தெலுங்கானா!!! தெலுங்கானா???

அட டே தெலுங்கானா உருவாகி விட்டது என்று ஆச்சிர்யதோடு பார்த்தவர்கள் கூட இப்போது அட டா அது உருவாகுமா என்று கேள்வி குறியோடு இருக்கிறார்கள்.என்னை பொறுத்த வரை அது உறுதி ஆகிவிட்டதாக தான் தெரிகிறது.இப்போதே எல்லா கட்சியும் இரண்டாகி விட்டது.மக்களும் இரண்டாகி விட்டார்கள்.இன்னும் மாநிலம் அதிகார பூர்வமாகா பிரிப்பது மட்டும் தான் பாக்கி.
ஒரு தரப்பு கூடாது என்று கோசம் போட்டாலும் இவர்கள் பாதி பேரு YSR இறந்த பிறகு கூட அமைச்சர் வேண்டாம் என்று கூறியவர்கள் இப்போது அமைச்சர் ஆகி விட்டார்கள். ஒரு விவாகரத்து வழக்கில் கணவன் மனைவி இருவரில் ஒருவர் விருப்பம் இல்லை என்றாலும் பிரிவு என்பது உறுதி.சற்று கால தாமதம் ஆகும் அவ்வளவு தான்.ஒரு தரப்பு வேண்டாம் என்று கூற காரணம் ஒரு நகரம் அது ஹைதராபாத்.இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி.முதல் முறையாக பிரிக்கும் புது மாநிலத்துடன் போகிறது தலை நகர். இது எதிர்க்கும் தரப்பு MLA ,MP -க்கு பெரிய பொருளாதார இழப்பு.
பிரியும் தெலுங்கானா இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி மீது அணை கட்டினால் அது கடலோர ஆந்திரா-வை பெரிதும் பாதிக்கும்.

பிரிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை.
1 .எது புதிய தலைநகர் - Viskapatnam ,Vijayawada ,Tirupathi
Viskapatnam என்றால் அது ஒரு ஓரத்தில் இருப்பதால் மீண்டும் ராயலசிம்மா புறகணிக்க படுகிறோம் என்று பிரிவு கோர வாய்ப்பு உள்ளது.
Tirupathi என்றால் அது ராயலசிம்மா பகுதயில் இருப்பதால் கடலோர ஆந்திரா மீண்டும் ஒரு தலை நகர் இழக்க வேண்டி வருமோ என்று பயந்து அதை ஏற்காது.என்னை பொறுத்தவரை விஜயவாடா என்பது நன்று.அங்கிருந்து நான்கு பெரிய நகரங்களை (Chennai,Viskaptanam,Banglore,Hyderabad) எளிதில் அடைய முடியும்.
2.நதி நீர் பங்கீடு
இந்தியா பாகிஸ்தான் சிந்து நதியை பங்கு போட்டு கொள்கிறோம்.அதில் பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால் எல்லா மாநிலத்தோடும் நதியை பங்கு போட்டு கொள்ளுவதில் பிரச்சனை அதிகமாக உள்ளது என்பது நாம் அறிந்ததே.
என்னை பொறுத்தவரை எவ்வாறு நதி நீர் பங்கீடு,அனை கட்டுவது பற்றி பிரிவுக்கு முன்பே முடிவு செய்ய வேண்டும்.
3 .இன்னும் எத்தனை மாநிலங்கள்?
மாநிலங்கள் பிரிப்பது தொடர்பாக ஒரு உறுதியான சட்ட வரைமுறை தேவை.உண்ணாவிரதம் இருந்தால் மாநிலம் என்றால் 2020 -இல் மாநிலம் இருக்காது .குறுநிலம் தான் இருக்கும்.

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது?
இறைவா
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

1 comment:

  1. Dear Krishnappan,

    Happy to see your Blogspot and to have regular updates. All of your views and stories are awesome. I really appreciate you for taking such type of Initiative and doing it successfully. Its my pleasure to look into your blogspot whenever i find time. Your way of kidding the politics and politicians are nice and humurous.

    I wish you that your blogspot will have more and more viewers world wide and for a exponenetial growth. Goood luck to you.

    Friendly Yours,
    M. Senthilkumar
    Anna University, Chennai

    ReplyDelete

Popular Posts