
மீரஜ் மகாராஷ்டிரா & கர்நாடகாவின் எல்லை கோடு.
எனது professinoal வாழ்கை-இன் ஆரம்ப கோடு
எனது முதல் வெளி நாட்டு பயணம்
இல்லை இல்லை வெளி ஸ்டேட்டு பயணம்..
மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும்
நிலமும் நிலம் சார்ந்த மருதமும் கலந்த கலவை.
மீரஜ் மூன்று D' க்களுக்கு பிரபலம்
கழுதை எனும் Donkey
தூசு எனும் Dust
மருத்துவர் எனும் Doctor
மூன்றிலும் 33 சதவீதமாய் நான்.
விநாயகரிடம் கொண்ட பக்திக்கு முக்தியாக கிடைத்தது
வேலை
சித்தி விநாயக் கணபதி மருத்தவமனையில்
வேலை கிடைக்க எந்த சாமி காரணம் என்றால் சட் என்று
சொல்வேன்
குப்புசாமி , சீனிசாமி என்ற இரு ஆசாமிகளை .
விழுங்க முடியாத உணவு, விளங்க முடியாத மொழி
ஆட்டோ காரனிடம் argue செய்ய இயலவில்லை
அழகான பெண்ணிடம் டைம் கேட்க முடியவில்லை
இந்தி எதிர்த்த தலைவர்கள் எல்லாம்
என் நெஞ்சில் எதிரிகளாய் தெரிந்தனர்.
விழுங்க முடியாத உனவின் விளைவு
வித விதமாய் விலை உயர்ந்த உணவு
தேடல் ஆரம்பித்ததும் இங்கே தான்.
சைவத்திற்க்கு அன்னபூர்ணா
அசைவத்திற்க்கு ரஹமதுல்லா
சில வேலை முன்பே செய்திருந்தாலும்
படித்ததற்காக கிடைத்த முதல் வேலை இங்கே தான்
ஆங்கில படமும் ஹிந்தி படமும்
பார்க்க தொடங்கியதும் இங்கே தான்.
மருத்துவ கல்லூரியும் லட்சுமி மார்கெட்டும் ஊருக்கு அழகு
அங்கே இருந்தால் நம் மனதிற்கே அழகு - எல்லா
ஊரிலும் அழகான பெண்களெல்லாம் இருப்பார்கள் ஆனால்
இந்த ஊரில் தான் எல்லா பெண்களும் அழகாக இருப்பார்கள்.
மிரஜ் பெண்கள் அழகு சிலைகள் அவர்கள்
உடைகள் எல்லாம் கண்ணாடி இழைகள் அதை
காண போதாது நம் இரு விழிகள்.அவர்கள்
அவவ்போது எனை தாக்கும் உளிகள்.
சாதிக்கு ஒரு சங்கம் இருந்தாலும்
பெயரில் சாதி இல்லை நம்ம ஊரில்
அதற்கு இங்கு Surname என்று பெயர்
வருடம் வருடம் இந்துகளின் விநாயகர் சதுர்த்தி
பண்டிகையும் முஸ்லிம்களின் உருசு திருவிழாவும்
ஒன்றை ஒன்று முந்தி கொண்டு வர பார்க்கும்.
அதனால் இந்துவும் முஸ்லிமும் லேசாய்
முட்டி கொள்ள வழி பொறக்கும்...
இந்த ஊரு சட்டமன்ற தேர்தல் கூட நம் ஊரு
காலேஜ் தேர்தலிடம் தோற்று போகும்.
சினிமா போஸ்டர் இல்லாத சுவர்களால்
கழுதைகள் எல்லாம் பசியால் காய்ந்து சாகும்...
ஏழு மாத வாழ்கை என்றாலும் ஏழு
ஏழு ஜென்மம் வரை நினைவில் நிற்கும் இந்த
அனுபவம் - முதல் வேலை என்பதால் மட்டும் அல்ல
படித்தவுடன் வேலை கிடைத்தது என்பதால் கூட .