சில்லறை பசங்க

நான் ஊரு சென்று இருந்த போது நடந்த ஒரு சம்பவம்.
நான் என் அம்மா மற்றும் என் நண்பர் மூவரும் கோவையில் ஒரு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம்.அது ஒரு மிதவை பேருந்து.(அதாங்க காசு மட்டும் அதிகமாக வாங்குவாங்க இல்ல அந்த வண்டி தான்).எங்கள் முன்பு இருந்தவர்கள் எல்லாம் சரியாக பத்து பத்து ரூபாயை நீட்டினார்கள்.நடத்துனரும் எல்லாரிடமும் இருந்தும் பத்து ரூபாயை வாங்கி போட்டு கொண்டு ஒரு பயண சீட்டை கிழித்து கொடுத்த படியே எங்கள் அருகில் வந்தார்.சராசரி வண்டியில் நாங்கள் போக வேண்டிய இடத்திருக்கு ஒரு மூன்று ரூபாய் இருக்கும்.அந்த மிதவை பேருந்தில் எவ்வளவு காசு என்பது தெரியாததால் என் நண்பர் இரண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.அந்த நடத்துனரும் வழக்கம் போல் இரண்டு பத்து ரூபாய் நோட்டை வாங்கி போட்டு கொண்டு மூன்று பயண சீட்டை கிழித்து கொடுத்தார்.நாங்கள் பார்த்த பொழுது தான் தெரிந்தது.ஒரு பயண சீட்டின் விலை ஒன்பது ரூபாய் என்று. நாங்கள் கொடுக்க வேண்டியது 27 ரூபாய் கொடுத்ததோ 20 ரூபாய் என்று உடனே நாங்களும் அந்த நடத்துனரை அழைத்து மீண்டும் ஒரு பத்து ரூபாயை கொடுத்தோம்.அவரும் அதை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவருக்கு மீதி மூன்று ரூபாய் குடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாய் தெரியவே இல்லை.எனக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது.உடனே நானும் மீதி தாருங்கள் என்று கேட்டு விட்டேன்.அவரும் என் அருகே வந்து ஒரு இரண்டு ரூபாயை குடுத்து விட்டு வேகமாக நகர்ந்தார்.நாங்கள் நினைத்து இருந்தால் அந்த 10 ரூபாயை கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.நாங்கள் நேர்மையாக இருந்தும் அவர் சில்லறையை முழுமையாக கொடுக்க மறுப்பது எனது கோபத்தை அதிக படுத்தியது.நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பு என் அம்மாவிடம் உள்ள பர்சில் இருந்து சில்லறைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து அந்த நடத்துனரிடம் சண்டை போட தயார் ஆகி கொண்டிருந்தேன்.என் அம்மாவிற்கு இது தெரிந்து விட்டது பிறகு என் அம்மாவும் என் நண்பனும் கோவில் செல்லும் போது சண்டை போடாதே மனசு நிம்மதியாய் இருக்காது என்றனர்.நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட்டது.மனசு நிம்மதியாய் இருக்கட்டும்(அவர்கள் மனசு) என்று நான் சண்டை போடாமல் இறங்கி விட்டேன்.பஸ்ஸை விட்டு இறங்கியதும் வெயில் பட்டு என் உடலும் கொஞ்சம் சூடானது.


சில்லறைக்காக சில்லறை தனமாய் சி(ல்)ல(றை) பசங்களோட சண்டை போட மனம் இல்லாததால் அதன் பிறகு தமிழகத்தில் சென்ற பஸ் பயணத்தில் எல்லாம் நான் கொஞ்சம் சில்லறையை சுமந்த படி திரிந்தேன்.உங்களில் சிலருக்கு சண்டை போட்ட நான் கூட ஒரு சில்லறை பையன் போல் தெரியலாம். அது உங்கள் தவறு இல்லை.கண்டிப்பான முறையில் என் தவறும் இல்லை...

(அப்பாட எப்படியோ பதிவின் மூலம் கோபத்தை கொஞ்சம் வெளி படுத்தியாச்சு..)
(குறிப்பு:புகை படத்தில் இருக்கும் நடத்துனர் இணையத்தில் எடுத்தது.இவருக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பதம் இல்லை )

2 comments:

  1. conductoroda face mask panni irukkalam
    he may sue u

    ReplyDelete
  2. Ippavellam ithan fasan bozz.athum 50ps change vangaruthu kulla namala poochi illa etho janthu va pakkaratha pola pappanga.etho avinga suma pitcha podara mathri.b8 ippadi daily avinga atleat 100 peru kita emathina avinga easy a 50 Rs adikalam.NAN ENNA SOLA VARANA ORUTHAN THALAIYIL PITCHA EDUKANUMNU VITHI ELLUTHI IRUNTHA ATHU KOILA THAN EDUKANUM NU ILLA ITHU POLA BUSSSSSSSSSSSSSSSSS LA KUDA EDUKALAM..

    ReplyDelete

Popular Posts