ஏன் இந்த blog spot ??

என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையும் "யாரும் இல்லை சாட்சியாக மனம் தான் கேள்வியாக" என்று எனக்கு எழுந்த கேள்விகளையும் காண பதிலை என் (கேள்வி) பதில் என்ற ஒரு புதிய பிரிவில் கீழ் பதிய உள்ளேன்




சிரிப்பு பதில்:
என் நலம் விரும்பிகள் சிலர் நீ ஏன் blog spot -இல் எழுத கூடாது?? என்றனர்.
"நாம்ப வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையானு" நான் கேட்டேன்.
அதுக்கு" இல்ல இல்ல நீ ஒரு blog spot ஆரம்பித்து அதுல எழுதிட்டு உன் போட்டோவை போட்டு வச்சிரு.
பின்னாடி blog -க்கு வரவங்க பார்த்து படிச்சு தெரிஞ்சு நடந்துக்குவாங்க". என்றனர்.
அப்பறம் நான் உக்காந்து யோசித்ததன் விளைவு தான் இந்த பாதையும் பதிவும்..
வரலாறு முக்கியம் ..
சிறப்பு பதில்:
என் பார்வை... வெளிப்பாடு ..உரையாடல்..சின்ன பகிர்வு
உங்களுடன் உள்ள இடைவெளி குறைப்பதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்..
நீங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்தவுடன் "அட ஆமால்ல" என்று உங்கள் மனதில்
தோன்றினால் அதுவே அந்த பதிவின் வெற்றி தான்.

No comments:

Post a Comment

Popular Posts