மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள் - 2

தொடர் பதிவு

"பாதையும் பதிவும்: மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்..."


மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான் தவறவிட்ட ரயிலும் அதனை தொடர்ந்து அன்று இரவு ரயில் நிலையத்தில் தங்க நேர்ந்ததும் இயற்கை(மழை)-க்கு எனது கடிகார முட்களை நகர்த்தும் சக்தி இருப்பதை உணர்ந்த நேரம்..





ராஜமுந்த்ரியில் மழையால் கோதாவரி ஆற்றின் வெள்ளம் நான் இருந்த இடத்திருக்கு பக்கம் வந்து விட்டது.எங்கள் மருத்தவமனையில் வேலை பார்க்கும் ஒருவரின் கடை நிலை ஊழியரின் சிறிய வீட்டிற்குள் கால் வாசி தண்ணீர வந்து விட்டது.வெள்ளம் வநத வீட்டை பார்த்த முதல் அனுபவம் அது .




கபிலனின் எப்போதோ ரசித்து படித்த
"ஏற்கனவே கடனில் மூழ்கிய வீடு
இப்போது வெள்ளத்திலும் மூழ்கியது "
என்ற கவிதை அன்று ஞாபகம் வந்தது.
ஆனால் ரசிக்க முடிய வில்லை.



அதன் பின்பு ஒரு நாள் இரவு குஜராத் கோரஜ்-ல் நான் நன்கு கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தேன்.யாரோ சிலர் "டப டப" என கதவை தட்டி கொண்டு இருந்தார்கள்.எதோ ஒரு அசாதரண சத்தமாய் கேட்டது.கதவை திறக்க எழுந்து நான் எனது காலை கீழ் வைத்து போது நீரில் கால் வைப்பது போன்று இருந்தது.ஏதேனும் நீர் குழாயை அடைக்கவில்லை என்று நினைத்த படியே லைட்டை போட்ட போது தான் தெரிந்தது.எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்து தொலைபேசியும் எங்களது காலணிகளும் சில காதிங்களை போல் நீந்த தெரியாமல் மூழ்கி போய் இருந்தன. அந்த Quarters -இல் இருக்கும் ஒவ்வொரு வீடாய் போய் பார்ப்பதிலேயே அன்றைய இரவு முடிந்து போனது. இல்லை விடிந்து போனது.




சிலரது கார் முழுவதும் நீரில் மூழ்கி போய் இருந்தன.அடுத்த நாள் காலை நாங்கள் வேலைக்கு செல்லும் போது எங்கள் மருத்தவமனையின் முன் வாசல் அருகே ஒரு மருத்துவரது கட்டில் முதல் தட்டு முட்டு சாமான் வரை வைக்க பட்டு இருந்தது.அவர் அருகே நின்று கொண்டிருந்தார். விசாரித்த போது சொன்னார்கள் மருத்துவர்களுக்கு என்று River viewing Quraters சிறப்பு வீடு கொடுக்க பட்டதால் முதலில் வெள்ளம் இவருக்கு தான் முதல் மரியாதையை செய்து உள்ளது.
வெள்ளம் எப்போ வடியும் என்று பார்த்து கொண்டிருந்த அந்த மருத்துவர் ஏனோ எனக்கு ராஜமுந்த்ரியில் கோதாவரி ஆற்றின் வெள்ளம் வந்து பாதிக்க பட்ட என் உடன் பணி செய்த கடை நிலை ஊழியர் போலவே தெரிந்தார்.எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை வெள்ளத்தை போலவே !!

நான் இருக்கும் இடத்தின் அருகே சில மாதங்கள் முன்பு வரை பாலைவனத்தை விட மோசமாக இருந்த இடம் எல்லாம் இப்போது விளைந்த வயல் வெளி போல் காட்சி தருகிறது. இது தான் சினிமா படத்தில் வந்த இரு வெவ்வேறு பாடல் வரிகளை நேரடியாய் பார்த்த தருணம் "மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி " மற்றும் "
"ஒரு விதைக்குள்ள அடை பட்ட ஆலமரம் (செடி) கண் விழிக்கும் பொறு மனமே"

சுருக்கமா சொன்ன மனிதன் தரும் ஞானம் மழையும் தந்தது எனக்கு... பல பருவ காலங்கள் மாறி மாறி வந்தாலும் இந்த மழை காலம் மட்டும் சில மறக்க முடியாத ஞாபகங்களை நம்முள் விட்டு சென்று விடுகிறது.

அவ்வளவு தாங்க.. என்னங்க மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கா...
மழை நின்ற பின்னாலும் மழை கிளையில் தூரல் விழும்னு சொலுவாங்க.. அது போல எனது ஞாபக மழை முடிந்து விட்டது..இப்ப உங்களுக்கு ஞாபக தூறல் தொடங்கி இருக்கும்..

No comments:

Post a Comment

Popular Posts