அம்மாவும்அப்பாவும்நாங்களும் -1: அப்பா புறப்பாடு - 1

மிக சரியாக 30 வருடங்களுக்கு முன் , 1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம்...
காட்சி 1: அப்பா செய்த புதிய தொழில் கொஞ்சம் நல்ல வருமானம் தர தொடங்கி இருந்த நேரம், எனது தாய் மாமா எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்.. அப்பா மாமாவிடம் நீங்க கல்யாணத்துக்கு போட்ட நகை எல்லாத்தையும் கடந்த பத்து வருடத்தில் விற்று விட்டேன். இப்பதான் கொஞ்சம் காசு சேர்ந்து இருக்கு, நண்பர்களிடம் 10000 ரூபாய் கொடுத்து வைத்து இருக்கிறேன். அதை இன்னும் ஓரிரு மாதத்தில் வாங்கி தருகிறேன், முதலில் செயினோ/வளையலோ வாங்கி விடலாம் என்றார்.

காட்சி 2: நானும் அப்பாவும் வாடகை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அவருக்கு numberology -இல் ஆர்வம் உண்டு வழியில் எந்த வண்டியை பார்த்தாலும் அதன் நம்பர் பிலேட்டில் உள்ள எண்களை கூட்டி விடுவார்.. அன்றும் என்னை வழியில் செல்லும் பல வண்டிகளின் எண்களை கூட்ட சொன்னார்..கணக்கு பாடம் ரொம்பமுக்கியம் அதுக்கு தான் இந்த பயிற்சி என்றார். அப்போது இன்னொன்றும் சொன்னார். தான் புது சைக்கிள் வாங்க முன்பணம் கட்டி விட்டதாகவும், நாகப்பா சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வரும் என சொன்னார். அதன் பிறகு வாடகை சைக்கிள் எடுக்க தேவை இருக்காது என்றார்.

காட்சி 3: அம்மாவும் அப்பாவும் கடைவீதி சென்று அம்மாவுக்கு புதிய செப்பல்/காலனி வாங்கி வந்து இருந்தார்கள். முதல் முறையாக அம்மா ஹவாய் காலணி இல்லாமல் சற்றே விலை கூடிய காலணியை வாங்கி இருந்தார்.

காட்சி 4: அப்பாவை பார்க்க வந்த அவரின் நண்பர் வெங்கடேஷிடம் , அடுத்த தடவ நீ என்னை பார்க்கணும்னா மேல தான் வரணும் என்றார் . அவர் ஏன் என வினவ, தான் அதே வீதியில் சற்று புதிதாய் கட்டிய வீட்டில் முதல் அடுக்கில் தனி வீடாக வாடகைக்கு பார்த்து முன்பணம் கொடுத்து இருப்பதாக சொன்னார். ஆம்..எனக்கு அது தனி வீடு என்பதை விட அந்த வீட்டில் தனி கழிப்பறையும், பைப் /குழாய் இருக்கும் என்பது மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது..

ஆனால் அதற்கு அடுத்து வந்த வாரம், இந்த காட்சிகள் பலவற்றை புரட்டி போட்டு விட்டது. ஆம்..உண்மை தான்.. தனி கழிப்பறை உள்ள வீட்டிற்கு நாங்கள் போக கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகி விட்டது.

தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
19-06-2021

மரத்தின் கைகள்


சற்று நேரம் முன்பு கீழ் வீட்டு பெண்மணி வந்து கதவை தட்டினார் . நமது வீட்டு அருகில் உள்ள இரு மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றார். மொத்தம் 1600 ஆகும் என்கிறார்கள். இந்த மரத்தின் அருகில் வசிக்கும் நாலு வீடும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். "பண பகிர்வை பிறகு பார்ப்போம் .ஏன் மரத்தை வெட்ட வேண்டும்" என்றேன்.. "நிறைய குரங்குகள் வந்து ஆட்டம் போடுகின்றன" என்றார் "மரத்தின் சில கிளைகளை வெட்டுவதால் குரங்கு வராது என எப்படி கூற முடியும். இப்பொது வெட்டி விட்டால் கோடை காலத்தில் கஷ்டம் ". மரத்தை வெட்ட தேவை இல்லை என்றேன். "இல்லை இன்னும் 15 நாளில் பட்ட திருவிழா வருகிறது.. தனது மகன் விட மர கிளைகள் இடைஞ்சலாக இருக்கும் என்றேன். பட்டம் விடுவதற்காக மரத்தை வேண்டுமா" என்று கேட்டேன். அந்த எதிர் கேள்வியை விரும்பவில்லை. நேரடியாக கடைசி கேள்விக்கு வந்தார்.. "உங்களை தவிர மீதி மூன்று வீடும் வெட்டுவதாய் முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் பணத்தை பகிர்ந்து கொள்வீர்களா இல்லையா" என்றார். ஊருடன் ஒத்து வாழ முடிவு செய்து "பணம் வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு பட்டம் விடுவதற்க்காக மரத்தின் கிளையை வெட்ட தேவை இல்லை என படுகிறது. அப்பறம் உங்கள் இஷ்டம்" என்றேன். "பணம் தருவீரகள் இல்லையா..நன்றி" என்று கூறி சென்றுவிட்டார். "முதலில் மரத்தை அறுப்பார்கள்..பிறகு பறவையின் கழுத்தை அறுப்பார்கள்" என்று நினைத்து கொன்டே இந்த ஆண்டு இவ்வாறு முடிந்து இருக்க தேவை இல்லை என்ற சிந்தனையோடு கதவை சாத்தினேன்.

Popular Posts