

தினமும் இரவு ஒளி பரப்பாகும் ஜீ டிவியில் வரும் நம்பினால் நம்புகள் ,சன் டிவியில் வரும் நிஜம்,விஜய் டிவியில் வரும் நடந்தது என்ன போன்ற நிகழ்சிகளில் எல்லாம் பெரும்பாலும் ஹிந்து மத சடங்குகளையும் அதன் சார்ந்த மூட நம்பிகைகளையும் குறித்து அதிகமாக பேச படுகிறது. கிருஷ்துவ மதத்திலும் முஸ்லிம் மதத்திலும் இருக்கும் நம்பிக்கைகள் குறித்து இதுவரை பேசியதாய் எனக்கு தெரியவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமத்தில் சொன்னது தான் நினைவு வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

""வேறு எந்த மதத்தின் மீது யாரும் கை வைத்து விமர்சனம் செய்து விட முடியாது இந்து மதத்தை செய்ய முடியும் அப்படி செய்த பின்னாடியும் கூட இந்து மதம் நிலைத்து நிற்கிறது என்றால் விமர்சனங்களையும் கடந்து அதன் நியாயம் பரவி இருக்கிறது என்பது பொருள்"







