உன் வாசல் கோலத்தை அல்ல -
உன் கோலத்தை தான்!!

நீ பிடித்து வைப்பதால் சாணம் கூட
சாமி ஆகிவிடுகிறது - ஏனோ என்னை
மட்டும் பிடிக்காமலேயே வைத்திருக்கிறாய்??
தினமும் நான் கோவில் செல்வது
சுண்டலுக்காக என்று ஊரே சொல்லுது
எனக்கு மட்டும் தான் தெரியும்
தென்றல் உனக்காக தான் என்று...
கோயில் வாசலில் ஒற்றை காலில் தவம்
இருக்கிறார்கள் வரம் வேண்டி - நானும்
நிற்கிறேன் உன் வரவை வேண்டி...
வாடை காற்றில் என்னை வாடா விடாமல்
உன் அக்னி பார்வையை கொஞ்சம் வீசிப்போ
நான் குளிர் காய்ந்து கொள்ள...
Ullam uruguthaia unthan kavithai kathalile!
ReplyDeletemarkali 16
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete