காட்சி 24:
92-94 காலகட்டம் அப்பா இறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சராசரி வாழ்க்கைக்கு திரும்பியிருந்தோம் அம்மா அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்காக சைக்கிள் கற்றுக் கொள்ள வேண்டும் அப்போதுதான் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்கும் தனது சராசரி வேலைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணினார் அதற்காக இரவு நேர வாடகை சைக்கிள் எடுத்து வந்து கற்றுக் கொள்வது என முடிவு எடுத்திருந்தார் அவருக்கு துணையாக சைக்கிள் ஓட்டவே தெரியாத விஜயா அக்கா கமலா அக்காவும் சேர்ந்து கொண்டனர். இந்த முயற்சி ஏனோ முழுவதுமாக நிறைவடையவில்லை.
நான் ஏற்கனவே கூறியது போல் தொழில் சற்று நன்றாக நடந்து கொண்டிருந்ததால் உதவிக்காக எங்களது சொந்த ஊரிலிருந்து ஒரு அண்ணாவை எங்களை பள்ளியில் விடுவதற்கும் கடையை பார்த்துக் கொள்வதற்கும் வரவழைத்து இருந்தார். அப்போது சின்னத்தம்பி படம் பிரபலமாக இருந்ததால் அவருக்கு அந்த ஊரில் எல்லாரும் சின்ன தம்பி என்று பெயர் வைத்து விட்டார்கள். ஏதோ சில காரணங்களால் அவரும் ஆறு மாதங்களிலேயே வேலையை விட்டு சென்று விட்டார் சென்று விட்டார்.
இது 94 ஆம் ஆண்டு நான் குரங்கு பெடல் போட்டு சைக்கிளை ஓட்டியபடி பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது தவறுதலாக கீழே விழுந்து இடது கையை முறித்துக் கொண்டிருந்தேன். பின்பு எக்ஸ்ரே மாவு கட்டு இன்று ஆறு மாத காலம் அப்படி இப்படியாக ஓடிவிட்டது அம்மாவும் எங்களை நல்லபடியாக வளர்த்துக் கொண்டிருந்தார்.
காட்சி 25:
95-96 ஆம் ஆண்டின் காலகட்டம் என நினைக்கிறேன். எங்கள் வீட்டிற்கு ஒரு உறவினர் அக்கா வந்திருந்தார். இரவு அவரும் அவரது வயது வைத்த தோழிகளும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த தொடர் வீட்டின் உரிமையாளர் ஏதோ சில வார்த்தைகள் அக்காவையும் தோழிகளையும் திட்டி விட்டார். அதிகம் கோவப்படாத அம்மா அப்பொழுது நன்கு கோபம் அடைந்து விட்டார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வீட்டை காலி செய்வதென முடிவெடுத்து அடுத்த நாளே வீட்டுக்கு கால் செய்து விட்டார். நாங்க வைத்திருந்த கடைக்கு அருகில் அதே வீதியில் இந்த வீடு கிடைக்கவில்லை என்று போதும் மூன்று நான்கு தெருக்கள் தள்ளி உள்ள வீட்டிற்கு நாங்கள் சென்று விட்டோம். இந்த இடம் பெயர்தலால் அம்மாவுக்கு தான் வேலை பளு அதிகமாகும் என்று தெரியும். இருந்தாலும் அம்மா அந்த முடிவை எடுத்திருந்தார்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதை அம்மா எங்களுக்கு அவரின் இந்த செயல் மூலம் கற்றுக் கொடுத்திருந்தார்
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
16-08-2023
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 4 : முதலில் உதவிய எழுவர் (ஏழு பேர் )
காட்சி 19:
நாங்கள் திருப்பூர் சென்று திரு ராஜேந்திரன் மற்றும் திரு சுப்ரமணியை சந்தித்தோம். அவர்கள் இருவரும் அம்மாவை தொழில் செய்யும் படி ஊக்க படுத்தினார்கள்..குறிப்பாக ராஜேந்திரன் இந்த வேலையின் அடிப்படை பற்றி சொல்லி கொடுத்தார். அம்மாவும் இதே தொழிலை நடத்த முடிவு செய்தார் . இன்றும் செய்து கொண்டு உள்ளார்.
(இந்த முப்பது வருடத்தில் ராஜேந்திரன் அவர்கள் இந்த தொழில் இருந்து வேறு தொழிலுக்கு சென்று விட்டார். அம்மா இன்னமும் திரு.சுப்பிரமணி அவர்களிடம் தான் துணியை விற்று கொண்டு இருக்கிறார் . இதை இங்கே நான் சொல்ல காரணம் இருக்கிறது. நானும் என் தம்பியும் அந்த சுப்பிரமணி அவர்கள் நமக்கு நிறைய லாபத்தை தருவது இல்லை. நாம் வேறு இடத்தில துணியை போடலாம் என எங்கள் அறிவு வந்து விட்டதாக நினைத்த நாளில் இருந்து கூறி வருகிறோம் அப்போது எல்லாம் அம்மா சொன்ன பதில் இது ஒன்று தான். துடுப்பற்ற நிலையில் பாய்மரமாய் காற்றாய் இருந்தவர்கள் அவர்கள். எனவே அவர் தொழில் செய்யும் வரையில் , அல்லது என் காலம் வரையில் இவர்களிடம் தான் தொழில் செய்ய வேண்டும் என்பார்)
காட்சி 20:
அப்பா எல் ஐ சி பாலிசி எடுத்து ஆறு மாதத்தில் இறந்து விட்டதால் பணம் வருவதற்கு நிறைய விளக்கங்களை குடுக்க வேண்டி இருந்தது . நானும் அம்மாவும் எங்கள் வீதியில் இருந்த ஏஜென்ட் திரு தேவராஜும் அவரது மேலாளார் திரு கே.சோமசுந்தரமும் தொடர்ந்து கேட்ட எல்லா ஆவணங்களையும் கொடுத்து கொண்டு இருந்தோம். இறுதியாக அப்பாவை பரிசோதித்த டாக்டர் ஸ்ரீதர் எழுதி கொடுத்த செர்டிபிகேட் உதவியால் அந்த பணம் 30000/- வந்தது.
(அம்மா இப்போதும் என்னை டேர்ம் பிளான் எடுக்க அனுமதிப்பது இல்லை)
காட்சி 21: அப்பா இறந்த ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்தனர். தொடர்ந்து பலரும் எங்கள் வீட்டிற்க்கு வந்த வண்ணம் இருந்தனர். வருபவர்கள் எல்லாம் பிஸ்கட் பாக்கெட்டு கொண்டு வந்ததில் எங்கள் வீட்டில் 5-6 பெரிய பெட்டிகள் பிஸ்கட் சேர்ந்து இருந்தது. தீடீரென தொழில் மிக லாபகரமாக ஓடியது . வேனில் துணி ஏற்றி செல்லும் அம்மா செல்லும் அம்மா லாரியில் செல்ல தொடங்கி இருந்தார். அப்போது சென்னையில் இருந்து பத்தாவது முடித்து இருந்த எங்கள் பெரியம்மா மகன், திரு ராமு அண்ணண் அம்மாவின் உதவிக்கு வந்து இருந்தார். அவர் மிக கடுமையான உழைப்பாளி.
காட்சி 22: எங்கள் ஒன்று விட்ட பெரியப்பா திரு.முத்து கிருஷ்ணன் வந்தார். அப்போ அவர் சொன்னார். எங்கள் அப்பா ஒரு இடத்தை மதுரையில் இருக்கும் போது வாங்கியதாகவும் அதனை அவரிடம் ரூபாய் 7000-க்கு அடகு வைத்து இருப்பதாகவும் கூறினார். உடனே அவர் எனக்கு வட்டி இல்லாமல் அசலை மட்டும் தவணை முறையில் குடுத்து திருப்பி கொள்ளும் படி கூறினார். அம்மாவும் சரி என ஒத்து கொண்டார். சில மாதங்களுக்கு பின் அப்படியே அந்த நிலத்தை திருப்பி விற்று விட்டோம். அப்போ அந்த இடம் மதுரையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது. நாங்கள் விற்று ஒரு வருடத்தில் அந்த இடத்திற்கு அடுத்த வீதியில் மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் அறிவிப்பு வந்தது வேற கதை. இந்த பணத்தையும் எல் ஐ சி பணத்தையும் வைத்து தான் நாங்கள் பின் நாளில் நாங்கள் இப்ப இருக்கும் இடத்தை வாங்கினோம்.
காட்சி 23: மூன்று மாதம் முடிந்து இருந்தது, அது தேர்தல் நேரம் மே மாதம் 1991, புயலுக்கு பின் வசந்தம் வீச ஆரம்பித்து மூன்று மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் அடுத்த புயல் வீச தொடங்கியது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லமால் ஆனது. உடலில் எதோ பூச்சி கடித்து உடல் முழுவதும் தடித்து விட்டது. எந்த மருந்து கொடுத்தும் கேட்க வில்லை. எங்கள் அம்மாவை பார்க்க வந்த எல்லாரும் இந்த இரண்டு பசங்களுக்காகவாது எங்க அம்மா உயிரோடு இருக்க வேண்டும் என்று எங்கள் காசு பட பேசி சென்றனர். அப்போது தான் என் தம்பியும் என்கிட்ட நீ தான் அப்பாவுக்கு தீ வச்ச, அதுனால் தான் அப்பவால் எழுந்து வர முடியல என என்னிடம் சண்டை போட ஆரம்பத்து இருந்தான். அம்மாவுக்கு நாட்டு வைத்தியரிடம் காட்டலாம் என முடிவு செய்து புறப்பட்டு கொண்டு இருந்த போது ஒரு செய்தி வந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு இருந்தார். ஊரடங்கும் சோதனையுமாய் தமிழகம் இருந்தது. எங்கள் பயணம் கை விட பட்டது. அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் தேறி வந்து கொண்டு இருந்தார்.. அப்போதும் திரு ராமு அண்ணண் இருந்ததால் கடை நடத்துவது சிரமம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. ராமு அண்ணன் அம்மாவிற்கு ஊறுதுணையாக இருந்த படி கோபியில் தொடர்ந்து மேற்படிப்பை தொடர்வதாக இருந்தது. ஏனோ அது அவ்வாறு நடக்க வில்லை.
(ராமு அண்ணன் இப்பொ சிங்கப்பூரில் செழிப்பாக இருக்கிறார் என்றாலும் அது நடந்து இருந்தால் நிச்சயமாக கொங்கு மண்டலத்தில் ஒரு மிக பெரிய தொழில் அதிபராய் மாறி இருக்க கூடும்.)
அம்மா முழுமையாக தேறி இருந்தார். அண்ணனும் திரும்பி சென்னைக்கே புறப்பட்டு இருந்தார்.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
10-07-2021
நாங்கள் திருப்பூர் சென்று திரு ராஜேந்திரன் மற்றும் திரு சுப்ரமணியை சந்தித்தோம். அவர்கள் இருவரும் அம்மாவை தொழில் செய்யும் படி ஊக்க படுத்தினார்கள்..குறிப்பாக ராஜேந்திரன் இந்த வேலையின் அடிப்படை பற்றி சொல்லி கொடுத்தார். அம்மாவும் இதே தொழிலை நடத்த முடிவு செய்தார் . இன்றும் செய்து கொண்டு உள்ளார்.
(இந்த முப்பது வருடத்தில் ராஜேந்திரன் அவர்கள் இந்த தொழில் இருந்து வேறு தொழிலுக்கு சென்று விட்டார். அம்மா இன்னமும் திரு.சுப்பிரமணி அவர்களிடம் தான் துணியை விற்று கொண்டு இருக்கிறார் . இதை இங்கே நான் சொல்ல காரணம் இருக்கிறது. நானும் என் தம்பியும் அந்த சுப்பிரமணி அவர்கள் நமக்கு நிறைய லாபத்தை தருவது இல்லை. நாம் வேறு இடத்தில துணியை போடலாம் என எங்கள் அறிவு வந்து விட்டதாக நினைத்த நாளில் இருந்து கூறி வருகிறோம் அப்போது எல்லாம் அம்மா சொன்ன பதில் இது ஒன்று தான். துடுப்பற்ற நிலையில் பாய்மரமாய் காற்றாய் இருந்தவர்கள் அவர்கள். எனவே அவர் தொழில் செய்யும் வரையில் , அல்லது என் காலம் வரையில் இவர்களிடம் தான் தொழில் செய்ய வேண்டும் என்பார்)
காட்சி 20:
அப்பா எல் ஐ சி பாலிசி எடுத்து ஆறு மாதத்தில் இறந்து விட்டதால் பணம் வருவதற்கு நிறைய விளக்கங்களை குடுக்க வேண்டி இருந்தது . நானும் அம்மாவும் எங்கள் வீதியில் இருந்த ஏஜென்ட் திரு தேவராஜும் அவரது மேலாளார் திரு கே.சோமசுந்தரமும் தொடர்ந்து கேட்ட எல்லா ஆவணங்களையும் கொடுத்து கொண்டு இருந்தோம். இறுதியாக அப்பாவை பரிசோதித்த டாக்டர் ஸ்ரீதர் எழுதி கொடுத்த செர்டிபிகேட் உதவியால் அந்த பணம் 30000/- வந்தது.
(அம்மா இப்போதும் என்னை டேர்ம் பிளான் எடுக்க அனுமதிப்பது இல்லை)
காட்சி 21: அப்பா இறந்த ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்தனர். தொடர்ந்து பலரும் எங்கள் வீட்டிற்க்கு வந்த வண்ணம் இருந்தனர். வருபவர்கள் எல்லாம் பிஸ்கட் பாக்கெட்டு கொண்டு வந்ததில் எங்கள் வீட்டில் 5-6 பெரிய பெட்டிகள் பிஸ்கட் சேர்ந்து இருந்தது. தீடீரென தொழில் மிக லாபகரமாக ஓடியது . வேனில் துணி ஏற்றி செல்லும் அம்மா செல்லும் அம்மா லாரியில் செல்ல தொடங்கி இருந்தார். அப்போது சென்னையில் இருந்து பத்தாவது முடித்து இருந்த எங்கள் பெரியம்மா மகன், திரு ராமு அண்ணண் அம்மாவின் உதவிக்கு வந்து இருந்தார். அவர் மிக கடுமையான உழைப்பாளி.
காட்சி 22: எங்கள் ஒன்று விட்ட பெரியப்பா திரு.முத்து கிருஷ்ணன் வந்தார். அப்போ அவர் சொன்னார். எங்கள் அப்பா ஒரு இடத்தை மதுரையில் இருக்கும் போது வாங்கியதாகவும் அதனை அவரிடம் ரூபாய் 7000-க்கு அடகு வைத்து இருப்பதாகவும் கூறினார். உடனே அவர் எனக்கு வட்டி இல்லாமல் அசலை மட்டும் தவணை முறையில் குடுத்து திருப்பி கொள்ளும் படி கூறினார். அம்மாவும் சரி என ஒத்து கொண்டார். சில மாதங்களுக்கு பின் அப்படியே அந்த நிலத்தை திருப்பி விற்று விட்டோம். அப்போ அந்த இடம் மதுரையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது. நாங்கள் விற்று ஒரு வருடத்தில் அந்த இடத்திற்கு அடுத்த வீதியில் மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் அறிவிப்பு வந்தது வேற கதை. இந்த பணத்தையும் எல் ஐ சி பணத்தையும் வைத்து தான் நாங்கள் பின் நாளில் நாங்கள் இப்ப இருக்கும் இடத்தை வாங்கினோம்.
காட்சி 23: மூன்று மாதம் முடிந்து இருந்தது, அது தேர்தல் நேரம் மே மாதம் 1991, புயலுக்கு பின் வசந்தம் வீச ஆரம்பித்து மூன்று மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் அடுத்த புயல் வீச தொடங்கியது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லமால் ஆனது. உடலில் எதோ பூச்சி கடித்து உடல் முழுவதும் தடித்து விட்டது. எந்த மருந்து கொடுத்தும் கேட்க வில்லை. எங்கள் அம்மாவை பார்க்க வந்த எல்லாரும் இந்த இரண்டு பசங்களுக்காகவாது எங்க அம்மா உயிரோடு இருக்க வேண்டும் என்று எங்கள் காசு பட பேசி சென்றனர். அப்போது தான் என் தம்பியும் என்கிட்ட நீ தான் அப்பாவுக்கு தீ வச்ச, அதுனால் தான் அப்பவால் எழுந்து வர முடியல என என்னிடம் சண்டை போட ஆரம்பத்து இருந்தான். அம்மாவுக்கு நாட்டு வைத்தியரிடம் காட்டலாம் என முடிவு செய்து புறப்பட்டு கொண்டு இருந்த போது ஒரு செய்தி வந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு இருந்தார். ஊரடங்கும் சோதனையுமாய் தமிழகம் இருந்தது. எங்கள் பயணம் கை விட பட்டது. அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் தேறி வந்து கொண்டு இருந்தார்.. அப்போதும் திரு ராமு அண்ணண் இருந்ததால் கடை நடத்துவது சிரமம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. ராமு அண்ணன் அம்மாவிற்கு ஊறுதுணையாக இருந்த படி கோபியில் தொடர்ந்து மேற்படிப்பை தொடர்வதாக இருந்தது. ஏனோ அது அவ்வாறு நடக்க வில்லை.
(ராமு அண்ணன் இப்பொ சிங்கப்பூரில் செழிப்பாக இருக்கிறார் என்றாலும் அது நடந்து இருந்தால் நிச்சயமாக கொங்கு மண்டலத்தில் ஒரு மிக பெரிய தொழில் அதிபராய் மாறி இருக்க கூடும்.)
அம்மா முழுமையாக தேறி இருந்தார். அண்ணனும் திரும்பி சென்னைக்கே புறப்பட்டு இருந்தார்.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
10-07-2021
Labels:
அம்மாவும்அப்பாவும்நாங்களும்
அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 3 அம்மா_நாச்சம்மை
#அப்பா_சொக்கலிங்கம்
#அம்மா_நாச்சம்மை
காட்சி 12:அம்மா வாசலில் இருந்த கார் ஓட்டுநரை திரும்பி பார்க்க, அவர் உடனே என் தங்கச்சிக்கு ஒன்னுனா அப்படியேவா விட்டுட்டு போவேன். நான் உங்க சொந்த ஊர் வரை விட்டு விட்டு வருகிறேன் என்கிறார். (இப்படி தான் வழி நெடுகிலும் பல முகம் தெரியாத/தெரிந்த அண்ணன்களை எங்கள் அம்மா பெற்று இருக்கிறார்). அப்பாவின் உடலை சொந்த ஊர் கொண்டு சென்றுவிட்டு எங்களுக்கு மற்ற உறவினருக்கு தந்தி அனுப்பி வர செய்தார்கள்.அதன் பிறகு தான் அம்மா அழ தொடங்கி இருந்தார். எங்களது அப்பாவின் அப்பாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். அதனால் அவரிடம் யாரும் எங்கள் அப்பாவின் இறப்பு பற்றி சொல்லவில்லை.
காட்சி 13: உறவினர்கள் வந்து சேர்ந்து அப்பாவிற்கு இறுதி சடங்கு செய்யும் நேரம். பறை அடிப்பவர்கள் எங்கள் வீடு வாசலில் அடித்து கொண்டு இருந்தார்கள். எங்கள் ஊரு குழந்தைகள்பறை அடிக்குக்கேற்ப ஆடி கொண்டு இருந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து என் உறவினர்களின் குழந்தைகளும் நானும் (வயது 9) என் தம்பியும் (7) ஆடி கொண்டு இருந்தோம். ஒரு உறவினர் வந்தார் , " டேய் செத்தது உங்க அப்பா நீங்க ஆடக்கூடாது என்றார். அதுவும் என்னை பார்த்து நீ தான் கொள்ளி வைக்கணும். உள்ள வந்து தயார் ஆகு என்றார் ..
காட்சி 14: அப்பாவின் உடலை எடுக்கும் சரியான நேரத்தில் எங்களது பெரியம்மா குடும்பம் சென்னையில் இருந்து வந்து சேர்ந்தது. வைரம் அண்ணன் வாங்கி வந்த ரோஜா-பூ மாலையை போட்டு தூக்கினார்கள்.என் கையில் கொள்ளி சட்டியை கொடுத்து தூக்க சொன்னார்கள். அதன் புகை நெடி அதிகமாக இருந்தால் மிக குறைவாக இட்டு தூக்க சொன்னார்கள். (பிறகு ஜெய் ஹிந்து படத்தில் கிளைமேக்ஸில் அதே போன்று காட்சி வரும், அதை பார்க்கும் போது எல்லாம் அந்த நினைவு வந்து போகும்)
காட்சி 15: இதற்கு இடையில் நாங்கள் வசித்து வந்த கோபியில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் எங்கள் அப்பா தொழில் செய்ய பொருள் வாங்கும்/விற்கும் முதலாளிகளிடம் சென்று எங்க அப்பா இறந்தது குறித்து கூறி மேலும் எங்க அம்மா அந்த ஊரில் தொடர்ந்து தங்க மாட்டார் எனவும் , அவர்கள் உறவினர்கள் இருக்கும் மதுரைக்கு சென்று விடுவார் என கூறி அதனால் அந்த தொழில் தொடர்ந்து தாங்கள் நடத்துவதாக கேட்க அவர்கள் இரு முதலாளிகள்(திரு.சுப்பிரமணி / திரு .ராஜேந்திரன்) இருவரும் கலந்து பேசி நாங்கள் அந்த அம்மாவை பார்த்தது இல்லை , அந்த அம்மா வந்து தொழிலை நடத்தாவிடில் உங்களுக்கு தருகிறோம் என்று கூறி உள்ளார்கள்.ஒரு மாதம் வரை பார்க்கலாம் என்று கூறி உள்ளார்கள்
காட்சி 16: அம்மா அப்பா இறந்த பின் பூவையும் பொட்டையும் துறந்து இருந்தார். அப்போது வெள்ளை புடவை அணிவது தான் பழக்கமாய் இருந்தது. அம்மா அதை ஏற்கவில்லை. அவர் தொடர்ந்து கலர் புடவையை அணிய தொடங்கினார். ஏன் பொட்டையும் பூவையும் துறந்தார் என தெரியவில்லை. அடுத்த முறை நேரில் பார்க்கையில் கேட்க வேண்டும்
காட்சி 17: அப்பா இறந்து 10 நாட்கள் இருக்கும், மாமா அம்மாவிடம் என்ன செய்வதாக உத்தேசம் என கேட்க, அம்மா அடுத்த கணமே நான் கோபியே சென்று விடுகிறேன் என கூறினார். மாமா எங்களுக்கு பக்கமா இருக்க கூடாது என கேட்க அம்மா இல்லை அது சரிப்படாது, நான் அங்ககேய போறேன் என கூற மாமாவும் சரி என கூறி நாங்கள் கோபி வந்துவிட்டோம். எங்களுடன் அப்பாவின் கடைசி அண்ணன் மணி பெரியப்பா வந்து கோபியில் விட்டுவிட்டு சென்று விட்டார்.
காட்சி 18: அப்பா இறந்து 15-ஆம் நாள், திருப்பூருக்கு வேனில் சரக்கை ஏற்றி திருப்பூர் செல்ல வேண்டும் என கூற , திருப்பூரில் அந்த கடைகளின் விலாசம் தெரியாது என அம்மா பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் கூற நான் உடனே உடனே அம்மாவிடம் , அப்பா கடைசியா போகும் போது நானும் போனேன்ல , அதனால் போன வேன் பேர் கிருஷ்ணா எனக்கு தெரியும் என்று கூறி அந்த வண்டி எண்ணையும் யும் கூற உடனே அந்த வீதியை சேர்ந்த வெங்கடேஷ் அண்ணன் நானும் அடுத்த நாள் வேன் நிக்கும் திடல் சென்று அந்த வேன்யும் ஓட்டுனரையும் பார்த்து கேட்க அவரும் திருப்பூரில் அந்த ஏரியா பேரை சொன்னார். ஆனால் கடை தெரியாது என்றார் . உடனே நான் அது ராயல் பேக்கரி பக்கத்தில் என்றேன். அப்ப சரி கேட்டு போயிரலாம் என்றார். உடனே வேனை வாடகைக்கு எடுத்து வந்தோம். தம்பியை பக்கத்து அக்காகளிடம் விட்டுவிட்டு என்னை கூட்டி செல்வதாக திட்டம் இட்டோம் சரக்கு மூட்டைகளை ஏற்றி விட்டு அம்மா அந்த வேனில் ஏறினார்.என் கையை புடித்து வேனுக்குள் மேல வர செய்தார்.
அந்த கைப்பிடி என்னை வேனுக்குள் மேல் வர மட்டும் அல்ல, அதன் பிறகு பல முறை என்னை மேல் வர தூக்கி விட்டு உள்ளது . அவரும் வேனில் மட்டும் ஏறவில்லை.. வாழ்க்கையில் ஏற தயராகி இருந்தார்.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
03-07-2021
#அம்மா_நாச்சம்மை
காட்சி 12:அம்மா வாசலில் இருந்த கார் ஓட்டுநரை திரும்பி பார்க்க, அவர் உடனே என் தங்கச்சிக்கு ஒன்னுனா அப்படியேவா விட்டுட்டு போவேன். நான் உங்க சொந்த ஊர் வரை விட்டு விட்டு வருகிறேன் என்கிறார். (இப்படி தான் வழி நெடுகிலும் பல முகம் தெரியாத/தெரிந்த அண்ணன்களை எங்கள் அம்மா பெற்று இருக்கிறார்). அப்பாவின் உடலை சொந்த ஊர் கொண்டு சென்றுவிட்டு எங்களுக்கு மற்ற உறவினருக்கு தந்தி அனுப்பி வர செய்தார்கள்.அதன் பிறகு தான் அம்மா அழ தொடங்கி இருந்தார். எங்களது அப்பாவின் அப்பாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். அதனால் அவரிடம் யாரும் எங்கள் அப்பாவின் இறப்பு பற்றி சொல்லவில்லை.
காட்சி 13: உறவினர்கள் வந்து சேர்ந்து அப்பாவிற்கு இறுதி சடங்கு செய்யும் நேரம். பறை அடிப்பவர்கள் எங்கள் வீடு வாசலில் அடித்து கொண்டு இருந்தார்கள். எங்கள் ஊரு குழந்தைகள்பறை அடிக்குக்கேற்ப ஆடி கொண்டு இருந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து என் உறவினர்களின் குழந்தைகளும் நானும் (வயது 9) என் தம்பியும் (7) ஆடி கொண்டு இருந்தோம். ஒரு உறவினர் வந்தார் , " டேய் செத்தது உங்க அப்பா நீங்க ஆடக்கூடாது என்றார். அதுவும் என்னை பார்த்து நீ தான் கொள்ளி வைக்கணும். உள்ள வந்து தயார் ஆகு என்றார் ..
காட்சி 14: அப்பாவின் உடலை எடுக்கும் சரியான நேரத்தில் எங்களது பெரியம்மா குடும்பம் சென்னையில் இருந்து வந்து சேர்ந்தது. வைரம் அண்ணன் வாங்கி வந்த ரோஜா-பூ மாலையை போட்டு தூக்கினார்கள்.என் கையில் கொள்ளி சட்டியை கொடுத்து தூக்க சொன்னார்கள். அதன் புகை நெடி அதிகமாக இருந்தால் மிக குறைவாக இட்டு தூக்க சொன்னார்கள். (பிறகு ஜெய் ஹிந்து படத்தில் கிளைமேக்ஸில் அதே போன்று காட்சி வரும், அதை பார்க்கும் போது எல்லாம் அந்த நினைவு வந்து போகும்)
காட்சி 15: இதற்கு இடையில் நாங்கள் வசித்து வந்த கோபியில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் எங்கள் அப்பா தொழில் செய்ய பொருள் வாங்கும்/விற்கும் முதலாளிகளிடம் சென்று எங்க அப்பா இறந்தது குறித்து கூறி மேலும் எங்க அம்மா அந்த ஊரில் தொடர்ந்து தங்க மாட்டார் எனவும் , அவர்கள் உறவினர்கள் இருக்கும் மதுரைக்கு சென்று விடுவார் என கூறி அதனால் அந்த தொழில் தொடர்ந்து தாங்கள் நடத்துவதாக கேட்க அவர்கள் இரு முதலாளிகள்(திரு.சுப்பிரமணி / திரு .ராஜேந்திரன்) இருவரும் கலந்து பேசி நாங்கள் அந்த அம்மாவை பார்த்தது இல்லை , அந்த அம்மா வந்து தொழிலை நடத்தாவிடில் உங்களுக்கு தருகிறோம் என்று கூறி உள்ளார்கள்.ஒரு மாதம் வரை பார்க்கலாம் என்று கூறி உள்ளார்கள்
காட்சி 16: அம்மா அப்பா இறந்த பின் பூவையும் பொட்டையும் துறந்து இருந்தார். அப்போது வெள்ளை புடவை அணிவது தான் பழக்கமாய் இருந்தது. அம்மா அதை ஏற்கவில்லை. அவர் தொடர்ந்து கலர் புடவையை அணிய தொடங்கினார். ஏன் பொட்டையும் பூவையும் துறந்தார் என தெரியவில்லை. அடுத்த முறை நேரில் பார்க்கையில் கேட்க வேண்டும்
காட்சி 17: அப்பா இறந்து 10 நாட்கள் இருக்கும், மாமா அம்மாவிடம் என்ன செய்வதாக உத்தேசம் என கேட்க, அம்மா அடுத்த கணமே நான் கோபியே சென்று விடுகிறேன் என கூறினார். மாமா எங்களுக்கு பக்கமா இருக்க கூடாது என கேட்க அம்மா இல்லை அது சரிப்படாது, நான் அங்ககேய போறேன் என கூற மாமாவும் சரி என கூறி நாங்கள் கோபி வந்துவிட்டோம். எங்களுடன் அப்பாவின் கடைசி அண்ணன் மணி பெரியப்பா வந்து கோபியில் விட்டுவிட்டு சென்று விட்டார்.
காட்சி 18: அப்பா இறந்து 15-ஆம் நாள், திருப்பூருக்கு வேனில் சரக்கை ஏற்றி திருப்பூர் செல்ல வேண்டும் என கூற , திருப்பூரில் அந்த கடைகளின் விலாசம் தெரியாது என அம்மா பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் கூற நான் உடனே உடனே அம்மாவிடம் , அப்பா கடைசியா போகும் போது நானும் போனேன்ல , அதனால் போன வேன் பேர் கிருஷ்ணா எனக்கு தெரியும் என்று கூறி அந்த வண்டி எண்ணையும் யும் கூற உடனே அந்த வீதியை சேர்ந்த வெங்கடேஷ் அண்ணன் நானும் அடுத்த நாள் வேன் நிக்கும் திடல் சென்று அந்த வேன்யும் ஓட்டுனரையும் பார்த்து கேட்க அவரும் திருப்பூரில் அந்த ஏரியா பேரை சொன்னார். ஆனால் கடை தெரியாது என்றார் . உடனே நான் அது ராயல் பேக்கரி பக்கத்தில் என்றேன். அப்ப சரி கேட்டு போயிரலாம் என்றார். உடனே வேனை வாடகைக்கு எடுத்து வந்தோம். தம்பியை பக்கத்து அக்காகளிடம் விட்டுவிட்டு என்னை கூட்டி செல்வதாக திட்டம் இட்டோம் சரக்கு மூட்டைகளை ஏற்றி விட்டு அம்மா அந்த வேனில் ஏறினார்.என் கையை புடித்து வேனுக்குள் மேல வர செய்தார்.
அந்த கைப்பிடி என்னை வேனுக்குள் மேல் வர மட்டும் அல்ல, அதன் பிறகு பல முறை என்னை மேல் வர தூக்கி விட்டு உள்ளது . அவரும் வேனில் மட்டும் ஏறவில்லை.. வாழ்க்கையில் ஏற தயராகி இருந்தார்.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
03-07-2021
Labels:
அம்மாவும்அப்பாவும்நாங்களும்
அம்மாவும்அப்பாவும்நாங்களும் - 2 : அப்பா புறப்பாடு - 2
1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் நான்காவது வாரம்...
காட்சி 5 : அப்பாவிற்க்கு தீடீரென உடல் சோர்ந்து , நீரிழப்பு (dehydrate ) ஆனது. எங்களுக்கு ஏன் என்றே தெரியவில்லை தனியார் மருத்துவரிடம் அழைத்து சென்றோம் . இரண்டு நாட்கள் பிறகும் பெரிய முன்னேற்றம் இல்லை. பின்பு மருத்துவ மனையில் சேர்க்க சொன்னதால் அரச மருத்துவ மனையில் சேர்த்தோம்.. என்ன ப்ரிச்சனை என்றே தெரியவில்லை.. ஆனால் உடலில் எந்த முன்னேற்றம் இல்லை.. சொல்ல போனால் அவரால் நீரே அருந்த முடியவில்லை
காட்சி 6: அவரை அரசு மருத்துவமனையில் இருந்து , மருத்துவர் ஸ்ரீதர் அவர்களின் மருத்தவ மனைக்கு அழைத்து சென்றோம். அவரும் மருத்துவர் ரவீந்தரனும் பார்த்தார்கள். இவருக்கு நீர் ஒவ்வாமை இருக்கிறது . எப்போதேனும் நாய் கடித்ததா என்று கேட்டார்கள்.. அம்மா அப்படி ஏதும் இல்லை என்றார் ...அப்பா ஆம் என்றார் .. ஒரு முறை கடித்ததா /கீரியதா என தெரியவில்லை என்றார். சிறு ரத்தம் தான் வந்தது, விட்டு விட்டேன் என்றார்..உடனே அவரை விலங்குகள் கடித்தல் சிகிச்சையில் புகழ் பெற்ற குன்னூரில் உள்ள pasteur institute-க்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
காட்சி 7: அவரை குன்னூரில் உள்ள pasteur institute அழைத்து சென்றோம். அவரை பரிசோதித்த மருத்வர்கள் நீர் ஒவ்வாமை வந்த பிறகு காப்பற்றுவது கடினம், அதிகம் பட்சம் ஓர் நாள் உயிரோட கூடும்.. சொந்த ஊருக்குள் உடனே அழைத்து செல்லுங்கள் என்று அம்மாவிற்கு சொல்லிவிட்டார்கள்.அம்மா அழவே இல்லை. எல்லா தங்கைக்கும் ப்ரிச்சனையின் போது தோன்றும் முதல் முகம் அண்ணன்/தம்பி தான். அம்மா மதுரையில் உள்ள மாமாவிடம் கூட்டி செல்ல முடிவெடுத்தார். வாடகை காரில் மதுரை புறப்பட்டோம்.
காட்சி 8: மதுரை வழியாக சொந்த ஊருக்கு செல்கையில் மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு முறை காட்டலாம் என்றார்கள். அங்கு சென்றோம் . அங்கும் காப்பாற்ற முடியாது என்றார்கள். மருத்துவரை சந்தித்து விட்டு வெளிய விடுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த பணியாளர் சற்று இருளான இடத்தில நிறுத்தி வைத்து விட்டு 50 ரூபாய் தந்தால் தான் வெளியில் கொண்டு வந்து விடுவேன் என்று அம்மாவிடம் சொல்ல அப்பாவிற்கு கோவம் வந்து அந்த பணியாளரிடம் , உன்னை சும்மா விட மாட்டேன் , நான் உன்னை பற்றி புகார் அளிக்கிறேன் என சொல்லி கொண்டே தானே எழுந்து நடந்து வந்து விட்டார்
காட்சி 9: மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றோம். அங்கே உள் நுழைந்தவுடன் மாமாவை பார்த்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த இல்வாழ்க்கையின் நடந்த தவறுகள் அனைத்திற்கும்,பொருளிழப்பிற்கும் நானே காரணம் என்றாலும் என்னை மன்னித்து எப்படியாவது உயிரை காப்பாற்றி தரும்படி வேண்டினார். மாமா அவரை ஆறுதல் படுத்தி , நாங்கள் கோபியில் இருந்து சென்ற வாடகை காரை வாடகை மாற்றி வேறு காரை எடுத்து கொண்டு எங்களை(என்னையும் என் தம்பியையும்) மாமா வீட்டில் விட்டு விட்டு அம்மா அப்பா மாமா எல்லாரும் சித்த வைத்திய மருந்து குடுக்கலாம் என்று புறப்பட்டார்கள். அப்பா அவசர அவசரமாய் அம்மாவை பார்த்து புது செருப்பு அந்த வண்டியில் இருக்கு மறந்தரமா எடுத்துக்கோ என்றார்.
காட்சி 10: . சித்த வைத்திய வைத்திய சாலை செல்லும் வழியில் அப்பா அம்மாவிடம், எனக்கு எதுவும் ஆகிவிட்டால்..பிள்ளைகளை நல்லா படிக்க வச்சிரு..யாரு வீட்டுலையும் விட்டு விடாத என்றாராம்.
காட்சி 11: சித்த வைத்திய வைத்திய சாலையில் மருந்தை அரைத்து கொண்டு இருந்தார்களாம்.. அப்பா மாமாவிடம் எங்க பங்காளிகள் எல்லாம் எங்கள் குல தெய்வத்துக்கு கிடாரி வெட்டாமல் இருக்கிறார்கள் நீங்கள் வெட்ட வைப்பீர்களா சத்தியம் செய்யுங்கள் என்றாராம். உங்க பங்களிக்காக நான் சத்தியம் செய்ய முடியாது நான் முயற்சி செய்கிறேன் என்றாராம். மருந்து தயார் ஆகி , மருந்தோடு சேர்த்து சிறு உணவை வாயில் அம்மா வைக்கையில் அப்பா காற்றில் கரைந்து இருந்தார்..
அப்பா இறந்து விட்டார் என அங்கு இருந்த எல்லாரும் சொன்னார்களாம்....
அம்மா அழவே இல்லையாம்... உடனடியாக அங்கே வாசலில் இருந்த கார் ஓட்டுநரை மட்டும் திரும்பி பார்த்தாராம்..
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
26-06-2021
(குறிப்பு : நான் சிக்கனமாக இருக்க , கணக்கு பாடத்தில் சற்று ஆர்வமாகவும் சற்று புலமையுடனும் அதிகமாக இருக்க அவர்(அப்பா) தான் காரணம் என்று அவரிடம் சொல்ல எனக்கு வாய்ப்பே இருக்க வில்லை. ஒரு வாரமோ , பல வருடமோ , என்னை போலவே யாருக்கும் அப்பாக்கள் திடீரெனெ இல்லாமல் போக கூடும். அதற்கு முன் அவரிடம் பேசுங்கள்/அவர் உங்களுக்கு கற்று கொடுத்ததை அவரிடம் சொல்லி சிலாகியுங்கள்/ உங்கள் குழந்தைகளை தினமும் தொலைபேசி வழியேனும் பேச வையுங்கள்.
காட்சி 5 : அப்பாவிற்க்கு தீடீரென உடல் சோர்ந்து , நீரிழப்பு (dehydrate ) ஆனது. எங்களுக்கு ஏன் என்றே தெரியவில்லை தனியார் மருத்துவரிடம் அழைத்து சென்றோம் . இரண்டு நாட்கள் பிறகும் பெரிய முன்னேற்றம் இல்லை. பின்பு மருத்துவ மனையில் சேர்க்க சொன்னதால் அரச மருத்துவ மனையில் சேர்த்தோம்.. என்ன ப்ரிச்சனை என்றே தெரியவில்லை.. ஆனால் உடலில் எந்த முன்னேற்றம் இல்லை.. சொல்ல போனால் அவரால் நீரே அருந்த முடியவில்லை
காட்சி 6: அவரை அரசு மருத்துவமனையில் இருந்து , மருத்துவர் ஸ்ரீதர் அவர்களின் மருத்தவ மனைக்கு அழைத்து சென்றோம். அவரும் மருத்துவர் ரவீந்தரனும் பார்த்தார்கள். இவருக்கு நீர் ஒவ்வாமை இருக்கிறது . எப்போதேனும் நாய் கடித்ததா என்று கேட்டார்கள்.. அம்மா அப்படி ஏதும் இல்லை என்றார் ...அப்பா ஆம் என்றார் .. ஒரு முறை கடித்ததா /கீரியதா என தெரியவில்லை என்றார். சிறு ரத்தம் தான் வந்தது, விட்டு விட்டேன் என்றார்..உடனே அவரை விலங்குகள் கடித்தல் சிகிச்சையில் புகழ் பெற்ற குன்னூரில் உள்ள pasteur institute-க்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
காட்சி 7: அவரை குன்னூரில் உள்ள pasteur institute அழைத்து சென்றோம். அவரை பரிசோதித்த மருத்வர்கள் நீர் ஒவ்வாமை வந்த பிறகு காப்பற்றுவது கடினம், அதிகம் பட்சம் ஓர் நாள் உயிரோட கூடும்.. சொந்த ஊருக்குள் உடனே அழைத்து செல்லுங்கள் என்று அம்மாவிற்கு சொல்லிவிட்டார்கள்.அம்மா அழவே இல்லை. எல்லா தங்கைக்கும் ப்ரிச்சனையின் போது தோன்றும் முதல் முகம் அண்ணன்/தம்பி தான். அம்மா மதுரையில் உள்ள மாமாவிடம் கூட்டி செல்ல முடிவெடுத்தார். வாடகை காரில் மதுரை புறப்பட்டோம்.
காட்சி 8: மதுரை வழியாக சொந்த ஊருக்கு செல்கையில் மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு முறை காட்டலாம் என்றார்கள். அங்கு சென்றோம் . அங்கும் காப்பாற்ற முடியாது என்றார்கள். மருத்துவரை சந்தித்து விட்டு வெளிய விடுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த பணியாளர் சற்று இருளான இடத்தில நிறுத்தி வைத்து விட்டு 50 ரூபாய் தந்தால் தான் வெளியில் கொண்டு வந்து விடுவேன் என்று அம்மாவிடம் சொல்ல அப்பாவிற்கு கோவம் வந்து அந்த பணியாளரிடம் , உன்னை சும்மா விட மாட்டேன் , நான் உன்னை பற்றி புகார் அளிக்கிறேன் என சொல்லி கொண்டே தானே எழுந்து நடந்து வந்து விட்டார்
காட்சி 9: மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றோம். அங்கே உள் நுழைந்தவுடன் மாமாவை பார்த்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த இல்வாழ்க்கையின் நடந்த தவறுகள் அனைத்திற்கும்,பொருளிழப்பிற்கும் நானே காரணம் என்றாலும் என்னை மன்னித்து எப்படியாவது உயிரை காப்பாற்றி தரும்படி வேண்டினார். மாமா அவரை ஆறுதல் படுத்தி , நாங்கள் கோபியில் இருந்து சென்ற வாடகை காரை வாடகை மாற்றி வேறு காரை எடுத்து கொண்டு எங்களை(என்னையும் என் தம்பியையும்) மாமா வீட்டில் விட்டு விட்டு அம்மா அப்பா மாமா எல்லாரும் சித்த வைத்திய மருந்து குடுக்கலாம் என்று புறப்பட்டார்கள். அப்பா அவசர அவசரமாய் அம்மாவை பார்த்து புது செருப்பு அந்த வண்டியில் இருக்கு மறந்தரமா எடுத்துக்கோ என்றார்.
காட்சி 10: . சித்த வைத்திய வைத்திய சாலை செல்லும் வழியில் அப்பா அம்மாவிடம், எனக்கு எதுவும் ஆகிவிட்டால்..பிள்ளைகளை நல்லா படிக்க வச்சிரு..யாரு வீட்டுலையும் விட்டு விடாத என்றாராம்.
காட்சி 11: சித்த வைத்திய வைத்திய சாலையில் மருந்தை அரைத்து கொண்டு இருந்தார்களாம்.. அப்பா மாமாவிடம் எங்க பங்காளிகள் எல்லாம் எங்கள் குல தெய்வத்துக்கு கிடாரி வெட்டாமல் இருக்கிறார்கள் நீங்கள் வெட்ட வைப்பீர்களா சத்தியம் செய்யுங்கள் என்றாராம். உங்க பங்களிக்காக நான் சத்தியம் செய்ய முடியாது நான் முயற்சி செய்கிறேன் என்றாராம். மருந்து தயார் ஆகி , மருந்தோடு சேர்த்து சிறு உணவை வாயில் அம்மா வைக்கையில் அப்பா காற்றில் கரைந்து இருந்தார்..
அப்பா இறந்து விட்டார் என அங்கு இருந்த எல்லாரும் சொன்னார்களாம்....
அம்மா அழவே இல்லையாம்... உடனடியாக அங்கே வாசலில் இருந்த கார் ஓட்டுநரை மட்டும் திரும்பி பார்த்தாராம்..
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
26-06-2021
(குறிப்பு : நான் சிக்கனமாக இருக்க , கணக்கு பாடத்தில் சற்று ஆர்வமாகவும் சற்று புலமையுடனும் அதிகமாக இருக்க அவர்(அப்பா) தான் காரணம் என்று அவரிடம் சொல்ல எனக்கு வாய்ப்பே இருக்க வில்லை. ஒரு வாரமோ , பல வருடமோ , என்னை போலவே யாருக்கும் அப்பாக்கள் திடீரெனெ இல்லாமல் போக கூடும். அதற்கு முன் அவரிடம் பேசுங்கள்/அவர் உங்களுக்கு கற்று கொடுத்ததை அவரிடம் சொல்லி சிலாகியுங்கள்/ உங்கள் குழந்தைகளை தினமும் தொலைபேசி வழியேனும் பேச வையுங்கள்.
Labels:
அம்மாவும்அப்பாவும்நாங்களும்
அம்மாவும்அப்பாவும்நாங்களும் -1: அப்பா புறப்பாடு - 1
மிக சரியாக 30 வருடங்களுக்கு முன் , 1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம்...
காட்சி 1: அப்பா செய்த புதிய தொழில் கொஞ்சம் நல்ல வருமானம் தர தொடங்கி இருந்த நேரம், எனது தாய் மாமா எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்.. அப்பா மாமாவிடம் நீங்க கல்யாணத்துக்கு போட்ட நகை எல்லாத்தையும் கடந்த பத்து வருடத்தில் விற்று விட்டேன். இப்பதான் கொஞ்சம் காசு சேர்ந்து இருக்கு, நண்பர்களிடம் 10000 ரூபாய் கொடுத்து வைத்து இருக்கிறேன். அதை இன்னும் ஓரிரு மாதத்தில் வாங்கி தருகிறேன், முதலில் செயினோ/வளையலோ வாங்கி விடலாம் என்றார்.
காட்சி 2: நானும் அப்பாவும் வாடகை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அவருக்கு numberology -இல் ஆர்வம் உண்டு வழியில் எந்த வண்டியை பார்த்தாலும் அதன் நம்பர் பிலேட்டில் உள்ள எண்களை கூட்டி விடுவார்.. அன்றும் என்னை வழியில் செல்லும் பல வண்டிகளின் எண்களை கூட்ட சொன்னார்..கணக்கு பாடம் ரொம்பமுக்கியம் அதுக்கு தான் இந்த பயிற்சி என்றார். அப்போது இன்னொன்றும் சொன்னார். தான் புது சைக்கிள் வாங்க முன்பணம் கட்டி விட்டதாகவும், நாகப்பா சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வரும் என சொன்னார். அதன் பிறகு வாடகை சைக்கிள் எடுக்க தேவை இருக்காது என்றார்.
காட்சி 3: அம்மாவும் அப்பாவும் கடைவீதி சென்று அம்மாவுக்கு புதிய செப்பல்/காலனி வாங்கி வந்து இருந்தார்கள். முதல் முறையாக அம்மா ஹவாய் காலணி இல்லாமல் சற்றே விலை கூடிய காலணியை வாங்கி இருந்தார்.
காட்சி 4: அப்பாவை பார்க்க வந்த அவரின் நண்பர் வெங்கடேஷிடம் , அடுத்த தடவ நீ என்னை பார்க்கணும்னா மேல தான் வரணும் என்றார் . அவர் ஏன் என வினவ, தான் அதே வீதியில் சற்று புதிதாய் கட்டிய வீட்டில் முதல் அடுக்கில் தனி வீடாக வாடகைக்கு பார்த்து முன்பணம் கொடுத்து இருப்பதாக சொன்னார். ஆம்..எனக்கு அது தனி வீடு என்பதை விட அந்த வீட்டில் தனி கழிப்பறையும், பைப் /குழாய் இருக்கும் என்பது மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது..
ஆனால் அதற்கு அடுத்து வந்த வாரம், இந்த காட்சிகள் பலவற்றை புரட்டி போட்டு விட்டது. ஆம்..உண்மை தான்.. தனி கழிப்பறை உள்ள வீட்டிற்கு நாங்கள் போக கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகி விட்டது.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
19-06-2021
காட்சி 1: அப்பா செய்த புதிய தொழில் கொஞ்சம் நல்ல வருமானம் தர தொடங்கி இருந்த நேரம், எனது தாய் மாமா எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்.. அப்பா மாமாவிடம் நீங்க கல்யாணத்துக்கு போட்ட நகை எல்லாத்தையும் கடந்த பத்து வருடத்தில் விற்று விட்டேன். இப்பதான் கொஞ்சம் காசு சேர்ந்து இருக்கு, நண்பர்களிடம் 10000 ரூபாய் கொடுத்து வைத்து இருக்கிறேன். அதை இன்னும் ஓரிரு மாதத்தில் வாங்கி தருகிறேன், முதலில் செயினோ/வளையலோ வாங்கி விடலாம் என்றார்.
காட்சி 2: நானும் அப்பாவும் வாடகை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அவருக்கு numberology -இல் ஆர்வம் உண்டு வழியில் எந்த வண்டியை பார்த்தாலும் அதன் நம்பர் பிலேட்டில் உள்ள எண்களை கூட்டி விடுவார்.. அன்றும் என்னை வழியில் செல்லும் பல வண்டிகளின் எண்களை கூட்ட சொன்னார்..கணக்கு பாடம் ரொம்பமுக்கியம் அதுக்கு தான் இந்த பயிற்சி என்றார். அப்போது இன்னொன்றும் சொன்னார். தான் புது சைக்கிள் வாங்க முன்பணம் கட்டி விட்டதாகவும், நாகப்பா சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வரும் என சொன்னார். அதன் பிறகு வாடகை சைக்கிள் எடுக்க தேவை இருக்காது என்றார்.
காட்சி 3: அம்மாவும் அப்பாவும் கடைவீதி சென்று அம்மாவுக்கு புதிய செப்பல்/காலனி வாங்கி வந்து இருந்தார்கள். முதல் முறையாக அம்மா ஹவாய் காலணி இல்லாமல் சற்றே விலை கூடிய காலணியை வாங்கி இருந்தார்.
காட்சி 4: அப்பாவை பார்க்க வந்த அவரின் நண்பர் வெங்கடேஷிடம் , அடுத்த தடவ நீ என்னை பார்க்கணும்னா மேல தான் வரணும் என்றார் . அவர் ஏன் என வினவ, தான் அதே வீதியில் சற்று புதிதாய் கட்டிய வீட்டில் முதல் அடுக்கில் தனி வீடாக வாடகைக்கு பார்த்து முன்பணம் கொடுத்து இருப்பதாக சொன்னார். ஆம்..எனக்கு அது தனி வீடு என்பதை விட அந்த வீட்டில் தனி கழிப்பறையும், பைப் /குழாய் இருக்கும் என்பது மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது..
ஆனால் அதற்கு அடுத்து வந்த வாரம், இந்த காட்சிகள் பலவற்றை புரட்டி போட்டு விட்டது. ஆம்..உண்மை தான்.. தனி கழிப்பறை உள்ள வீட்டிற்கு நாங்கள் போக கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகி விட்டது.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
19-06-2021
Labels:
அம்மாவும்அப்பாவும்நாங்களும்
மரத்தின் கைகள்
Labels:
சொந்த கதை(சுய புராணம்)
அவன் அவள் மற்றும் காதல்-4
Labels:
அவன் அவள் மற்றும் காதல்
அவன் அவள் மற்றும் காதல் -3
Labels:
அவன் அவள் மற்றும் காதல்
அவன் அவள் மற்றும் காதல் -2
அவன் அவள் மற்றும் காதல் -2
போர்டிங் செல்ல வழியில் நின்று கொன்டே, சற்று முன் பார்த்த அந்த பெண்ணை திரும்ப பார்த்தான். உடனே அவன் மனசாட்சி வெளியில் குதித்து "டேய் ஜீவா கல்யாணம் ஆன பெண்ணை சைட் அடிப்பது தப்பு டா என்றது". அடுத்த கணமே அதே மனம், அழகை ரசிப்பது தவறில்லை, அனுபவிக்க நினைப்பது தான் தவறு என்று வெஃகியானாம் பேசியது. அந்த பெண்னும் கணவனும் அங்கேயே இருந்தனர். இவன் விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்தான். முன் இருக்கை பயணிகளும் வர தொடங்கினர்.பயணிகள் வரிசையாய் ஏற விமானம் நிரம்பி கொண்டு இருந்தது. அவனுக்கு அருகில் இருந்த 22ஏ ,22பி இருக்கைகள் காலியாகவே இருந்தன. அவன் பார்த்து கொன்டு இருந்த புது மன தம்பதியும் ஒன்பதோ பத்தோ கொண்ட இருக்கை வரிசையில் அமர்ந்து இருந்தனர். விமான பனி பெண் இன்னும் ஒரு பயணி வர வேண்டி உள்ளது வந்ததும் விமானம் புறப்படும் என்றாள். அப்பொழுது தான் அவள் உள்ளே நுழைந்தாள். விமானத்தில் உள்ள எல்லா பயணிகளையும் பார்த்து, "சாரி" "சாரி" "மாப் கர்த்தியே" என்று மன்னிப்பு கேட்ட படியே வந்தாள். அவளை அப்போது தான் ஜீவா முதன் முதலில் பார்த்தான். லேட்டா வந்ததுக்கு இந்த சாரி பில்டப் பா என்ற நினைத்து கொண்டான். இருந்தாலும் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அவன் மட்டும் அல்ல,விமானத்தின் உள்ள பெரும்பாலனோர் அவளை தான் பார்த்துதான் கொண்டு இருந்தனர்.
அவள் அழகாய் இருக்கிறாள் என்பதிற்காக ஆண்களும்,இவள் மட்டும் எப்படி ரொம்ப அழகாய் இருக்கிறாள் எனபத்திற்க்காக பெண்களும் பார்த்து இருக்க கூடும்.அவள் வெகுவேகமாக தன் இழுப்பெட்டியை இழுத்து வந்து கொண்டு இருந்தாள்.அவள் க்ரே கலரில் கேப்ரி லெக்கிங்ஸ் அணிந்து இருந்தாள்.கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து இருந்தாள்.
நடுவே நேர் வகிடு எடுத்து இருந்தால் ஆனால் முடியை லூஸ் ஹேராய் விட்டு இருந்தாள். வெளிர் மஞ்சளை விட இன்னும் கொஞ்சம் வெள்ளையாவே இருந்தாள்.வயது இருபத்தியிரண்டுக்கு குறையாமலும் இருபத்திநாளுக்கு மிகாமலும் இருக்க கூடும் என்று ஜீவா நினைத்தான்.
ஜீவாவின் அருகில் இடம் காலியாய் இருந்ததால் ஒரு வேளை அங்கு வருவாளோ என்று நினைத்து கொண்டு இருந்தான். பல முறை புகைவண்டி பயணத்தில் அழகான பெண்கள் அவன் அருகில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் விமானத்தில் ஒரு போதும் அவ்வாறு அமைந்தது இல்லை. அதனால் அவன், அவள் நமது அருகில் அமர போவதில்லை என்று முடிவுக்கு வந்து இருந்தான்.
ஆனால் அவனது விதி வேறு கணக்கை போட்டு கொண்டு இருந்தது. அவள் இவனது இருக்கை 22சி அருகில் வந்து
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றாள். அவள் தன்னை அழைக்கிறாள் என்பதை ஜீவாவால் நம்ப முடிய வில்லை. அதற்குள் அவள் மீண்டும் ஒரு முறை "எக்ஸ்க்யூஸ் மீ" என்றாள். அவள் எங்கு "எக்ஸ்"-ஐ ஆரம்பித்தால் எங்கு "மீ" என முடித்தால் என தெரியவில்லை. அவள் "எக்ஸ்க்யூஸ் மீ" அவளை விட அழகாய் இருந்தது.
தொடரும்...
Labels:
அவன் அவள் மற்றும் காதல்
அவன் அவள் மற்றும் காதல் -1
Labels:
அவன் அவள் மற்றும் காதல்
காசு யாத்திரை
காசி யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உணவை..
காசு யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உறவை - எங்களை போல்..
Labels:
கவிதை
யாம் அறிந்த டிவி தொகுப்பாளர்களிலே
எப்போதும் தமிழர்கள் தமிழை ஒழுங்காக பேசுவதில்லை, ஆங்கிலம் கலந்து அதிகமாக பேசுகிறார்கள்,தமிழில் பேசுவதை இழிவாக கருதுகிறார்கள் என்ற குற்றசாட்டு வரும் போது எல்லாம் முதலில் உருட்டப்படும் தலை டிவி தொகுப்பாளர்கள்.
டிவி தொகுப்பாளர்கள் என்றவுடன் இந்த மியூசிக் சேனலில் விளம்பரத்துக்கும் பாட்டுக்கும் இடையில் வரும் யுவன் யவதி மனதில் தோன்றிவிடுவார்கள்.இவர்களை திட்ட தோன்றும் நமக்கு நல்ல தமிழ் உச்செரிப்புடன் பேசும் சிலரை பாராட்ட தோன்றுவது இல்லை.இவர்களுக்கு இடையில் அவ்வபோது சில நல்ல தமிழ் உச்செரிப்புடன் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.அப்படி எனக்கு பிடித்த,என்னை கவர்ந்த சிலரை பற்றி உங்களுடன் சின்ன பகிர்வு..
முதலில் சன் டிவியில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி ஆனந்த கீதன். இவர் சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.இவர் கொஞ்சம் ரபி பெர்னார்ட் சாயலில் இருப்பார்.இவர் கொஞ்சும் தமிழில் பேசுவது மிக கவர்ச்சியாய் இருக்கும்.ஆண்டுகள் பல கடந்து விட்ட போதும் இவரது தமிழும் முகமும் நினைவில் இருந்தாலும் இவரது புகை படம் கிடைக்கவில்லை.
அடுத்து லலிதாவின் பாட்டுக்கு பாட்டு B.H ஹப்துல் ஹமீது.
இவர் இலங்கை வானொலியில் பணி புரிந்து ஏற்கனவே புகழ் பெற்று இருந்தாலும் எனக்கு அறிமுகம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் தான்.இவர் நிகழ்ச்சியில் பாட வருவபரின் முகவரியை கூறும் போது "இலக்கம் 14 இன் கீழ் 2 (14/2)" என்று கூறுவதை பல முறை வியந்து ரசித்து உள்ளேன்.நிகழ்ச்சியின் இடையில் "மணி ஒலித்தது 'க' குறில் என்றாலும் நீங்கள் பாட வேண்டிய எழுத்து 'க' குறில் அல்ல 'கா' நெடில்" என்ற வாசகத்திற்கு நான் கொஞ்சம்(நிறைய) அடிமை.இவர் குரலில் உள்ள வசீகரம் இன்றும் ஆச்சிரியம் அளிக்கிறது.
அடுத்ததாக நேருக்கு நேர் (நேர்முகம் )- ரபி பெர்னார்ட்
முதலில் சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியின் நேர்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரான ரபி பெர்னார்ட். சில வருடங்களுக்கு முன்பு நேருக்கு நேர் இவர் பேட்டி என்றாலே சரியான சூடு பறக்கும்.
ஆனால் இவர் மிக பொறுமையாக கேள்விகளை கேட்பார். அதுவும் இவரது "இப்போது பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிற செய்திகளை பார்த்தோமேயானால்" என கூறுவது மிக அழகாக இருக்கும். இவரது தமிழ் உச்செரிப்பு மிக அருமையாய் இருக்கும்.
அடுத்ததாக நேருக்கு நேர் வீர பாண்டியன்.
சன் டிவியில் இருந்து ரபி பெர்னார்ட் சென்றதும் இவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தார். இவர் ஒரு கேள்வி கேட்கும் போது மிக இலகுவாக சொல்வார்."இது செவி வழி செய்திதான் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை" என்று. இவர் எனக்கு கற்று தந்த புதிய சொற்றொடர் "செவி வழி செய்தி".
அடுத்ததாக நீயா நானா - கோபிநாத்
இவர் முதலில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் தொடங்கி பின் நீயா நானா மூலம் பிரபலம் ஆனவர்.இவர் பேசும் போது அந்த வார்த்தையில் உணர்வோடு பேசவது போல் இருக்கும்.அந்த கால் மாத்திரை ,அரை மாத்திரை அளவோடு பேசுவார் என்று தோன்றுகிறது. இவர் சொல்லும் "மனசு வலிக்கலையா" என்பது நிஜமாய் கொஞ்சம் வலிப்பது போல் தோன்றும்.இவர் சொல்லி கொடுத்த புதிய வார்த்தை "மெனகெடல்" .
இதை எழுதிய பிறகு நானே எனக்கு கேட்டுகொண்ட கேள்வி.
"இந்த மெனகெடல் தேவை தானா "
Labels:
சொந்த கதை(சுய புராணம்)
மிடில் கிளாஸ் மனசு - 2
எல்லாரும் என்கிட்ட சொன்னாங்க..கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் நீ பதிவு போடவே போறது இல்லைன்னு..அப்ப நான் நினைச்சேன் நம்ப கல்யாணத்தின் போது ஏற்படும் மன அதிர்வை அப்படியே பதிவை போட்டு விட்டா போச்சு இது என்ன பெரிய விசயம்னு.ஆனா இப்ப அதை பத்தி போட வேண்டாம்னு தோணுது. இருந்தாலும் எனது Recepetion அன்று ஏற்பட்ட சின்ன மன அதிர்வலையை இங்கே பதிவு செய்கிறேன்.
எங்களுது திருமணத்தில் கும்பிட்டு கட்டி கொள்ளுதல் என்ற வழக்கம் உள்ளது. அனைவரது காலில் விழ வேண்டும்.பெரியவர் காலில் விழுவது ஒன்றும் தவறு இல்லை என்றாலும் எனது உடல் வாகு கொஞ்சம் இந்த நிகழ்வை தவிர்க்க விரும்பியது.(எனது மனைவி என்னை போலவே குண்டு என்பதால் அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்க வேண்டும் ).ஆனால் இதை திருமணத்தில் தவிர்க்க இயலாது என்பது நான் அறிந்ததே.தவிர்க்கவும் முடியவில்லை. இதனால் இதை Recepetion -இல் செய்ய கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.Recepetion கோபியில் என்பதால் இதை கோபி மக்கள் எதிர் பார்க்கவும் இல்லை. அங்கு இருந்த எங்களது சில உறவினர்கள் இதை எதிர் பார்த்து இருந்தனர் என்பதை நான் அறிந்தேன்.இருந்தாலும் நான் சுனா பானவா இருந்துவிட்டேன். அப்போது எனக்கு ஏழாம் வகுப்பில் இருந்து +2 வரை புத்தகமும் M.Sc வரை நோட் இலவசமாய் குடுத்த சரஸ்வதி டீச்சர் நடக்க முடியாமல் நடந்து வருவது தெரிந்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது இந்த டீச்சர் வந்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்தது. அந்த டீச்சர் என் அருகே வருவதற்கு முன் நான் சென்று அந்த டீச்சரை கை பற்றி அழைத்து வந்தேன். கை தூக்கி விட்ட டீச்சர் மட்டும் அல்ல அவர் நான் என் காலரையும் தூக்கி இருக்கும் படி செய்த டீச்சர்.அவர் எங்களுக்காக கொண்டு வந்த பரிசை திறக்க முற்பட்டார் நானும் அவருக்கு அதை பிரிக்க உதவி செய்ய அது ஒரு சாமி படம். நல்ல பொருத்தமான படம். என்ன படம்னு கேட்காதிங்க..படத்தை பாருங்க..இந்த சமயத்தில் மனதில் மறுபடி ஒரு போராட்டம்.நான் இப்போது இவர் காலில் விழுந்தால் எனது உறவினர்கள் என்னை தப்பாய் நினைப்பார்கள்.என்ன செய்வது..அதற்காக இவர் காலில் விழாமலும் இருப்பது என்பது எனக்கு கஷ்டமாய் இருக்க கூடும்.எப்படியும் இவர் காலில் விழுவது என்று முடிவு செய்து அவரை என் இருக்கை வரை அழைத்து வந்து திரும்பினால் நான் கடன் வாங்கிய எனது உறவினர் ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து சிரித்த படி இருக்கிறார்.அவரில் காலில் விழாமல் என் டீச்சர் காலில் விழலாமா என்று யோசித்த நிமிடத்தில் என் சிந்தனை தகர்த்தது காமெராவின் பிளாஷ். எனது சரஸ்வதி டீச்சர் வழக்கம் போல் என்னிடம் குரு தட்சணை வாங்காமல் நகர்ந்து சென்றார்.நானும் அடுத்த போட்டோவிற்கு போஸ் குடுக்க (வெட்கமில்லாமல்) சிரித்த படி தயார் ஆனேன்.
இது ஒரு மிக பெரிய நிகழ்வு அல்ல.ஆனால் இது போல் நிறைய சின்ன நிகழ்வுகள் நடந்த படியே கழிகிறது நாட்கள். இது ஏன் என்று பதில் நோக்கிய கேள்விகள்..
நான் விரும்பியதை செய்ய முற்படுவதை விட பிறர் விரும்பாததை (விரும்பாதது என்று நான் நினைப்பதை) செய்யாமல் இருபத்திலேயே வாழ்கை கழிந்து விடுமா.
அது மட்டும் இல்லை என் உறவினர்கள் இல்லாவிடில் அவர் காலில் விழுந்து இருக்கலாம் என்று என்னை நானே ஏமாற்றி நல்லவன் போல் கட்டி கொள்கிறேனா என என்னுள் தொடரும் கேள்விக்கு நடுவில் சினுங்குகிறது என் செல்போன்.பேச்சின் தொடகத்தில் முடிந்து போகிறது பதில் தேடும் பயணம்..
இந்த பதிவு ஒன்னும் பாவ விமோசனம் இல்லை.இதை வெளிப்படையாய் சொல்லுவதில் ஒரு சின்ன மன நிறைவு.அப்பறம் நான் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு ஒரு பில்ட் அப்.அவ்வளவு தான்
எங்களுது திருமணத்தில் கும்பிட்டு கட்டி கொள்ளுதல் என்ற வழக்கம் உள்ளது. அனைவரது காலில் விழ வேண்டும்.பெரியவர் காலில் விழுவது ஒன்றும் தவறு இல்லை என்றாலும் எனது உடல் வாகு கொஞ்சம் இந்த நிகழ்வை தவிர்க்க விரும்பியது.(எனது மனைவி என்னை போலவே குண்டு என்பதால் அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்க வேண்டும் ).ஆனால் இதை திருமணத்தில் தவிர்க்க இயலாது என்பது நான் அறிந்ததே.தவிர்க்கவும் முடியவில்லை. இதனால் இதை Recepetion -இல் செய்ய கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.Recepetion கோபியில் என்பதால் இதை கோபி மக்கள் எதிர் பார்க்கவும் இல்லை. அங்கு இருந்த எங்களது சில உறவினர்கள் இதை எதிர் பார்த்து இருந்தனர் என்பதை நான் அறிந்தேன்.இருந்தாலும் நான் சுனா பானவா இருந்துவிட்டேன். அப்போது எனக்கு ஏழாம் வகுப்பில் இருந்து +2 வரை புத்தகமும் M.Sc வரை நோட் இலவசமாய் குடுத்த சரஸ்வதி டீச்சர் நடக்க முடியாமல் நடந்து வருவது தெரிந்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது இந்த டீச்சர் வந்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்தது. அந்த டீச்சர் என் அருகே வருவதற்கு முன் நான் சென்று அந்த டீச்சரை கை பற்றி அழைத்து வந்தேன். கை தூக்கி விட்ட டீச்சர் மட்டும் அல்ல அவர் நான் என் காலரையும் தூக்கி இருக்கும் படி செய்த டீச்சர்.அவர் எங்களுக்காக கொண்டு வந்த பரிசை திறக்க முற்பட்டார் நானும் அவருக்கு அதை பிரிக்க உதவி செய்ய அது ஒரு சாமி படம். நல்ல பொருத்தமான படம். என்ன படம்னு கேட்காதிங்க..படத்தை பாருங்க..இந்த சமயத்தில் மனதில் மறுபடி ஒரு போராட்டம்.நான் இப்போது இவர் காலில் விழுந்தால் எனது உறவினர்கள் என்னை தப்பாய் நினைப்பார்கள்.என்ன செய்வது..அதற்காக இவர் காலில் விழாமலும் இருப்பது என்பது எனக்கு கஷ்டமாய் இருக்க கூடும்.எப்படியும் இவர் காலில் விழுவது என்று முடிவு செய்து அவரை என் இருக்கை வரை அழைத்து வந்து திரும்பினால் நான் கடன் வாங்கிய எனது உறவினர் ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து சிரித்த படி இருக்கிறார்.அவரில் காலில் விழாமல் என் டீச்சர் காலில் விழலாமா என்று யோசித்த நிமிடத்தில் என் சிந்தனை தகர்த்தது காமெராவின் பிளாஷ். எனது சரஸ்வதி டீச்சர் வழக்கம் போல் என்னிடம் குரு தட்சணை வாங்காமல் நகர்ந்து சென்றார்.நானும் அடுத்த போட்டோவிற்கு போஸ் குடுக்க (வெட்கமில்லாமல்) சிரித்த படி தயார் ஆனேன்.
இது ஒரு மிக பெரிய நிகழ்வு அல்ல.ஆனால் இது போல் நிறைய சின்ன நிகழ்வுகள் நடந்த படியே கழிகிறது நாட்கள். இது ஏன் என்று பதில் நோக்கிய கேள்விகள்..
நான் விரும்பியதை செய்ய முற்படுவதை விட பிறர் விரும்பாததை (விரும்பாதது என்று நான் நினைப்பதை) செய்யாமல் இருபத்திலேயே வாழ்கை கழிந்து விடுமா.
அது மட்டும் இல்லை என் உறவினர்கள் இல்லாவிடில் அவர் காலில் விழுந்து இருக்கலாம் என்று என்னை நானே ஏமாற்றி நல்லவன் போல் கட்டி கொள்கிறேனா என என்னுள் தொடரும் கேள்விக்கு நடுவில் சினுங்குகிறது என் செல்போன்.பேச்சின் தொடகத்தில் முடிந்து போகிறது பதில் தேடும் பயணம்..
இந்த பதிவு ஒன்னும் பாவ விமோசனம் இல்லை.இதை வெளிப்படையாய் சொல்லுவதில் ஒரு சின்ன மன நிறைவு.அப்பறம் நான் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு ஒரு பில்ட் அப்.அவ்வளவு தான்
Labels:
சொந்த கதை(சுய புராணம்)
சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம்
எதையாவது பதிவு செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த விட்டாலும் மனதுக்கு பிடித்த குறிப்பாக பாதித்த விசயமாக தேடி கொண்டிருந்தேன்.அப்போது எப்படியோ இந்த சூர்யாவின் அகரம் அடித்தளம் (Agaram Foundation) நினைவுக்கு வர கடந்த பொங்கல் அன்று விஜய் டிவி யில் வெளியான சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம் பகுதியை இணைத்து உள்ளேன்.இது பழைய விஷயம் இருந்தாலும் ஒதுக்கிவிட மனம் இல்லை ஏன் என்றால் நான் ஒன்றும் பரபரப்பு நியூஸ் சேனல் வைத்து இருக்கவில்லை.
இதை எப்போது பார்க்கும் போதும், எனது சில அனுபவங்களை வேறு சிலரின் வார்த்தைகளில் கேட்பது போல் தோன்றும்.முகங்கள் மட்டும் தான் இங்கு மாறுகின்றன.வலிகள் அப்படியே தான் இருக்கின்றன. எனது கல்விக்கு உதவி செய்த சரஸ்வதி டீச்சர்,கண்ணம்மா டீச்சர்,கண்ணபிரான் சார்,போன்றவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
இதை எப்போது பார்க்கும் போதும், எனது சில அனுபவங்களை வேறு சிலரின் வார்த்தைகளில் கேட்பது போல் தோன்றும்.முகங்கள் மட்டும் தான் இங்கு மாறுகின்றன.வலிகள் அப்படியே தான் இருக்கின்றன. எனது கல்விக்கு உதவி செய்த சரஸ்வதி டீச்சர்,கண்ணம்மா டீச்சர்,கண்ணபிரான் சார்,போன்றவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
Labels:
பாதித்ததும் பதிந்ததும்
மழையும் மழை சார்ந்த படமும்
(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)
இந்த படங்கள் எனக்குள் நிஜ மழை காலத்தை மட்டும் ஞாபகம் படுத்தவில்லை அதனுடன் சேருந்த உணர்வுகளான பயம்,அமைதி,ஆக்ரோஷம்,குளிர்,போன்ற பல உணர்வுகளை வெளிபடுத்தியது.
உங்களுடன் ஒரு பகிர்வு
(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)
இந்த படங்கள் எனக்குள் நிஜ மழை காலத்தை மட்டும் ஞாபகம் படுத்தவில்லை அதனுடன் சேருந்த உணர்வுகளான பயம்,அமைதி,ஆக்ரோஷம்,குளிர்,போன்ற பல உணர்வுகளை வெளிபடுத்தியது.
உங்களுடன் ஒரு பகிர்வு
(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)
Labels:
நண்பர்களின் படைப்புகள்
எல்லார் ரத்தமும் அயோத்தியில் ஓடட்டும் !
(நன்றி: கல்கி இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)எல்லார் ரத்தமும் அயோத்தியில் ஓடட்டும் ! |
ஒவ்வொரு பண்டாரமும் தனித்தனியே காட்டியது வெவ்வேறு இடம். நம் ஊர் நடைபாதை கோவில் சைசில் இருக்கும் குட்டிக் கோவிலைக் காட்டி இதுதான் ராமர் பிறந்த இடம் என்று ஒவ்வொரு பண்டாரமும் சத்தியம் செய்து தட்சிணையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு பண்டாரம் கூட நண்பர்களை, பாபர் மசூதி இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. இதுதான் 1983ல் அயோத்தி நிலைமை. அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் எம்.பி. தொகுதியில் 80கள் வரை தொடர்ந்து ஜெயித்தவர்கள் காங்கிரசார், கம்யூனிஸ்ட்கள்.
கடவுளான ராமர் மனிதராகப் பிறந்து வாழ்ந்தது புராணங்களின்படி சுமார் எட்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு. ஆனால் அயோத்தியில் மனிதர்கள் குடியேறியே 2800 வருடங்கள்தான் ஆகின்றன. எனவே ராமர் பிறந்த இடம் இந்த அயோத்தி என்பதும், இந்த அயோத்தியில் இந்த இடத்தில்தான் என்பதும் நிரூபிக்கக் கூடிய விஷயங்களே அல்ல. முழுக்க முழுக்க நம்பிக்கை மட்டுமே சார்ந்தவை. இதைப் பற்றி எந்த நீதிபதியும் தீர்மானமாகத் தீர்ப்பு வழங்கவே முடியாது. வழங்கினாலும், அது அவர் நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டதென்றுதான் பார்க்கவேண்டும். சட்ட சாட்சியங்களுக்கு அது அப்பாற்பட்டது.
எந்தத் தொழிலில் இருப்பவர்களும் அவரரவர் நம்பிக்கைகளுடன்தான் இருக்கிறார்கள். அதில் சிலர், ஓய்வு பெற்றபிறகு ஏதேனும் ஓர் அமைப்பில் சேர்கிறார்கள். அது அவ்ர்களின் நம்பிக்கைகளின் தொடர்ச்சி. யாருக்கும் திடீரென்று 60 வது வயதில் ஒரு கொள்கைப்பிடிப்பு வந்துவிடுவதில்லை. சுமார் 25,30 வயதிலிருந்தே உருவான ஈர்ப்பு அடுத்த சில வருடங்களில் வலுவடைந்து விடுகிறது. பின்னர் சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப சிலர் நேரடி அரசியலில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரான நய்யார்தான் அயோத்தி பிரச்சினை சுதந்திர இந்தியாவில் 1949 டிசம்பரில்முற்றி வெடிக்க உதவியவர்.
அது சுதந்திரம் பெற்றபோது செய்த பிரிவினையால் உருவான ஹிந்து முஸ்லிம் கலவரங்களால் பேரிழப்புகள் ஏற்பட்ட நேரம். காந்தி ஒரு ஹிந்துமத வெறியனால் கொல்லப்பட்டு 23 மாதங்கள்தான் ஆகியிருந்தன. நேருவின் அரசு வட இந்தியாவில் தொடர்ந்து மத மோதல்கள் நிகழாமல் தடுக்கப் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருந்த நேரம்.
டிசம்பர் 23ந்தேதி மாலைத் தொழுகை முடிந்தபிறகு, நள்ளிரவு பாபர் மசூதிக்கு ஒரு கும்பல் வந்து அதன் திண்ணையில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை வைத்துவிட்டுச் சென்றது. அங்கிருந்த 12 போலீசார் அதைத் தடுக்கவில்லை. இதை மத்திய அரசுக்குத் தெரிவித்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ( கலெக்டர்) கே.கே.நய்யார், மசூதியை இழுத்துப் பூட்டி இனி அங்கே தொழுகை நடக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் அத்து மீறி வைக்கப்பட்ட சிலைகளை எடுக்கவில்லை. இது பற்றிக் கவலைப்பட்ட பிரதமர் நேரு, மாநில முதல்வர் ஜி.பி.பந்த்திடமும் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலிடமும் தன் கவலைகளைத் தெரிவித்தார்.
அப்போது நய்யார் உடனடியாக சிலைகளை அகற்றிவிட்டு அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் அது நய்யார் விரும்பிய வரலாறல்ல. பதவியை ராஜினாமா செய்துவிட்டு நய்யார் ஜனசங்கம் கட்சியில் சேர்ந்து அதன் எம்.பி.வேட்பாளராகி ஜெயித்தார். ஜனசங்கம் போலவே ஆர்.எஸ்.எஸ்சின் ஆசி பெற்ற இன்னொரு அமைப்பான விஸ்வ ஹிந்து பரீஷத்தின் பிரமுகரான பி.பி.சிங்கால் , அயோத்தி இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காவல் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றதும் ப்.ஜே.பி. ராஜய சபை எம்.பி ஆனார். இவர் சகோதரர் அசோக் சிங்கால்தான் விஸ்வ ஹிந்து பரீஷத்தின் தலைவர்.
பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம்,1940களிலிருந்து ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் சுமார் 40 வருட காலம் வெளியில் தெரியாமல் மௌனமாக இயங்கி வந்திருக்கிறது. ஆட்சி அதிகார மீடியா அமைப்புகளில் ஊடுருவியிருக்கும் அனுதாபிகளின் உதவியுடன், ஒவ்வொரு அடியாக இது எடுத்து வந்திருக்கிறது. உ.பி.மாநில ஆட்சியை பாரதிய ஜனதா பிடித்தபின்னர், பகிரங்கமாகச் செயல்பட்டு அத்வானி தலைமையில் கல்யாண்சிங், நரசிம்மராவ் உதவியுடன் மசூதியை இடித்து சிலைகளை தாங்கள் விரும்பிய இடத்திலேயே வைத்துவிட்டனர். இனி கோவில் கட்டுவதுதான் அவர்களைப் பொறுத்த மட்டில் பாக்கி இருக்கும் விஷயம்.
அதற்கு முழு நிலமும் தேவை. இப்போது அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு, மூன்றில் இரு பங்கு நிலத்தை ராமர் கோவில் ஆதரவு அமைப்புகளுக்கு சட்டப்படி அளிக்கிறது. இனி வரும் மாதங்களில் ஆர்.எஸ்.எஸ் செய்யப்போகும் பிரசாரம் என்னவாக இருக்கும் என்று எளிதாக யூகிக்கலாம். 1. நீதிமன்றமே அந்த இடம் ராமர் பிறந்த இடம்தான் என்று சொல்லிவிட்டது. 2. அங்கே இருந்த பிரும்மாண்டமான ராமர் கோவிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றம் சொலிவிட்டது. 3. எனவே மறுபடியும் பிரும்மாண்டமான ராமர் கோவிலைக் கட்ட வசதியாக தங்களுக்கு தரப்பட்ட மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து கொடுத்து, மத நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும். இதுதான் நடக்கத் தொடங்கியுள்ள, வலுவடையப்போகிற பிரசாரம்.
மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று மூன்று நீதிபதிகளில் ஒருவரான தர்மவீர் சர்மா அடித்துச் சொல்லியிருக்கிறார். மீதி இரு நீதிபதிகளும் அது ஒரு நம்பிக்கை என்று சொல்லியிருக்கிறார்கள். நீதிபதி சர்மாவோ, தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ‘ராமராகப். பிறந்தவர் ஒரு கடவுள். தெய்வாம்சம் என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது. எந்த இடத்திலும் யாரும் அதற்கு வடிவம் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது வடிவம் கொடுக்காமலே கூட வழிபட்டுக் கொள்ளலாம்’ என்று ஒரு குழப்பமான வாக்கியத்தை சொல்லிவிட்டு, மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று சொல்லிவிடுகிறார்.
இதன்படி கருணாநிதி நகரில் அய்யப்பன் கோவில் வாசலில் ஒரு வருடமாக நாற்சந்ந்தி நடைபாதையை ஆக்ரமித்து உண்டியல் சகிதம் உருவாகி வரும் கோவிலை, தப்பித்தவறி நாளைக்கு மாநகராட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இடித்தால், ஆக்ரமித்தவர் அலகாபாத் தீர்ப்பை மேற்கோள் காட்டி எங்கும் இருக்கும் தெய்வாம்சத்தைத் தான் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் நிறுவி வழிபடலாம் என்று சட்டப்படி வாதாடி, வெற்றி கூடப் பெறமுடியும்.
அனுமன் பக்தராஅன நீதிபதி சர்மா,. திருமணமாகாதவர். தன் உணவை தானே சமைத்து சாப்பிடும் ஆசாரமான பழக்கம் உடையவர். தன் நம்பிக்கைகளுக்கேற்ப அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றுதான் பார்க்க முடியும். நிலத்தை மூவருக்கும் பிரித்துத் தருவதையே அவர் ஆதரிக்கவில்லை. இன்னொரு நீதிபதி அகர்வால், முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கேனும் தரவேண்டும் என்கிறார். இன்னொரு நீதிபதியான உல்லா கான், இஸ்லாமியர். ஹிந்து நம்பிக்கைப் பிரச்சினைகளுக்குள்ளேயே தான் போக விரும்பவில்லை , இதை ஒரு சிவில் சூட்டாக மட்டுமே கருதுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தீர்ப்பில் இதர இஸ்லாமியர்களுக்கு ஒரு நீண்ட வேண்டுகோளை, முகமது நபிகள் வாழ்க்கையிலிருந்து மேற்கோளுடன் வைக்கிறார். வழக்கில் இருக்கும் பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாத பகுதி இது.
பாபர் ஹிந்துக் கோவிலை இடித்தார் என்பதற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை மட்டுமே நீதிபதி சர்மா ஆதாரம் காட்டுகிறார். பி.ஜே.பி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அளித்த அந்த அறிக்கையின் பல ஓட்டைகளை அப்போதே இதர தொல்லியல் அறிஞர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஹிந்துக்கள் மனம் புண்படும்; எனவே நீ மாட்டுக் கறி சாப்பிடவேண்டாம் என்று மகன் ஹுமாயுனுக்கு உயிலில் எழுதிய பாபர், ஹிந்துக் கோயிலை இடித்திருப்பாரா என்பதே கேள்விக்குரியதுதான். இடித்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சில விதி விலக்குகளைத் தவிர, ஒவ்வொரு மன்னனும் தன் நம்பிக்கைக்கேற்ப ஒரு மதத்தை ஆதரித்து இன்னொரு மதத்தினரை துன்புறுத்தினான் என்பதுதான் நம் முழு மன்னராட்சி வரலாறு.
கோவிலை இடித்து மசூதி கட்டுவது இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதால், கட்டப்பட்டது மசூதியே அல்ல என்று ஒரு விசித்திரமான வாதத்தையும் நீதிபதி சர்மா சொல்லுகிறார். இன்னொருத்தர் வழிபாட்டு இடத்தை இடிப்பது இஸ்லாமிய நெறிகளுக்கு மட்டும்தான் முரணானதா? ஹிந்து, கிறித்துவ, பௌத்த மதங்களெல்லாம் அதை ஆதரிக்கிறதா? ஏனென்றால் இப்போது மறுபடியும் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு, வழிபாடு நடந்து வந்த மசூதிதானே இடிக்கப்பட்டிருக்கிறது ? இது ஹிந்து மத கோட்பாட்டின்படி சரி என்று நீதிபதி சொல்வதாகப் பொருள் கொள்ளமுடியுமா? எந்த மத நெறிப்படியும் இன்னொரு மத வழிபாட்டிடத்தை இடித்தோ சிதைத்தோ தங்கள் வழிபாட்டிடத்தை கட்டக் கூடாது என்றால், இந்தியாவில் எத்தனை கோவில்கள், மசூதிகள், தேவலாயங்கள் மிஞ்சும் ?
பூரி ஜகந்நாதர் ஆலயமே பௌத்த விஹாரத்தை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று சுவாமி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். பூரியில் மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆலயங்கள் பலவும் முன்னர் பௌத்த விஹாரங்களாக இருந்தவைதான் என்பதற்கு தெளிவான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. சிருங்கேரியில் ஆதி சங்கரர் மடம் கட்டிய இடம் புத்த விஹாரத்தை இடித்துத்தான். ராஜராஜ சோழன் இலங்கையில் சிங்களர்களை வென்றதும், அங்கிருந்த புத்த விஹாரங்களை இடித்து, சைவக் கோயில்களாக மாற்றினான் என்பதும் சரித்திரம்தான். இனி பௌத்தர்கள் இயக்கம் நடத்தி இவற்றையெல்லாம் இடித்து மறுபடி பௌத்த விஹாரங்களாக ஆக்கவேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனால், சர்மாவின் முன்மாதிரித் தீர்ப்பின்படி இடிக்க ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.
இது ஒரு சிவில் வழக்கு. இந்த நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று மூன்று பேர் கோருகிறார்கள். யாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பு தரவேண்டும். இதை விட்டு விட்டு தேவையற்ற விஷயங்களுக்குள் எல்லாம் தலையை நுழைத்து, குழப்பத்தையும் தொடர்ந்து இன்னும் 50 வருடங்களுக்கு மோதலையும் உருவாக்கக்கூடிய ஆபத்தான தீர்ப்பே அலகாபாத் தீர்ப்பு.
நான் நீதிபதியாக இருந்தால், இந்த நிலம் எந்த தனியாருக்கும் தனி அமைப்புக்கும் சொந்தமானதில்லை என்பதுதான், என் தீர்ப்பாக இருக்கும். வெவ்வேறு ஆட்சிக் காலத்தில் அந்தந்த ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப வழங்கப்பட்டவற்றை, ஜனநாயக ஆட்சி பொருட்படுத்த வேண்டியதே இல்லை. மொத்த நிலமும் இன்றைய குடியரசுக்குரியது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது இந்திய அரசின் பொறுப்பு என்று தீர்ப்பளிப்பேன்.
அரசுக்கு ஆலோசனையும் சொல்லுவேன். எல்லா இந்தியர்களுக்கும் மொழி, சாதி, மதம், இனம் கடந்து பயன்படக்கூடிய பொது மருத்துவமனையை அங்கே கட்டுங்கள். எல்லார் ரத்தமும் அங்கே ஓடட்டும் — இன்னொருவருக்குப் பயனுள்ள விதத்தில், ரத்த தானமாக. அல்லது ( எனக்கு அணு குண்டில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிரச்சினைக்கு தீர்வாக), அங்கே பொக்ரான் – 3 அணுவெடிப்பு சோதனையை நடத்துங்கள். எந்த தேசபக்தரும் ஆட்சேபிக்கவே மாட்டார்கள். சோதனைக்குப் பின் ஒரு பயலும் அந்த நிலத்தின் பக்கமே போகமாட்டான். கடவுளை விட கதிர்வீச்சுக்குத்தான் அதிகம் பயப்படுவார்கள் !
(நன்றி: கல்கி இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)
Labels:
பாதித்ததும் பதிந்ததும்
நான் ஒரு முட்டாளுங்க...
.
(Photo Courtesy:Mr.Muthulingam,Hyderabad)
சுய முன்னேற்றம் குறித்த புத்தகம் படிப்பதை நானும் அவவ்போது செய்து வருகிறேன்.அதை படிக்கும் போது எதோ நாளை முதல் இதன் படி நடந்தால் வெற்றி நமதே என்பது போல் தெரியும்.ஆனால் அது படித்த பிறகு தான் மிக்க பெரிய குழப்பமே ஆரம்பம் ஆகும் எனக்கு..
சில புத்தகம் "ஒரு விஷயத்தை பற்றி தெரியாம அந்த விசயத்தில் இறங்க கூடாது" என்பது போல் அறிவுரைகள் சொல்லும்.இறுதியில் ஆழம் தெரியாம காலை விட கூடாது என்பது போல் அதன் கருத்து இருக்கும். ஓகே என்று ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் பற்றி அறிய முற்பட்டால் அதில் உள்ள ரிஸ்க் பற்றி தெரிந்து வேண்டாம் என்று முடிவு செய்வேன்.அப்போது அடுத்த ஒரு தலைப்பில் சொல்லப்பட்ட " லைப்-ல ரிஸ்க் எடுக்காட்டி ஜெயிக்க முடியாது என்று இருந்தது ஞாபகம் வரும்.இப்ப மறுபடியும் குழப்பம் ஸ்டார்ட் ஆகிவிடும் ..இதுல எது சரின்னு என்று மண்டய பிச்சுக்க வேண்டி இருக்கும்.
சரி இது பற்றி நம்ப நண்பர்களிடம் அல்லது பெரியவர்களிடம் முழு கதையை சொல்லி அறிவுரை கேட்டா அவங்க Take Calculative Risk அப்படின்னு ஒரு புது வார்த்தையை சொல்லி இன்னும் குழப்பிடுவாங்க.
Calculative risk எப்படி எடுக்கனும்? ? நான் எடுக்கற Calculative risk சரியானு எப்படி தெரியும்? போன்ற கேள்விக்கு பதில் தெரியாம நான் முழிச்சுகிட்டு இருப்பேன்..
அப்பறமா ஒருத்தன் " நீ ஜெய்சிட்டா அது சரியான Calculative risk.இல்லாட்டி அது தப்பான Calculative risk " அப்படின்னு பொசுக்குனு சொல்லிப்புட்டான் பாவி பய புள்ள..
இது தெரியாம மதில் மேல் பூனை மாதிரி இருந்த நான் ஒரு முட்டாளுங்க ...
(Photo Courtesy:Mr.Muthulingam,Hyderabad)
சுய முன்னேற்றம் குறித்த புத்தகம் படிப்பதை நானும் அவவ்போது செய்து வருகிறேன்.அதை படிக்கும் போது எதோ நாளை முதல் இதன் படி நடந்தால் வெற்றி நமதே என்பது போல் தெரியும்.ஆனால் அது படித்த பிறகு தான் மிக்க பெரிய குழப்பமே ஆரம்பம் ஆகும் எனக்கு..
சில புத்தகம் "ஒரு விஷயத்தை பற்றி தெரியாம அந்த விசயத்தில் இறங்க கூடாது" என்பது போல் அறிவுரைகள் சொல்லும்.இறுதியில் ஆழம் தெரியாம காலை விட கூடாது என்பது போல் அதன் கருத்து இருக்கும். ஓகே என்று ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் பற்றி அறிய முற்பட்டால் அதில் உள்ள ரிஸ்க் பற்றி தெரிந்து வேண்டாம் என்று முடிவு செய்வேன்.அப்போது அடுத்த ஒரு தலைப்பில் சொல்லப்பட்ட " லைப்-ல ரிஸ்க் எடுக்காட்டி ஜெயிக்க முடியாது என்று இருந்தது ஞாபகம் வரும்.இப்ப மறுபடியும் குழப்பம் ஸ்டார்ட் ஆகிவிடும் ..இதுல எது சரின்னு என்று மண்டய பிச்சுக்க வேண்டி இருக்கும்.
சரி இது பற்றி நம்ப நண்பர்களிடம் அல்லது பெரியவர்களிடம் முழு கதையை சொல்லி அறிவுரை கேட்டா அவங்க Take Calculative Risk அப்படின்னு ஒரு புது வார்த்தையை சொல்லி இன்னும் குழப்பிடுவாங்க.
Calculative risk எப்படி எடுக்கனும்? ? நான் எடுக்கற Calculative risk சரியானு எப்படி தெரியும்? போன்ற கேள்விக்கு பதில் தெரியாம நான் முழிச்சுகிட்டு இருப்பேன்..
அப்பறமா ஒருத்தன் " நீ ஜெய்சிட்டா அது சரியான Calculative risk.இல்லாட்டி அது தப்பான Calculative risk " அப்படின்னு பொசுக்குனு சொல்லிப்புட்டான் பாவி பய புள்ள..
இது தெரியாம மதில் மேல் பூனை மாதிரி இருந்த நான் ஒரு முட்டாளுங்க ...
Labels:
பார்வைகள் பல விதம்
நன்றி பலமுறை சொன்னேன் படிப்பவர் முன்பே...
இது கொஞ்சம் சுய தம்பட்டம் நிறைய நன்றிகள்.
2009 நவம்பர் 10 ,மாலை மணி ஒரு 5 .40 இருக்கும்.அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல தயார் ஆகி கொண்டு இருந்தேன்.சரி ஒரு முறை இணையத்தை கொஞ்சம் மேய்வோம் என்று என் நண்பனின் மடிக்கணியை எடுத்து அமர்ந்தேன்.எந்த மின்அஞ்சலும் வரவில்லை.சரி நான் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ஒரு பிரச்சனையான Bulk Orkut Scraps பற்றி search செய்ய தொடங்கினேன். கிடைத்த பதில் எதுவும் சரியாக தோன்ற வில்லை.ஒருமுறை எனது சீனியர் ஒருவர் சாட்டிங் போது சொன்ன " உங்கள் வகுப்பு தோழர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு blogspot ஆரம்பிகலாம்" என்ற வாசகம் நினைவு வர உடனே ஒரு டெஸ்ட் ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து வழக்கம் போல் அழகுக்ரிஷ் என டைப் செய்து விட்டேன். அப்போது மணி 6 .30 இருக்கும்.என் உடன் இருந்த பாலாஜி இடம் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டேன்.நான் எனது டைரியில் முதல் பக்கத்தில் எழுதி உள்ள My foot prints ... சாயலில் வேண்டும் யோசித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பாதையும் பதிவும் என மனதில் தோன்ற அது பாலாஜிக்கும் பிடித்து போக பெயர் சூட்டு விழாவும் முடிந்தது.அன்று காலை எனக்கு தோன்றிய வாழ்த்தா! வழக்கமா? கவிதையை பதிந்து விட்டேன். அந்த கவிதையை முதலில் அமைந்து கூட எதேட்சையான ஒரு நிகழ்வு.அப்பறம் எனது ஜூனியர் தினேஷ் ஷங்கர்கு போன் போட்டு கொஞ்சம் ப்ளாக் பற்றி சீனையும் போட்டு விட்டேன்.இதற்கு முன்னால் நான் ஒரு ப்ளாக்கை கூட படித்து இல்லை.அதுவும் நல்லது தான் ஒரு வேலை முன்பே படித்து இருந்தால் ஆரம்பிக்காமல் கூட இருந்து இருப்பேன்.எல்லாம் எதேட்சையாக ஒரு மணி நேரத்தில் முடிந்து விட்டது.இத போய் இப்ப என்னத்துக்கு நீ சொல்லற என்று கேட்பது எனக்கு புரிகிறது. இன்று 2010 நவம்பர் 11.நேற்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. உங்களில் சிலரை போலவே " Even I don't believe numbers,I believe in time & people "
நான் ஆரமித்த போது என் உடன் இருந்தது அப்பறம் பல பதிவுகளுக்கு பிழை திருத்தம் செய்த பாலாஜி,எனது முதல் கவிதைக்கு முதல் பின்னூட்டம் இட்டது மட்டும் அல்லது பலருக்கு இந்த ப்ளாக் -ஐ அறிமுக படுத்தி வரும் தினேஷ் ,சில பதிவுகளை தட்டச்சு செய்ய உதவிய பத்மநாபன்,எதை பற்றி எல்லாம் எழுதலாம் என்று எனக்கு ஆலோசனை கூறும் பிரசன்னா, வேல் ,முத்துலிங்கம் ,சதீஷ்,அறிவு ,அதியமான்,எதை எழுதினாலும் போன் செய்து வாழ்த்தும் அமீர் ,வெங்கடேஷ்,சிலம்பரசன், ராஜேஷ் அப்பறம் blog எப்படி எல்லாம் இருக்கலாம் என்றும் சொல்லி வரும் M .செந்தில் மற்றும் G .செந்தில்.கவிதை அதிகமாக எழுதுங்கள் என்று சொன்ன குமார் ,கவிதை அதிகமாக ரசிக்கும் கலை ,V.R .செந்தில் , இவர்கள் எல்லாம் நண்பர்கள் மற்றும் ஜூனியர்கள்.இவர்கள் என் மீது அன்பு பாராட்டுவதில் மிக பெரிய வியப்பு இல்லை.
ஆனால் ப்ளாக் என்ற வார்த்தையை எனக்கு முதலில் சொன்னத்து மட்டும் இல்லாமல் தொடர்ந்து படித்து தன் கருத்தை பகிர்ந்து வரும் சீனிச்சாமி சார்,சுரேஷ் சார் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்டு படித்து வரும் தேவன் சார் அவர்களின் அன்பில் தான் நான் இன்னும் கொஞ்சம் செருக்கோடு நடக்கிறேன்.
அது மட்டும் இல்லாமல் அல்லாமல் ஊக்க படுத்தும் உள்ளங்களில் இணைந்து உள்ள அண்டோ ,ஷியாமா ,சிவா, பாலா,செல்வா, ரகு ஸ்ரீராம் ஜகதீஷ்,கோதண்டராமன் ,வசந்தன் ,ஈஸ்வர் என பட்டியல் நீளுவது கொஞ்சம் நெகிழ்ச்சியாய் இருக்கிறது. அமைதியாய் படித்து வரும் ரகு,ராகவ் மற்றும் எனது உறவினர் சிவா ,அண்ணன் ராமு ,வைரம் மற்றும் பலர் என்னை பாராட்டி மகிழ்கிறார்கள்.
வேல்முருகன் இதற்காக செய்த உதவி மடிகணினி கொடுத்ததில் தொடங்கி, சாப்ட்வேர் சப்போர்ட்,terror திங்கிங், நான் சொல்லும் கவிதையை சகித்து கொள்வது என பட்டியல் மிக நீளமானது.
இதற்காக என் மீது சிலர் கல் எறியவும் செய்தீர்கள்.அவர்களுக்கு எல்லாம் ஒரு அன்பு கட்டளை நான் காய்த்த மரம் அல்ல வளரும் செடி தான்.
உங்கள் அனனவருக்கும் நன்றி..
பாதையும் பதிவும் தந்த புதிய நண்பர்கள் அமீரும் & முத்துலிங்கமும்..
நீங்கள் பாராட்டாத போது நான்
செல்லரித்து விடவில்லை -ஆனால்
பாராட்டிய போது நிறைய
புல்லரித்து போனேன் என்பது நிஜம்..
இதையும் கடந்து போக தயார் ஆகிறேன்.
Miles to go before I sleep ...
--
With hope & Smile
C.Krishnappan
Labels:
சொந்த கதை(சுய புராணம்)
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
மேக மூட்டமாய் இருப்பதால் வீட்டுக்கு செல்லும் போது மழை வந்து விட கூடாது என்ற எண்ணத்துடனும் வீடு வந்தவுடன் மழையை எதிர் பார்த்து மழை வந்தால...










