Showing posts with label நண்பர்களின் படைப்புகள். Show all posts
Showing posts with label நண்பர்களின் படைப்புகள். Show all posts

மழையும் மழை சார்ந்த படமும்

(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)

இந்த படங்கள் எனக்குள் நிஜ மழை காலத்தை மட்டும் ஞாபகம் படுத்தவில்லை அதனுடன் சேருந்த உணர்வுகளான பயம்,அமைதி,ஆக்ரோஷம்,குளிர்,போன்ற பல உணர்வுகளை வெளிபடுத்தியது.
உங்களுடன் ஒரு பகிர்வு




(நன்றி:நண்பர் ஸ்ரீராம் எடுத்த படங்கள் - srirampadm@gmail.com)

உள்ளது உள்ளபடி - 5

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


எனது உடைகளை இஸ்திரி செய்யும் பெட்டி இடுபவர் ஒரு தமிழர் பெயர் ராஜு ( கோயம்புத்தூர் நகரில் இருந்து வந்து இங்கே தொழில் செய்கிறார் ), வீட்டிற்கு வந்து துணிகளை எடுத்து போவார் ,ஒரு சட்டை இஸ்திரி செய்வதற்கு Rs 5 , கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் எனக்கு இஸ்திரி செய்ய தெரியாது ( சோம்பேறிக்கு கிடைத்தது எல்லாம் சாக்கு ) மேலும் அவருடைய தொழில் சுத்தம் ( மடிப்பு துல்லியம் ) , ஒரே ஒரு பிரச்சனை தலைவர் அப்போ அப்போ ஊருக்கு ஓடிடுவார் வர பத்து பதினைந்து நாட்களாகும் , இந்த முறை 20 நாட்களாகியும் அவரை காணவில்லை , தேய்த்து வைத்த துணிகளை எல்லாம் உபயோகித்து விட்ட நிலையில் நானே இஸ்திரி செய்ய தொடங்கினேன் , இரண்டு தினங்கள் செய்திருபேன் ரூபாய் 5 மகத்துவம் புரிந்தது , போதுமடா இந்த பொழப்பு என்று ராஜுவின் வீடு எங்கு உள்ளது என்று தேட தொடங்கினேன் அன்று பார்த்து ஆலப்புழா மாவட்டம் முழுவதும் ஏதோ ஒரு சொதப்பல் காரணத்திற்காக பந்த் ( மலையாளத்தில் ஹர்த்தால் ) . கேரளாவை பொறுத்தவரை பந்த் என்றால் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம் ( யாருடைய பந்த் ஆகா இருக்கட்டுமே ஆளும் கட்சி , எதிர்க்கட்சி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி, லேபர் யூனியன் , வணிகர்கள் சங்கம் , பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் என்று வரிசை நீண்டு கொண்டே போகும்) , எல்லாரும் கடையை அடைத்து கொண்டு வீட்டில் ஜாலியாக இருப்பார்கள் கடைகள் மட்டும் அல்ல பேருந்து , ஆட்டோ , பள்ளி , கல்லுரி , என்று ஒட்டு மொத்த இயல்பு வாழ்கையும் பாதிக்கப்படும், மூடாத கடைகள் இரண்டு உண்டு 1. மெடிக்கல் ஸ்டோர் , 2. கள்ளு கடை ( தெருவுக்கு ஒரு கள்ளு கடை உண்டு ). சரி என்று எனது பைக்கை எடுத்து கொண்டு ராஜுவின் வீடு கண்டு பிடிக்க கிளம்பினேன் , ஒரு தெரு முனையில் விசாரித்த போது அங்கே ஒரு கொடி கம்பத்தின் கீழே அமர்ந்து இருண்ட ஒருவர் தனக்கு தெரியும் என்றும் ஆனால் இன்று பந்த் அதனால் அவர் எனக்கு உதவ முடியாது என்று கடமை உணர்ச்சி பொங்க கூறினார் ( வயது 35 இருக்கும்,முகத்தில் நாலு நாள் தாடியும் பசி களையும் தெரிந்தது ) அவருடைய அருகில் அமர்ந்து இருந்தவர் சட்டென்று எழுந்து என்னிடம் வந்து மெதுவாக அவனுக்கு கள்ளு வாங்கி தாரேன்னு சொல்லு கூட்டிட்டு போய் காட்டுவான் என்றார்


வேறு தெரிந்தவர்கள் அந்த ஏரியாவில் யாரும் இல்லாத காரணத்தினாலும் கடுப்பின் உச்சத்தின் நான் இருந்ததினாலும் சரியென்று ஒத்து கொண்டு அவரை அழைத்தேன் வந்தவர் பைக்கில் ஏறும் முன் சில நிபந்தனைகள் விதித்தார் 1. இதே இடத்தில கொண்டு வந்து விட வேண்டும் 2.13 no கள்ளு கடையில் தான் கள்ளு வாங்கி தர வேண்டும் 3. ராஜு வீட்டில் இல்லை என்றால் அதற்கு அவர் பொறுப்பு அல்ல , எல்லாம் என் நேரம் என்று எண்ணி கொண்டு சரியென்று சம்மதித்தேன். போகும் வழியெல்லாம் என்னை பற்றி விசாரித்து கொண்டு வந்தார் ( கேரளாவில் ஒரு பழக்கம் உண்டு நண்பர்களுக்கு இடையே நல்ல வேலையில் உள்ளவர் நல்ல வேலை இல்லாதவருக்கு அவர் கேட்கும் போதெலாம் குடிக்க வாங்கி கொடுக்க வேண்டும் ) எதற்கு வம்பு என்று என்னை பற்றி முழு விபரம் எதுவும் கூறாமல் மழுப்பி கொண்டே வந்தேன் பல left , right களுக்கு பின் ஒரு வீட்டின் முன் நிறுத்த சொன்னார் வீட்டை கண்டால் கோடீஸ்வரன் வீட்டு போல் இருந்தது பினால் அமர்ந்து இருதவர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே சென்றார் ஒரு பத்து நிமிடம் கழிந்து அவரும் ராஜுவும் ஒருமித்து வந்தனர் இந்த வீட்டிலா அவர் வசிக்கிறார் ? என்று வினவிய பொழுது இல்லை என்றும் இந்த வீட்டின் பின் புறத்தில் ஒரு ஒட்டு வீடு உள்ளதாகவும் அதில் தன் குடும்பத்தோடு வசிப்பதாகவும் கூறினார் , அவரிடம் எனது அவல நிலயை விளக்கி கூறி விட்டு தயவு செய்து என்றே வந்து துணிகளை எடுத்து போகுமாறு கூறினேன் அவர் தலை அசைத்து விட்டு பைக்கில் என் கூட வந்தவரை காட்டி கண்ணால் ஏதோ சைகை செய்தார் எனக்கு ஒன்றும் புரிய வில்லை சரி வந்த வேலை முடிந்ததென்று பைக்கில் ஏறினேன்

கூட வந்தவர் என் முன் வந்து நிற்க பேசியபடி கள்ளு குடிக்க எவ்வளவு என்று கேட்ட படி எனது பர்சை எடுத்தேன் உடனே அவர் முகம் மாறியது தனக்கு காசு வேண்டாம் என்றும் கள்ளு தான் வேணும் என்றும் கூறினார் சரியென்று அவரை பைக்கில் ஏற்றி கொண்டு அவர் கூறிய கள்ளு கடையை நோக்கி விரைந்தேன் கடை தென்னங் கூரை இட்டு சுமார் இருபது பேர் அமர்ந்து சாப்பிட கூடிய ஒரு ஹோடேளை போல் இருந்தது ஒரு முனையில் கல்லா பெட்டியும் மறு முனையில் டிவி பெட்டியும் , சுவரில் மகாத்மா காந்தியின் படம் சத்தியமவே ஜெயதே என்ற சொற்றொடருடன் இருந்தது கூட வந்தவர் நேரே உள்ளே சென்று இரண்டு டம்ளர் கள்ளும் ஒரு தட்டில் ஒரு டபுள் ஆம்லெட்டும் வாங்கி கொண்டு வந்தார் அவர் முகத்தில் இருந்த பூரிப்பை காண வேண்டுமே ! நான் கொடிப்பதிலை என்பதை கூறியவுடன் வேகமாக சென்று ஒரு லெமன் சர்பத் வாங்கி வந்தார் ( கம்பெனி வேணுமாம் ) பாத்து நிமிடத்தில் கொண்டு வந்த இரண்டு டம்ளரையும் காலி செய்து விட்டு என்னை அழைத்து கொண்டு கல்லா அருகே வந்தார் என்னிடம் இருந்து ஒரு பத்து ரூபாய் வாங்கி கொண்டு அவர் பாக்கெட்டில் இருந்து 25 ரூபாய் எடுத்து கொடுத்தார் ( நான் வாங்கி கொடுக்க வேண்டிய கள்ளு ரூபாய் பத்து அவர் வாங்கி குடித்த கள்ளு ரூபாய் பத்து ஆம்லெட் ரூபாய் பத்து அவர் எனக்கு வாங்கி கொடுத்த லெமன் சர்பத் ரூபாய் ஐந்து மொத்தம் ரூபாய் 35 ) அவர் கண்ணில் போதை இல்லை வாய் குழற வில்லை நடையில் தள்ளாட்டம் இல்லை பேசியபடி என்னை கொண்டு அந்த கொடி மரத்தின் அடியில் விடு என்று கூறினார் அது வரை அவரை பற்றி ஒன்றும் விசாரிக்காத நான் அவரை பற்றி மெதுவாக பேச்சு எடுத்தேன் அவர் துபையில் முடி வெட்டும் சலூன் வைத்திருந்ததாகவும் இரண்டு வருடங்களாக இங்கு ஒரு சலூனில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் ஏன் திரும்பி வந்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது வேண்டிய அளவு சம்பாதித்து விட்டு இங்கே வந்து சுமார் 4 லட்சத்தில் ஒரு வீடு கட்டியதாகவும் மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறினார் மேலும் என்ன தான் காசு துபையில் கிடைத்தாலும் நானே ராஜா நானே மந்திரி என்ற வாழ்கை இங்கு மட்டுமே கிடைக்கும் அதனால் தான் திரும்பி வந்து விட்டதாக கூறினார்

இந்த கால மனிதர்களுக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு சுதந்திரமும் தன்மானமும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்ந்து கொண்டேன்

இன்னும் சொல்லுவேனா ???
காலம் முடிவு செய்யும்.

தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும் - எதிரொலி


எனது சமீபத்திய பதிவுக்கு என் நண்பன் குமார் அனுப்பிய ஒரு எதிரொலி மின்னஞ்சலை
நண்பர்களின் படைப்புகளில் பதிவு செய்கிறேன்.

I read your recent articles about Semmozhi Conference!
It reflects all Tamizh peoples who really worry about "Tamizh Language".
I also have some issues on that song.
Here with I have give the link for that song if you don't have.
"http://www.youtube.com/watch?v=U87jbmVx3GA"
Please carefully see the song each seconds.
After around 4 min 07 sec a girl writing Tamizh letter's on the wall.
she turned to see her father.
The FATHER CALLED HIS DAUGHTER BY THE WORD "COME"!!!!!!
Even she wrote "Amma, Appa and Thenmozhi" on the wall.
Where gone "TAMIZH"?
It shows Gowtham menan & Co. doesn't show any interest on Tamizh!
Isn't it?
As usual commercial play a major role than Tamizh!

If you have time write an article on this issues in your blog! If possible.


Take care
Truly
P.Kumar

புலம்பல் - 1

(நன்றி:நண்பர் சிலம்பரசன் எழுதியது-thesimbu@gmail.com
குறிப்பு: அவர் கேடடு கொண்டதால் பெயர் தமிழ் தாசன் என்று போடப்ப
ட்டு உள்ளது)


பார் அதிர பாக்களை பாடியதால் அவன் பாரதி - நானோ
BAR அதிர பீர் குடித்து போலம்புவதால் நான் அவனில் பாதி

அரிசியின் மேலே அவன் அவன் பெயரை ஆண்டவன் எழுதிவைப்பான் அதை அடுத்தவன் யாரும் தின்பதர்கில்லை அவன் அவனே தின்று தீர்ப்பான் என்பது கண்ணதாசன் மொழி இங்கோ கடவுள் சப்பாத்தி ரொட்டியின் மேலே என்பெயரை எழுதி விட்டான்

பிகரு இல்லார் எல்லாம் தமக்குரியர் பிகருடையார் உயிரும்
உரியர் பிகருக்கு - திருட்டுகுறள்

தனி ஒரு மனிதனுக்கு பிகர் இல்லை எனில்
இந்த ஜகத்தை அழித்திடுவோம்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பார் வள்ளலார்
வாடிய பிகரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பவர் ஜொள்ளலார்

புலம்பல் தொடரும்

இப்படிக்கு
அன்புடன் தமிழ் தாசன் என்று போடவும்

உள்ளது உள்ளபடி - 4

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


ஒரு மாதத்திற்கு முன்பு எனது தாய் மற்றும் சித்தி இருவரையும் தமிழ்நாடு வரை அனுப்பி வைப்பதற்காக எர்னாகுளம் ரயில் நிலையம் சென்றிருந்தேன், இரவு பத்து மணிக்கு ரயில் வரும் என்று விசாரணை பெட்டியில் கூறினார்கள் . போக வேண்டிய நடை பாதை மேடைக்கு மெதுவாக ஊர்ந்து சென்றோம் (அம்மாவால் துரிதமாக நடக்க இயலாது ). இரண்டு மணி நேரம் முன்னதாக வந்து என் சாமர்த்தியத்தை மெச்சி கொண்டே அவர்கள் இருவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு (platform no 4) சைட் அடிக்க கிளம்பினேன் , போகும் வழியில் பாப் கார்ன் வாங்கி கொண்டு நடந்தேன் (நான் ஒரு (பாப் கார்ன்) பைத்தியம் ) , என்ன தான் சொல்லுங்கள் இந்த கேரள பெண்களின் நடை உடை பாவனைகளின் தரம் ஒரு உயர் தரம் தான் ம்ம்.... என்ன செய்வது நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் ! , கையில் இருந்த பாப் கார்ன் மற்றும் அரை மணி நேரம் காலியாக , நடை பாதை மேடை 9 திற்கு திரும்பினேன்

வேறு ஒரு ரயில் அந்த நடை பாதையின் முன் வந்து நிற்க என் அம்மா , சித்தியின் முகங்கள் அஷ்ட கோணத்தில் மாறியது ,

இந்த இடத்தில் ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் அது ஏனோ தெரியவில்லை இந்த ரயில் நிலையங்களில் உண்டாகும் உணர்ச்சி பரிமாணங்கள் பேருந்து நிலையங்களில் உண்டாவதில்லை (உறவுகளை பிரியும் அந்த தருணங்கள் மனதை நெகிழ வைக்கும்) இல்லை என்று மறுக்கும் நண்பர்கள் உண்டு , என்னை பொறுத்த வரை மனது குழம்பிய நிலைகளில் எனக்கு ஆறுதல் அளிக்க வல்ல விஷயங்கள் இரண்டு 1. கடற்கரை 2. ரயில் நிலையம் ஆனால் இரவு நேரங்களில் கடற்கரை உலாத்தல் சாத்தியம் இல்லை எனெவே நான் எப்பொழுதும் ரயில் நிலையங்களை நாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன் .

back to ernakulam Railway station

வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கும் ஒவ்வொரு மனிதர்களின் முக பாவங்களை ரசித்து கொண்டிருந்தேன் ஒரு பிரயாணி உறங்கி கொண்டிருந்த சக பிரயாணியை எழுப்பினார் எழுந்த பிரயாணிக்கு ஒரு நாற்பது வயது இருக்கும் அவருக்கு உறக்கம் களைந்து இருக்கும் நிலை உணர சில கணங்கள் ஆயின உடனே அவர் எதையோ தேடினார் , விநாடிகள் கழிய கழிய அவருடைய தேடுதலின் தீவிரம் கூடியது , இருக்கையின் அடியில் , கழிப்பறையின் உள்ளே என்று தேட எனக்கு ஒன்றும் பிடி பட வில்லை . திடீரென்று ரயிலில் இருந்து இறங்கி தலை மேல கை வைத்து ஐயோ அலற தொடங்கினார் நெஞ்சிலும் தலையிலும் அடித்து கொண்டு அவர் அழ ,சுற்றி இருந்த யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை என்னவென்று சிலர் விசாரிக்க அவர் கூட பிரயாணம் செய்த ஒன்பது வயது மகனை காண வில்லை என்பது தெரிய வந்தது , பதட்டத்தில் அவருக்கு தலை சுற்ற நிலை தடுமாறி தரையில் அமர்ந்தார் , அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அவருடைய பொருட்களை ரயிலில் இருந்து இறக்கி வைத்து விட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தேன் அவர் வாய் உளறி கொண்டே இருக்க ( என் மனைவிக்கு என்ன பதில் சொல்வேன், ஒரே மகன் எங்கு போய் தேடுவேன் ) அவருக்கு உதவ யாரவது வருவார்களா என்று பார்த்தேன் பெண்கள் உச்சு கொட்டி கொண்டு இருக்க ஆண்கள் முனவிகொண்டிருக்க நேரம் கழிந்தது , மெதுவாக எனக்கு தெரிந்த மலையாளத்தில் அவரிடம் மொபைல் உண்டா என்று விசாரித்தேன் உடனே அவர் சட்டை பையில் இருந்த மொபைலை என் கையில் கொடுக்க அதை சுவிட்ச் ஆன் செய்தேன் , பின்னர் அவருடைய மொபைல் நம்பர் அவருடைய மகனுக்கு தெரியுமா இன்று வினவினேன் , தெரியும் என்று அவர் கூற அவரை அழைத்து கொண்டு ரயில்வே காவல் நிலையதிருக்கு கிளம்பினேன் ( எனக்கு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை என்ற முக பாவனை என் அம்மா முகத்தில் இருந்தது )

போகும் வழி எல்லாம் மகனை பற்றிய பிதற்றலுடன் அவர் வர அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று யோசித்த படி நான் நடந்தேன் காவல் நிலையத்தில் நடந்ததை கூற , அவர்கள் உடனே (!) குறிப்பெடுக்க தொடங்கினார்கள் , எந்த ரயில் நிலையம் வரை ஷ்யாம் (மகனுடைய பெயர் ) அவருடன் இருந்தான், எப்பொழுது அவர் கண் அயர்ந்தார் , அதன் பின் உள்ள ரயில் நிலையங்கள் எத்தனை , அவைகளின் தொலைபேசி எண்கள் என்று அவர்கள் செயல் பட்ட விதம் மிக துரிதம் , துல்லியம்.
5 நிமிடங்கள் கடந்திருக்கும் ஒரு அதிகாரி நல்ல செய்தி கொண்டு வந்தார் 60 km தொலைவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் இருப்பதாக கூற அதே சமயத்தில் மகனை தொலைத்தவருடைய மொபைல் அடித்தது , அழைத்து அவருடைய மகன் , ரயில் அதிகாரியின் போனில் இருந்து அவன் அழைக்க இவர் நெகிழ்ந்து உரையாடிய விதம் வார்த்தைகளால் விவரிக்கக் இயலாது அப்பாட என்று நான் மூச்சு விட ஒரு காவல் துறை அதிகாரி வந்து நடந்த விசயங்களை ஒரு காகிதத்தில் எழுதி தரும் படி கூறினார் , கூடவே வந்த என் பெயர் மற்றும் விலாசம் கொடுக்கும் படி அவர் கூறினார், போச்சுடா என்ற படி எழுதி கொடுத்தேன் பின் அந்த நபரை அழைத்து அவருடைய பொருட்கள் எல்லாம் என் அன்னையின் வசம் உள்ளதையும் அவர்க்கு இன்னும் 10 நிமிடங்களில் ரயில் வரும் என்பதையும் உணர்த்தினேன்.


மகனை இருக்கும் ரயில் நிலையத்திலே இருக்கும் படி கூறி விட்டு அவர் வந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு டாக்ஸி பிடிக்க ஓடினார் நானும் என் அம்மா மற்றும் சித்தியை அவர்கள் ஏற வேண்டிய ரயிலில் ஏற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தேன் நடு நிசி 2 மணிக்கு எனக்கு ஒரு போன் வர இந்நேரத்தில் யாரடா தூக்கத்தை தொந்தரவு செய்வது என்று சபித்து கொண்டே போனை எடுத்தேன் மறு முனையில் ஷியாமின் தகப்பனார் தன்னுடைய மகனை கண்டு விட்டதாகவும் தக்க தருணத்தில் உதவிய எனக்கு நன்றி கூறுவதற்காக அழைத்ததாக அவர் கூறினார் எனது தொலைபேசி என்னை அந்த காவல் துறை அதிகாரி கொடுத்ததாகவும் கூறினார்.


இன்னும் சொல்லுவேன்

தவிப்பு


(நன்றி : நண்பர் தினேஷ் எழுதியது)

நெரிசல் இல்லாத பேருந்து
ஜன்னல் ஓர இருக்கை
மாலை நேர தென்றல்
முன் இருக்கையில்
அழகான இளம் பெண்
இத்தனை இருந்தும் - இதயம்
ரசிக்கவில்லை எதையும்
நடத்துனரிடம் சில்லறை பாக்கி...


(நன்றி: நண்பர் தினேஷ் எழுதியது)

உள்ளது உள்ளபடி -3

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


12-May 2009
இடம் : ராமநாதபுரம்


மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை பேருந்தில் நான் உறங்கி போனதால் அப்பிரயாணத்தில் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் ஒன்றும் இல்லை வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவின் கையால் சுடு சோறு தக்காளி ரசம் அப்பளம் என்று ஒரு பிடி பிடித்தேன்( எத்தனை உயர் வகை உணவகங்களில் உணவு அருந்தினாலும் வீட்டு உணவுக்கு நிகர் ஏதும் இல்லை ), பயண களைப்பில் ஒரு உறக்கம் போட்டு எழுந்தேன்,என்னுடைய சித்தி சூடாக கொண்டகடலை சுண்டல் செய்து கொண்டு வந்தார்கள்,ஆகா! என்ன ஒரு சுவை,
உடை மாற்றி கொண்டு நான் வளர்ந்த நகரத்தை ஒரு சுற்று காண வேண்டி வீட்டை விடு வெளியே வந்தேன் , பொதுவாக ராமநாதபுரத்தை நடையிலும் மிதிவண்டியிலும் சுற்றி பழக்க பட்டதால் நடராசா டிரான்ச்போர்டை தொடங்கினேன்.

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட அவைகளை சுகமாக அசை போட்டேன் எனது தந்தை என்னை அழைத்து செல்லும் கிருஷ்ண பவன் உணவகம்(opp to G.H) கண்ணில் பட்டது (தற்பொழுது அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பெயர் வேறு )
பதினைந்து வருடங்களுக்கு முன் ஒவ்வொரு சனி கிழமையும் மேட்டினி சோ கண்டு விட்டு தந்தை மற்றும் சகோதரியுடன் இவ்வுணவகத்தில் வெங்காய பஜ்ஜியும் தேங்கா சட்டினியும் அருந்தியது கண் முன் வந்தது.
பழைய நினைவுகளை மென்று கொண்டே அவ்விடத்தை கடந்தேன் வழியில் டீ விற்கும் சுப்புவை கண்டேன் (இவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்பவர் )அதே காக்கி சட்டை , டிரவுசர் அதே சைக்கிள் ஒரே ஒரு மாற்றம் கண்ணாடி கிளாசிற்கு பதிலாக disposable கப் ; ஒரு டீயை வாங்கி கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன்,அவருக்கு ஒரு 45 வயது இருக்கும் சுமார் 28 வருடங்களாக இத்தொழில் செய்கிறார்.

இன்னும் வறுமை கோட்டிலே தான் இருக்கிறார் இரண்டு குழந்தைகள் உள்ளன பள்ளி படிப்பை முடித்திருகிறார்கள் , வீட்டிலே கலர் டீவீயும் தொலை பேசியும் உள்ளது பெரிய சேமிப்பு ஒன்றும் இல்லை இவ்வளவுக்கும் அவர் நல்ல உழைப்பாளி சிக்கனமாக வாழ்பவர் பெரிய கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை ஆனால் சினிமாக்களில் மட்டும் ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் விந்தையை எண்ணி வியந்தேன்.

இன்னும் சொல்லுவேன்

உள்ளது உள்ளபடி - 2

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)



12 May 2009 மதியம் பதினோரு மணி
இடம் : மதுரை ரயில் நிலையம்




வட்டார தமிழ் மணக்கும் மதுரையை வந்தடைந்தேன் , ஒரு கையில் பையும் மறு கையில் தண்ணீர் புட்டியும் கொண்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினேன் , வாசலில் பயண சீட்டு பரிசோதகர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் எதற்கு வம்பு என்று பயணசீட்டை வழிய சென்று காண்பித்தேன் பின்பும் அவர் முக பாவம் மாற வில்லை என்ன வென்று கூர்ந்து நோக்கினால் அட ச்சே zip போடவில்லை , ஒரு அசமஞ்ச சிரிப்போடு சரி செய்தேன்

மாட்டு தாவணி பேருந்து நிலையத்தை அடைய இரு வழி 1. auto 2. மாநகர பேருந்து வித்தியாசம் எழுபது ரூபாயும் ஏழு ரூபாயும் , ஏறினேன் பேருந்து ; நல்ல கூட்டம், கண்டக்டர் முதல் காய் கறி விற்பவர் வரை அரசியலையும் மறு தின வாக்கு பதிவையும் , பிற விசயங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர் , காதை கடன் கொடுத்து கிடைத்த சங்கதிகள் சில இங்கு

1. கலைஞர் கொடுக்கும் கலர் TV சிறியதாக உள்ளது
2. தடை செய்ய பட்ட லாட்டரி திரும்ப வந்தால் நன்றாக இருக்கும்
3. ஒரு வோட்டுக்கு ரூபாய் முன்னூறும் பட்டு சேலையும்
4. தமன்னா வின் பூர்வீகம் தமிழ்நாடு அல்ல (கூறியவர்க்கு 45 வயது இருக்கும் !)
5. மு க அழகிரி கண்டிப்பாக ஜெயிப்பார்
6. விஜயகாந்துக்கு பதிலாக வடிவேலு கட்சி ஆரம்பித்திருந்தால் நல்ல இருந்திருக்கும்

இப்படி சொல்லிகொண்டே போகலாம் ஆனாலும் நான் இறங்க வேண்டிய பேருந்து நிலையம் வந்து விட்டதால் நிறுத்தி கொண்டேன் என் observer கதாபாத்திரத்தை , பேருந்தை விட்டு இறங்கும் பொழுது ஒருவர் தன் சாக்கு மூடியை தூக்கி விடுமாறு உதவி கோரினார் உடனே இருவர் ஓடி போய் உதவி செய்தனர் உடனே ஒரு கரை வேட்டி " எங்க கலைஞர் ஆட்சியில தான் இந்த மாதிரி உதவி எல்லாம் கிடைக்கும் அதனால் எல்லாரும் அவருக்கே வோட்டு போடுங்க " என்றார் . காலம் எத்தனை வேகமாய் மாறினாலும் இந்த கரை வேட்டி பண்பாடு மாறது போலும் என்று நினைத்து கொண்டேன்

இன்னும் சொல்லுவேன்

உள்ளது உள்ளபடி - 1

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது)
(முன் குறிப்பு :எனது நண்பன் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு என்பதால் சற்று பழையதாக தோன்றலாம்.ஏற்கனவே படித்தவர்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கலாம்...பொறுத்தருள்க...)

12-May- 2009

சமீபத்தில் சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றிருந்தேன்,காரணம் நானும் ஒரு இந்திய பிரஜை என்பதற்கான ஒரே அடையாளமான ஓட்டுரிமை,

சேர்தலையிலிருந்து ரயில் பிரயாணம் நடுநிசியில் தொடங்கினேன் , upper berth கிடைத்த சந்தோசத்தில் மேலே ஏறினேன் ; எதிர் படுக்கையில் ஒரு இளம் பெண் (20 அல்லது 22 வயது இருக்கும் ) , இன்னொரு முறை முகம் காண மனம் சலனப்பட்டது , முடியவில்லை இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தபடி முகம் காண முயற்சித்தேன் முடியவில்லை மன சஞ்சலத்தில் கண்ணுறங்கி போனேன் , அதிகாலை 6 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து கையில் தேநீர் குவளையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன் ,chart இல் பேர் காண யோசித்தேன் , இந்த பாழாய் போன மழையால் chart கிழிந்து காணமல் போயிருந்தது ச்சே !

ஏழு மணிக்கு அவள் இறங்கி வந்தாள், அபரிதமான அழகு என்று சொல்வதற்கில்லை ஆனாலும் கலையான முகம் (மலையாளீ ) , அவள் தேநீர் பருகும் போது தான் என்னுடைய இருப்பு உணரப்பட்டது , அரை கண்ணில் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள் , சட்டென்று எழுந்தேன் கண்ணாடி காண , தலை ஒழுங்காக வாரியிருந்தேன் அப்பொழுதுதான் உணர்ந்தேன் வயசானதை , மனதில் குறித்து கொண்டேன் அம்மாவிடம் பொண்ணு பார்க்க சொல்லணும் என்று திருநெல்வேலி junction இல் இறங்கி போனாள் அப்பெண் , பேர் கேட்க ஆசை இருந்தும் "sorry சித்தப்பா" என்று சொல்லிவிட்டால் மௌனமாகி முனகினேன் (இந்த ஹீரோகளுக்கு மட்டும் எப்படி சமயம் அமைகிறது !)

இன்னும் சொல்வேன்

சுண்டு விரல்


(நன்றி:நண்பர் அமிர்தராஜ் எழுதியது)

அன்பே உன் காலணிகளை வெறுக்கிறேன்
அவற்றால் நீ அடிப்பாய் என்பதற்காக அல்ல - அவை
உன் சுண்டு விரலை மட்டும் சுமக்க மறுப்பதால் ...

Popular Posts