விமானம் TAKE OFF

நடுத்தர வர்க்க மனிதாகளின் கனவுகளில் முக்கியமாக ஒன்றாக விமான பயணம் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. உலகமயமாதலும் தனியார்மயமாதலும் இந்த கனவை "வான் (வழி பயணம்) கூட கை தோடு தூரம் தான்" என மாற்றி உள்ளது.
நான் பிறந்தது & "என் ஊரு மதுரை பக்கம்" என்றாலும் வளர்ந்தது எல்லாம் அனைத்து கோபியில் தான்.கோபியில் புகை வண்டியை பார்பதற்கே நான் பேருந்தில் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் அதுவும் விமானம் பார்க்க வேண்டும் என்றால் பல மணி நேரம் புகை வண்டியில் பயணிக்க வேண்டும் என்ற சூழ்நிலை.என் சிறு வயதில் சென்னையில் என் உறவினர் விட்டில் இருக்கையில் விமானங்கள் பறக்கும் போது மொட்ட மாடிக்கு ஓடி போயி "டா டா" காட்டும் வண்டு பைனாக தான் நானும் இருந்தேன்.

விமானத்தில் பயணம் சென்று வருகிறேன் என்று "டா டா" காட்டியது முதன் முதலில் செப்டம்பர் 2007 -இல் தான்.நான் பரோடாவில் இருந்தாலும் நிதி நிலையை கருத்தில் கொண்டு மும்பை வரை புகைவண்டியிலும் அப்பறம் மும்பை டூ சென்னை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் செல்ல ஆயுத்தமானேன்.முதல் முறை செல்ல போறேன் என்பதால் விமான நிலையத்தின் நடை முறைகளை என் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.என் நண்பர்களும் என்னை அவ்வளவு தயார் செய்தனர்.காலை ஆறு மணிக்கே விமான நிலையம் அடைந்து விட்டேன்.எல்லா நடைமுறைகளையும் ஏற்கனவே கேட்டு இருந்தாலும் அது எதையும் நான் பின்பற்ற வில்லை. அங்கு சற்று முற்றும் பார்த்து எனக்கு முன் இருந்தவர்களை அப்படியே காப்பி அடித்தேன்.போர்டிங் பாஸ் வாங்கும் இடத்தில அந்த ஆண் உங்களுக்கு எந்த இருக்கை வேணும் என்று கேட்க "அட எதாவது கொடுப்பா" என்று சொல்லி போர்டிங் பாஸ் வாங்கி செக்குரிட்டி செக் எல்லாம் முடிக்க மணி 6 .45 ஆகி விட்டது .விமானம் 9 மணிக்கு தான்.எல்லாரையும் போலவே அங்கு வைத்து இருந்த ஒரு தினசரி நாளிதழையும் நானும் எடுத்து கொண்டேன்.எனக்கு முதல் பயணம் என்று யாரும் அறிந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.நேரம் செல்ல செல்ல பசி எடுக்க தொடங்கியது.பசி அதிகமாக இருக்கவே ஒரு காபி + ஒரு பப்ஸ் சாப்பிட முடிவெடுத்து அந்த கடையில் காபி முதலில் வாங்கி எவ்வளவு என்று கேட்காமல் 100 ரூபாயை எடுத்து நீட்ட அவன் 50 ரூபாயை திருப்பி தந்து THANK YOU என்று சொன்னவுடனே ஏதோ பசி அடங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டதால் பப்ஸ் -கு பாய் சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன்.விமானத்தில் ஏற அழைத்ததும் நான் சென்று ஏறியவுடன் தான் தெரிந்து எனக்கு சன்னல் ஓர இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று.முதலில் தண்ணீர் பாட்டில் குடுத்தார்கள்.நான் வாங்கவே இல்லை.காசு கேட்பார்களோ என்ற பயம் தான். விமானம் பறக்க தயார் ஆனது. அங்கு இருந்த பணி பெண்கள் பயணத்தின் போது தெரிந்து கொள்ள வேண்டிய சமிக்கைகளை செய்து காட்ட ஆரம்பித்தனர். எனக்கு எதோ எல்லாம் ஏற்கனவே தெரிந்து போல் (எனக்கு முதல் பயணம் என்று யாரும் அறிந்து விட கூடாது என்பதால் ) கவனமில்லாமல் கவனிப்பது போல் மிக கவனமாக கவனித்தேன்.

விமானம் பறக்க தொடங்கியதும் பெரிய சந்தோசமும் அதே அளவு ஒரு பயமும் தொற்றி கொண்டது.இருந்தாலும் சுனா பானவா maintain செய்தேன்.விமானம் take off ஆகிறது...
அடுத்த பதிவில் விமானம் landing ஆகும்...

2 comments:

  1. Interesting, it looks like reading my story (every one's story)

    ReplyDelete
  2. Anna still lot of info missing
    u did't mention of all the air hostess,thats the most important ..
    Ambience of airport....
    wandering in airport...
    Innum konjam workout pannunga..
    thats was great...

    ReplyDelete

Popular Posts