அன்பு தாய்மார்களே,

அன்பு தாய்மார்களே,

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தை வழக்கம் போல் அபாகஸ், கம்ப்யூட்டர் , பாட்டு,ஸ்விமிங், செஸ் என்று ரொம்ப பிஸியாக இருக்கும். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.இல்ல இல்ல நீங்க நினைக்கிற மாதிரி, உங்கள் குழந்தைகளை இந்த மாதிரி கிளாஸ்-கு அனுப்பாதிங்கனு சொல்லமாட்டேன்.ஏன்னா உங்கள் குழந்தை எவளவு stress தாங்குவாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும். நம்ப விஷயத்துக்கு வருவோம் ..
என்ன விசயமுனா.. தப்பா நினச்சுகாதிங்க.. அப்படியே உங்கள் குழந்தைகளை தமிழ் கிளாஸ்-கும் அனுப்பி வைங்க..
இப்ப நிறைய குழந்தைகள் எனக்கு வராத சப்ஜெக்ட் கணக்குனு சொல்லறதில..தமிழ்னு தான் சொல்றாங்க.இப்பவே நிறைய பேர் (இளைஞர்கள்) எனக்கு தமிழ் எழுத வராதுனு சொல்ல ஆரம்பித்து விட்டனர்.



கிராமத்து மக்கள் ஆங்கிலம் படிக்க ஆசை படுவது போல நகர குழந்தைகளை தமிழ் படிக்கும் ஆசையை உண்டு பண்ணுங்க.எங்க தமிழ்-க்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு.. அது எப்படி முடியும்னு யோசிக்காதிங்க.
தினசரி தாட்களை கொஞ்சம் படிக்க சொல்லலாம்.
அதுல இருக்கறது தமிழான்னு நீங்க கேக்குறது எனக்கு தெரியுது.
இல்லாட்டி இப்படி கூட பண்ணலாம். ஒரு சின்ன அனுபவம் உங்களுக்காக..



எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.என் சின்ன வயதில் எல்லா விடுமுறை நாட்களிலும் (சனி +ஞாயிறு உட்பட ) எங்கள் மாமா எங்களை க ,ங,ச ஞ.....என்ற வரிசையிலும் க,கா,கி,கீ...என்ற வரிசையிலும் எழுத சொல்ல்வார்கள். அதன் பிறகு 25 வார்த்தைகள் டிக்டேஷ்சண் வைப்பார். அதில் 18 -க்கு மேல் வாங்கினால் அன்று விளையாட போகலாம்.இல்லாவிடில் மீண்டும் ஒரு டிக்டேஷ்சண் தொடரும்.அதிலும் 18 -க்கு குறைவு என்றால் அடுத்த ஒரு முறை க ,ங,ச ஞ.....என்ற வரிசையிலும் க,கா,கி,கீ...என்ற வரிசையிலும் எழுதி விட்டு நாங்கள் விளையாட செல்லலாம்.இதே முறை தான் எங்கள் எல்லா உறவினர் வீட்டிலும்.இதை பின்பற்றிய எல்லாருடைய தமிழோடு கையெழுத்தும் நன்றாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. இதயே பின்பற்றுங்கனு சொல்லல..இதுவும் ஒரு வழி அவ்வளவுதான்.

தமிழை ஒரு பொழுது போக்கு கல்வியா படிக்க சொல்லுங்க.. நான் சொல்லறது ரொம்ப சிம்பிள்..அதாவது வருஷம் புல்லா படிக்க வேணாம்... சம்மர்ல மட்டுமாவது...

1 comment:

  1. தங்களின் முயற்சி நன்மையை தரும் என்பது தின்ன்னம்

    ReplyDelete

Popular Posts