இது தான் வாழ்கையோ

தீபாவளியோ பொங்கலோ ஒரு சராசரி நாளாகவே கழிகிறது வெளி மாநிலத்தில் வசிக்கும்
எங்களுக்கு.குஜராத்தில் இருந்ததால் பட்ட திருவிழா (Kite festival) காரணமாக இந்த பொங்கல் ஒரு விடுமுறை நாளாக கழிந்தது.பொங்கல் அன்று 5 மணி அளவில் நானும் என் ரூம் மேட் பாலாஜியும் மெயின் ரோட்டில் அருகே நடை பயணம் சென்று கொண்டிருக்கையில் சற்று தொலைவில் மேல பறந்து கொண்டிருந்த ஒரு பட்டம் கீழே வர தொடங்கியது.கீழே வந்த பட்டம் ஒரு மின் கம்பியில் மாட்டி கொண்டது.அந்த பட்டதை விட்டு கொண்டிருந்த 7வயது மதிக்கத்தக்க ஒரு பையன் ஒரு பெரிய கம்புடன் வந்து அதை எடுக்க முயன்று சிறிய போரட்டத்திருக்கு பின் அதை மின் கம்பியில் இருந்து விடுவித்தான். மெயின் ரோட்டில் விழுந்த பட்டதின் நூல் அவன் எடுப்பதற்கு முன்பே ஒரு இரு சக்கர வாகணத்தில் மாட்டிக்கொண்டது.தமிழ் பட ஹீரோ போல் அந்த பட்டதை இழுத்துக்கொண்டே போனான் இரு சக்கர வண்டிகாரன். அந்த சிறுவனின் முகத்தை ஒரு சோகம் தோற்றிக் கொண்டது.அதே சோகத்துடன் அவனை நாங்கள் கடந்து சென்று விட்டோம்.என்னுடன் இருந்த பாலாஜி சொன்னார் இதை ஏன் நீங்கள் ப்ளாக்-இல் எழுத கூடாது என்று அந்த பையனை போட்டோ எடுக்க பார்த்த பொழுது அவன் அங்கு இல்லை.நாங்கள் எங்கள் வழக்கமான தூரத்தை தொட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தோம்.
கிட்ட தட்ட அதே இடம், எங்கிருந்தோ வேறு ஒரு பட்டம் கீழே வர தொடங்கியது.அந்த பட்டம் விழுவதற்கு முன்பே அதை எடுக்க தயராக ஒரு கம்புடன் 11 வயது மதிக்கத்தக்க ஒரு பையன் காத்து இருந்தான்.
நாங்களும் சிறிது நேரம் அங்கு நின்றோம் .
அந்த பட்டமும் அவனுக்கு பெரிய சிரமம் கொடுக்காமல் குப்பை கூள செடியில் விழுந்தது.அவனும் அதை எடுத்து மகிழ்ச்சி அடைந்தான்.
நாங்கள் நினைத்தோம் " இது தான் வாழ்கையோ.. என்று. "

அவனை போட்டோ எடுத்த படியே அங்கிருந்து நகர்ந்தோம்.

No comments:

Post a Comment

Popular Posts