விலை வாசி பற்றி சற்று யோசித்த போது எனக்கு பட்ட விஷயங்கள்..
கடந்த இரண்டு வருஷத்தில் சின்ன ஊருகளில் கூட சூப்பர் மார்க்கெட் ஆரமித்து உள்ளார்கள்.
அதுவும் ADITYA BIRLA GROUP,RELIANCE போன்ற பெரிய நிறுவனங்கள்.
மக்கள் தொகை நிறைந்த நம் போன்ற நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் நல்ல வியாபார தன்மை கொண்டது.பேராண்மை படத்தில் சொல்வது போல் M-C-M முறை தான்.இது இன்னும்அதிகமாகும்.

முன்பு மேஸ்திரி வீடு கட்டுவார் இப்போது அது மறைந்து construction கம்பெனிகள் மற்றும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் போல் வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் மாறும்.
இதன் அடுத்த கட்டமாக சில பெரிய கம்பனிகள் விவசாய நிலத்தை வாங்கி விவசாயிகளை வேலைக்கு வைத்து பல உரங்களை போட்டு உற்பத்தி அதிகபடுத்தி விவசாயிகளை மாத சம்பளகாரர்களாக மாற்ற கூடும்.அன்று விவசாயிகளும் 8 மணி நேரம் வேலை + ஓவர் டைம் என்று சம்பளம் வாங்க கூடும். தொழில் போட்டியால் அப்பொழுது வேண்டுமானால் விலை கொஞ்சம் குறையலாம்.அது வரை விலை வாசி ஏறுமுகம் தான்...
No comments:
Post a Comment