங்கள் அமைச்சரவையில் உள்ள ப.சிதம்பரம் அவர்கள் தனது பழைய நிதி துறை போலவே உள் துறையையும் பார்க்கிறார்.சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தால் ஒரு பிரஸ் மீட்
வைப்பார் பின்பு நிலைமை சரி ஆகிவிடும்.அது போல உள்துறையையும் கவனிக்கிறார்.எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது ,
ஒரு மாணவன் " எனது நண்பன்" என்ற தலைப்பில் கட்டுரை படிக்க பரிட்சையில் வந்ததோ "எனது தந்தை " உடனே அவன் தான் படித்த கட்டுரையில்
வரும் நண்பன் என்ற இடத்தில எல்லாம் தந்தை என்று எழுதி விட்டானாம்.
"எனக்கு பல அப்பாக்கள் இருக்கிறார்கள்.எனக்கு மிகவும் பிடித்த அப்பா பக்கத்துக்கு வீட்டுக்காரர் ......".அது போல ப.சிதம்பரம் தினம் தினம் மாறி மாறி நடந்து கொள்கிறார்.
பிரதமரே உங்களுக்காக ஒரு குறள்

நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்


நான் உங்களை வேண்டுவது தெலுங்கனா விசயத்தில் ஒரு இறுதியான உறுதியான முடிவை எடுங்கள்.இல்லாவிடில் சோனியாவிடம் கேட்டாவது எடுங்கள்.

இப்படிக்கு
1 .Osmania unviersity -இல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.
2 .தெலுங்கனா பகுதியில் கடை வைத்துள்ள கடலோர ஆந்திரா பகுதி வியாபாரி.
3 .பொங்கல் விடுமுறைக்கு ஆந்திரா + தெலுங்கனா கடந்து செல்ல
வேண்டி உள்ள ஒரு ரயில் பயணி

No comments:

Post a Comment

Popular Posts