விருதுகள் 2009

Happy New Year to all of you..Happy Year Ahead


1.சிறந்த அறிமுக நாயகன் : மு.க. அழகிரி
(மக்களவை தேர்தலில் அறிமுகத்தின் போதே எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியது,மக்களவையில் தமிழ் மொழியில் பேசுவதற்காக போராடுவதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
2.சிறந்த டபுள் ஆக்சன் : மத்திய அரசுக்கு (இலங்கை சண்டை, தெலுங்கனா, மும்பை பிற
மாநிலத்தார் தாக்குதல், நுட்ரினோ மையம் ,மலேசிய தமிழர்
பிரச்சனை போன்ற விசயங்களில் இரட்டை வேடம் போட்டதற்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
3.சிறந்த நாயகி : சோனியா காந்தி (தனி ஒரு மனிதராக இருந்து மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு வித்திட்டதாலும், தனது கணவரை கொன்ற விடுதலை புலிகள் இயகத்தை தந்திரமாக பலி வாங்கியதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
4.சிறந்த வில்லன் : மஹிந்த ராஜபட்கச்சே
(விடுதலை புலிகள் இயகத்தை அழிகின்றேன் என்று கூறி பல குழந்தைகளையும் அழித்து கொன்றமைக்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
5. சிறந்த ஸ்டன்ட் : மு.கருணாநிதி
(5 மணி நேர உண்ணா விரதத்தில் இலங்கை சண்டையை நிறுத்தியதாக
அவரே கூறி கொன்றமைக்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
6 .சிறந்த திருப்புமுனை : ப. சிதம்பரம் & ஜெ.ஜெயலலிதா ( முதல யார் முதல் வர்றாங்கறது முக்கியம் இல்ல கடைசில யார் முதல் வர்றாங்கறது தான் முக்கியம் என்று ப.கண்ணப்பனுக்கு தேர்தல் வெற்றியில் உணர்த்தியதற்காக இவ்விருது ப. சிதம்பரம் செல்கிறது, இலங்கை பிரச்சனை குறித்த தனது நிலயை மாற்றியதற்காக இவ்விருது ஜெ.ஜெயலலிதாக்கும் செல்கிறது )
7 .சிறந்த நாயகன் : மு.க.ஸ்டாலின்
(படிப்படியாக வளர்ந்து துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளதாலும் ,
அண்ணன் அழகிரிக்கு ஒரு விருது கொடுக்கபட்டுள்ளதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
8 . சிறந்த வாழ்நாள் சாதனையாளர்: Dr .Y.S.ராஜ சேகர ரெட்டி
(ஊரில் மட்டும் அல்லாது மக்கள் மனதிலும் பாலம்
கட்டியவர்.பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்)

9. சிறந்த இயக்குனர் : மு.கருணாநிதி
(தனது சூரிய குடும்பத்தில் சுற்றி உள்ள உள்ள ஸ்டாலின், அழகிரி ,கனிமொழி,கலாநிதி,தயாநிதி,ராஜாத்திஅம்மாள்,தயாளு அம்மாள், தி.மு.க கட்சி,தமிழக ஆட்சி என்ற 9 கோள்கள் அனைத்தையும் சிறப்பாக இயக்குவதால் இவ்விருது இவருக்கு செல்கிறது)



10. சிறந்த blogspot :பாதையும் பதிவும்
(தனக்கு தானே விருது வழங்கி கொள்ளலாம் என்று அண்ணா விருதை காஞ்சிபுரம் விழாவில் தனக்கே வழங்கி கொண்டும், சிறந்த வசனகர்தா என்று தமிழக அரசின் விருதை தனது உளியின் ஓசை படத்திருக்கு வழங்கி கொண்டும் நமக்கு எடுத்து காட்டை இருந்த கலைஞருக்கு நன்றி)


பின் குறிப்பு : பெரும்பாலான விருது கலைஞர் & கோ - விருக்கு செல்ல காரணம் நல்ல போட்டியாளர்கள் இல்லாதது தான்.
ஜெ.ஜெயலலிதா அவர்களும் பல மாதம் காணமல் போனவர் பட்டியலில் இருந்ததும் காரணமாக கூறப்படுகிறது.

2 comments:

  1. Dear anna
    As quoted Dr.Rajasheaker reddy is a lifetime achiver.. But this is a comedy award .... Dr.YSR is a Genuine poltician with human touch...
    Kindly we have to honour him and thats is our respectful duty
    We should be proud of him
    I'm really proud of him hope all the same

    ReplyDelete

Popular Posts