குஜராத் 4 நாட் அவுட்

மே 1
என்றவுடன் நினைவுக்கு வருவது உழைப்பாளர் தினம்.
அது மட்டும் அல்ல . 1960,மே 1 -இல் குஜராத் மகாராஷ்டிரா என இரண்டாக பிரிந்தது. இது நடந்தது 50 வருடம் ஆகி விட்டது. அதனால் குஜாரத்தில் "குஜராத் 50" என்று இந்த ஆண்டு கொண்டாடினர். சரி நம்ப கதைக்கு வருவோம்.

நான் குஜராத் வேலைக்கு வந்ததும் இந்த நாளில் (மே 1 ) தான். நான் இங்கு வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குஜராத்தி பேச தெரியாது.(யாருடா அது ஹிந்தி மட்டும் பேச தெரியுமானு கேக்கறது..என்னோட மனசாட்சி தான பொழச்சு போ).இந்த படத்தை பார்த்த ஏதோ என் 5 வது ஆண்டு தொடக்கத்தை சொல்லற மாதிரி இருக்கு இல்ல..

ரொம்ப நல்ல ஊருங்க.. நல்ல மக்கள்..வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு மாதிரி தான் இந்த குஜராத் கூட.காந்தி பிறந்த மண்ணு , அவர் படித்த ஸ்கூல் , மது விலக்கு, IIM ahmedabad ,சோமநாத் கோவில், கிருஷ்ணர் கால் பதித்த தவ்ரக்ஹா, சுரத் சேலை & வைரம் , குஜராத் NRI ,குஜராத் மக்கள் மனசு,அவர்களின் ஷேர் மார்க்கெட் investments , அடுத்த ஸ்டேட் மக்களை ட்ரீட் பண்ணு விதம்
இப்படி எவ்வளவோ விஷயம் குஜராத் பத்தி எழுதனும்னு தோணுது
ஆனா நெறய டைப் பண்ண பண்ண கை வலிக்குது
எனக்கு வர இந்த கை வலி தானா ஆறிடும்.
ஆனா அத படித்து உங்களக்கு வரப்போற வலியை நினைக்கும்
போது டைப் பண்ண வர கை தானா நின்னுடுது.

அதானல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களுக்காக
குஜராத் 4 நாட் அவுட் தொடரும்

No comments:

Post a Comment

Popular Posts