
குமுதம் இதழிலில் வெளி வந்து கொண்டிருந்த ஞாநியின் ஓ பக்கங்கள் இனி மேல் வெளி வராது என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது.அவரின் சில கருத்துக்களை நீக்க சொல்லி குமுதம் கேட்டதாகவும் அவர் மறுத்து விட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவரின் கருத்தை அவரது வலை பக்கத்தில் படித்து விட முடியும் என்றாலும் எனக்கு தோன்றும் கேள்விகள்
1 . இந்தியா டுடே புத்தகத்திற்காக நித்யானந்தா பற்றி அவர் எழுதியதில் இருந்து சிலவற்றை இந்தியா டுடே நீக்கி விட்டு வெளிட்டது என்று கூறி இருந்தாலும் அதில் தன் கருத்தை நீக்கி வெளியட அனுமதிதித்து விட்டு இப்போது மட்டும் கருத்தை நீக்கி வெளியட மறுத்து வெளியேறுவது எதனால் ?
2 . குமுதம் ,விகடன் போன்ற முக்கிய பத்திரிக்கைகள் கூட இப்போது பயப்படுவதால் நமது முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை அவரது வாரிசுகளுக்கு இருக்காதோ என்று அச்சம் கலந்த ஐயம் ஏற்படுகிறது.
ஓ பக்கம் தூரம் ஆனது..இதுவும் கடந்து போகும் என்று நம்புவோமாக!!!
No comments:
Post a Comment