தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும்


செம்மொழி மாநாட்டு மைய நோக்கு பாடலையையும் அது படமாக பட்ட விதத்தையும் தொலை காட்சியில் பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்குது..
இயக்கம் கவுதம் மேனன் எடுத்தது என்பது பார்த்தவுடன் தெரிந்தது.
அந்த பாடலில் திரையில் அ ,ம,ஊ,ஈ,இ,ன,ண,ஒ,கு,வ,ஏ,ஆ,மு,ச,ற,ர,ஞ,ல,ய பல எழுத்துகள் வரும்..ஆனால் அதில் தமிழின் சிறப்பு என்று சொல்லகூடிய ழகரம் " ழ " இல்லை.என்ன செய்யறது கவுதம் மேனனுக்கு தெரிந்த தமிழ் அவ்வளவுதான். பாரதி ராஜா ,பாலு மகேந்திரா போன்றோரை எடுக்க சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு படுகிறது.இசை ஞானியும் SP.பாலசுப்ரமணியமும் இல்லாதது ஒரு குறையாக படுகிறது.இசை ஞாநியை இசை அமைக்க சொல்லி இருக்கலாம். ரஹ்மானும் ஒரு பாடகராக இருந்து இருக்கலாம்.இசைஞானியும் ஜூன் 2 தனது பிறந்த நாள் அன்னதான விழாவில் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று தனது வருத்தத்தை மெதுவாய் சொல்லி இருக்கிறார்.என்ன செய்ய.. கடந்த தமிழ் மாநாட்டில் "கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலியும்" என்ற நாட்டமை பாடல் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்து போனதால் இசை அமைப்பாளர் சிற்பி மாநாட்டு இசையை நிகழ்த்தினார்.
சரி விடுங்க..கலைஞர் உடன் பணியாற்றி உள்ளேன் என்று A.R. ரகுமான் மற்றும் கவுதம் மேனன் பெருமை படுவதற்கும் குறிப்பாக கவுதம் மேனன் என்னை வைத்து படமும் A.R. ரகுமான் என்ன பாடலுக்கு இசையும் அமைத்து உள்ளார் என்று கலைஞர் பெருமை பட உதவும். ஆனால் ஒரு விஷயம் கலைஞரின் பாடல் மிக அருமை.அதுவும் தொடக்க வரிகள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்


கலைஞர் சார்,
What a Man ...உங்களுக்கு இன்னும் வயசு ஆகவில்லை...

No comments:

Post a Comment

Popular Posts