Showing posts with label சத்தம் போட்டு சொல்லாதே. Show all posts
Showing posts with label சத்தம் போட்டு சொல்லாதே. Show all posts

சத்தம் போட்டு சொல்லாதே - 10

நடந்தது என்ன...நிஜம் ..


தினமும் இரவு ஒளி பரப்பாகும் ஜீ டிவியில் வரும் நம்பினால் நம்புகள் ,சன் டிவியில் வரும் நிஜம்,விஜய் டிவியில் வரும் நடந்தது என்ன போன்ற நிகழ்சிகளில் எல்லாம் பெரும்பாலும் ஹிந்து மத சடங்குகளையும் அதன் சார்ந்த மூட நம்பிகைகளையும் குறித்து அதிகமாக பேச படுகிறது. கிருஷ்துவ மதத்திலும் முஸ்லிம் மதத்திலும் இருக்கும் நம்பிக்கைகள் குறித்து இதுவரை பேசியதாய் எனக்கு தெரியவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமத்தில் சொன்னது தான் நினைவு வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


""வேறு எந்த மதத்தின் மீது யாரும் கை வைத்து விமர்சனம் செய்து விட முடியாது இந்து மதத்தை செய்ய முடியும் அப்படி செய்த பின்னாடியும் கூட இந்து மதம் நிலைத்து நிற்கிறது என்றால் விமர்சனங்களையும் கடந்து அதன் நியாயம் பரவி இருக்கிறது என்பது பொருள்"

சத்தம் போட்டு சொல்லாதே - 9


குமுதம் இதழிலில் வெளி வந்து கொண்டிருந்த ஞாநியின் ஓ பக்கங்கள் இனி மேல் வெளி வராது என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது.அவரின் சில கருத்துக்களை நீக்க சொல்லி குமுதம் கேட்டதாகவும் அவர் மறுத்து விட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவரின் கருத்தை அவரது வலை பக்கத்தில் படித்து விட முடியும் என்றாலும் எனக்கு தோன்றும் கேள்விகள்
1 . இந்தியா டுடே புத்தகத்திற்காக நித்யானந்தா பற்றி அவர் எழுதியதில் இருந்து சிலவற்றை இந்தியா டுடே நீக்கி விட்டு வெளிட்டது என்று கூறி இருந்தாலும் அதில் தன் கருத்தை நீக்கி வெளியட அனுமதிதித்து விட்டு இப்போது மட்டும் கருத்தை நீக்கி வெளியட மறுத்து வெளியேறுவது எதனால் ?
2 . குமுதம் ,விகடன் போன்ற முக்கிய பத்திரிக்கைகள் கூட இப்போது பயப்படுவதால் நமது முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை அவரது வாரிசுகளுக்கு இருக்காதோ என்று அச்சம் கலந்த ஐயம் ஏற்படுகிறது.

ஓ பக்கம் தூரம் ஆனது..இதுவும் கடந்து போகும் என்று நம்புவோமாக!!!

சத்தம் போட்டு சொல்லாதே - 8


மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியாக எடுக்க வேண்டுமா எடுக்க கூடாதா என்று முடிவு செய்ய பிரணாப் தலைமையில் ஒரு குழு அமைக்க பட்டு உள்ளது .ஜெயராம் ரமேஷ் அடுத்தவர் துறையில் தலையிட கூடாது என்று சமீபத்தில் சொன்ன பிரதமர் இபொழுது சிதம்பரம் துறை பற்றி பிரணாப் முடிவு எடுப்பார் என்கிறார்.நல்ல வேடிக்கை இல்ல ...
சிதம்பரம் சாதி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாலும் பிரணாப் வசம் இது ஒப்படைக்க பட்டதாலும் இந்த முறை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எனக்கு தோன்றுகிறது.

சத்தம் போட்டு சொல்லாதே-7


கடந்த சில வாரமாக ஜீ தமிழ் டிவியில் ஞாயிறு அன்று சென்னை மேயர் மா.சுப்ரமண்யம் கலந்து கொண்டு சென்னையின் பிரச்சனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கும் நிகழ்ச்சி ஒரு நல்ல முயற்சி.தமிழகத்தில் இதை பார்ப்பது மகிழ்ச்சி. இதை அனுமதித்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

சத்தம் போட்டு சொல்லாதே -6


தமிழகத்தில் ஒரு புதிய கவலை என்னவென்றால் திருட்டு VCD கிடைப்பது கஷ்டமாகி விட்டது என்று.இந்த ஆயிரத்தில் ஒருவன் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் கொடுத்த புகார் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.கலைஞரின் அடுத்த அடுத்த வாரிசுகள் எல்லாம் படம் எடுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அது அப்படி இருந்தால் ஒரு சட்டம் கடுமையாக பின்பற்ற காரணமாய் இருக்கும் கலைஞரின் அடுத்த அடுத்த வாரிசுகளுக்கு நன்றி நன்றி...

சத்தம் போட்டு சொல்லாதே-5

மும்பை எல்லாருக்கும் பொதுவானது என்று உரக்க சொல்லிருக்கிறார்கள் காங்கிரஸ் ப.சிதம்பரம் & பிஜேபி தலைவர்கள் என்று பெருமிதம் கொள்ள வேண்டாம்.

பீகார் மாநிலத்தவர் மும்பையில் தாக்கப்பட்ட போது சொல்லவில்லை...
வட மாநிலத்து மாணவர்கள் வங்கி பணியாளர் தேர்வு எழுத
மும்பை வந்து ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட போது சொல்லவில்லை...
அது ஏன் சச்சின் நான் முதலில் இந்தியன் பிறகு தான் மும்பைவாசி என்ற போது சேனா படை அவரை வசை பாடிய போது கூட பேசாத இவர்கள் இப்போது பேச காரணம்...



முகேஷ் அம்பானி...சொன்னதை வழி மொழிந்துள்ளார்கள்...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
பட்ஜெட்ல கூட இது தான் நடக்குதா...

சத்தம் போட்டு சொல்லாதே-4


வரும் 26 -ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல்.
முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் போரை நடத்த சொன்ன மஹிந்த ராஜபட்கச்சே
மற்றொருவர் போரை நடத்திய தளபதி சரத் பொன்சேகா
இவர்களில் யாரோ ஒருவர் வெற்றி பெற போகிறார்கள்.
யார் வெற்றி பெற வேண்டும் ?? யார் வெற்றி பெற்றால் தமிழருக்கு லாபம் ?
யாம் அறியேன் பரா பரமே!!
நீயே சொல்லடி சிவசக்தி!!

சத்தம் போட்டு சொல்லாதே-3


ஒரு கட்சி அதிர்ஷ்டம் தான் நாட்ட காப்பாத்துது என்று சொல்லுது.
ஒரு கட்சி ஆண்டவன் ராமன் தான் நாட்ட காப்பாத்துது என்று சொல்லுது.
அதிர்ஷ்டமும் ஆண்டவனுமும் தான் நாட்ட காப்பத்தனும் என்றால் அரசு எதுக்கு ?? இதனால் தான் அமெரிக்கா,
பிரிட்டன்,ஆஸ்திரேலியா ,கனடா போன்ற நாடுகள் இந்தியாவிருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளது.

சத்தம் போட்டு சொல்லாதே -2


நான் எதச்சையாக டிவி பார்த்த போது யோகி படம் பற்றி இயக்குனர் அமீர் ,ஒளிபதிவாளர் ,நடிகை மதுமிதா எல்லாரும் ஒரு காட்சி பற்றி சொன்னார்கள்.
மதுமிதா ஒரு குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் காட்சி.
"மதுமிதா தவிர யாரும் இதில் நடிக்க மாட்டார்கள்" என்றார் அமீர்.
"They explained clearly from the beginning.They explained about how they are going take without Vulgarity.Then I accpected They did exactly the same with only four shots",என்றார் மதுமிதா.
நம் தமிழ் கலாச்சாரம் பாதிக்காத வகை-இல் காட்ட நாங்கள் எடிட்டிங் -கில் ரொம்ப கஷ்டபட்டோம் என்றனர் அமீரும் ஒளிபதிவாளரும்.
எனக்கு ஒன்னு புரியல.ஒரு துப்பட்டாவை போட்டு எடுத்து இருந்தால் இது பெரிய விசயமே இல்லை.
எதோ ஒரு மசாலா அல்லது ஒரு சின்ன கவர்சிக்காக எடுத்தாச்சு.ஆனா விளக்கம் தமிழ் கலாச்சாரத்தை காப்பத்தரோம் என்று.
கேட்கறவன் கேணயனா இருந்தா இவங்க என்னவேனாலும் சொல்லுவாங்க.
கடுப்பதேரங்கா My Lord..

சத்தம் போட்டு சொல்லாதே - 1


தமிழகத்தில் இந்த டிசம்பர் மாதத்தில் இன்னும் ஒரு திருவிழா.இடை தேர்தல் திருவிழா..
இதுவரை நடந்த இடை தேர்தல்களில் ஆளும் கட்சி தான் அதிகமாக வெற்றி பெற்று உள்ளது என்பது புள்ளியல் தரும் செய்தி. தேர்தல் என்றால் பல கூத்துகள் நடக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசம் மட்டும் அல்ல, சுவராசியமும் கூட.

திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாக்ருஷ்ணன் எப்படியும் தன் ப(X )த்தாலும் கட்சி
ப(X )த்தாலும் வென்று விடுவார் என்றாலும் சுவராசியமும் என்னவென்றால் அனிதா ராதாக்ருஷ்ணன் அதிமுக-வில் இருந்து விலகி MLA பதவியை ராஜினமா செய்ததால் இந்த இடை தேர்தல் நடக்கிறது. MLA வாக இருந்த ஒருவரே மீண்டும் அதே தொகுதியில் MLA வாக இந்த தேர்தல் நடக்கிறது அதுவும் நம் வரி பணத்தில்.

என்ன கொடுமை சார் என்கிறிர்களா ?

அட அரசியல இதலாம் சகஜம் அப்பா! இல்ல இல்ல சாதாரணமப்பா!!

------------------------
பின் குறிப்பு : (X) என்ற இடத்தில வரும் எழுத்து options are below
(a) ல (b) ண (c) ன

Popular Posts