மார்கழி மாதம் அதிகாலை நேரம்

நான் பார்க்க வந்தது
உன் வாசல் கோலத்தை அல்ல -
உன் கோலத்தை தான்!!



நீ பிடித்து வைப்பதால் சாணம் கூட
சாமி ஆகிவிடுகிறது - ஏனோ என்னை
மட்டும் பிடிக்காமலேயே வைத்திருக்கிறாய்??

தினமும் நான் கோவில் செல்வது
சுண்டலுக்காக என்று ஊரே சொல்லுது
எனக்கு மட்டும் தான் தெரியும்
தென்றல் உனக்காக தான் என்று...

கோயில் வாசலில் ஒற்றை காலில் தவம்
இருக்கிறார்கள் வரம் வேண்டி - நானும்
நிற்கிறேன் உன் வரவை வேண்டி...

வாடை காற்றில் என்னை வாடா விடாமல்
உன் அக்னி பார்வையை கொஞ்சம் வீசிப்போ
நான் குளிர் காய்ந்து கொள்ள...

3 comments:

Popular Posts