நெஞ்சத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்...

நட்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் எல்லார் மனதிலும் சில முகங்கள் தோன்றி மறையும்.
நட்புக்கு இலக்கணமாய் அதியமான் அவ்வை நட்பு,கிருஷ்ணர் குசேலர் நட்பு என்று சில பழங்கதைகளும் நமக்கு சொல்லபடிருக்கு.பழங்கதைகளை திருப்பி சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பலை..என் கதைய சொல்லறேன் கேளுங்க..(யாரு பா அது அதுக்கு பழங்கதையே பரவா இல்லைங்கறது).
என் கூட வேலை பார்த்த எல்லாரையும்,என் கூட படிச்ச எல்லாரையும் நண்பன் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.Colleague,Classmate அப்படினு இது வரை பிரித்து கூப்பிட்ட தில்லை.நண்பன் என்ற அடைமொழியோடு பல பேரு கூட நட்பில்லாமல் இருக்கேன்.சில பேரு கிட்ட மட்டும் தான் நட்பு கொண்ட நண்பனாய் இருந்து இருக்கேன்.இருந்தாலும் பாருங்க அவங்க கிட்ட கூட இந்த மாதிரி சில சம்பங்கள் நடந்து இருக்கு.
என் டீம்ல விளையாடும் என் நண்பன் அவுட் ஆகும் போது ஒரு சந்தோசம் அடுத்து நான் பேட்டிங் பண்ண போறேன்னு.
என் உடனே எப்பவும் படித்த இன்னொரு நண்பன் பரிட்சைல அஞ்சு மார்க்கு அதிகம் வாங்குன போது ஒரு பொறாமை.


நாங்க ரெண்டு பேரும் சைட் அடிச்ச பொண்ணு அவன் கிட்ட மட்டும் வந்து பேசும் போது ஒரு வயிற்று எரிச்சல்
அப்பறம் ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு விசயங்களை மறைத்து வைக்க முற்படுவது
அப்படீன்னு பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

நான் கூட இவங்க கிட்டவும் நட்பு இல்லையோனு தான் முதலில் நினைத்தேன்.பிறகு தான் எனக்கு புரிந்தது இது எல்லாம் எப்படினா..பேருந்தில் நமக்கு புடிச்ச சன்னல் ஓர இருக்கையை மழை காலத்தில் ஒதுக்கிற மாதிரி தான்.அதுக்கு நாமும் காரணமில்லை அந்த இருக்கையும் காரணமில்லை.. எப்படி இருந்தாலும் சன்னல் ஓர இருக்கையை மீதான ஒரு ஆசை நமக்கு குறைய போவது இல்லை.அது போல தான் நட்பு கூட...

என்றும் நட்புடன்
கிருஷ்ணப்பன்

1 comment:

  1. தேவன் கிருஷ்ணமுர்த்திAugust 12, 2010 at 6:32 AM

    "பேருந்தில் நமக்கு புடிச்ச சன்னல் ஓர இருக்கையை மழை காலத்தில் ஒதுக்கிற மாதிரி"... நெத்தியடி !!!

    ReplyDelete

Popular Posts